எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

ஞாயிறு, 24 நவம்பர், 2024

ஏழுமலையானுக்கு இங்கு நிகரில்லை கண்டீர்!!!

திருப்பதியின் உலகப் புகழ்பெற்ற வெங்கடேஸ்வரா கோயிலின் நிகர மதிப்பு ₹2.5 லட்சம் கோடி(சுமார் 30 பில்லியன் டாலர்). ஐடி சேவை நிறுவனமான விப்ரோ, உணவு&குளிர்பான நிறுவனமான நெஸ்லே, அரசுக்குச் சொந்தமான எண்ணெய்&இயற்கை எரிவாயு ஆகியவற்றின் சந்தை மூலதனத்தைவிட இது அதிகம். 

சுமார் இரண்டு டஜன் நிறுவனங்கள் மட்டுமே இந்தக் கோயில் அறக்கட்டளையின் நிகர மதிப்பைவிட பெரிய சந்தை மதிப்பைக் கொண்டுள்ளன.

ஏழு மலைகளில் உள்ள குடிசைகள், விருந்தினர் மாளிகைகள் உள்ளிட்ட விலைமதிப்பற்ற சொத்துக்கள்&பழங்கால நகைகள்[சரியாக மதிப்பிடப்படவில்லை] நீங்கலாக.

பிரமிப்பின் உச்சத்தைத் தொட்டுவிட்ட நிலையில், நாம் எழுப்பும் கேள்வி.....

உலக அளவில், பல்லாயிரக்கணக்கான கடவுள்கள்[இஸ்லாம், கிறித்தவம், இந்து, பிற மதங்கள் சார்ந்தவை; ‘கடவுள் ஒருவரே’ என்பதெல்லாம் வெறும் வாய்வார்த்தை] மக்களால் வழிபடப்படுகின்றன.

அக்கடவுள்களுக்குக் கோடி கோடி கோடிக் கணக்கில் வருமானம் ஈட்டும் திறமை திருப்பதி ஏழுமலையான் அளவுக்கு இல்லாமல்போனது எப்படி?

கடவுள்களுக்குள் ஏன் இத்தனைப் பிரமாண்ட ஏற்றத்தாழ்வுகள்?

ஏன்? ஏன்? ஏன்?

***நம்புங்கள், நம் கேள்வி மனப்பூர்வமானது; உள்நோக்கம் ஏதும் இல்லை! ஹி... ஹி... ஹி!!!

                          *   *   *   *   *

கூடுதல் விவரங்களுக்கு:

https://www.ndtv.com/andhra-pradesh-news/tirupati-temple-worth-over-rs-2-5-lakh-crore-is-richer-than-wipro-nestle-3496660