எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

ஞாயிறு, 10 நவம்பர், 2024

தில்லைத் ‘தில்லுமுல்லு’த் தீட்சிதன்கள்!!!

சிதம்பரம் கோயிலின் கனகசபை[நடராசர் சிலை இடம்பெற்றிருக்கும் ‘சிற்றம்பலம்’ எனப்படும் மேடை] மீது ஏறி நின்று நடராசரைத் தரிசனம் செய்யவிடாமல் பக்தர்களுக்குத் தீட்சிதன்கள் இடையூறு செய்துவரும் நிலையில், அது தொடர்பான வழக்கில் அவன்களைக் கண்டிக்கும் வகையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்த ஆணை ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

ஆணையின் இறுதிப் பகுதியில்.....

‘ஆறு காலப் பூஜைக்கான நேரங்கள் தவிர்த்து, மற்ற நேரங்களில் பக்தர்களை அனுமதிப்பது குறித்தான விவரங்களை 14.11.2024க்குள் தீட்சிதன்கள் தரப்பு தாக்கல் செய்திடல் வேண்டும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

நீதிபதிகளின் ஆணைக்கிணங்க தீட்சிதன்கள் சார்பில் விவர அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் அதில்.....

//வேதாகமங்களில் சொல்லப்பட்ட வழிமுறைகளின்படி, இனி ஆறுகாலப் பூஜைகளில் ஒவ்வொரு பூஜைக்கான நேரமும் அதிகரிக்கப்படுகிறது. இக்காரணத்தால், காலையில் கோயில் திறக்கப்பட்டதிலிருந்து இரவில் மூடப்படும்வரை ஆறுகாலப் பூஜைகள் இடைவெளியின்றித் தொடர்ந்து நடைபெறும். எனவே, பக்தர்கள் கனகசபை மீது ஏறி நின்று நடராசரை வழிபடுவது சாத்தியமே இல்லை//

இப்படியானதொரு பதிலைத் தீட்சிதன்கள் முன்வைத்தால், “வேதமாவது ஆகமமாவது, எங்கள் உத்தரவுக்கான பதிலை உடனடியாகச் சமர்ப்பிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் ஆணையிடுவார்களா?

ஆணையிட்டாலும், நாட்டின் உச்சநிலை அதிகாரம் படைத்தவர்களின் ஆதரவைப் பெற்றிருக்கும் தீட்சிதன்களை அந்த ஆணை கட்டுப்படுத்துமா?

ஊஊஊஹூஹூஹூம்!!!


ஆறுகாலப் பூஜைகள்:

1. உஷத்[?!] காலம் – காலை 6:00 மணி[இனி, காலை 6.00 >8.00]

2. கால சந்தி[?!] – காலை 8:00 மணி[இனி, காலை 8.00>பகல் 12.00]

3. உச்சிக்காலம் – பகல் 12:00 மணி[இனி பகல் 12.00>மாலை 6.00 மணி]

4. சாய ரட்சை[?!] – மாலை 6:00 மணி[இனி மாலை 6.00>இரவு 8.00]

5. இராக்காலம் – இரவு 8:00 மணி[இனி இரவு 8.00>இரவு 10.00 மணி]

6. அர்த்த ஜாமம் – இரவு 10:00 மணி[இனி இரவு 10.00>இரவு 12.00 மணி]

***நடராசர் கோயில் தீட்சிதன்களுக்கே சொந்தம் என்னும்போது, பூஜைக்கான புதிய கால அளவின்படி தீட்சிதன்கள் பூஜை செய்வதை எவரும் கண்காணித்தல் இயலாது!