எனது படம்
அனைத்துப் போதைகளைவிடவும் ‘அதிகாரப் போதை’ மிக மிக மிக ஆபத்தானது. நம் பிரதமர் மோடி இதிலிருந்து விடுபடாவிட்டால், ஒன்றுபட்டிருக்கும் நம் இந்தியாவைச் சிதைத்துச் சிதறடித்த ‘பெருமை’க்குரியவராக அவர் ஆவார். ‘பாரத மாதா’வின் சாபத்துக்கும் அவர் ஆளாகக்கூடும்!

சனி, 16 ஆகஸ்ட், 2025

ஐயோ பாவம் அந்தக் கள்ளக் காமுகி!!!

//கள்ளக்காதலனுடன் உல்லாசமாக வாழ, உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, கணவனைத் தலையணையால் அமுக்கி மூச்சை நிறுத்தி[இது கள்ளக் காமுகனின் கைங்கரியம்]க் கொன்ற இளம்பெண்.....//[தினத்தந்தி].

கணவனிடம் பெறும் உடலுறவுச் சுகம் ‘கட்டுபடி’ ஆகாததால், அவனைக் கொல்லுவதற்கு, அச்சுகத்தை வாரி வாரி வாரி வழங்கிய கள்ளக் காமுகனின் உதவியை நாடிய இந்த மங்கையர் திலகம், கையாலாகாத கணவனுக்குக் கொடுத்த தூக்க மாத்திரைகளோடு பத்தோ பதினைந்தோ சேர்த்துக் கொடுத்திருந்தால்.....

ஆழ்ந்த தூக்கத்திலேயே அவன் சொர்க்கலோகம் சென்றிருப்பான்[தலையணையால் அமுக்கியதால் சுயநினைவு பெற்று உயிர் பிழைக்கப் போராடியிருக்கக்கூடும்]. இவளும் புண்ணியவதி[சொர்க்கத்துக்கு அனுப்பியதால்] ஆகியிருப்பாள்.

அதைச் செய்யத் தவறியதால் இவள் கொலைகாரி ஆனதோடு, ‘அது’ விசயத்தில் உதவ வந்த அந்தக் கருணாமூர்த்தியையும் கொலைக் குற்றவாளி ஆக்கிவிட்டாள்.

கம்பி எண்ணும்போது கள்ளக் காமுகனுடன் காம சுகம் அனுபவிப்பது சாத்தியமா என்ன?

பாவம், ஊடகங்களால் ‘கள்ளக் காதலர்கள்’ என்றழைக்கப்படும் கள்ளக் காமுகர்கள்!

* * * * *

https://www.dailythanthi.com/news/india/wife-paramour-arrested-for-killing-husband-in-srikakulam-1174436