வெள்ளி, 21 மார்ச், 2025

உள்துறை அமைச்சருக்கு[அமித்ஷா]ப் பொது அறிவு பூஜ்யம்!!!

இந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் ஒரு நண்பன். அது பிற இந்திய மொழிகளை வலிமையாக்குகிறது என்று அமித்ஷா உரையாற்றினார்[இந்து தமிழ்].

இப்படியொரு பொய்யை அவ்வப்போது அழுத்தம் திருத்தமாகச்சொல்லிக்கொண்டிருக்கிறார் இவர். திரும்பத் திரும்பச் சொல்வதால் பொய் ‘மெய்’ ஆகிவிடாது.

இதையே கொஞ்சம் மாற்றி, “ஆங்கிலம் அனைத்து உலக மொழிகளுக்கும் நண்பன். அது அவற்றை வலிமையாக்குகிறது” என்று சொன்னால் அது அனைவரும் ஏற்கத்தக்கக் கலப்படம் இல்லாத உண்மையாக இருக்கும்.

காரணம்.....

ஆங்கிலத்திடமிருந்துதான் பல மொழிகளும் அறிவியல், தொழில்நுட்பம் தொடர்பான அம்சங்களைப் பெற்றன; பெறுகின்றன.

அமித்ஷாவின் கிளிப்பிள்ளைப் பேச்சு அவருக்குப் பொது அறிவு இல்லை என்பதைக் காட்டுகிறது; தரமில்லாத ஒரு மொழியை[இந்தி] பிற இனத்தவர் மீது திணிக்கும் மொழி வெறியின் அடையாளம் என்றும் சொல்லலாம்.

இவர் தன்னைத் திருத்திக்கொள்வது இந்திய ஒருமைப்பாடு உடைந்து சிதறாமலிருக்க உதவும் என்பதை அவர் உணர்தல் வேண்டும்.

* * * * *

https://www.hindutamil.in/news/india/1355172-people-are-using-language-issue-to-cover-corruption-home-minister-amit-shah-2.html