வெள்ளி, 13 பிப்ரவரி, 2026

கல் கட்டடத்திற்குப் பெயர் சூட்டுவது ஒரு சாதனையா? அடக் கடவுளே!!

 

பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் பிப்ரவரி 13, 2026 அன்று புதிய பிரதமர் அலுவலக வளாகமான சேவா தீர்த்தத்தை(Seva Teerth) அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்[ஊடகச் செய்தி]. 

அதென்ன ‘சேவா தீர்த்தம்’?

கல்லால் ஆனதோ, மண்ணால் ஆனதோ, வெறும் அட்டை வேய்ந்ததோ கட்டடம் எதுவாயினும், அதில் தங்கியிருந்து சிறப்பாகப் பணியாற்றுவதுதான் முக்கியமே தவிர, அதற்குச் ‘சேவா தீர்த்தம்’ என்பது போல் பெயர் சூட்டுவதெல்லாம் தேவையற்ற செயல்.

சேவை என்றால் மக்களுக்குப் பிரதிப்பலன் கருதாமல் தொண்டாற்றுதல். 

தீர்த்தம்... புனித நீர்> புனித நீர் நிலை என்றும் பொருள் கொள்ளலாம்[மோடிக்காக].

அதாவது, தான் திறக்கவிருக்கும் கட்டடத்திற்கு[இவர் தங்கியிருந்து சேவை புரியும் இடம்]ப் ‘புனிதமான நிலையம்’ என்று பொருள்பட, ‘சேவா தீர்த்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார் புனிதர் மோடி.

அதை, ‘நிர்வாகக் கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும் மைல்கல்’ என்றும் தற்பெருமை பேசியிருக்கிறார்.

உல்க அளவில் பிரதமர் எவரேனும், தான் வேலை பார்க்கும் கட்டடத்திற்கு இப்படியெல்லாம் பெயர் வைத்து, தன் நாட்டு மக்களையே முட்டாள்கள் ஆக்கியதாக வரலாறு இல்லை என்பது நம் நம்பிக்கை... அல்ல, வருத்தம்.

ந்த முட்டாளாக்கும் கில்லாடி வேலையைச் சில மாதங்களுக்கு முன்பே செய்திருக்கிறார் அவதாரியால் ஆசீர்வதிக்கப்பட்ட அமித்ஷா.

கீழ்க்காண்பது மோடிக்கு அவர் சூட்டிய புகழ்மாலை:

//கடந்த 11 ஆண்டுகளாக, மோடி அரசாங்கம் வெறும் அதிகாரத்தின் அடையாளமாக இல்லாமல், சேவையின் அடையாளமாகவே திகழ்கிறது. இதில், ஆட்சியின் உச்சியில் உள்ள பிரதமர் தன்னைப் 'பிரதம சேவகராக'க் கருதி, மக்களுக்காக வாரத்தில் ஏழு நாட்களும்[!!!!!], 24 மணி நேரமும் உழைக்கிறார் என்று மத்திய உள்துறை அமைசசர் திரு. அமித் ஷா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் பிரதமரின் அலுவலகத்திற்குச் 'சேவா தீர்த்தம்' என்று பெயரிட்டு, சேவைக்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். மேலும், 'ராஜ் பவன்' மற்றும் 'ராஜ் நிவாஸ்' ஆகிய பெயர்கள் இப்போது 'மக்கள் பவன்' மற்றும் 'மக்கள் இல்லம்' என்று பெயர்மாற்றம் செய்யப்படுகின்றன.

சேவை மற்றும் நல்லாட்சியே முதன்மையானது என்ற கொள்கையின் அடிப்படையில், ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சியடைந்த மற்றும் சிறப்பான இந்தியாவை உருவாக்கும் இந்தப் பொற்காலப் பயணத்தில் இது ஒரு முக்கியமான மைல்கல் என்றும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்//

வியாழன், 12 பிப்ரவரி, 2026

“ஜனகணமன...” -இது தேசத்தைப் போற்றும் கீதமா, தெய்வத்தைத் துதி பாடும் பாடலா?

