எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

செவ்வாய், 25 பிப்ரவரி, 2025

எரிக்கிறான் ‘அவன்’! பற்றி எரிகிறது நம் பாழ் மனம்!!

றேழு மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்தது அந்தத் துயரச் சம்பவம். 

மரணமடைந்த நெருங்கிய உறவினரின் சடலம் எரிமயானத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டபோது நானும் உடன் சென்றிருந்தேன்.

எரியூட்டலின்போது கீழ்க்காணும் காணொலிக் கவிதைக்கான ‘கரு’ முகிழ்த்தது. அது கவிதையாக உருக்கொண்டது சற்று முன்னர்.

ஒரு முறையேனும் வாசிப்பதற்கான தகுதி பெற்றது இது என்னும் நம்பிக்கையில் பகிர்கிறேன்.