அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களை இந்தியாவுக்கு அனுப்பும்போது, மனிதாபிமானத்துடன் அது நடந்துகொள்ளுதல் வேண்டும் என்று இந்தியா டிரம்புக்குக் கோரிக்கை விடுத்திருந்தது.
இதை அலட்சியப்படுத்திய ‘டிரம்ப்’ இப்போது 119 இந்தியர்களை, முன்பு போலவே[104 பேர் கை கால்களில் விலங்கு பூட்டி ராணுவ விமானத்தில் அனுப்பப்பட்டார்கள்] கை கால்களில் விலங்கிட்டு அனுப்பியிருக்கிறார்.
அப்போது அமைதி காத்த நம் பிரதமர் மோடி இப்போதும் அமைதி காத்து இந்திய-அமெரிக்க நல்லுறவுக்குப் பங்கம் நேராமல் பாதுகாப்பதன் மூலம் இந்தியாவின் தன்மானத்தை அந்தரத்தில் பறக்கவிடுவாரா?
அல்லது,
கொதித்தெழுந்து டிரம்புக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு.....
அமெரிக்கனின் ஈனத்தனமான நடவடிக்கைக்குப் பதிலடியாக, இங்கு வருகைபுரிந்துள்ள அமெரிக்கக் குடிமகன்களில் சிலரையேனும்[‘வேவு பார்த்தல்’ போல பொய்க் குற்றம் சுமத்தியேனும்], கை கால்களில் விலங்கு மாட்டி, நம் ராணுவ விமானத்தில் அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பாரா? அல்லது வேறு சிறப்பான நடவடிக்கை மூலம் பாடம் கற்பிப்பாரா?
என்ன செய்யப்போகிறார் நம் பிரதமர்?
* * * * *
119 பேர் அனுப்பிவைக்கப்பட்டது தொடர்பாக வெளியான காணொலி: