காலங்காலமாய், கடவுள்களின் பெயரால் நம்பவே இயலாத கற்பனைக் கதைகளைப் பரப்பி மக்களின் சிந்திக்கும் அறிவைச் சிதைத்தது போதாதென்று, இன்றைய அறிவியல் யுகத்திலும் அதே நாசகாரச் செயலில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள் இந்துமதவாதிகள். இவர்களுக்கு உறுதுணையாய் இருப்பவை நம் ஊடகங்கள்.
ஏற்கனவே பலமுறை சொல்லப்பட்ட விஷ்ணு பகவான் பற்றிய விந்தையான கதைகளைப் புதுப்பித்திருக்கிறது https://www.msn.com
6 Indian Cities Where Lord Vishnu's Presence Is Still Felt - MSN -இது 2025இல் வெளியானது. வாசியுங்கள். எப்படியெல்லாம் மூளையை மழுங்கடிக்கிறார்கள் என்பது புரியும்[அடைப்புக் குறிகளுக்குள் நம் விமர்சனம்].
1.பத்ரிநாத்:
இமயமலையில் அமைந்துள்ள பத்ரிநாத், இந்தியாவின் மிகவும் புனிதமான யாத்திரைத் தலங்களில் ஒன்றாகும். கடுமையான மலை வானிலையின் கீழ் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக விஷ்ணு இங்கு தியானம் செய்ததாக நம்பப்படுகிறது[கடவுளாயிற்றே, எதற்காக, எவரை நினைத்துத் தியானம்?].
குளிரில் இருந்து அவரைப் பாதுகாக்க[ஆனானப்பட்ட கடவுளுக்கே குளிருமா?!], லட்சுமி தேவி ஒரு பத்ரி மரமாக மாறியதாகக் கூறப்படுகிறது, இதனால் அந்த ஊருக்கு அந்தப் பெயர் வந்தது.
கோயிலில் வைக்கப்பட்டுள்ள விஷ்ணுவின் கருங்கல் சிலை, சுயமாக வெளிப்பட்டதாக நம்பப்படுகிறது[இந்த மாதிரிக் கதைகள் கணக்கிலடங்காதவை].
2.துவாரகா:
குஜராத்தின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள துவாரகா, பகவான் கிருஷ்ணரின் ராஜ்ஜியமாக இருந்ததாக நம்பப்படுகிறது.[ஒட்டுமொத்தப் பிரபஞ்சமே அவர் காலடியில் கிடக்கும்போது ஒரு துக்கிளியூண்டு ராச்சியம் எதற்கு?].
ஒரு நாளைக்கு ஐந்து முறை மாற்றப்படும் கோயிலின் கொடி, எப்போதும் காற்றின் எதிர்த் திசையில் பறக்கிறது[புளுகுவதற்கு வரம்பே இல்லையா?].
3.பூரி:
ஒடிசாவின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள பூரி, ஜகந்நாதர் கோயிலின் தாயகமாகும். இந்தக் கோயில் கொடி காற்றின் எதிர் திசையில் மர்மமாகப் பறக்கிறதாம்[அதே கதை].
4.ராமேஸ்வரம்:
கோயில் வளாகத்திற்குள் உள்ள 22 புனிதக் கிணறுகளில் நீராடுவது உடலையும் ஆன்மாவையும் சுத்திகரிக்கிறதாம்[இது உண்மை என்றால் மனிதர்கள் அத்தனைப் பேருமே யோக்கியராக ஆகியிருப்பார்கள்].
5.ஹரித்வார்:
உத்தரகண்டில் கங்கையின் கரையில் அமைந்துள்ள ஹரித்வார், கங்கை நதி சொர்க்கத்திலிருந்து[அதைப் பார்த்தவன் எவனும் இல்லை] பூமிக்கு இறங்கிய இடம் என்று நம்பப்படுகிறது.
புனித மலைத்தொடர், ஹர் கி பௌரி, விஷ்ணுவின் கால்தடத்தைத் தாங்கியதாகக் கூறப்படுகிறது[விஷ்ணு எங்கும் உட்காரவோ நீட்டிப் படுக்கவோ இல்லையா?],
6.மதுரா:
உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ள மதுரா, விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணரின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது[பிறந்தவர் எனின் சாகவும் வேண்டுமே! செத்தாரா?!. கிருஷ்ணர் பிறந்ததாக நம்பப்படும் இடத்திலேயே கிருஷ்ண ஜென்மபூமிக் கோயில் அமைந்துள்ளது.