வெள்ளி, 11 ஏப்ரல், 2025

பொன்முடியின் ‘ஆபாசப் பேச்சு’... புரியாதவர்களுக்காக!

விலைமாதர் இல்லத் தலைவிக்கும் வாடிக்கையாளனுக்கும் இடையிலான ‘மறைமுக உரையாடலை, சைவ & வைணவச் சமய அடையாளங்களுடன் ஒப்பிட்டு அமைச்சர் பொன்முடி பேசியதை, அமைச்சர் கனிமொழி உள்ளிட்ட பலரும் கண்டித்தார்கள் என்பதைத்தான் ஊடகங்கள் வாயிலாக அறிய முடிந்தது. அவரின் கண்டனத்துக்கு உள்ளான உரையை வாசிக்கும் பேறு[ஹி... ஹி... ஹி!!!] வாய்க்காமல் வருந்தியவர்களில் அடியேனும் ஒருவன்.

நீண்ட நேரத் தேடலுக்குப் பின்னர், ‘யூடியூப்’ காணொலி ஒன்று என் வருத்தத்தைப் போக்கியது.

அமைச்சரின் அந்தக் காணொலிப் பேச்சின் மூலம்தான், விலைமாதர் விடுதிகளில், நின்றுகொண்டோ[வாடிக்கையாளனும் விலைமாதும்] நீட்டிப் படுத்த கோலத்திலோ உடலுறவு கொள்வதற்குத் தனித் தனி ‘ரேட்’ உண்டு என்பதை அறிய முடிந்தது.

இந்த அசிங்கத்தை அம்பலப்படுத்தியதோடு அமைச்சர் தன் பேச்சை முடித்துக்கொண்டிருந்தால் வசுவுகளுக்கு உள்ளாகி அவர் வதைபட்டிருக்கமாட்டார்.

அவர் செய்த மாபெரும் தவறு.....

அந்தப் ‘பலான’ இடத்து ‘நின்றும் நீட்டிப் படுத்தும்’ செய்யும் ஆபாச நிகழ்வைச் சைவ&வைணவ மதக் குறியீடுகளுடன் ஒப்பிட்டதுதான்.

ஒப்பீட்டை, பலான விடுதித் தலைவிக்கும் வாடிக்கையாளனுக்கும் இடையேயான உரையாடல் மூலம் அறியச் செய்திருக்கிறார் அமைச்சர்.

உரையாடல்:

பலான இல்லத் தலைவி: “இது விசயத்தில் நீங்க வைணவமா சைவமா?”

வாடிக்கையாளன்:[கேள்வியின் பொருள் புரியாமல்] “புரியலையே”

தலைவி: “வைணவம்னா[நின்றுகொண்டு.....!] அஞ்சு[ரூபாய்?> எந்தக் காலத்தில்? 1971?]

 சைவம்னா[படுத்த கோலத்தில்....!] பத்து.

அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு[ஆபாசத்தின் உச்சம்; மூடநம்பிக்கைச் சாடலல்ல]ப் பலரும் கண்டனங்கள் தெரிவித்ததாக அறிகிறோம். 

காணொலி: