எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

ஞாயிறு, 11 டிசம்பர், 2022

இவர்கள் ஐயப்பன் பக்தர்களா, செம்மறி ஆட்டு மந்தைகளா?!?!?

கீழே ஒரு காணொலி. 

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அங்குச் செல்லும் பக்தர்கள் எத்தனைக் கேவலமாகக் கையாளப்படுகிறார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி. 

இதில் இடம்பெற்றுள்ள நிகழ்வு “இவர்கள் ஆறறிவு மனிதர்களா செம்மறியாட்டு மந்தைகளா” என்று கேட்கத் தூண்டுகிறது.

தூண்களில் கயிறு கட்டி, காவலர்களால் முரட்டுத்தனமாய்த் தாங்கள் தடுத்து நிறுத்தப்படுவது எத்தனைக் கேவலம் என்பதை உணராமல், முட்டி மோதியும், தள்ளியும் தள்ளப்பட்டும் விடாப்பிடியாய் முன்னே செல்ல முயலுவது, இவர்கள் 100% ஐந்தறிவு ஜீவன்களே என்பதை உறுதிப்படுத்துகிறது.

கடவுள்களில் ஒருவராகக் கருதப்படும், ஐயப்பன், அன்று காணத் தவறினால் அப்புறம் அங்கிருந்து காணாமல் போய்விடுவாரா?

பிறிதொரு நாளில் அவரைச் சேவிக்கப் போனால், “ஏன் தாமதமாக வந்தாய்?” என்று கோபித்துக்கொள்வாரா?

இவரை விட்டால், இவர்களின் குறை தீர்க்க வேறு கடவுள்களே இல்லையா?

ஐயப்பனைப் பற்றிச் சொல்லப்படும் கதைகள் எந்த அளவுக்கு நடைமுறை சாத்தியமானவை என்று எப்போதுமே சிந்தித்தது கிடையாதா?

பக்தியின் பெயரால் தாங்கள் இழிவுபடுத்தப்படுவதை உணராத இவர்கள் பக்தர்கள் அல்ல; குணப்படுத்த முடியாத பித்தர்கள்.

இந்தப் பித்தர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் பெருகிக்கொண்டிருக்கிறது என்பதை இந்தக் காணொலியும் உறுதிப்படுத்துகிறது.

காணொலியில், காட்சி வர்ணனையும் இடம்பெற்றுள்ளது. அதையெல்லாம் காது கொடுத்துக் கேட்க வேண்டும் என்பது கட்டாயமல்ல. கண்ணுக்குத் தென்படும் நிகழ்ச்சிகளை மட்டும் ஊன்றிக் கவனியுங்கள்.

கவனித்தால்.....

கடவுள் பக்தி மனிதர்களை எந்த அளவுக்கு அறிவிலிகளாக ஆக்கிக்கொண்டிருக்கிறது என்பது புரியும்!

  

இது இன்று வெளியிடப்பட்ட[தந்தி tv, 9 மணி நேரம் முன்பு] காணொலி என்பதால், காலம் தாழ்த்தாமல் இன்றே உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.

வருகைக்கு நன்றி!