பிரயாக்ராஜில் நடந்த பிரமாண்டமான மதக் கூட்டத்திற்குப் பிறகும் கிட்டத்தட்ட 1,000 இந்துக்கள் இன்னும் காணவில்லை என்று சமாஜ்வாதித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறினார்; உத்தரப் பிரதேச அரசு அவர்களைக் கண்டுபிடிக்கப் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில்…..
பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளா குறித்து மக்களவையில் செவ்வாய்க்கிழமை உரையாற்றிய மோடி, மகா கும்பமேளாவின்போது முழு உலகமும் இந்தியாவின் மகத்துவத்தைக் கண்டதாகக் கூறியுள்ளார்; "பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவின் வெற்றிக்குப் பங்களித்த கோடிக்கணக்கான நாட்டு மக்களுக்குத் தலைவணங்குகிறேன்" என்றும் மனம் நெகிழ்ந்தாராம்.
கும்பமேளா கூத்தடிப்பில் 1000 பக்தர்களைக் காணவில்லை[இன்னும் அதிக என்ணிக்கையிலானவர்கள் பலியாகியிருக்க வாய்ப்புள்ளது] என்று யாதவ் கூறியிருக்க, அவருக்குப் பதிலளிக்காத மோடி.....
கூட்ட நெரிசலில் பலியான 30 பேர்[அதிகாரப் பூர்வமான அறிவிப்பு]களுக்கு இரங்கல்கூடத் தெரிவிக்காத[எதிர்க்கட்சிகள் கண்டனக் குரல் எழுப்புவது இதனால்தான்] மோடி.....
மகா கும்பமேளாவின்போது முழு உலகமும் இந்தியாவின் மகத்துவத்தைக் கண்டதாகக் கூறியது எப்படி?!.
அழுக்கு நீரைப் புனித நீர் என்று பரப்புரை செய்து[கோடிக்கணக்கான ரூபாய் செலவில்] மூடர்களின் எண்ணிக்கையை அதிகரித்ததுதான் மகத்துவமா?
"மகா கும்பமேளா மெகா வெற்றி வெற்றி.. தேசத்தின் ஆத்மாவின் எதிரொலி" என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் குதூகளிக்கிறாரே அது எப்படி?
மோடி யார்?
* * * * *