இந்தியாவின் மொழி, கலாச்சாரம் குறித்துப் பேசியுள்ள அதிபர் புடின், "நான் சில தினங்களுக்கு முன் இந்தியா சென்றேன், சுமார் 150 கோடி மக்கள் வசிக்கும் நாட்டில் அனைவரும் இந்தி பேசுவதில்லை; 50-60 கோடி மக்களைத் தவிர பிறர் வெவ்வேறு மொழிகள் பேசுகின்றனர். இந்த ஒற்றுமையையும் பன்முகத்தன்மையையும் பாதுகாப்பது அவசியம்[https://www.dinakaran.com/news/hindi-putin-india-russia/amp/?utm=relatedarticles].
பரந்து விரிந்து பெரியதொரு நாடாக இருந்த ‘சோவியத் யூனியன்’, பல நாடுகளாக உடைந்து சிதறியதற்குக் காரணம், ரஷ்யருக்கு மட்டும் உரியதான ‘ரஷ்ய மொழி’யைப் பிற இனத்தவர்[உள்ளடங்கியிருந்த சிறு சிறு நாட்டினர்] மீது திணித்ததுதான் என்று, புடின் தன் பேச்சில் மறைமுகமாகச் சொல்லியிருப்பது நம் மோடியின் மண்டையில் உறைத்திருக்குமா?
