எனது படம்
தமிழர்கள் தமிழ்ப் பற்றாளர்களாக இருந்தால் மட்டும் போதாது; இந்தி ஆதிக்கத்தைத் தகர்க்க, தமிழ் வெறியர்களாக ஆவது[பிற மொழியாளரும்தான்] மிக அவசியம். இந்தி வெறியர்களின் கொட்டத்தை அடக்கக் கடுமையான போராட்டங்கள் தேவைப்படலாம்.

புதன், 22 ஜனவரி, 2025

10.00 கோடி முட்டாள்களைக் குளிப்பாட்டிக் குதூகளிக்கச் செய்த கும்பமேளா!!!

சுமார் 10.00 கோடிக்கும் மேற்பட்டவர்கள் கும்பமேளாவிற்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். ஒரே நாளில் அதிகபட்சமாக 54.96 கோடிப் பக்தர்கள் புனித நீராடினர்..... [செய்தி]

கங்கையில் ஓடும் அசுத்த நீரைப் புனித நீர் என்றும், நீராடினால் பாவங்கள் நீங்கிப் பரமன் பதம் சேரலாம் என்றும் நம்ப வைத்தவர்கள் அயோக்கியர்கள். 

அயராமல் அதைப் பரப்புரை செய்தவர்கள்/செய்பவர்கள் குற்றவாளிகள்; இவர்கள் எல்லாம் கடும் தண்டனைக்கு உரியவர்கள்.

பக்தியின் பெயரால் இம்மாதிரிக் குற்றங்களைச் செய்யும்[மக்கள் மனங்களில் மூடநம்பிக்கைகளைத் திணிப்பதையே தொழிலாகக் கொண்டவர்கள்] ஆன்மிகப் பித்தர்களுக்குக் கட்டற்ற சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

வழங்குபவர்கள் ஒன்றிய ஆட்சியாளர்கள்; மூடத்தனங்களைப் பாதுகாக்கவும் வளர்க்கவும் கோடி கோடி கோடியாகச் செலவு செய்கிறார்கள்.

மக்களால்தான் இவர்களைத் திருத்த முடியும்.

முன்னதாக இவர்கள் திருந்த வேண்டும். 

திருந்துவார்களா?