//ரவீந்திரநாத் தாகூர் எழுதிய "ஜன கண மன... " இந்தியாவின் தேசியக் கீதமாகும். இது மக்களின் மனதில் ஆட்சி செய்பவரும், பாரதத்தின் தலையெழுத்தை நிர்ணயிப்பவருமான இறைவனைப் போற்றுகிறது. 1950-ல் ஏற்றுக்கொள்ளப்பட்ட இது, பஞ்சாப், சிந்து, குஜராத், மராட்டியம், திராவிடம் (தென்னிந்தியா), ஒரிசா மற்றும் வங்காளம் ஆகிய பகுதிகளைக் குறிப்பிட்டு, இந்தியாவின் பன்முகத்தன்மையை வலியுறுத்துகிறது// -விக்கிப்பீடியா.

//ஜன கண மன - தேசிய கீதத்தின் தமிழ் அர்த்தம் (பொருள்):

ஜன-கன-மன-அதிநாயக ஜய ஹே: இந்திய மக்களின் மனதை ஆட்சி செய்யும் தலைவா உனக்கு வெற்றி!

பாரத-பாக்ய-விதாதா: பாரதத்தின் (இந்தியாவின்) நல்விதியை நிர்ணயிப்பவனே!

பஞ்சாப-சிந்து-குஜராத-மராட்டா-திராவிட-உத்கல-வங்க: பஞ்சாப், சிந்து, குஜராத், மராட்டியம், தென்னிந்தியப் பகுதிகள், ஒரிசா மற்றும் வங்காளம்[உன்னைப் போற்றுகின்றன]. 

விந்திய-ஹிமாசல-யமுனா-கங்கா: விந்திய மலைகள், இமயமலைகள், யமுனை & கங்கை நதிகள்(உன்னைப் போற்றுகின்றன).

உச்சல-ஜலதி-தரங்கா: அலைகளை எழுப்பும் இந்தியப் பெருங்கடல் (உன்னைப் போற்றுகிறது).

தவ சுப நாமே ஜாகே: உனது மங்களகரமான பெயரைக் கேட்டு, அனைவரும் விழித்தெழுகின்றனர்.

தவ சுப ஆசிஷ மாகே: உனது மங்களகரமான ஆசிகளை வேண்டி நிற்கின்றனர்.

காஹே தவ ஜய காதா: உனது வெற்றியைப் பாடுகின்றனர்.

ஜன-கன-மங்கலதாயக ஜய ஹே: மக்களின் நல்வாழ்வை அருள்பவனே, உனக்கு வெற்றி!

பாரத-பாக்ய-விதாதா: பாரதத்தின் விதியை நிர்ணயிப்பவனே, உனக்கு வெற்றி!

ஜய ஹே, ஜய ஹே, ஜய ஹே: வெற்றி! வெற்றி! வெற்றி!
  • ஜய ஜய ஜய, ஜய ஹே: வெற்றி, வெற்றி, வெற்றி, உனக்கு வெற்றி!// -விக்கிப்பீடியா.
***சிவப்பு வண்ணத்தில் உள்ள அத்தனைச் சொற்களும் சொற்றொடர்களும் கடவுளைக் குறிக்கின்றன. இந்நிலையில், நம் தேசிக் கீதம் போற்றுவது நம் தேசத்தை அல்ல, அவரை[கடவுள்] மட்டுமே என்று சொல்லலாமா?என்னும் கேள்வி எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

பதில்:
“மொழியாக்கம் செய்த கூகுளாருக்கு நன்றி!”[ஹி... ஹி... ஹி!!!]             

புதன், 11 பிப்ரவரி, 2026

“கடவுளை மற; மனிதனை நினை”... தேவை நினைவுகூர்தல் தினம்!

முதியோர் தினம், மகளிர் தினம், தந்தையர் தினம், அன்னையர் தினம், காதலர் தினம், காமுகர் தினம்[ஹி...ஹி...ஹி!] என்றெல்லாம் உலகளவில் சிறப்பு ‘நினைவுகூர்தல்’ தினங்கள் கொண்டாடப்படுகின்றன.

இவற்றோடு, ‘கடவுளை மற. மனிதனை நினை’ தினமும் கொண்டாடப்படுதல் வேண்டும்.

நிரூபிக்கவே இயலாத கடவுளைப் பற்றிச் சிந்தித்ததால் ஆன்மிகம் போற்றும் மதங்கள்[விதிவிலக்கானவை உள] பல தோன்றின. கருத்து வேறுபாடுகள் காரணமாக அவற்றிடையே மோதல்கள் நிகழ்ந்தன; போர்கள் வெடித்தன; உலகம் பெரும் பெரும் அழிவுகளை எதிர்கொண்டது.

சுருங்கச் சொன்னால், கடவுளைப் போற்றும் மதங்களால் விளைந்த நன்மைகளைக் காட்டிலும் நேர்ந்த தீமைகள் மிக மிக மிக அதிகம். இதைக் கருத்தில் கொண்டுதான் பெரியார், “கடவுளை மற; மனிதனை நினை” என்றார்.

ஆண்டுதோறும், பல மூடநம்பிக்கைகளுக்குக் காரணமான  கடவுளை மறந்து, ‘கடவுளை மற. மனிதனை நினை’ தினம் கொண்டாடப்பட்டால்.....

மனிதப் பண்பு சிறக்கும். சாதி, மதம், இனம், மொழி போன்றவற்றால் உருவாகும் வேறுபாடுகள் மறையும். மக்களிடையே மோதல்கள் இல்லை; போர்கள் இல்லை; பேரழிவுகளும் இல்லை என்னும் நிலை உருவாகும்.

சுருங்கச் சொன்னால்.....

மனிதர்கள் மனிதர்களுக்காகவே வாழ்வார்கள்[பிற உயிர்களுக்கு உதவுவதும் நிகழும்].

மனிதர்கள் மனிதர்களுக்காகவே வாழும் காலம் வருமா?

‘வரும்’ என்று நம்புவோம். 

செவ்வாய், 10 பிப்ரவரி, 2026

அன்று நாம் ஆங்கிலேயருக்கு அடிமை! இன்று?

றிவியல் துறையின் முன்னோடிகளாக இருந்த ஆங்கிலேயர்களின் ‘ஆதிக்க வெறி’தான் உலகின் பெரும்பாலான நாடுகளைக் கைப்பற்றி ஆள வழிவகுத்தது.

ஆதிக்க வெறி இருந்த அளவுக்குத் தங்களின் மொழியான ஆங்கிலத்தை, அடக்கி ஆண்ட மக்கள் மீது திணிக்கும் வெறி அவர்களுக்கு இருந்ததில்லை.

அறிவியல் அறிவை அனைவரும் பெற்றிட வேண்டும் என்னும் எண்ணத்துடன்தான்,  கல்வி நிறுவனங்களில் அதைப் பாட மொழியாக ஆக்கினார்கள்; அறிவியல் கற்கும் ஆர்வத்தில் மக்களும் அதைக் கற்றார்கள்.

இந்தியாவைப் பொருத்தவரை, ஆங்கிலேயரிடமிருந்து நாம் விடுதலை பெற்றாலும், விடுதலைக்குப் பிறகு நம்மை[+ஒட்டுமொத்த இந்தியாவையும்] ஆளுகிறவர்கள் ‘இந்தி’யர்கள்தான்[இந்தி அல்லாத பிற மொழிக்காரர்களுக்கு உயர் பதவிகள் தரப்பட்டாலும், அவர்களைத் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள் அவர்கள்> குஜராத்திகளான மோடி, அமித்ஷா போன்றவர்கள் பதவிக்காக இந்தியைத் தங்களின் தகப்பன் மொழியாக ஏற்றுக்கொண்டவர்கள்]. 

அனைத்து அதிகாரங்களும் தங்களுக்கு இருக்கிறது என்னும் ஆணவத்தில்தான், இந்தியைத் தவிரப் பிற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் மீது இந்தியைத் திணிக்கும் வேலையை அவ்வப்போது அவர்கள் முடுக்கிவிடுகிறார்கள். இதன் மூலம் பிற மொழிகளைப் பலவீனப்படுத்தி அவற்றை முற்றிலுமாய் அழித்துவிட முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

கீழ்க்காண்பவை அண்மைக் காலத் திணிப்புகளில் இடம்பெற்றவை:                            [நன்றி: இந்து தமிழ்]

ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்ற நம்மால்[+பிற மொழிக்காரர்கள்] ஆதிக்க இந்தி வெறியரிடமிருந்து விடுதலை பெறுவது சாத்தியமா?

எப்படி? எப்போது?

திங்கள், 9 பிப்ரவரி, 2026

'ஆண் - பெண்’ சமத்துவம்... அந்த நாளும் வருமா?![+மிக முக்கியக் காணொலி> கீழே]

ரிரு நாட்களுக்கு முன்பு, உலகம் போற்றும் குரங்குக் கடவுளால்[ஆஞ்சநேயர்] பிரபலமான எங்கள் ஊரில் உள்ள, கண்ட கண்ட சுவர்களில் எல்லாம் மேற்கண்ட விளம்பரம் ஒட்டப்பட்டிருந்தது. வம்புதும்புகளில் மாட்டிக்கொள்வதைத் தவிர்க்க[ஹி... ஹி... ஹி!!!], சம்பந்தப்பட்டவர்களை அடையாளப்படுத்தும் சொற்றொடர்களை[+ தேவையற்ற கூடுதல் விவரங்கள்] நீக்கியுள்ளேன்.

இது ஆண்களுக்கான[+2ஆம் திருமணம்] விளம்பரம்.

கணவரை இழந்த பெண்கள் தங்களின் இரண்டாம் திருமணத்திற்காக ‘ஆண்கள் தேவை’ என்று விளம்பரம் செய்யும் நாளும் வருமா?[அந்த நாள்தானே, ஆண்களுக்கு நிகரான ‘சமத்துவத்தை’ப் பெண்கள் முழுமையாகப் பெற்றிடும் நாளாக இருக்கமுடியும்?]

வந்தால்.....

நாடெங்கும் கீழ்க்காண்பது போன்ற விளம்பரங்கள் தென்படக்கூடும்.

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026

இப்படியும் கோபத்தைக் குறைக்கலாம்![100% சிரிப்புக் கதை]

குப்புச்சாமி, சன்னலோர இருக்கையில் அமர்ந்தவாறு நகரப் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தான்.

வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவனின் கவனத்தை, முன் இருக்கையிலிருந்த இரு இளம் பெண்களின் உரையாடல் ஈர்த்தது.

“என்னவோ தெரியல. இப்போ எல்லாம் நான் அடிக்கடி கோபப்படுறேன். உப்புப் பொறாத விசயத்துக்கெல்லாம் அடாவடியாப் பேசி அடுத்தவங்க மனசை நோகடிக்கிறேன். அப்புறம் கொஞ்ச நேரத்துலயே அதுக்காக வருத்தப்படுறேன்” என்று வருத்தத்துடன் சொன்னாள் சன்னலோர இருக்கைக்காரி.

“கோபம்  வர்ற மாதிரி தெரிஞ்சா ஒன்னு ரெண்டு மூனு எண்ண ஆரம்பிச்சுடு. ஐம்பது எண்ணுறதுக்குள்ள அதெல்லாம் இருந்த இடம் தெரியாம போயிடும்” என்றாள் அவளோடு இருந்தவள்.

“அதையும் பார்த்துட்டேன். பலனில்ல.”

அந்த முன்கோபக்காரியின், ‘முக்கால் நிலா’ வடிவத்தில் தெரிந்த அழகிய முதுகையும், வெண் சங்குக் கழுத்தையும், இரு ‘பளீர்’ காதுகளின் பின்புறங்களையும் ஆராய்ந்தான் குப்புச்சாமி.

ஏமாற்றம் அவனை ஆரத் தழுவியது.
அவளின் மேற்சொன்ன அழகுப் பிரதேசங்களில் ஒரு மச்சம், மரு, தழும்பு என்று எதுவுமே இல்லை. வேறு எங்காவது மச்சமோ மருவோ இருக்கும் என்று நம்பினான்.

தன் முகத்தைச் சற்றே முன்னுக்கு நகர்த்தி, “கோபத்தை விரட்டியடிக்க நான் வழி சொல்லட்டுமா?” என்றான் குப்புச்சாமி.

சடக்கெனத் திரும்பிய இரு பெண்களும் அவனை ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.

முன்கோபக்காரி, “சொல்லுங்க சார்” என்றாள், ஏராள எதிர்பார்ப்புகளுடன்.

“உங்க உடம்பில் மச்சம், மரு இருக்கும் இல்லியா? கோபம் வரும்போது அதுகளில் ஏதாவது ஒன்றை வருடிக் கொடுங்க. சில நேரம் ரத்தம் வர்ற வரைக்கும்கூடத் தேய்க்க வேண்டியிருக்கும். அப்புறம் பாருங்க, கோபம் மாயமாய் மறைஞ்சுடும்” என்றான் குப்பு[இனி, 'குப்பு’ என்றே செல்லமாக அழைப்போம்].

“அப்படியா!” என்று வியப்பின் எல்லைவரை சென்று திரும்பிய அவள், “என் உடம்பில் இதுல ஒன்னுகூட இல்லீங்க. என் அம்மாகூட நீ அதிசயப் பிறவியடின்னு அடிக்கடி சொல்வாங்க. சார், ஒரு சந்தேகம். எனக்கு வேண்டப்பட்டவங்களோடதைத் தடவலாமா?” என்றாள்.

“அது வந்து.....” என்று குப்பு ஏதோ சொல்ல முயற்சிக்கையில், பின்னாலிருந்து ஒருவர், “கோபத்தைப் போக்க இப்படியொரு வழி இருக்கா? சார், நீங்க மச்ச மரு ஜோதிடரா?” என்று கேட்க, பேருந்து முழுக்கச் சிரிப்பலை பரவி அடங்கியது.

"கவலையை மறக்கவும் இப்படி எதையாவது தடவலாமா?” என்றது ஒரு பழங்கிழம்.

ஓர் இளவட்டம், “பொண்ணுகளை ‘சைட்’ அடிக்காம இருக்கவும் இது உதவுமா?” என்றான்.

இப்படி, ஆளாளுக்குக் கேள்விக்கணை தொடுக்க, ஒட்டு மொத்த பேருந்துப் பயணிகளும் நக்கலாய்ச் சிரித்தார்கள்; நினைத்து நினைத்துச் சிரித்தார்கள்; குப்புவை ஓரக் கண்ணால் பார்த்துப் பார்த்துச் சிரித்தார்கள்.

அவமானத்தால் தலை குனிந்தான் குப்பு.

அடுத்த நிறுத்தத்திலேயே இறங்கிக்கொண்டான்.

இப்போதும் அவன் தலை தாழ்ந்தே இருந்தது. எவனோ ஒரு அரைவேக்காடு ஜோதிடன் 'கோபத்தைக் கட்டுப்படுத்துறதுக்குச் சொன்ன இந்த யோசனையை நம்பி  இப்படி அவமானப்பட்டுட்டேனே' என்று வருத்தத்துடன் முணுமுணுத்துக்கொண்டே நடந்தான் குப்பு. 

சனி, 7 பிப்ரவரி, 2026

இன்னொரு ‘சவக்குழி’ தேவையில்லை பிரதமரே!!!

 காங்கிரஸ் கட்சியால் தனக்குச் ‘சவக்குழி’ தோண்ட முடியாது என்கிறார் நம் மதிப்பிற்குரிய பிரதமர் மோடி.

அது முடியுமோ முடியாதோ, தோண்டும் வேலையைக் காங்கிரஸ் செய்யத் தேவையில்லை என்பதே நம் எண்ணம்.

அடிக்கடிப் பொய் சொல்லுதல்[ராகுல் காந்தி குற்றச்சாட்டு], வாயால் வடை சுடுதல், பிரச்சினைகள் பெரிய அளவில் தலைதூக்கும்போது ஓடிப்போய்ப் பதுங்குதல், பெரும்பாலான நாட்களில் பெரிய பெரிய நாடுகள் மட்டுமல்லாமல், குட்டிக் குட்டி நாடுகளுக்கெல்லாம் சுற்றுலாச் செல்லுதல் என்று மக்களால் வெறுக்கத்தக்கன செய்து, தனக்குத்தானே அவர் மிகப் பெரியதொரு குழியை ஏற்கனவே தோண்டி வைத்துவிட்டார் என்பதால், புதிதாக ஒரு குழியைக் காங்கிரஸ் தோண்டுவது தேவையற்ற வெட்டி வேலையாகும்.

