எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

சனி, 19 அக்டோபர், 2024

‘ஐ.நா.வின் அதிர்ச்சிப் புள்ளிவிவரம்’... அறிவாரா நம் உ.சு. வாலிபர் மோடி?!

வேண்டுகோள்: 

கீழ்வருவது ஐ.நா. வெளியிட்ட, வறுமை தொடர்பான புள்ளிவிவரப் பட்டியல். உலகம் சுற்றும் வாலிபரான மோடி[வாயால் வடை சுடும் கில்லாடி]யை நீங்கள் இந்தியாவில் பார்க்க நேர்ந்தால், அன்புகொண்டு இப்பட்டியலை அவரிடம் சமர்ப்பிக்குமாறு வேண்டுகிறோம். நன்றி.

 பாகிஸ்தானை விட இந்தியாவில் வறுமை அதிகம்.. வெளியான அதிர்ச்சி தகவல்!![பாகிஸ்தானைவிட இந்தியாவில் வறுமை அதிகம். -வெளியான அதிர்ச்சித் தகவல்!!]

உலகில் மொத்தம் 110 கோடிப் பேர் கொடிய வறுமையில் வாழ்ந்துவருவதாக ஐக்கிய நாடுகள் அவை(UNO) ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதில் பாதிப்பேர்(48.1%) இந்தியா, பாகிஸ்தான், எத்தியோப்பியா, நைஜீரியா, காங்கோ(DRC) ஆகிய 5 நாடுகளில் உள்ளனர்.

பாகிஸ்தானை(9.3 கோடி)விட இந்தியாவில்(23.4 கோடி) தீவிர வறுமையில் வாடுவோர் அதிகம்.

மனிதவளக் குறியீட்டில் பின்தங்கிய நாடுகளிலும், தீவிரவாதம் – போர் அதிகமுள்ள இடங்களிலும் வறுமை அதிகமாக உள்ளது. குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் 40 கோடி மக்களும், நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் 75 கோடி மக்களும் வறுமையில் உள்ளதை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

https://tamil.examsdaily.in/poverty-is-more-in-india-than-pakistan-info/  -October 18, 2024