அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

''சாமியாரில் என்னடா போலிச் சாமியார்?''

கேரளாவின் மல்லப்பள்ளியைச் சேர்ந்த ஒரு பெண்[பெயர் வேண்டாம்] மன அமைதி வேண்டி, தேவாலயத்துக்குச் சென்று 'பாவ மன்னிப்பு' வேண்டினார். பாவ மன்னிப்பு அளிக்க வேண்டிய பாதிரியாரோ, ''திருமணத்திற்கு முன்பே நீ கற்பிழந்ததை உன் கணவனிடம் சொல்லிவிடுவேன்'' என்று மிரட்டி அவரை வல்லுறவுக்கு ஆளாக்கினார். இது ஒரு சம்பவம். இன்னும் இருக்கு!

'பிராங்கோ முள்ளக்கல்' என்னும் 'பிஷப்'பின் லீலை குறித்த செய்தி ஊடகங்களில் மானாவாரியா அடிபட்டுக்கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள். அந்த ஆள்.....

ஒரு கன்னியாஸ்திரியை மிரட்டிக் கற்பழித்தார். அவரின் அட்டூழியம் தொடர்ந்தது[இது கேரள மாநிலத்தையே நாறடித்த சம்பவம்]. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக, சக கன்னியாஸ்திரிகள் போராட்டம் நடத்தினார்கள். முதலில், ''நான் கற்பழிக்கவில்லை'' என்று சமாளித்துப் பின்னர், ''இது ஆன்மிகத்தில் ஒரு நிலை'' என்று அசடுவழிந்தார்.

சில அரசியல்வாதிகளும் தேவசபையும்கூட அவருக்கு ஆதரவளித்தன. இருந்தும்.....

இப்போது அவர் கைது செய்யப்பட்டுக் கம்பி எண்ணுகிறார். 'ஜாமீன்' வழங்கவும் நீதிமன்றம் மறுத்திருக்கிறது.

கேரளாவின் கண்ணூரிக்கு அருகில் உள்ள செபாஸ்டியன் தேவாலயத்தில் பாதிரியாராக இருந்த ஒரு பக்திமான், 2016ஆம் ஆண்டில் 16 வயதே ஆன ஒரு சிறுமியை வன்புணர்வு[ஆண்டு முழுக்க] செய்து ஒரு குழந்தைக்குத் தாயாக்கினார்[அதற்குப் பின்னரான நிகழ்வுகள் நமக்கு முக்கியமல்ல].

கீழ்வரும் தகவல் வெகு வெகு வெகு சுவாரசியமானது.

தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை விவரிப்பவர் பிரபலமாயிருந்த தமிழ் எழுத்தாளர். சில ஆண்டுகளுக்கு முன்பே காலமாகிவிட்ட அவர் 'அனுராதா ரமணன்'. சொல்கிறார்:

#1992 ஆம் ஆண்டு மடத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. சென்றேன்.

அந்தச் சாமியார் ஆன்மிகம் பேசினார். ஆன்மிகப் பேச்சு ஆபாசப் பேச்சாக மாறியது. எனக்குள் அதிர்ச்சி.....

எழுதிக்கொண்டிருந்த நான் தலை நிமிர்த்திப் பார்த்தேன். அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. காரணம்.....

என்னுடன் வந்திருந்த பெண், அந்தச் சாமியாருடன் மிக நெருக்கமாக இருந்தார்; சாமியாரின் விருப்பத்துக்கு இணங்கும்படி என்னையும் வற்புறுத்தினார். சாமியாரைப் பார்த்து, ''நீயெல்லாம் மனுஷனா?'' என்று கேட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறினேன்#

சாமியார்களின் 'லீலை' குறித்த பட்டியல் நீளுகிறது!

''சாய்பாபாவின் சீடன்'' என்று தன்னைப்பற்றிச் சொல்லிக்கொண்டவர் 'சிவ்முரத் திவிவேதி' என்னும் சாமியார். 2000 கோடிக்கு மேற்பட்ட சொத்துக்கு அதிபதி. கான்பூரில் சாய்பாபாவுக்குப் பிரமாண்ட கோயில் கட்டியவர்.

இந்தச் சாமியார், மதத்தைக் கேடயமாகப் பயன்படுத்திப் பாலியல் வக்கிரங்களில் ஈடுபட்டவர்; பெண்களைப் பாலியல் தொழிலும் ஈடுபடுத்திச் சம்பாதித்தவர். இவரின் கோயிலில் காவல்துறையினர் நடத்திய அதிரடிச் சோதனையில் இவ்வுண்மைகள் வெளியாயின.

இன்னும்...இன்னும்...இன்னும்...

ஆசாரம் பாபு, பிரம்மரிஷி[பட்டத்தைப் பாருங்கய்யா!!!!!] சுபாஷ் பத்திரி, ரஜினீஷ் குரோவா, சாமி அமிர்த்சைதன்யா, ஶ்ரீஹரி கணேஸானந்தா[நம்ம ராமகிருஷ்ண பரமஹம்சா சாமியார் நினைவுக்கு வருகிறார்] என்று இவ்வகைச் சாமியார்களின் பட்டியல் நீண்டுகொண்டே.....போகிறது.

மேற்கண்ட தகவல்களை உள்ளடக்கிய 'அந்த'க் கட்டுரையின் முடிவில்.....

'பக்தியின் போர்வையில் இம்மாதிரிச் சாமியார்கள் நிகழ்த்தும் அட்டூழியங்களும் பாலியல் கொடுமைகளும் சொல்லில் அடங்காதவை. மக்கள் விழிப்புணர்வு பெறாவிட்டால்...சட்டம் இவர்களைத் தண்டித்துத் திருத்தாவிட்டால்...தந்தை பெரியார் கேட்ட, ''சாமியாரில் என்னடா போலிச் சாமியார்?'' என்ற கேள்வியை ஒட்டுமொத்தச் சமுதாயமும் கேட்க நேரிடும்' என்கிறார் கட்டுரை ஆசிரியர்.

கட்டுரையை வெளியிட்ட, 'தமிழ் இந்து, 23.09.2018'['பெண் இன்று'] நாளிதழுக்கு நன்றி...நன்றி...நன்றி![கட்டுரை, பொருள் மாறாமல் சற்றே சுருக்கப்பட்டது].