எனது படம்
மாந்தராய்ப் பிறந்த அத்தனைப் பேரும் ‘மனிதம்’ போற்றி, அச்சம் தவிர்த்து, அமைதியாக வாழ்ந்து முடிப்பதற்கான வழிவகைகளைக் கண்டறிவதே அறிவுடைமை ஆகும். கடவுளைத் தேடி அலைந்து, விதம் விதமாய் விழாக்கள் நடத்திக் கூத்தடித்துக் கோரிக்கைகள் வைத்துக் காத்திருப்பதால் பயனேதும் இல்லை.

சனி, 20 டிசம்பர், 2025

‘புடின்’இன் அதிரடி அறிவுரை மோடியின் மண்டையில் உறைத்திருக்குமா?


இந்தியாவின் மொழி, கலாச்சாரம் குறித்துப் பேசியுள்ள அதிபர் புடின், "நான் சில தினங்களுக்கு முன் இந்தியா சென்றேன், சுமார் 150 கோடி மக்கள் வசிக்கும் நாட்டில் அனைவரும் இந்தி பேசுவதில்லை; 50-60 கோடி மக்களைத் தவிர பிறர் வெவ்வேறு மொழிகள் பேசுகின்றனர். இந்த ஒற்றுமையையும் பன்முகத்தன்மையையும் பாதுகாப்பது அவசியம்[https://www.dinakaran.com/news/hindi-putin-india-russia/amp/?utm=relatedarticles].

பரந்து விரிந்து பெரியதொரு நாடாக இருந்த ‘சோவியத் யூனியன்’, பல நாடுகளாக உடைந்து சிதறியதற்குக் காரணம், ரஷ்யருக்கு மட்டும் உரியதான ‘ரஷ்ய மொழி’யைப் பிற இனத்தவர்[உள்ளடங்கியிருந்த சிறு சிறு நாட்டினர்] மீது திணித்ததுதான் என்று, புடின் தன் பேச்சில் மறைமுகமாகச் சொல்லியிருப்பது நம் மோடியின் மண்டையில் உறைத்திருக்குமா?