அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 21 செப்டம்பர், 2018

'கருணாநிதி ↔ ஜெயலலிதா'...இவர்களில் 'ஆகச் சிறந்த' அறிவாளி யார்?

ஜெயலலிதா அவர்கள் தமிழக முதல்வராக இருந்தபோது, அவரைச் சந்தித்த ஊடக நிருபர்கள்,  ''கலைஞர் கருணாநிதி பற்றி உங்கள் கருத்து என்ன?''  என்று அதிரடியாய் ஒரு கேள்விக்கணையைத் தொடுத்தார்கள்.

அம்மையார் அவர்கள் சற்றும் யோசியாமல் பதில் சொன்னார். அந்தப் பதில்.....

''அவர் குடும்பப் பாசம் மிக்கவர்.''

அதே நிருபர் கூட்டம், பிறிதொரு நாளில் கலைஞர் கருணாநிதியைச் சந்திக்க நேர்ந்தபோது, ''ஜெயலலிதா பற்றி உங்கள் கருத்து என்ன?'' என்று கேட்டுவிட்டுப் பதிலுக்காகப் பேராவலுடன் காத்திருந்தார்கள். கருணாநிதி சொன்னார்:

''அம்மையார் பாசத்துக்காக ஏங்குபவர்.''

 கொஞ்சமே கொஞ்சம் நுணுகி ஆராய்ந்து.....

'கருணாநிதி குடும்பப் பாசம் மிக்கவர்' என்ற பதிலில், 'அவர் குடும்ப அரசியல் நடத்துகிறார். தன் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்காக எதையும் செய்பவர்' என்றெல்லாம் அர்த்தம் பண்ணத் தேவையில்லை. கலைஞரின் பாச உணர்வை மட்டுமே மனதில் கொண்டு அம்மையார் கருத்துச் சொல்லியிருக்கிறார் என்பதே உண்மை.

'பாசத்துக்காக ஏங்குபவர் ஜெயலலிதா' என்றாரே கலைஞர் கருணாநிதி, அந்தப் பதிலின் மூலம் அவர் சொல்ல நினைத்தது.....

'அவர் திருமணம் ஆகாதவர். குடும்பப் பாசத்துக்காக ஏங்குபவர்' என்பது மட்டுமே.

இருவருமே தேர்ந்த அரசியல்வாதிகள். அசாதாரணப் புத்திசாலிகள்; வார்த்தை ஜாலம் புரிவதில் வல்லவர்கள். தத்தம் அரசியல் எதிரி குறித்து மனதில் பட்டதைப் பட்டவர்த்தனமாய்ச் சொல்லத் தெரிந்தவர்கள். இருந்தும்.....

பேட்டிகளில் இருவரும் ஒருவரையொருவர் 'மதித்து'க் கருத்துச் சொன்ன அதிசய நிகழ்வு இது.

நீங்க பாட்டுக்கு, ஏடாகூடமாக ஏதேதோ அர்த்தம் எல்லாம் பண்ணி என்னை வம்பில் மாட்டிவிட்டுடிவீங்களோன்னு பயந்து.....

கருத்துப் பெட்டியைப் பூட்டி வைத்துள்ளேன்!
------------------------------------------------------------------------------------------------------------------
நடிகர் ராஜேஷ், தினத்தந்தியில் எழுதும் 'மனதைத் தொட்ட மனிதர்கள்' என்னும் தொடரிலிருந்து சுட்டது[இருவர் பேட்டி நிகழ்வு மட்டும்].

நடிகர் ராஜேஷ் அவர்களுக்கும் 'தந்தி' குடும்பத்தார்க்கும் என் நன்றி.