எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2025

“திருடனை வேண்டாம்; திருடத் தூண்டுகிறவர்களைத் தூக்குங்கள்”!

தேர்தல் ஆணையத் தலைவன் ஆளும் கட்சிக்கு ஆதரவாக வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன. 

அந்த நபர் பதவி நீக்கம் செய்யப்படுதல் வேண்டும் என்பது மக்கள் விருப்பம்.

அதை நிறைவேற்றும் வகையில் போராடத் தொடங்கிய இந்தியா கூட்டணிக் கட்சிகள்,  நாடாளுமன்றத்தில் அந்த ஆளைப் பதவிநீக்கம் செய்திடத் தீர்மானம் கொண்டுவர இருக்கிறார்கள் என்பது புத்தம்புதியப் பரபரப்புச் செய்தி.

அவர்களின் நடவடிக்கை வரவேற்கத்தக்கதே. ஆனாலும்.....

இப்போது பொறுப்பிலிருக்கும் அந்தத் திருடனைரை அவர்களை நீக்கினால் பிரச்சினை தீர்ந்துவிடாது. புதிதாகப் பொறுப்பு ஏற்கும் அந்தத் திருடனும்ரும் அதே திருட்டுக் குற்றத்தைத் தொடர்ந்து செய்வான்ர் என்பதில் கொஞ்சமும் சந்தேகத்துக்கு இடமில்லை.

ஆதலால், இந்தியா கூட்டணிக் கட்சியினரை நாம் வேண்டிக்கொள்வது.....

“மேற்கண்ட திருடர்களைத் திருடத் தூண்டுகிற திருடன்ர்/திருடன்ர்கள் யாரெனக் கண்டறிந்து அவனைரை/அவன்ர்களைப் பதவியிலிருந்து தூக்குவதுதான் அறிவுடைமை ஆகும். அதற்கான ஏற்புடைய திட்டங்களைத் தீட்டி அதி தீவிரமாகப் போராடுங்கள்.”