எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

சனி, 23 நவம்பர், 2024

சிறுநீர் பெய்து மலம் கழித்து.....

னிதன் பல்லாயிரம் கோடி உயிரினங்களில் ஒருவன்.

உணவுண்டு நீர் அருந்திப் பின்னர் அவற்றை மலமாகவும் சிறுநீராகவும் வெளியேற்றுதல் அவனின் மிக முக்கியச் செயல்பாடுகளில் ஒன்று.

மூடனோ, அறிஞனோ, மேதையோ, இவர்களில் மேற்கண்ட செயலைச் செய்பவர்கள் அனைவரும் மனிதர்களே.

தெய்வம் என்று ஒன்று இருப்பதாகச் சொன்னார்கள்; சொல்கிறார்கள்.

தெய்வம் ஒன்றோ பலவோ, இப்போதைக்கு அது ஒன்றே என்று கொள்வோம்.

அது எப்படியிருக்கும், எப்படி இயங்கும் என்பது பற்றியெல்லாம் நமக்குத் தெரியவே தெரியாத நிலையில், அந்த ஒரு தெய்வத்திற்கும் பசி எடுக்கும்; அது உணவு உண்ணும்; நீர் அருந்தும் என்று சொன்னால் அதை ஏற்போமா?

மாட்டோம். சொல்பவனை அயோக்கியன் என்றோ, அறிவிலி என்றோ வேறு அடுக்கடுக்கான இழி சொற்களாலோ சாடுவோம் என்பதில் மாறுபட்டக் கருத்துக்கு இடமில்லை.

இந்நாள்வரை இம்மண்ணில் வாழ்ந்து மறைந்த கோடி கோடி கோடானுகோடிப் பேரும் உண்டு கழித்து வாழ்ந்தவர்களே; விதிவிலக்கானவர் என்று எவரும் இல்லை.

ஆக, மனிதர் எவரும் தெய்வம்[இருந்தால்] ஆக இயலாது; இயலவே இயலாது என்பது நூறு விழுக்காடு உறுதி.

இது தெரிந்திருந்தும்.....

திருவண்ணாமலை ரமண மகரிஷி, சீரடி சாய்பாபா, புட்டபர்த்தி சாய்பாபா போன்றவர்களைக் கடவுள் அவதாரம் என்று போற்றி வழிபட்டது... வழிபடுகிறது எண்ணிலடங்காத பக்தர் கூட்டம்.

எண்ணிலடங்காத இந்த மூடர் கூட்டத்திடம் நாம் முன்வைக்கும் கேள்வி.....

உயிர் வாழ்ந்தவரை இந்த அவதாரங்கள் உணவுண்டு மலம் கழித்ததில்லையா? நீர் அருந்திச் சிறுநீர் பெய்ததில்லையா? 

“மலம் கழித்தார்கள். ஆனால் நம்மவருடையதைப் போல அதில் கெட்ட வாசனை இருக்காது; சந்தனம் போல் கமகமக்கும். அவர்களின் சிறுநீர் சுவைநீர் போல இனிக்கும்” என்கிறார்களா அவதாரங்களின் விசுவாசிகள்?

“ஆம்” என்பது அவர்களின் பதிலாயின், வர்களின் இந்த முட்டாள்தனத்தைப் பயன்படுத்தித்தான், ஜக்கி வாசுதேவன், நித்தியானந்தன்,  பாபா ராம்தேவன், குர்மித் ராம் ரஹீம், நிர்மல் பாபா, ஓம் சுவாமி, சுவாமி அஸீமானந்தா, ராதே மா போன்றவர்கள் தங்களைக் கடவுளின் அவதாரம் என்று சொல்லிக்கொண்டு கோடிகளில் புரண்டு சொகுசாக வாழ்ந்தார்கள்; வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

வாழ்க அவதாரங்கள்! வளர்க பக்தி!!

                                               *   *   *   *   *

அவதாரம் குறித்த ஒரு கட்டுக்கதை:

இந்துப் புராணங்களின்படி, இந்து மதத்தின் அடிப்படை நம்பிக்கை என்னவென்றால், நல்லவர்கள் மற்றும் பக்தியுள்ளவர்கள் துன்பப்படும்போது கடவுள் மனிதனாகப் உருவெடுத்துப் பூமிக்கு இறங்குகிறார். அவதார் என்ற சொல்லுக்கு இறங்குதல்(பூமிக்கு) என்று பொருள். கடவுள் காலத்தின் தேவையின் அடிப்படையில் பூமியில் இறங்குகிறார், நல்லவற்றைப் பாதுகாக்கிறார், தீமையை அழித்துத் தர்மத்தை(நீதியை) மீட்டெடுக்கிறார். அவதாரங்கள் பற்றிய கருத்து இதிஹாஸ் மற்றும் புராணங்களின்(வேத புராணங்கள்) பிற்கால, வரலாற்றுk காலங்களில் மட்டுமே நடைமுறைக்கு வந்தது. அது வேதங்களில் காணப்படவில்லை[https://hinduismwayoflife.com/hinduism-avatar-saints-3/]

* * * * *

  புட்டபர்த்தி சாயிபாபா பற்றிய புருடாக்களில் ஒன்று:

     [பக்தர்கள் கொட்டிக்கொடுத்த பணத்தை நல்ல வழிகளிலும் செலவழித்தார் என்பது பாராட்டுக்குரியது]