வியாழன், 27 பிப்ரவரி, 2025

பிரதமர் மோடியின் ஆட்சி... '-’!!! ‘+’???

*இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு முட்டாள்களின் எண்ணிக்கை மேதகு மோடியின் ஆட்சிக் காலத்தில் அதிகரித்திருக்கிறது. ‘கும்பமேளா’ கூத்தடிப்புக்கு இதில் முக்கியப் பங்குண்டு. 

*நாட்டின் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படும் அளவுக்கு, கற்பனையான புராணக் கதை மாந்தர்களுக்குக் கோடிகளில் செலவழித்துக் கோயில் கட்டுகிறார். பக்திப் பயணம் என்னும் பெயரில் வெட்டியாய் ஊர் சுற்றும் மூடர்களுக்கு வசதிகள் செய்துதரப் பெரும் தொகை செலவிடப்படுகிறது.

*பக்தி தொடர்பான தன்னுடைய நடவடிக்கைகளை இவரளவுக்கு எந்தவொரு பிரதமரும் விளம்பரம் செய்ததில்லை. சிந்திக்கும் அறிவை வளர்ப்பதற்கு எதிரான நடவடிக்கை இது.

*கடும் தண்டனைக்குரிய குற்றச் செயல்களில் ஈடுபடும் சாமியார்களுக்கு அதிக அளவில் மரியாதை தருகிறார்; நிரந்தரப் பாதுகாப்பும் உண்டு.

*அயல்நாட்டு உறவுகளை மேம்படுத்தப் பயணம் தேவைதான் என்றாலும், அதையே காரணம் காட்டி உலகம் சுற்றுவதில் அதீத ஆர்வம் காட்டுகிறார் நம் பிரதமர்.

*போதுமான ஆதாரங்கள் இல்லாமல் “அதைச் செய்தேன்; இதைச் சாதித்தேன்” என்று வெறும் வாயால் அடிக்கடி வடை சுடுகிறார்.

*குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் எதிர்க் கட்சிக்காரர்களுடன் விவாதித்து, அவை குறித்த உண்மைகளை மக்களுக்குத் தெரியப்படுத்துவதில் போதுமான அக்கறை காட்டுவதில்லை.

*அடிக்கடி, சட்டங்களைத் திருத்தி மசோதாக்களை நிறைவேற்றும் நடவடிக்கைகள், கிட்டத்தட்ட ஒரு சர்வாதிகாரியாகத் தன்னை ஆக்கிக்கொள்ளும் முயற்சியில் இவர் தொடர்ந்து ஈடுபடுகிறாரோ என்று எண்ணத் தூண்டுகிறது.

*பிரச்சினைகளைக் கையாளுவதற்கும், வளர்ச்சித் திட்டங்களை வகுத்து அவற்றை நிறைவேற்றுவதற்கும் தேவையான அறிவாற்றலும் அனுபவமும் பெற்றவர்கள் இவரின் அமைச்சரவையில் இல்லை என்றே சொல்லலாம்.

*பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியைக் கருத்தில் கொண்டுதான் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன; மாநிலங்களுக்கென்று அதிகாரங்களும் வழங்கப்பட்டன. அதை அலட்சியப்படுத்தி, மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுகிறார் மோடி. மாநில அரசுகளால் இந்த அடாத செயல் சுட்டிக்காட்டப்படினும் தன்னைத் திருத்திக்கொள்ள அவர் தயாராக இல்லை.  

மேற்கண்டவை மோடி ஆட்சி குறித்த மதிப்பீட்டு[-]ப் பட்டியல்!

‘+’?..... தேடித் தேடித் தேடிக் கண்டறிக!!