“பிரதமர் மோடி சவுதிப் பயணத்தை முடித்துவிட்டு வேக வேகமாக நாடு திரும்பினார். சுற்றுலாப் பயணிகள் தாக்கப்பட்ட இடத்தை[காஷ்மீர்> பகல்காம்]ப் பார்வையிடுவார்[உள்துறை அமைச்சர் அமித்ஷா அதைச் செய்தார்] என எதிர்பார்த்தோம். ஆனால் அவரோ,
பீகார் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். இது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. இந்தத் தாக்குதலைப் பீகார் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்துகிறாரோ என்னும் சந்தேகம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை” என்று பேசியிருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்கள்.
கலவரப் பூமியான மணிப்பூருக்கு ஒரு முறைகூடச் செல்லாத மோடி, 26 அப்பாவிப் பயணிகள் கொடூரமாகக் கொல்லப்பட்ட இடத்திற்கும் செல்லாமலிருப்பது, இவர் ஒரு பெரிய நாட்டை ஆளுவதற்குத் தேவையான மன உறுதி இல்லாதவரோ என்னும் சந்தேகத்தையும் தோற்றுவிக்கிறது![அமித்ஷாவின் மனோதிடம் பாராட்டத்தக்கது. ராகுல் காந்தியும் ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது]
* * * * *