எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

செவ்வாய், 19 நவம்பர், 2024

“நல்லவர்களுக்கே சொர்க்கத்தில் இடம்”... முன்னணி மதங்கள்! நீங்கள் நல்லவரா?!

இந்துமதம்:

சொர்க்க லோகம் என்பது இந்திரனால் ஆட்சி செய்யப்படும் தேவ உலகம். பூமியில் மனிதர்கள் வாழும்போது புண்ணியம் செய்தவர்கள்[நல்லவர்கள்] இறந்த பின் அடையும் இடம் அது. முடிவற்ற இன்பம், சுதந்திரம்... அதுவே சொர்க்கம். கன்னிப் பெண்கள், தேவதைகள், தேவர்கள், சுவைமிகு உணவு, தொடர் களிப்பூட்டல் இருக்கும் இடமாகச் சொர்க்கம் பல நூல்களில் வருணிக்கப்படுகிறது. இது நல்ல வழிகளில் சென்றவர்களுக்கு இறைவனால் வழங்கப்படும் தீர்ப்பு என்று நம்பப்படுகிறது. சொர்க்க லோகம் குறித்து இந்து சமய வேதங்களிலும் சாத்திரங்களிலும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. https://tamil.samayam.com/religion/religious/almighty-god-created-everything-for-man/articleshow/111170438.cms?story=9

இஸ்லாம் மதம்:

5438. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், என் நல்லடியார்களுக்காக [நல்லவர்கள்] எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றியிராத இன்பங்களைச் சொர்க்கத்தில் தயார்படுத்தி வைத்துள்ளார்.” -https://www.rahmathpublications.com/muslim.php?start=5436

கிறிஸ்தவ மதம்:

சொர்க்கம் என்பது நல்லது செய்தவர் இறந்தபின் செல்லும் ஓர் இன்ப இடம் என்று நம்பப்படுகிறது. இதற்கு இணையாகக் கிறிஸ்தவ சமயத்தினர் பயன்படுத்தும் சொல் விண்ணகம் என்பதாகும்.

நல்லவர்கள் ஒழுக்கமான வாழ்ந்து, அதற்கான வெகுமதியாக சொர்க்கத்திற்குச் செல்கிறார்கள், ஒழுக்கம் கெட்டவர்களாக வாழ்பவர்கள் அதற்கான தண்டனையாக நரகத்திற்கு அனுப்பப்படுகிறார்கள்.https://plato.stanford.edu/entries/heaven-hell/


ஆக, உலகின் முக்கிய மூன்று மதங்களுமே ‘சொர்க்கம்’ என்று ஒன்று இருப்பதை நம்புகின்றன.


அது இன்பமயமானது என்றும், நல்லவர்களுக்கு மட்டுமே அங்கு இடம் உண்டு என்றும் சொல்கின்றன.


இறப்புக்குப் பின்னர் சொர்க்கம் செல்லவே நாம் எல்லோருமே ஆசைப்படுவோம் என்பதால், கடந்த காலங்களில் எப்படியோ, இன்று முதல் நல்லவர்களாக வாழ்ந்திடச் சபதம் ஏற்போம்.


ஆயினும், மனதிற்குள் ஒரு நெருடல்.....


நாம் எந்த அளவுக்கு நல்லவராக வாழ்ந்தோம் என்பதைப் பொருத்துத்தான் சொர்க்கத்தில் நாம் வாழ்வதற்கான ‘கால அளவை’ நிர்ணயிப்பார் கடவுள்.


100% நல்லவராக வாழ்வது சாத்தியம் அல்ல என்பதால், சொர்க்கத்தில் நிரந்தரமாக நாம் தங்கியிருப்பதும் சாத்தியம் அல்ல என்பது உறுதியாகிறது.


நமக்கு அனுமதிக்கப்பட்ட கால அவகாசத்திற்குப் பிறகு நாம் எங்கே அனுப்பப்படுவோம்?


எங்கே? எங்கே? எங்கே?


மதக் குருமார்களிடம் கேட்டால் துல்லியமான பதில் கிடைக்குமா?!