வெள்ளி, 31 மார்ச், 2023

காமம் வசீகரமானது! மிக வலிமையானது!!

வெகு சாமானியனான நான்  51 நூல்களை[அச்சு வடிவில் 5 + அமேசான் கிண்டிலில் 46]ப் படைத்துச் சாதனை[???] புரிந்தவன் என்பதை நீங்கள் அறிவீர்கள். சாதனை நிகழ்த்தியது விற்பனையில் அல்ல என்பதை நீங்கள் அறிந்திட வாய்ப்பில்லை. ஹி...ஹி...ஹி!!![மாதந்தோறும் ஒரு சிறு தொகையை அமேசான் என் வங்கிக் கணக்கில் செலுத்துகிறது என்பது ஆறுதல் தரும் நிகழ்வு].

இதைக் குறிப்பிடுவதன் நோக்கம் ‘தற்புகழ்ச்சி’ அல்ல. வேறென்ன?

நான் எழுதியவற்றுள், காம உணர்வைக் கருப்பொருளாகக் கொண்ட நூல்களே[‘காமம் பொல்லாதது!!!’, ‘காமம் கற்பீர்’, ‘யோனிப் பொருத்தம்’, ‘உடலுறவில் உச்சம்...’, ‘சதையும் கதையும்.....’] அதிக அளவில் வாசிக்கப்பட்டுள்ளன என்பதைச் சுட்டிக்காட்டுவதுதான்.

[வாசிக்கப்படும் பக்கங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு எனக்கான பங்குத் தொகை வழங்கப்படுகிறது. விற்பனை மிகக் மிகக் குறைந்த அளவில்தான்].  

இதற்கு, இயற்கையிலேயே காமம் வசீகரமானது என்பது காரணமாக இருக்கலாம்.

பயனுள்ள வேறு பல கருப்பொருள்கள் குறித்து நான் எழுதிய நூல்கள் தரமானவை அல்ல என்பதும் காரணமாக இருக்கக்கூடும்.

இதை நான் எழுதுவது  எனக்கான இந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்வது மட்டுமல்ல, காமம் மனித வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கம் மிக ஆழமானது என்பதை, மறைந்த[30 ஆண்டுகளுக்கு முன்பு] ‘ஓஷோ’, தம்முடைய நூலின் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பதை அறிந்திடச் செய்வதுதான்.

//நான் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன். உண்மையில் எழுதியதல்ல. என் பேச்சைத் தொகுத்து எழுதியிருக்கிறார்கள். அதன் தலைப்பு, ‘காமத்திலிருந்து கடவுளுக்கு’. அதற்குப் பிறகு என்னுடைய நூற்றுக் கணக்கான புத்தகங்கள் பதிப்பிக்கப்பட்டுவிட்டன. 

ஆனால், என்னை விமர்சிப்பவர்கள் மற்றவற்றைப் படித்தார்களா என்பது சந்தேகம்தான். 


குறிப்பாக, இந்தியாவில் எல்லாரும் படித்தது ‘காமத்திலிருந்து கடவுளுக்கு’ என்ற புத்தகத்தைத்தான். வர்கள் எல்லாரும் அதை விமர்சனம் செய்தார்கள்; எதிர்த்தார்கள். இன்னும் அதைப் பற்றிக் கட்டுரைகளும், மறுப்பு நூல்களும் எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள். 


மகாத்மாக்கள் அதை மறுத்துக்கொண்டே வருகிறார்கள். மற்றப் புத்தகங்களைப் பார்க்கவும் இல்லை; குறிப்பிடவும் இல்லை. புரிகிறதா? நான் ஏதோ ஒரே புத்தகத்தைத்தான் எழுதியது போல.


காமத்திலிருந்து அதி பிரக்ஞைக்குச் செல்வது பற்றி நான் பேசப்போய், உலகம் முழுவதிலும் இருந்து விமர்சிக்கப்பட்டேன்; கண்டிக்கப்பட்டேன். ஏன் கண்டிக்கிறார்கள் என்பதற்கான எந்த விளக்கத்தையும் யாரும் கொடுக்கவில்லை. 


என் புத்தகம், முப்பத்து நான்கு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. பன்னிரண்டு பதிப்புகள் வெளிவந்துள்ளன. எல்லாச் சன்னியாசிகளும் அதைப் படித்துவிட்டார்கள்//.



====================================================================================