எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

செவ்வாய், 5 ஜனவரி, 2016

நன்றி கெட்டவரா நடிகர் டி.ராஜேந்தர்?!

“பெண்களை சிம்பு மதித்து நடக்க வேண்டும்” - உயர் நீதிமன்றம்.
‘பீப்’ பாடல் தொடர்பான வழக்குகளில் நடிகர் சிம்பு கீழ் நீதிமன்றத்தை அணுகி [முன்]ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜாமீன் பெற சிம்பு அனுமதிக்கப்பட்டுள்ளாரே தவிர வழக்குகளிலிருந்து அவர் விடுவிக்கப்படவில்லை. வழக்கு விசாரணைக்குப் பிறகு வழங்கப்படவிருக்கும் தீர்ப்பில் அவர் விடுவிக்கப்படலாம்; தண்டிக்கவும் படலாம். இந்நிலையில்.....

மகன் மீதுள்ள பாசம் காரணமாக, தன்னிலையிழந்த நிலையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “காஞ்சிபுரம் கோயில்களுக்குப் போனேன்; யாகம் செய்தேன்; கிறித்தவ தேவாலயங்களுக்கும் தர்காவுக்கும் போய் வழிபட்டேன். எனக்கு நீதி கிடைத்துள்ளது. கடவுள் மீது நான் வைத்த நம்பிக்கைக்குக் கிடைத்த வெற்றி இது.....கடவுளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்”[05.01.2016 நாளிதழ்கள்] என்று கூறியிருக்கிறார் நடிகர் டி. ராஜேந்தர்.

ஜாமீன் பெற்றுத் தந்த கடவுளுக்கு நன்றி சொன்ன ராஜேந்தர், வழக்கு வி்சாரணைக்குப் பிறகு வழங்கப்படும் தீர்ப்பின் மூலம் சிம்பு தண்டிக்கப்பட்டால்[பெண்களை மதித்து சிம்பு நடக்க வேண்டும் - நீதிபதி] தன்னைக் கைவிட்ட கடவுளுக்கு நன்றி சொல்வாரா?

ராஜேந்தர் கொஞ்சம் சிந்தித்துச் செயல்பட்டிருக்கலாம்.

கடவுள்களிடம் இவர் வைத்த கோரிக்கையாலும் நடத்திய யாகத்தாலும் “இதுவொரு சாதாரண வழக்கு. காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய வழக்கு அல்ல” என்று நீதிபதி ஜாமீன் வழக்கில் தீர்ப்பளிக்கவில்லை; தனக்குள்ள சட்ட அறிவால் அவர் எடுத்த நடுநிலை முடிவு இது. 

ராஜேந்தர் கடவுளுக்கு நன்றி சொல்லியிருக்கிறார். அவர், நீதிபதிக்குத்தான் முதலில் நன்றி சொல்லியிருக்க வேண்டும்.

சொன்னாரா? இல்லையெனில் இனியேனும் சொல்வாரா?

நல்லது செய்யும் மனிதர்களுக்குச் சேரவேண்டிய நன்றிகளையும் பெருமைகளையும் கடவுளுக்கு உரித்தாக்கிக் கொண்டாடுவதே மாந்தர் பெரும்பாலோரின் வழக்கமாக இருக்கிறது.

இவர்கள் திருந்துவது எப்போது?!?!? 
=============================================================================================









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக