அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 23 பிப்ரவரி, 2022

காற்றுக்குக் கட்டணம் வசூலித்த 'போப்' ஆண்டவர்!!!

'Windmill' எனப்படும் ராட்சதக்  'காற்றாடி' 1000 ஆண்டுகளுக்கு முன்பே பாரசீக நாட்டில் பயன்பாட்டில் இருந்திருக்கிறது. ஆனால், அப்போது அது பயன்படுத்தப்பட்டது மின்சார உற்பத்திக்காக அல்ல.

காற்றின் சக்தியைப் பயன்படுத்தி மரக் காற்றாடிகளை இயக்கி, அதன் மூலம் கல்லால் ஆன செக்குகளைச்[கல் இயந்திரம்] சுழல வைத்து, கோதுமையை அரைத்து மாவாக்கும் தொழில்நுட்பத்தைப் பாரசீகர்கள் கண்டறிந்து பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இந்தத் தொழில்நுட்பம் ஐரோப்பாக் கண்டத்திலும் பரவியது.

வெள்ளைக்காரர்கள் இதை ஒரு தொழிலாகவே செய்ய ஆரம்பித்தார்கள்.

இது விசயம் மதக்குருக்களின் கவனத்துக்குச் சென்றது.

'காற்றானது கடவுளின் சொத்து. இதை வைத்து எவரும் தன்னிச்சையாகத் தொழில் செய்தல் கூடாது. தேவாலயங்களுக்கு விண்ணப்பித்து அனுமதி பெறுதல் வேண்டும். நிர்ணயிக்கப்படும் தொகையைக் கட்டணமாகச் செலுத்தி உரிமம் பெற்றிடல் வேண்டும்' என்று அப்போதிருந்த 'மூன்றாம் செலஸ்டின் போப்பாண்டவர் பிரகடனம் செய்தாராம்.

'உரிமம் பெறுவதோடு தேவாலயத்திற்குரிய தானியத்தை முதலில் அரைத்துக் கொடுத்துவிட்டுத்தான் அன்றாடத் தொழிலைத் தொடங்குதல் வேண்டும்' என்றும் உத்தரவு பிறப்பித்தாராம்.

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் அரவை இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்த பின்னர், இந்தக் காற்றாடிகள்[காற்றாலை] மூலம் மின்சாரம் தயாரிக்கப் பயன்படும் தொழில்நுட்பம் கண்டறியப்பட்டது.

                                     *   *   *   *   *

அன்று, "காற்று கடவுளின் சொத்து" என்றார் போப்பாண்டவர். "கடவுள் யாருடைய சொத்து?" என்று யாரேனும் கேட்டிருந்தால் காற்றுக்கான கட்டணத்தை அவர் ரத்து செய்திருக்கக்கூடும்!!

ஹி... ஹி...ஹி!!!

==========================================================================

நன்றி:

'ஆனந்த விகடன்'[06.06.99] இதழ்.