எனது படம்
அனைத்துப் போதைகளைவிடவும் ‘அதிகாரப் போதை’ மிக மிக மிக ஆபத்தானது. நம் பிரதமர் மோடி இதிலிருந்து விடுபடாவிட்டால், ஒன்றுபட்டிருக்கும் நம் இந்தியாவைச் சிதைத்துச் சிதறடித்த ‘பெருமை’க்குரியவராக அவர் ஆவார். ‘பாரத மாதா’வின் சாபத்துக்கும் அவர் ஆளாகக்கூடும்!

சனி, 20 டிசம்பர், 2025

‘தீய சக்தி’ பற்றிப் பேசும் எடப்பாடி ஒரு படு பயங்கரத் தீய சக்தி!!!

//தீய சக்திகளிடம் நாம் ஏமாந்துவிட்டால் தமிழகம் இருளில் சிக்கிவிடும்//*[எடப்பாடி பேச்சு]

இவர் தமிழ்நாட்டு முதல்வராக இருந்த ஐந்து ஆண்டுகளும் தமிழ்நாடு இருளில்தான் மூழ்கிக் கிடந்தது. தீய சக்திகளான ஆதிக்க வெறியன்களிடம் தமிழினத்தை அடமானம் வைத்த இவருக்கு இணையான தீய சக்தி உலகில் வேறு எதுவும் இல்லை.

‘திமுக’ தீய சக்தியாகவே இருந்தாலும் அக்கட்சி குறித்து விமர்சிக்கும் யோக்கியதை, சங்கிகளுடன் தேர்தல் கூட்டணி அமைத்திருக்கும் இந்தக் கொத்தடிமைக்கு இல்லவே இல்லை.

இந்த ஆள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினால் மட்டுமே தமிழ்நாடு நிரந்தரமாக இருளில் மூழ்கும் என்பது 100% உறுதி.

தீய சக்தி என்று ஒன்று இருந்தால், தீய சக்திகளின் பிடியில் சிக்குண்டு கிடக்கும் இந்தத் தீய சக்தி, தீய சக்தி பற்றிப் பேசுவதறிந்து அது வாய்விட்டுச் சிரிக்கும்!
                                      
                                            *   *   *   *   *