அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 22 ஜூலை, 2020

பசியைப் போக்க மருந்து...வடகொரியா விஞ்ஞானிகள் தீவிர முயற்சி!!!

‘வடகொரியாவில் கடும் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆமைக்கறி சாப்பிட அரசு அறிவுறுத்தல்’ -இது, இன்று வெளிவந்த ‘மாலை மலர்’[22.07.2020] நாளிதழ்ச் செய்தி.

பற்றாக்குறையைச் சமாளிக்க ஆமைக்கறி சப்பிடலாம், தவறில்லை. பசியைப் போக்க மருந்து கண்டறியும்படி விஞ்ஞானிகளை அரசு பணித்திருக்கிறதாம்! அது ஏன்?

உலகம் அறிந்திராத அதிசய நிகழ்வல்லவா இது?

மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால், எவருக்கும் பசி எடுக்காது; கிடைக்கிற உணவை உண்டு உயிர் வாழ முடியும் என்று கொரியா அரசாங்கம் நினைக்கிறதோ?[இது குறித்துக் கூடுதல் செய்தி பின்னர் வரும் என்று எதிர்பார்க்கலாம்].

கொரியா நாட்டு அறிவியல் அறிஞர்களுக்கு நம் வேண்டுகோள்:

‘வயிற்றுப் பசியைப் போக்க மருந்து கண்டுபிடிக்கும் நீங்கள், மனிதகுலத்தைப் பாடாய்ப்படுத்துகிற ‘காமப் பசி’யைப் போக்கவும் ஒரு மருந்து கண்டுபிடிங்கய்யா.

காம உணர்ச்சி இல்லேன்னா, ‘இனவிருத்தி’ தடைபட்டு மனித இனம் பூண்டோடு அழிந்துவிடும் என்று எவரும் கவலைப்படத் தேவையில்லை. அது கடவுளுக்கான கவலை!!!