எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

வியாழன், 26 டிசம்பர், 2024

அண்ணாமலையின் ஆக்ரோசச் சபதம்! தி.மு.க. ஆட்சிக் கலைப்பு உறுதி!!

#நாளைக் காலை 10 மணிக்கு 6 முறை சாட்டையால் அடித்துக்கொள்வேன். தி.மு.க., ஆட்சியிலிருந்து அகற்றப்படும்வரை செருப்புப் போடமாட்டேன். பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்ததும் செருப்பைக் கழற்றிவிடுவேன். 48 நாட்கள் விரதம் இருக்கப்போகிறேன். பிப்., 2ஆவது வாரம் ஆறுபடை வீட்டிற்குச் சென்று முருகனிடம் முறையிடுவேன்#[ஊடகச் செய்தி]

“அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி வன்புணர்வு[?] செய்யப்பட்டது தொடர்பான ‘பாஜக’ தலைவர் அண்ணாமலையின் மேற்கண்ட ஆக்ரோஷப் பேச்சு உணர்த்துவது என்ன?” என்று எனக்கு நானே கேட்டுக்கொண்ட கேள்விக்குக் கிடைத்த பதில்.....

வெகு விரைவில் தமிழ்நாட்டில் ‘தி.மு.க.’ ஆட்சி கலைக்கப்படுவது உறுதி!