பிரதமரின் மனதில் சவக்குழி குறித்த எண்ணமே இனி எழுதல் கூடாது என்பது நம் விருப்பம்.

வாழ்க நம் பிரதமர்! நீடூழி வாழ்க நரேந்திர மோடி!!

'அமேசான்' கமிஷன் வியாபாரியின் அடாவடித்தனம்!

மேசான் கிண்டிலில் நான் வெளியிட்ட நூல்களில்[52] மூடநம்பிக்கையை[குறிப்பாகக் கடவுள் நம்பிக்கை]ச் சாடும் உள்ளடக்கங்களும் இடம்பெற்றுள்ளன.

இதை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவம் இல்லாத, அமேசான் தமிழ்ப் பிரிவில் வேலை பார்க்கும் எடுபிடிகள்[இவாள் யார் என்பது கொஞ்சம் சிந்தித்தாலே புரியும்], என் கிண்டில் கணக்கை முடக்கியிருக்கிறதுகள்.

//Alert from Amazon about your account

இன்பாக்ஸ்

Kindle Content Review <kindle-content-review+500at00000PyUY2AAN@kdp-support.amazon.com>

Hello,

We are terminating your account effective immediately because we have found activities in your account trying to manipulate our services.

In addition to closing your account:

• You'll no longer be eligible to receive outstanding royalties.

• You no longer have access to your account. This includes editing titles, viewing reports, and accessing other account information.

• Published titles will be removed from Amazon.

As per our Terms and Conditions, you aren't allowed to open any new KDP accounts.

See our Terms and Conditions:

https://kdp.amazon.com/terms-and-conditions

If you have questions, you can reply to this message.

Regards,

Amazon KDP//

வெள்ளி, 6 பிப்ரவரி, 2026

தமிழனை வம்புக்கு இழுக்கும் நிர்மலா அய்யங்காரியின் வாய்க்கொழுப்பு!!!

மதிப்புக்கும் மரியாதைக்கும் அருகதை இல்லாத அய்யங்கார் மாமி நிர்மலாவுக்கு,

தமிழை இழிவுபடுத்திப் பேசிய உன் தாய்மொழி எது என்று இணையத்தில் தேடியபோது கிடைத்தத் தகவலே அடுத்துக் காண்பது.

//Nirmala Sitharaman was born on August 18, 1959, in Madhurai, Tamil Nadu, India. She grew up in the Tamil Iyengar Brahmin family[https://votermood.com/biography/nirmala-sitharaman]//.

தமிழ் ஐயங்கார் குடும்பத்தில் பிறந்திருந்தாலும்[ஒரு தமிழ்க் குடும்பத்தில் தவறிப் பிறந்துவிட்டாய்], பிழைப்புக்காகத் தமிழைப் புறக்கணித்து, இந்தியுடன் வேறு எந்தவொரு மொழிக்கும் பல்லக்குத் தூக்கும் சுயநலப் பிராமணத்தி நீ[கமல்காசன் உட்பட, தமிழ்ப் பற்றுள்ள பிராமணர்கள் மன்னித்திடுக] என்பது தமிழர்களுக்குத் தெரியும்.

மோடி ஆட்சியில் உனக்கு உயர் பதவி கிடைத்ததற்கு இதுவும் ஒரு காரணம்[மோடி தமிழைப் புகழ்வதெல்லாம் தமிழர்களை இளிச்சவாயர்கள் ஆக்கும் தந்திரம்].

இந்நிலையில்,தமிழர்களாகிய நாங்கள் உனக்கு விடுக்கும் எச்சரிக்கை ஒன்று உண்டு. அது.....

“எந்தவொரு மொழியை வேண்டுமானாலும் தலையில் சுமந்து கொண்டாடு; எந்தவொரு சங்கித் தலைவனுக்கு வேண்டுமானாலும் கொத்தடிமையாகச் சேவகம் செய். தமிழை இழிவுபடுத்தும் திமிர்வாதத்தை இனியேனும் கைவிடு.”

