'அவன் ஒருவனே’...
எல்லா மதத்தவரும் இதையேதான் சொல்கிறார்கள்.
மனிதர்களுக்கு வாய்த்திருக்கும் அறிவு முழுமையானது என்றோ, இதற்கும்[மனித அறிவு] மேம்பட்டதான அறிவு இல்லை என்றோ நிறுவுவது சாத்தியமே அல்ல.
மனித அறிவு ‘குறை அறிவு’; அதாவது, குறைபாடு உடையது.
இதைக்கொண்டு பிரபஞ்ச வெளி[அளவுகோள்களுக்குக் கட்டுப்படாதது]யிலுள்ள அனைத்துப் பொருள்களின்[உயிர்கள் உட்பட] என்ணிக்கையைக் கணக்கிட்டுச் சொல்வதென்பதே இயலாதது.
அப்புறம் எப்படி, கடவுள் இருப்பதே உறுதிப்படுத்தப்படாத நிலையில், ஒரே ஒரு கடவுள்தான் இருக்கிறார் என்கிறார்கள்[பல கடவுள்கள் இருந்தால் படைப்பதில் போட்டியும், படைத்தவற்றை நிர்வகிப்பதில் குழப்பமும் ஏற்படும் என்பது மூடத்தனத்தின் உச்சம்].
மனிதர்களுக்கு இந்த ‘ஒன்று’இன் மீது அளப்பரிய பிரேமை ஏற்பட்டது எப்படி?
எப்படி?!?!?!