எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

புதன், 20 நவம்பர், 2024

‘LIC[இணையம்]யில் இந்தி’... காரணம் தொ.நு.கோளாறு அல்ல; அதிகார வெறி!!!

 எல்.ஐ.சி.யில் ஆங்கிலம் நீக்கப்பட்டதற்கான காரணம் தொழில் நுட்பக் கோளாறுதான் என்று சொல்லியிருக்கிறது அதன் நிர்வாகம்.

தொழில் நுட்பக் கோளாறு காரணமாகத் தளம் சரியாக இயங்காமல் போகலாம்; வேறு பிரச்சினைகளும் இடம்பெற்றிருக்கலாம். இந்தி மட்டுமே இடம்பெற்று ஆங்கிலம் முற்றிலுமாய் நீங்குவது சாத்தியமே அல்ல.

கட்சித் தலைவர்களிடமிருந்து கண்டனங்கள் எழாமலிருந்திருந்தால், இந்தி வழி இணையமாகவே அது நீடித்திருக்கும். முழுமையாகத் திணிக்கப்படாமலிருக்கும் பிற துறைகளிலும் அவர்களின் இந்தி மயமாக்கல் முழு வேகம் பெற்றிருக்கும்.

அனைத்துத் துறைகளிலும் இந்தியைத் திணித்து இவன்களைக் காட்டிலும் பல மடங்கு அறிவாற்றலும் செயல்படும் திறனும் உள்ள தமிழர்களையும் இன்னும் சில இனத்தவரையும் நிரந்தரமாக ஆளலாம் என்று பேராசைப்படுகிறான்கள் ‘இந்தி’யன்கள்.

இப்படிப் பேராசைப்படுவது தங்கள் கையில் அதிகாரம் உள்ளது என்றெண்ணும் திமிர்த்தனத்தால்தான்.

திமிர் அடங்கும், அல்லது அடக்கப்படும் நாள் வெகு விரைவில் வரும் என்பது உறுதி.

ரஷ்ய மொழியைத் தொடர்ந்து திணித்ததால் சோவியத் யூனியன் உடைந்து சிதறிய வரலாற்றை இவன்கள் மறந்துவிட்டான்கள் போலும்!

அதை நினைவுபடுத்தி எச்சரிக்கை செய்யவே இந்தப் பதிவு!