புதன், 5 மார்ச், 2025

அவர்கள் பாவப்பட்டவர்கள்! நாம் வெறும் பார்வையாளர்கள்!!

*பார்வையற்றவர்களில் சுமார் 10-15 சதவீதம் பேர்கள் எதையும் பார்க்க இயலாதவர்கள்.

*அவர்களில் சிலரால் வண்ணங்களையும், பொருள்களின் வடிவங்களையும், மாறுபட்ட அளவிலான ஒளியையும் பார்க்க முடியும்.

*பார்வையற்றவர்கள் பார்வை உள்ளவர்களைவிடவும் அதிகம் கனவு காண்பார்கள்.

*பார்வையற்றவர்கள் தூங்கும்போது தெளிவான கனவுகளை அனுபவிக்கும் வாய்ப்பு வேறு எவரையும் போலவே உள்ளது. வித்தியாசம் என்னவென்றால், அவர்களின் கனவுகள் ஒலிகளாலும் வாசனைகளாலும் ஆனவை.

*பார்வைக் குறைபாடுள்ளவர்களில் 2 சதவீதத்திற்கும் குறைவானவர்களே பிரம்புகளைப் பயன்படுத்துகிறார்கள். அயல்நாடுகளில் வழிகாட்டி நாய்களைப் பயன்படுத்துவது வழக்கத்தில் உள்ளது.

*வழிகாட்டி நாய்களால் போக்குவரத்து விளக்கு பச்சையா அல்லது சிவப்பா, வேறு நிறத்துக்கு மாறுமா என்பதையெல்லாம் அறிய முடியாது. ஆனால், ஒரு கார் வந்தால் உடனே நின்றுவிடும்.

*பார்வையற்றவர் அல்லது பார்வைக் குறைபாடுள்ள ஒருவர், போக்குவரத்து சத்தம் போன்ற கேட்கக்கூடிய குறிப்புகளைப் பயன்படுத்தி, எப்போது கடப்பது பாதுகாப்பானது என்று தீர்மானித்துச் செயல்படுவதுண்டு.

*உலகளவில் 80 சதவீத பார்வைப் பிரச்சினைகளை உடனடி மருத்துவப் பராமரிப்புகளின் மூலமும், வழக்கமான கண் பரிசோதனைகள் மூலமும் தவிர்க்கலாம்; குணப்படுத்தவும் செய்யலாம்.

*50 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களிடையே குருட்டுத்தன்மைக்கு முக்கிய காரணம் கண்புரை ஆகும், இதை அறுவைச் சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்.

*அமெரிக்காவில் பார்வையற்றவர்களில் 70 சதவீதம் பேர் போதுமான உறக்கமின்றித் தவிப்பவர்கள்.

*பார்வையிழப்பு மற்ற புலன்களைக் கூர்மைப்படுத்துகிறது என்பதை ஆய்வாளர்கள் மறுத்துள்ளார்கள்.

பார்வைக் குறைபாடுகளை நீக்குவதற்காக உலகச் சுகாதார அமைப்புகள் பாடுபடுகின்றனவாம். இது போதாது.

ஒட்டுமொத்த விஞ்ஞானிகளும் கருந்துளை வெண்துளை, பெரு வெடிப்பு, பிரபஞ்ச எல்லை, கடவுள் அணு போன்றவை பற்றிய ஆராய்ச்சிகளையெல்லாம் கிடப்பில் போட்டுவிட்டு, மனிதாபிமானத்துடன் பார்வை இழப்பை முற்றிலுமாய்த் தடுப்பதற்கான வழிகளைக் கண்டறிதல் வேண்டும்

உலக நாடுகள் ஒருங்கிணைந்து செய்ல்பட்டால் மட்டுமே இது சாத்தியம்!

                        *   *   *   *   *

https://www.perkins.org/10-little-known-facts-about-blindness/