அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 22 டிசம்பர், 2023

செத்துப் பிழைத்து ஞானி ஆகி ஈசனும் ஆன ரமண மகரிஷி!!!

15 வயதில் படிப்பு வராமல், ஊரைவிட்டு[திருச்சுழி] வெளியேறி, திருவண்ணாமலையில் சுற்றித் திரிந்தவர் ரமணன்.

பக்தர்களின் தயவில் 69 வயதுவரை வாழ்ந்தவர் இவர்.

திடீரென ஒரு நாள் ஆவேசம் அடைந்து[?] செத்துப்போனாராம்.

செத்தவர் ஈசனாக மாறி, மனிதனாகப் பிறந்தாராம். ஞானியாகப் பலருக்கும் ஞானம் போதித்து வாழ்ந்தாராம்[இறந்து, பின்னர் ஞான நிலையை எய்தியதாகவும், தனக்கு உடல் கிடையாது என்றும் இவரே கூறியிருப்பதாகச் சொல்லப்படுகிறது[ரமண மகரிஷிக்கு தனது 16 வது வயதில், மரண உணர்வு ஏற்பட்டது. மரணத்தில் மரணிப்பது இந்த உடல்தான் என்றால், நான் யார் என்ற கேள்வி அவருக்கு எழுந்தது. இந்த தேடலே அவரை மகான் ஆக்கி, தெய்வ நிலைக்கும் கூட்டிச்சென்றது. -https://tamil.samayam.com/religion/hinduism/ramana-maharshi-quotes-mantra-for-attain-moksha/articleshow/99521548.cms?story=5].

ஆடை துறந்து, கோவணத்துடன் இறுதி மூச்சுவரை வாழ்ந்தவர்; 99% அம்மணக் கோலத்தில் வாழ்ந்ததாலோ என்னவோ பக்தக்கோடிகளால் ‘ஞானி ஆக்கப்பட்டார்[ஞானம் என்றால் என்னவென்று விளங்கச் சொன்னவர் இவர் உட்பட எவரும் இல்லை].

உடம்பு இல்லாமல் கடவுளின் அவதாரமாக வாழ்ந்த இந்த மகானைப் புற்றுநோய்[கையில்]  தாக்கியது[ஞானியாக வாழ்ந்து தெய்வமாக ஆனவரைப் புற்றுநோய் தாக்கியது எப்படி?]. நான்கு முறை அறுவைச் சிகிச்சை செய்தும் குணமாகவில்லை.

1950இல் ஈஸ்வரனுடன் ஐக்கியமானார் இவர்[இன்றளவும் புத்தி கெட்ட தமிழரால் போற்றப்படும் அவதாரங்கள் பட்டியலில் இவருக்கு நிரந்தர இடமுண்டு].

இப்படியான இட்டுக்கட்டிய கதைகளுக்குத் தமிழில் பஞ்சமே இல்லை.

இன்றளவும் இம்மாதிரியான கதைகளைச் சொல்லிச் சொல்லியே பிழைப்பு நடத்துகிறது ஓர் அதி புத்திசாலிக் கூட்டம்!

                            *   *   *   *   *