எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

திங்கள், 4 மார்ச், 2024

‘25 ஆண்டுகள்’...இது என்ன கணக்கு மோடி அவர்களே?!

‘குஜராத்’ அரசு சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட, 1900 இளைஞர்களுக்கு நியமன ஆணை வழங்கும் நிகழ்வில், நம் பிரதமர் மோடியின் வாழ்த்துக் கடிதம் படிக்கப்பட்டது.

அதில்.....

“அடுத்த 25 ஆண்டுகளுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக ஆக்கும் கனவை நனவாக்கத் தீவிரமாகச் செயலாற்ற வேண்டும். அந்த வகையில், அந்த 25 ஆண்டுகள் நம் நாட்டுக்கு முக்கியமானவை” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

உண்மையாகவும், அர்ப்பணிப்பு உணர்வுடனும், தன்னலம் துறந்தும் இளைஞர்கள்[எல்லா வயதுக்காரர்களும்தான்] கடுமையாக உழைத்தால் ஐந்தாறு ஆண்டுகளிலேயே வளர்ந்த நாடுகளின் பட்டியலில் இடம்பெறுதல் சாத்தியமே.

5 ஆண்டுகள் போதாதென்று மோடி நினைத்திருந்தால், 10 ஆண்டுகளில் என்று சொல்லியிருக்கலாம்.

நாட்டின் வளர்ச்சிக்குத் தேவைப்படும் ஆண்டுகளைத் துல்லியமாகக் கணித்துச் சொல்ல முடியாது என்றால், ‘வெகு விரைவில்’ என்றுகூடக் குறிப்பிட்டிருக்கலாம்.

அவர் 25 ஆண்டுகள் என்றது எந்த அடிப்படையில்?

மோடிஜிக்கு இப்போது 70[சற்றே கூடுதலாகவும் இருக்கலாம்] வயது. 95 வயதுவரை இந்த நாட்டின் பிரதமராகக் கோலோச்சும் ஆசையைத்தான் ‘நாட்டு நலன்’ என்னும் முலாம் பூசி, இந்தியா வளர்ந்த நாடாக 25 ஆண்டுகள் தேவை என்று சொல்லியிருக்கிறார்.

மோடி உலகமகா புத்திசாலிதான். சந்தேகமே வேண்டாம்!