அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 8 ஜனவரி, 2024

அப்பா... ஐயப்பா, தமிழனுக்குக் கொஞ்சம் புத்தி சொல்லப்பா!!!

//சபரிமலைக்கு எதுக்கு வர்றீங்க” என்று கேட்டுத் தாக்கிய கேரள போலீஸ்! எரிமேலியில் விரதத்தை முடிக்கும் பக்தர்கள்// -இப்படியொரு மனதை வாட்டி வதைக்கும் செய்தி[https://tamil.oneindia.com-06.01.2024] ஊடகங்களில் வெளியாகியிருக்கிறது.

‘காக்கி உடையுடுத்த மலையாளிகள், தமிழ்நாட்டு ஐயப்பப் பக்தர்களை மலை ஏறவிடாமல் மணிக்கணக்கில் காத்திருக்க வைத்திருப்பதும், அடிப்படை வசதிகள்கூட இல்லாத இடத்தில் அடைத்து வைத்திருப்பதுமான அடாவடிச் செயல்களில் ஈடுபடுகிறான்கள்’ என்பது தமிழ்நாட்டு அய்யப்பப் பக்தன்கள் ஊடகங்களிடம் பகிர்ந்த அவலச் செய்தி.

வரலாறு காணாத கூட்ட நெரிசலில் சிக்கிச் சிறுமி உள்பட சில பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். தஞ்சாவூர்ப் பகுதியைச் சேர்ந்த தயானந்த் என்பவர் 18 படியில் ஏற முயன்றபோது, அவரை அவன்கள்[கேரளப் போலீஸ்] கடுமையாகத் தாக்கியிருக்கிறான்கள்.

தாக்குதல் நடத்துவது மட்டுமல்ல, “சபரிமலைக்கு எதற்காக வருகிறீர்கள், உங்கள் ஊருக்கு ஓடுங்கள்” என்று விரட்டுகிறான்களாம் கடவுள் தேசத்துக் காவல்காரன்கள்.

இத்தனை அவமானங்களுக்கு உள்ளான பிறகும் இந்த மந்தப் புத்தித் தமிழ்நாட்டுப் பித்தன்கள் சாரி சாரியாக, அணி அணியாக, கூட்டம் கூட்டமாகச் சபரிமலைக்குப் போவதை நிறுத்தவில்லை.

மலையாளப் போலீஸ்காரன்கள், இன்றுவரை வாயால்தான் இவன்களைத் திட்டியிருக்கிறான்கள்; தடியால்தான்[லத்தி] தாக்கியிருக்கிறான்கள். இனியும் இவன்கள் சபரிமலை செல்வதை நிறுத்தாவிட்டால்.....

பொய்யப்பனான[ஆண் சாமிகளான சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த ஆபாசச் சாமி ஐயப்பன்] இந்த ஐயப்பனைப் பூஜிக்கப்போகும் தமிழ்நாட்டானுக்கு எப்படியெல்லாம் அவன்கள் ‘அசிங்க பூஜை’ நடத்துவான்கள் என்பது அந்தச் சபரிமலைச் சாமிக்கு மட்டுமே தெரியும்.

அந்தச் சாமியின் திருவடி தொழுது நாம் வேண்டிக்கொள்வது:

“சூடு, சொரணை, மானம், மரியாதை எல்லாம் இல்லாத எங்கள் நாட்டு[தமிழ்நாடு]ப் பக்தன்கள், இனியேனும் உன் நாட்டுப் போலீஸ்காரன்களிடம் அடி உதைபட்டு அவமானப்படாதிருக்க, இவன்களுக்கு[த.நா.ஐ.பக்தன்கள்]க் கொஞ்சம் நல்ல புத்தியைக் கொடப்பா”

“சாமியேஏஏஏஏஏஏஏஏஏஏய்..... சரணம் ஐயப்பா”!!!

* * * * *

https://tamil.oneindia.com/news/india/sabarimala-devottees-finished-their-fasting-at-erimeli-instead-of-treking-572375.html?story=1