எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

திங்கள், 18 டிசம்பர், 2023

பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி! மிக்க நன்றி!! நெஞ்சார்ந்த நன்றி!!!

பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை வாரணாசி ‘நமோ காட்’ என்ற இடத்தில் காசி தமிழ்ச் சங்கமம் 2.0 ஐத் தொடங்கிவைத்தார்.

அவர் உரையாற்றியபோது, ’புதிய நிகழ்நேரச் செயற்கை நுண்ணறிவு’ (AI)-அடிப்படையிலான ‘பாஷினி’[தமிழாக்கம் தேவை] என்ற மொழிபெயர்ப்புக் கருவி பயன்படுத்தபட்டது. அவர் ஆற்றிய உரையைத் தமிழாக்கம் செய்த கருவி அது.

“இந்த AI தொழில்நுட்பத்தை நாங்கள் முதன்முறையாகப் பயன்படுத்துகிறோம்” என்று கூறிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்கள் இயர்போனைப் பயன்படுத்தித் தன் பேச்சைக் கேட்குமாறு அறிவுறுத்தினார்.

“இன்று, செயற்கை நுண்ணறிவு மூலம் புதிய தொழில்நுட்பத்தின் பயன்பாடு இங்கு நடந்துள்ளது. இது ஒரு புதிய ஆரம்பம் மற்றும் நான் உங்களை அணுகுவதை எளிதாக்குகிறது என்று நம்புகிறேன்” என்றும் கூறினார்.

விழாவில் பங்கேற்ற தமிழர்கள் மொழியாக்கக் கருவியைப் பயன்படுத்திப் பிரதமரின் உரையை முழுமையாகப் புரிந்துகொண்டார்கள்.

“இந்த AI தொழில்நுட்பத்தை நாங்கள் முதன்முறையாகப் பயன்படுத்துகிறோம்” என்று பிரதமர் மோடி அவர்கள் குறிப்பிட்டது கவனிக்கத்தக்கது.

இந்தத் தொழில்நுட்பத்தை முதலாவதாகத் தமிழர்களுக்கெனப் பயன்படுத்தியிருப்பது நம்மைப் பெருமகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.

மோடி அவர்களுக்குத் தமிழினத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறோம்.

மிக்க நன்றி மோடி அவர்களே!

குறிப்பு:
'பாஷினி' என்பது AI- அடிப்படையிலான மொழி மொழிபெயர்ப்பு அமைப்பாகும், இது மற்ற இந்திய மொழிகளைப் பேசுபவர்களுடன் பேசும்போதும், அந்த மொழியைப் புரியாதவர்களுடன் பேசும் போதும் அவர்களின் சொந்த மொழியில் பேச உதவுகிறது. இது,  ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயன்பாடுகள் வழியாக அணுகக்கூடியது.