அனைத்து உயிரினங்களுக்குள்ளும் மனிதன் மட்டுமே கடவுளைப் போற்றி வழிபடுகிறான்.
இந்த வழிபாட்டின் மூலம் பல நன்மைகளைப் பெற்றிட முடியும் என்று நம்புகிறான்; கடவுள் வழங்கிய ஆறறிவைப் பயன்படுத்திப் பல தகாத செயல்களிலும் இவன் ஈடுபடுகிறான்.
தன் விருப்பம்போல் பயன்படுத்துவதற்கான இந்த ஆறறிவை, பிற உயிரினங்களைத் தவிர்த்து மனிதனுக்கு மட்டுமே ஏன் அருள்பாலித்தார் கடவுள்?
இது அவரால் படைக்கப்பட்ட அந்தப் பிற உயிரினங்களுக்குச் செய்த துரோகம் அல்லவா?
துரோகம் செய்பவர் துரோகி.
கடவுள் துரோகியா, அல்லவா?
கோயில், குளம், புண்ணியத்தலம் என்று கோரிக்கைகளுடனும், காணிக்கை செலுத்த மூட்டை மூட்டையாய்ப் பணத்துடனும் அலையும் சுத்தப் பக்திமான்கள்> பக்திப் பித்தேறியவர்கள் சிந்திப்பார்களா?!