எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வியாழன், 17 ஜூலை, 2025

வரலாறு காணாத விமானமும் இந்திய வரலாறு கண்டிராத பிரதமரும்[மோடி]!!!


தென்ன வரலாற்றில் 'முதல்முறை'யாக?

இந்த ‘முதல்முறை’ ஏராளமான வேள்விகளைக் கேட்கத் தூண்டுகிறது.

அவற்றில் கொஞ்சம்.....

*இத்தனை நீள விமானத்தைத் திருச்சி நிலையம் கண்டதில்லையா?

*வேறெந்த முன்னாள் பிரதமருக்கும் இல்லாத வகையில், மோடி வருகைக்கு மட்டும்தான் ஒத்திகை நடத்தப்படுகிறதா?[வேறெந்த நாட்டுக்குச் சென்றாலும் இந்த ஒத்திகை தவறாமல் இடம்பெறுமா?

*குட்டையான[நீளம் குறைவாக] விமானம் என்றால் ஒத்திகை நடைபெற்றிருக்காதா?

*மோடிக்குப் பதிலாக, ஒரு ‘டூப்ளிகேட்’ பிரதமர் வந்து இறங்குவதாக இன்னொரு ஒத்திகை நடத்தப்படுமா?

*இந்த ‘ஒத்திகை’ என்பதே திருச்சி விமான நிலைய வரலாற்றில் முதன் முறையாக நடத்தப்படும் ஒன்றா?

ஒத்திகையாம் ஒத்திகை, ஒற்றை நபரின் வருகைக்கு இத்தனை அலப்பறையா?

ஆம், தேவைதான். நம் பிரதமர்[தனி நபரல்ல] கடவுளால் அனுப்பப்பட்டவர்! ‘தர்மச் சக்கரவர்த்தி’ என்னும் அதி உன்னதப் பட்டம் பெற்றவர்!!