அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 12 ஏப்ரல், 2018

தினமலர் நாளிதழின் கயமைக் குணம்!!!

தமிழில் வெளிவரும் அனைத்து நாளிதழ்களும்[11.04.2018], தமிழ் அமைப்புகளின் கடும் எதிர்ப்புக்கிடையே ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள்[சென்னையில்] நடத்தப்பட்டதாகச் செய்தி வெளியிட்டுள்ள நிலையில்..... 

தினமலர் மட்டும் #சிதம்பரம் ஸ்டேடியத்தில் ஐ.பி.எல் 'விசில்'[ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விசிலடித்துக் கண்டு களித்தார்களாம்]# என்பதாகத் தலைப்புச் செய்தி வெளியிட்டதோடு, முதல் பக்கத்திலேயே, 'ரஜினி முகத்தில் கரி' என்று தலைப்பிட்டு.....

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளைச் சென்னையில் நடத்தாமலிருப்பது நல்லது என்று ரஜினி கருத்துத் தெரிவித்ததாகவும், போட்டியை நடத்திக் காட்டியதன் மூலம் அவர் முகத்தில் ஐ.பி.எல். கரி பூசிவிட்டதாகவும் செய்தி வழங்கியிருக்கிறது. 

தமிழில் பத்திரிகை நடத்திப் பிழைப்பு நடத்தினாலும், தமிழையும் தமிழ் இனத்தையும் அவர்தம் நல்லுணர்வுகளையும் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் இழிபடுத்துவதையே தன் தொழில் தர்மமாகக் கொண்டிருக்கிறது இந்தக் கழிசடை நாளிதழ்.
''கிரிக்கெட் போட்டியை ஒத்திப் போடலாம். போட்டி நடைபெற்றாலும்கூட விளையாட்டு வீரர்களும் ரசிகர்களும் கறுப்பு பேட்ஜ் அணிந்துகொள்ளலாம்'' என்று ரஜினி சொல்லியிருந்தார்.

அவர் காவிரி மேலாண்மை வாரியம் குறித்த தமிழ் இன உணர்வாளர்களின் போராட்டத்தை ஆதரிக்கிறார் என்னும் கடுப்பில், ஐ.பி.எல். அவர் முகத்தில் கரி பூசியதாகச் செய்து வெளியிட்டுப் புளகாங்கிதப்பட்டிருக்கிறது தினமலர்.

ஒரு தலைமையின் கீழிருந்த தினமலர், பங்காளிச் சண்டை காரணமாகப் பாகப்பிரிவினை செய்யப்பட்ட நிலையில் அதன் விற்பனை வெகுவாகச் சரிந்துவிட்டமை ஊரறிந்த உண்மை.

விற்பனையைத் தூக்கி நிறுத்தும் முயற்சியில், 'ரஜினி முகத்தில் கரி'' என்பது போன்ற பரபரப்பான செய்திகளை வெளியிடுவது இதன் 'கிரிமினல்' புத்தியைக் காட்டுகிறது. இப்படி, இன்னும் எப்படியெல்லாமோ திடுக்கிட வைக்கும் செய்திகளை வெளியிட்டு விற்பனையைத் தூக்கி நிறுத்திடப் படாதபாடு படுகிறது தினமலர் நிர்வாகம்.

சென்னையில் நடத்தவிருப்பதாகத் திட்டமிடப்பட்ட அனைத்து ஐ.பி.எல்.போட்டிகளும் புனே நகருக்கு மாற்றப்படவிருப்பதாக ஐ.பி.எல்.தலவர் அறிவித்திருக்கிறார்[இனியும் பாதுகாப்பு அளிக்க முடியாது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துவிட்டது காரணமாம்].

ரஜினி முகத்தில் கரி பூசப்பட்டதாகப் பெட்டிச்செய்தி வெளியிட்டுப் பரவசப்பட்ட தினமலர் நிர்வாகி, இப்போது தன் முகத்திலும் கரி பூசப்பட்டிருப்பதைக் கண்ணாடியில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

ஒரு துணுக்குச் செய்தி: 'ரஜினி முகத்தில் கரி' என்று இது வெளியிட்ட செய்தி ரஜினி ரசிகர்களின் பார்வையில் படவில்லைபோலும். பட்டிருந்தால்.....

ஊரூராக, நடுத்தெருவில் வைத்து அதை எரித்துப் போராட்டம் நடத்தியிருப்பார்கள் அவர்கள்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++