வியாழன், 5 பிப்ரவரி, 2026

“ஜோதிமணி, சுதா... பிரதமரைத் தாக்கத் திட்டம்”... சங்கிச் சபாநாயகர்!

நல்ல வேளை, அப்படி ஏதும் நடக்கவில்லை. நடந்திருந்தால்.....

பொம்மணாட்டிகளிடம் உதை வாங்கிய பிரதமர் என்று ஒட்டுமொத்த உலகமும் மோடியைப் பார்த்துக் காறித் துப்பியிருக்கும்!

‘பெண் சாமி’ சிலைகளை அலங்கரிக்க ‘அர்ச்சகிகள்’ தேவை!!!

கல்லாலும் களிமண்ணாலும் உலோகங்களாலும் வடித்தெடுக்கப்பட்ட சிலைகளை[கடவுள்கள்]த்தான் மனிதர்கள் வழிபடுகிறார்கள்.

சிலைகளுக்குள், வழிபடப்படுகிற கடவுள்கள் இருக்கிறார்கள் என்பது இவர்களின் நம்பிக்கை.

சிலைகளை ஆண் சாமிகளுக்கானவை பெண் சாமிகளுக்கானவை என்று இருவகையாகப் பிரிக்கலாம்.

சாமி சிலைகளுக்கு அபிஷேகம் எனப்படும் சிறப்புப் பூஜை செய்யும்போதெல்லாம், அவை[சிலைகள்]களுக்கான ஆடைகளைக் களைந்து, புனித நீர் பெய்து சுத்தப்படுத்திய பிறகே பால், பழம், சந்தணம், பன்னீர் போன்றவற்றால் குளிப்பாட்டுகிறார்கள்[மீண்டும் அவற்றிற்கு ஆடைகளும் ஆபரணங்களும் அணிவிப்பது வழக்கமான ஒன்று] அர்ச்சகர்கள்.

பெரும்பாலான கோயில்களில், ஆண் கடவுள்கள் மட்டுமல்லாமல் பெண் கடவுள்களுக்கும்[அன்னை மீனாட்சி, லக்குமி, சீதேவி, பூதேவி போன்றவர்கள்] சிலைகள் உள்ளன என்பதையும், அவற்றுக்குள் சம்பந்தப்பட்ட அந்தப் பெண் கடவுள்கள் எழுந்தருளியிருக்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்க.

ஆண் சாமிகளைத் தொட்டுக் கழுவி, பால் பழம் பன்னீர் தேன் போன்றவற்றால் அபிஷேகங்கள் செய்யும் அதே அர்ச்சகர்கள்[ஆண்கள்]தான் பெண் சாமிகளையும் தொட்டு அபிஷேகம் செய்கிறார்கள்.

இதை நேற்றுவரை அவர்கள் செய்தார்கள்; இன்றும் செய்கிறார்கள்.

இது தவறு; அபச்சாரம்.

இனியேனும், கோயில்களில் பெண் சாமிகளை அலங்கரித்து அவர்களுக்கு அபிஷேகம் செய்ய, உடனடியாகப் பெண் அர்ச்சகர்கள்[அர்ச்சகிகள்] நியமிக்கப்படுதல் வேண்டும்.

அரசிடம்[அறநிலையத் துறை] இதற்கான கோரிக்கையைப் பரிந்துரைத்து, உடனடியாகத் தமக்குரிய கடமையை நிறைவேற்றுவார்களா நம் பக்தர்கள்... குறிப்பாகப் பெண் பக்தர்கள்?

மீண்டும் நினைவூட்டுகிறோம்.....

பக்தர்களே, நீங்கள் வழிபடுவது வெறும் சிலகளையல்ல, உள்ளே நிரந்தரமாக எழுந்தருளியிருக்கும் ஆண் & பெண் கடவுள்களை!

புதன், 4 பிப்ரவரி, 2026

என்று தணியும் இந்தச் சமஸ்கிருத மோகம்?!

