#உலக நாடுகள் மத்தியில் பஹல்காம் தாக்குதல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் நிலையில், உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தீவிரவாதிகளைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்கு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குத் தண்டனை வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்[https://tamil.abplive.com/news/india/pm-modi-switch-to-english-and-said-will-pursue-pahalgam-terrorists-to-the-ends-of-the-world-222059]#
மோடிஜியின் இந்த ஆவேச அறிவிப்பு அனைத்து இந்தியக் குடிமக்களையும் பேரானந்தத்தில் ஆழ்த்துவதாகும்.
தீவிரவாதிகள் உலகின் எந்தவொரு மூலைமுடுக்கில் இருந்தாலும் கண்டுபிடித்து இழுத்துவரும் வல்லமை படைத்த நம் பிரதமருக்கு, அண்டை நாடான பாகிஸ்தானில் சிறையிலிடப்பட்டுச் சித்ரவதைக்கு உள்ளாகியிருக்கும் நம் எல்லைப் பாதுகாப்புப் படை வீரரை[கீழ்க்காண்பவற்றில் ஒரு காணொலி அதை உறுதிப்படுத்துகிறது] மீட்டுவருவதென்பது மிக மிக மிக எளிது.
நம் பிரதமர் முதலில் இந்த மீட்புப் பணியைச் செய்திடல் வேண்டும் என்பது நம் கோரிக்கை.
கோரிக்கை நிறைவேறும் நாளை வெகு ஆர்வத்துடன் எதிர்நோக்குகிறோம்.