எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வியாழன், 26 டிசம்பர், 2024

அண்ணாமலையின் ஆக்ரோசச் சபதம்! தி.மு.க. ஆட்சிக் கலைப்பு உறுதி!!

#நாளைக் காலை 10 மணிக்கு 6 முறை சாட்டையால் அடித்துக்கொள்வேன். தி.மு.க., ஆட்சியிலிருந்து அகற்றப்படும்வரை செருப்புப் போடமாட்டேன். பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்ததும் செருப்பைக் கழற்றிவிடுவேன். 48 நாட்கள் விரதம் இருக்கப்போகிறேன். பிப்., 2ஆவது வாரம் ஆறுபடை வீட்டிற்குச் சென்று முருகனிடம் முறையிடுவேன்#[ஊடகச் செய்தி]

“அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி வன்புணர்வு[?] செய்யப்பட்டது தொடர்பான ‘பாஜக’ தலைவர் அண்ணாமலையின் மேற்கண்ட ஆக்ரோஷப் பேச்சு உணர்த்துவது என்ன?” என்று எனக்கு நானே கேட்டுக்கொண்ட கேள்விக்குக் கிடைத்த பதில்.....

வெகு விரைவில் தமிழ்நாட்டில் ‘தி.மு.க.’ ஆட்சி கலைக்கப்படுவது உறுதி!