செவ்வாய், 30 ஜூலை, 2024

சாமிகளும் ஆசாமிகளும் அப்பாவிப் பக்தர்களும்!!!

பக்தக்கோடிகளே,

குபேர சாமி, குலச்சாமி, ஆண் சாமி, பெண் சாமி, நான்கு தலைச்சாமி, அப்பாசாமி, அப்பனுக்குப் புத்தி புகட்டிய ஆறுமுகச்சாமி, ஐயப்பசாமி,  முனியப்பசாமி, கருப்பண்ணசாமி, அனுமன் சாமி என்றிப்படி ஏராள சாமிகள் இருப்பதாக நம்புகிறீர்கள்[நம்பாதீர்கள் என்றால் அடியேனை ‘நாசகார நாஸ்திகன்', ‘அயோக்கியன்’ என்றெல்லாம் சாடுவீர்கள்].

நீங்கள் நம்புகிற சாமிகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுச் சொல்வது எப்படிச் சாத்தியம் இல்லையோ அது போலத்தான் நீங்கள் சாமிகளுக்கு எடுக்கிற விழாக்களையும் எண்ணி முடிப்பது சாத்தியமில்லை.

நீங்கள் எடுக்கிற விழாக்களில், தேர்... மன்னிக்கவும், திருத்தேர்[ஊடகக்காரர்கள் இப்படித்தான் எழுதுகிறார்கள்] இழுப்பது, அலங்கரிக்கப்பட்ட சாமி சிலைகள் நிறுவப்பட்ட சப்பரங்களை ஊர்வலமாகச் சுமந்து செல்வது போன்றவை முக்கிய விழா நிகழ்ச்சிகள் ஆகும்.

நீண்ட நாட்களாய் எனக்கொரு சந்தேகம்.

சப்பரங்களில் வைத்துச் சாமிகளைச் சுமக்கிற நீங்கள், சாமிகளுடன் சில ஆசாமிகளையும் சேர்த்துச் சுமக்கிறீர்களே, அது ஏன்? அவர்கள் கீழே நின்று தீபாராதனை காட்டினால் சாமிகள் கோபித்துக்கொள்ளுமா?