பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 23 செப்டம்பர், 2023

‘இபிஎஸ்’களின் தலைவர் ‘அண்ணா’வா, ‘அமித்ஷா’வா?!?!

“அறிஞர் அண்ணாவை அவமதித்தவனின் நாக்கை அறுப்போம்; குஞ்சைத் துண்டிப்போம்” என்று இங்கே மேடை ஏறிச் சபதம் மேற்கொண்டது அண்ணாவின் பெயரைச் சொல்லிக் கட்சி நடத்தும் ஒரு கூட்டம்.

இப்போது ‘சமாதானம்’ பேச அண்ணாமலைக் கட்சியின் அதி முக்கியத் தலைவர் அமித்ஷாவைச் சந்திக்கத் தில்லி சென்று காத்துக்கிடக்கிறது.

அவர் இவர்களைச் சந்திக்க மறுத்துள்ளார் என்பது இன்றையக் காலைச் செய்தி[‘சன்’ தொ.கா].

தன்மானத் தமிழர்களா இவர்கள்?

கூட்டணிக் கட்சிகளிடையே முரண்பாடுகள் ஏற்பட்டால், அதைச் சரி செய்ய, பெரிய கட்சித்(தமிழ்நாட்டில்) தலைவரை அல்லது, தலைவர்களைச் சிறிய கட்சியின்[தமிழ்நாட்டில் ‘பாஜக’ எடுபிடிகளின் ஒரு சிறு கும்பல் மட்டுமே உள்ளது] தலைவரோ, தலைவர்களோ தேடிவந்து சந்தித்துப் பேசுவதுதான் வழக்கம்.

அந்த வழக்கத்தை இவர்கள் மாற்றியிருக்கிறார்கள்[அமித்ஷாதான் எடப்பாடியைத் தேடிவந்து சந்தித்துப் பேசியிருக்க வேண்டும்]. 

இவர்கள் சென்றது சமரசம் பேச அல்ல; அமித்ஷாவின் திருவடி வருடி மன்னிப்புக் கேட்பதற்காக.

பெருந்தலைவர் காமராசர் காலத்திலிருந்து தமிழ்நாட்டின் எந்தவொரு தலைவரும் இப்படியொரு இழி செயலைச் செய்ததில்லை.

பதவியில் இருந்தபோது சம்பாதித்த சொத்துகளைச் சேதாரமில்லாமல் கட்டிக் காப்பதற்காகத் தமிழனின் தன்மானத்தை விலை பேசுகிறார்கள் இவர்கள். 

அமலாக்கத் துறை, வருமானவரித் துறை என்று எதையெதையெல்லாமோ ஏவி ஏவித் தாங்கள் தப்பான வழிகளில் சம்பாதித்ததையெல்லாம் பறிப்பார்கள் ‘அவர்கள்’ என்ற பயம் இவர்களுக்கு  இருந்தால்.....

“கட்டுக்கட்டாய்ப் பணம், கொத்துக்கொத்தாய்த் தங்க நகைகள் என்று இருப்பில் இருப்பதையெல்லாம், இற்றுப்போகாத கெட்டியான பாலிதீன் பைகளில் மூட்டை கட்டி, கழிவுகள் தேங்குகிற ‘செப்டிக்’ டேங்குகளில் போட்டு வையுங்கள். யாராலும் கண்டுபிடிக்க முடியாது” என்பதே இவர்களுக்கான நம் பரிந்துரை.

“உங்களின் சுயநலத்திற்காகத் தமிழனின் தன்மானத்தைக் குழி தோண்டிப் புதைக்க வேண்டாம்” என்பதே நம் வேண்டுகோள்.