எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

சனி, 16 ஆகஸ்ட், 2025

ராகுல் காந்தியை அவமதித்த ஆதிக்க வெறியர் நரேந்திர மோடி!!!

கடந்த ஆண்டு[2024] நடைபெற்ற சுதந்திரத் தின விழாவில் கலந்துகொண்ட, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி மோடி நிர்வாகத்தால் அவமதிக்கப்பட்டதே, 2025ஆம் ஆண்டுச் சுதந்திரத் தின விழாவில் அவர் கலந்துகொள்ளாததற்கான காரணம்[கடைசி வரிசைக்கு முந்தைய வரிசையில் அவருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டது] என்பது ஒட்டுமொத்தச் சங்கிக் கூட்டத்திற்குத் தெரியும்.
தெரிந்திருந்தும், விழாவில் கலந்துகொள்ளாதது ‘குற்றம்’ என்கிறார்கள், பிரதமர் உட்பட. மேலும்,
“இது[சுதந்திரத் தின விழா] ஒரு பிறந்த நாள் கொண்டாட்டமோ, ஒரு கட்சி நிகழ்வோ அல்ல” என்று பேசிய மோடி, அதே விழாவில் ‘ஆர்.எஸ்.எஸ்’ சங்கிக் கட்சியினரைப் புகழ்ந்திருக்கிறார்[கீழே உள்ள ‘நகல் படம்’ காண்க].
“ஒரு பெரிய தேசத்தை வழிநடத்தும் பிரதமரா இப்படி!?” என்று நாம் கேள்வி எழுப்பவில்லை. காரணம், இவரின் முரண்பட்ட பேச்சும், வெறுக்கத்தக்க நடவடிக்கையும் நம்மைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கின்றன!