செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

கடவுள் மறுப்பு! பகுத்தறிவு வளர்ப்பு! மனிதம் போற்றல்!

இந்தப் பதிவு உங்களின் கடவுள் நம்பிக்கையைச் சிதைப்பதற்காக அல்ல; சிந்திப்பதற்கு மட்டுமே.
100விழுக்காடு விலங்காக வாழ்ந்து கொண்டிருந்த மனிதன்சிக்கிமுக்கிக் கற்களை உரசி நெருப்பு உண்டாக்கக் கற்ற போதே அவனது ஆறாவது அறிவு செயல்படத் தொடங்கிவிட்டது.

அது படிப்படியாக  வளரஒரு தலைவனின் ஆளுமையின் கீழ் குழு 
சேர்ந்து [பல்வேறு குழுக்களாக]வாழக் கற்றுக்கொண் டான்; பாதுகாப்பான குடியிருப்புகளை உருவாக்குதல், உணவைப் பதப்படுத்துதல், 
வேட்டைக்கான கருவிகளைப் படைத்தல் என்றிப்படி .............

மனிதனின்வாழ்க்கையைப் பாதுகாப்பானதாக மாற்றவும் வசதிகள் 
நிறைந்ததாக ஆக்கவும் அந்த ஆறாவது அறிவு பயன்பட்டது.
எதார்த்த வாழ்வுக்காக மட்டுமே அது பயன்படும் நிலை நீடித்திருந்தால்.....

கடவுளைக் காட்டி மனிதனின் பகுத்தறிவு முடக்கப்படாமல் இருந்திருந்தால்..............

மனித இனத்தின் முன்னேற்றம் இன்று இருப்பதைக் காட்டிலும் மிகப் பல மடங்கு அதிகரித்திருக்கும்.
மனிதன் வேற்றுக் கிரகங்களில் குடியேறியிருக்கக்கூடும்அவனுடைய ஆயுள் நிச்சயமாகச் சில நூறுகளைக் கடந்திருக்கக்கூடும்!

அன்றிலிருந்து இன்றுவரை, கடவுளை நம்ப வைப்பதிலும்அவர் பற்றி விதம் விதமான கதைகளை இட் டுக்கட்டுவதிலும்அவை பற்றி விவாதிப்பதிலும், பிற மத அழிப்பு நடவடிக்கைகளிலும், இம்மாதிரியான பிற செயல்களிலும் மனித அறிவில் பெரும் பகுதி வீணடிக்கப் பட்டு
விட்டது.

ஆதிமனிதன் இயற்கையின் சீற்றங்கள் கண்டு அஞ்சினான்.
சீற்றங்கள் கண்டு அஞ்சியதில் வியப்பில்லைதவறுமில்லை.
ஏனென்றால்தன்னைத் தாக்கி அழிக்கவல்ல அதீத சக்திகளைக்  கண்டு அஞ்சுவது உயிரின் இயல்பு.
அஞ்சியதோடு நில்லாமல்அந்த அழிவு சக்திகளையே அவன் வழிபட ஆரம்பித்ததுதான் பெரும் தவறாக அமைந்துவிட்டது. [நீரையும் நெருப்பையும் காற்றையும் மனித இனம் கடவுள்களாக வழிபட்டதும்இன்றும் வழிபடுவதும் யாவரும் அறிந்ததே]

வலியவனால் தாக்கப்பட்ட போதுஎளியவன் அவனைப் பணிந்து  
வழிபட்டுத் தன்னைக் காத்துக்கொண்ட அந்த வாழ்க்கை அனுபவம்தான் மனிதன் கடவுளை வழிபடக் காரணமாக அமைந்தது என்பது 
அனைவரும் உணர வேண்டிய உண்மை.

அந்த அடிப்படையில்தான் ‘மேலானவர்’ என்று நம்பப்பட்ட கடவுளும் மனிதர்களால் பணிந்து துதிக்கப்பட்டார்.
அறிவைச் செலவழித்து ஆழ்ந்து சிந்திப்பது என்பது அரிய செயல்.
மூளை உழைப்பு என்பது கடினமான ஒன்று.

தனக்கு வேண்டியவற்றை, அயராமல் ஓயாமல் நம்பிக்கை இழக்காமல் 
சிந்தித்துச் சிந்தித்து, உழைத்துப் பெறுவதைக் காட்டிலும், குறுக்கு வழியிலும் குறுகிய காலத்திலும் தன்னை வருத் திக் கொள்ளாமல்  அடைய 
நினைப்பது மனித குணம் !

அதனால்...........

தன் விருப்பங்களை நிறைவேற்ற மனிதன் ‘கடவுள்’ என்ற ஒருவரை நாடியதில் ஆச்சரியம் இல்லை!

மக்களின் அமைதியான வாழ்வுக்கு வழிகாட்டிய கவுதம புத்தன் 
போன்ற அறிஞர்கள் கடவுளைப் பற்றி ஒருபோதும் கவலைப் 
படவில்லைஅவர்கள் கவலைப் பட்டதெல்லாம் மனித வாழ்வை... 
உயிர்களின் வாழ்வைப் பற்றித்தான்.

இப்படிப்பட்ட உயர்ந்த மனிதர்களையெல்லாம் கடவுள்கள் அல்லது 
கடவுளின் அவதாரங்கள் ஆக்கியது மாபெரும் தவறு. அதைச் செய்தவர்கள் மதவாதிகள். மனிதனின் ஆறறிவு வளர்ச்சிக்குத் தடைக் கற்களாய் அமைந்தவர்கள் இவர்களே.

இவர்கள் கடவுளைக் காட்டி, மக்களை மூடநம்பிக்கைகளிலிருந்து 
விடுபடாதவாறு 
தடுத்ததுடன் நில்லாமல்தம் பகுத்தறிவைப் பயன்படுத்தி அரிய அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய பல  அறிஞர்களைத் தண்டித்தார்கள். இதனால், மனிதனின் ஆறறிவு வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டது.

சிக்கிமுக்கிக் கற்களால் நெருப்பு உண்டாக்கப்பட்ட காலத்திலிருந்து 
இன்றுவரைகடவுளை..... மதங்களைப் பற்றிய சிந்தனைக்கு இடம் தராமல்மனிதன் முழுமையாகத் தன் பகுத்தறிவைப் பயன்படுத்தியிருந்தால் ............

மனித இனம் பிற கோள்களிலும் குடியேறி  வாழ்ந்து கொண்டிருக்கக்கூடும்.
மனிதனின் ஆயுள் காலம் சில நூறுகளைக்  கடந்திருக்கக்கூடும்

‘ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தென்ன பயன்? மனிதனை மனிதனாக வாழ வைத்திருப்பது கடவுள் நம்பிக்கைதானே? அந்த நம்பிக்கையை மனிதனின் அடிமனதில் ஆழப் பதித்தவர்கள் மதவாதிகள் அல்லவா?’ என்றெல்லாம் நீங்கள் நினைப்பது புரிகிறது. மன்னியுங்கள்...அது தவறு என்பது என் கருத்து.


மனிதனை மனிதனாக, அதாவது, நற்பண்புகளும் உயர் குணங்களும் உள்ளவனாக வாழத் தூண்டியது அவனுக்கு இயற்கையாக வாய்த்த பகுத்தறிவுதான்; மதமோ கடவுள் நம்பிக்கையோ அல்ல. ஆழ்ந்து சிந்தித்தால் இந்த உண்மையைப் புரிந்துகொள்ளலாம்.
**********************************************************************************









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக