எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2025

மருட்டும் மாரடைப்பு..... உலகின் நம்பர் 1 உயிர்கொல்லி நோய்![நினைவூட்டல் பதிவு]

உலகளவில் இறப்புக்கு இருதய நோய்கள்(CVDs) முதன்மைக் காரணமாக உள்ளன. 

இது ஒவ்வொரு ஆண்டும் 17.9 மில்லியன்[ஒரு கோடியே 79 லட்சம்] மனிதர்களைக் கொல்கிறது. 

இதய நோய்களால் இறப்பவர்களில் மூன்றில் ஒரு பங்கினர்  70 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரோக்கியமற்ற உணவு, உடல் இயக்கமின்றிச் சோம்பிக் கிடத்தல், புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துதல், மது குடித்தல், மிகு ரத்த அழுத்தம், மிகையான  சர்க்கரை, ரத்த லிப்பிட்டுகள்[கொழுப்பு அமிலங்கள், டிரைகிளிசரைடுகள், கொலஸ்ட்ரால், பாஸ்போலிப்பிட்கள் போன்றவை], திகரித்தல், உடல் பருமன், அசுத்தம் நிறைந்த சுற்றுச் சூழல் போன்றவை இதற்கான காரணங்கள் ஆகும்.

மருத்துவர்களை அணுகி, நோயின் அறிகுறிகளைக் கண்டறிந்து, உரிய முறையில் சிகிச்சை பெறுவதன் மூலம் இதய நோயால் ஏற்படும் திடீர் மரணங்களைத் தவிர்க்கலாம்

உயிர்ப் பாதுகாப்புக் குறித்த அறிவிப்பை[விழிப்புணர்வு]ச் செய்திருப்பது 'WHO' எனப்படும் உலகச் சுகாதார நிறுவனம் ஆகும்.

                                             *   *   *   *   * 

விரிவான தகவல்களுக்கு:

https://www.who.int/health-topics/cardiovascular-diseases#tab=tab_1