பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

ஞாயிறு, 30 ஜூலை, 2023

காம வெறிக் காட்டுமிராண்டி ஆண்கள்! கதறி அழும் கன்னியரும் சிறுமியரும்!!

லக அளவில் எண்ணிலடங்காத கன்னிப்பெண்களும் சிறுமியர்களும் பெண்சிசுக்களும் சித்ரவதை செய்து சீரழிக்கப்பட்டிருக்கிறார்கள்; பிறந்ததன் பயனை அனுபவிக்கவிடாமல், முளைவிடும்போதே வேரோடு பிடுங்கி அழிக்கப்பட்டிருக்கிறார்கள்.



இதற்கு ஏராள உதாரணங்கள் காட்டலாம்.


*பிறந்து 9 மாதங்களே ஆன ஒரு பச்சிளம் சிசுவை 24-66 வயதுக்கு இடைப்பட்ட ஆறுபேர் கற்பழித்துக் கொலை செய்திருக்கிறார்கள். இச்செய்தியை வெளியிட்டது, ஆப்பிரிக்காவின் ஓர் இணைய இதழாகும்


*2002ஆம் ஆண்டில், அதே நாட்டில் 8 மாதக் குழந்தையை நான்கு பேர் சேர்ந்து வன்புணர்ச்சி செய்து கொன்றிருக்கிறார்கள்.


*நைஜீரியாவில், இடைப்பட்ட வயதினரும்[70-85] இம்மாதிரிக் குற்றங்களைப் புரிந்திருக்கிறார்கள்.


*சீனாவில், இரண்டு ஆசிரியர்கள் 23 கன்னிகளுடன் வெறிப் புணர்ச்சி செய்ததோடு அவர்களை விபச்சாரத் தொழிலிலும் ஈடுபடுத்தியதால் நீதிமன்றம் அவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதித்தது.


*ஆறேழு மாதக் குழந்தையிலிருந்து பதினாறு பதினேழு வயது வரையிலான கன்னியருமே பெருமளவில் சீரழிக்கப்படுகிறார்கள்.


*சில ஆண்டுகளுக்கு முன்பு, சீனாவைச் சேர்ந்த ஒரு கோடீஸ்வரக் கிழவன், இழந்த வாலிபத்தைத் திரும்பப் பெறுவதற்காக, ஒரு ஜோதிடனின் ஆலோசனைப்படி, 100 கைபடாத கன்னியரைப் வன்புணர்ச்சி செய்து பரவசப்பட்டிருக்கிறான்.


மேலும் பல கன்னியரை வேட்டையாடிப் புணர்ந்து, இழந்த வாலிபத்தை மீட்டுவிடும் முயற்சியில் அவன் தொடர்ந்து ஈடுபட்டிருந்தபோது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டான். நீதிமன்றம் அவனுக்குத் தூக்குத் தண்டனை விதித்தது.


எகிப்தைச் சேர்ந்தவன் ஹஜாத்காடி(33). குவைத்தில் தங்கியிருந்தபோது, அங்கு 10 வயதுக்குட்பட்ட 17 சிறுவர் மற்றும் சிறுமிகளை கடத்திக் கற்பழித்தான் என்று குற்றம்சாற்றப்பட்டது; மக்கள் முன்னிலையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.


இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 336 சதவிகிதம் அதிகரித்திருப்பதாகத் தேசியக் குற்றப்பிரிவு மையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டுவரை 48,338 குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.


2001ஆம் ஆண்டில் 2,113 ஆக இருந்த குழந்தைக் கற்பழிப்பு எண்ணிக்கை, 2011 ஆம் ஆண்டு 7,112 ஆக அதிகரித்துள்ளது.


2001 - 2011ஆம் ஆண்டுவரை குழந்தைக் கற்பழிப்புச் சம்பவங்களால் அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில் 9,465 வழக்குகளும், மகராஷ்டிராவில் 6,868 வழக்குகளும், உத்தரப் பிரதேசத்தில் 5,949 வழக்குகளும் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. 


குழந்தைகளையும் பெண்களையும் தெய்வங்களாகப் போற்றி வாழ்ந்த நாடு இது என்கிறார்கள். இந்தப் ‘புண்ணிய பூமி’[???], ‘பாவ பூமி’யாக மாறி நெடுங்காலம் ஆகிவிட்டது.


கூகிளில் தேடினால், மனதை வாட்டிவதைக்கும் இம்மாதிரியான கொடூரச் சம்பவங்கள் பல்வேறு நாடுகளிலும் நடந்துவருவதை அறிய முடிகிறது. அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தபோதிலும் குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே போகின்றன.


ஏதுமறியாக் குழந்தைகளையும் பேதைப் பெண்களையும் கடவுள்[?!]தான் காப்பாற்ற வேண்டும்.

* * * * *

***இத்தகவல்கள், Yahoo, Google Search ஆகிய தேடுபொறிகள் மூலம் திரட்டியவை.