பக்கங்கள்

ஞாயிறு, 7 ஏப்ரல், 2019

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எச்சரிக்கை!!!


பதிவு செய்த நாள்

06ஏப்
2019 
22:40
சென்னை: தி.க., தலைவர், வீரமணியை கைது செய்ய வலியுறுத்தி, ஹிந்துக்கள் பாதுகாப்பு படை நடத்தும் பொதுக்கூட்டம், மயிலாப்பூரில் இன்று நடைபெற உள்ளது.ஹிந்துக்களை புண்படுத்தும் வகையில் பேசி வரும், தி.க., தலைவர் வீரமணியை கைது செய்ய வலியுறுத்தியும், ஹிந்துக்களுக்கு விரோதமாக செயல்படும், தி.மு.க., கூட்டணிக்கு, இனி எந்த தேர்தலிலும் ஓட்டு போட மாட்டோம் என, உறுதி ஏற்கும் வகையிலும், ஹிந்துக்கள் பாதுகாப்பு படை சார்பில், மயிலாப்பூர், மாங்கொல்லையில், இன்று மாலை, 4:30 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.இதில், சமூக ஆர்வலர்கள், ஆன்மிக அன்பர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று பேச உள்ளனர். அனந்த பத்மநாப சுவாமி, 'ஸ்ரீகிருஷ்ணர்' குறித்து சொற்பொழிவாற்ற உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை, ஹிந்துக்கள் பாதுகாப்பு படை செய்துள்ளது.
-இது, இன்றைய 'தினமலர்[07.04.2018]' நாளிதழில் வெளியான செய்தி.

இதன் மூலம், இந்துமதத்திற்கு விரோதமாகச் செயல்படும் தி.மு.க.வுக்கு[கைகோர்த்துள்ள அப்பாவிக் கட்சிகளுக்கும்தான்] இனி எந்தவொரு தேர்தலிலும் ஓட்டளிப்பதில்லை என்று மயிலாப்பூரில் வாழும் பொதுமக்கள் முடிவெடுக்க இருக்கிறார்கள் என்பதை அறிகிறோம்.

இங்கே, 'இனி' என்னும் சொல் ஊன்றிக் கவனிக்கத்தக்கது. இனி என்று சொன்னதன் மூலம் இதற்கு முன்பு நடந்த தேர்தல்களில் மயிலாப்பூர் வாசிகள் தி.மு.க.வுக்கே தங்களின் பொன்னான ஓட்டுகளைப் போட்டு அதை வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள் என்பது உய்த்துணரத்தக்கது.

எனவே, இக்கணமே, ஸ்டாலின் அவர்களுக்கு இந்தச் செய்தியைச் சமர்ப்பணம் செய்வதோடு, அவரை எச்சரிக்கை செய்திடவும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம். அவ்வெச்சரிக்கை.....

'நன்றி மறப்பது நன்றல்ல' என்பது சான்றோர் வாக்கு.

கடந்த தேர்தல்களில் நீங்கள் வெற்றிக் கனிகளைப் பறிப்பதற்குத் தோள் கொடுத்து உதவிய மயிலாப்பூர் நன் மக்களை நன்றியுடன் நினைவுகூருங்கள். 

'ஒரிஜினல்' இந்துக்களான அவர்களுக்கு எதிராகச் செயல்பட்டுவரும் நீங்கள், உங்களின் தவற்றை உணர்ந்து உடனடியாக அவர்களிடம் மன்னிப்புக் கோருங்கள். கோரினால்.....

பெருந்தன்மையுடன் அதனை ஏற்றுக்கொண்டு, நடைபெறவுள்ள தேர்தலில் மட்டுமல்லாமல், இனி வரவிருக்கும் தேர்தல்களிலும் உங்கள் கட்சிக்கே[கூட்டுச் சேரும் கட்சிகளுக்கும்தான்] ஓட்டளித்து வெற்றிமாலை சூட்டுவார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 


2 கருத்துகள்:

  1. அரசியல்.... ஒரு சாக்கடை. பச்சோந்திகள் இங்கே நிறையவே... நேரத்திற்குத் தகுந்த மாதிரி வண்ணங்களையும் எண்ணங்களையும் மாற்றிக் கொள்வது இயல்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் மக்கள் எப்போது புரிந்துகொள்வார்களோ? காலம்தான் பதில் சொல்லணும்.

      மிக்க நன்றி வெங்கட் நாகராஜ்.

      நீக்கு