கோயில் கும்பாபிஷேகம், அர்ச்சனை, அபிஷேகம், கிரஹப்பிரவேசம்[புதுமனை புகு விழா] போன்ற நிகழ்வுகளின்போது, அர்ச்சகர்களால் ஓதப்படும் வேத மந்திரங்களைப் பயபக்தியுடன் கேட்டு மெய் சிலிர்ப்பது, அன்று முதல் இன்றுவரையிலான நம்மவர்களின் வழக்கம்[இந்நாள்வரை அவற்றிற்கான பொருள் அறிந்திட எவரும் முயன்றதில்லை!].

காக்கும் கடவுள்களில் ஒன்றான காளிதேவிக்கான ‘கவர்ச்சிமிகு’ மந்திரங்கள்:

வேத விற்பன்னர்கள், காளி தேவிக்கான பூஜையில் சொல்லும் மந்திரங்கள் சிலவற்றின் உள்ளடக்கம்[பொருள்] இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.

வாசித்த பிறகேனும் சிந்தித்து மனம் திருந்தி, தாய்த் தமிழில் மட்டுமே வழிபாடு நிகழ்த்துவார்களா நம் பக்தர்கள்?

‘ஸூத்ருசோ.......................................................ப்ரஜபேன்மனும்...’[இரண்டு வரிகள்]
பொருள்: ஓர் அழகிய பெண்ணின் குறியைப் பார்த்துக்கொண்டு பத்தாயிரம் முறை காளிதேவியை நினைந்து மந்திர செபம் பண்ணுகிறவன் தேவகுருவுக்குச் சமம் ஆவான்.

‘சாவம் ஹ்ருதயமாருஹ்ய................................................................’[நான்கு வரிகள்].
பொருள்: சுடுகாட்டில் அம்மணமாகப் பிணத்தின் மார்பில் அமர்ந்துகொண்டு, தன் வீரியத்தில்[விந்து] தேய்க்கப்பட்ட ஆயிரம் எருக்கம் பூக்களினால் மந்திரம் சொல்லிக் காளிதேவியைப் பூசிக்கிறவன் வெகு சீக்கிரம் அரசனாவான்.

‘ரஜ: கீர்ணபகம் நார்யா த்யாயன்யோயுத.............’[இரண்டு வரிகள்]
பொருள்: வீட்டுக்குத் தூரமான பெண்ணின் ரத்தத்தோடு கூடிய பெண்குறியைத் தியானித்துக்கொண்டு பதினாயிரம் உரு[மந்திரம்] செபிக்கிறவன் மதுரமான தன் பாடல்களால் உலகை மயக்கும் வல்லமை பெறுவான்.

‘..............சவஸ்ய ஹ்ருதி ஸமஸ்திதாம்’[நான்கு வரிகள்]
பொருள்: புன்சிரிப்புடன் கூடிய முகத்தை உடையவளான காளிதேவியைத் தியானித்தவாறு, ஒரு பெண்ணைப் புணர்ந்துகொண்டே ஆயிரம் முறை செபிக்கிறவன் சிவபெருமானுக்கு ஒப்பாவான்.

‘ஸ்ருணோதி நூபுராராவம்..............’[நான்கு வரிகள்]
பொருள்: மந்திரம் செப்பிப்பவன், தேவியின் சிலம்பொலியும் சங்கீதமும் கேட்டுக்கொண்டே மந்திரம் செபித்துக்கொண்டிருந்தால், தேவியானவள் மிக்க விருப்புடன் இவனைப் புணர்ச்சி செய்ய வருவாள். புணர்ச்சி முடிந்ததும் இவனுடைய அத்தனை விருப்பங்களையும் நிறைவேற்றுவாள்.

***சுவாமி சிவானந்த சரஸ்வதி அவர்கள் எழுதிய ‘ஞான சூரியன்’[சாமி புக்ஸ், சென்னை]’ என்னும் நூலில் இவை போன்ற படு படு படு சுவாரசியமான[ஹி... ஹி... ஹி!!!] செய்திக் குறிப்புகள் உள்ளன.
                                      =================
    இந்துத்துவாக்களால் பெரிதும் போற்றப்படுகிற வேத சாஸ்திரங்களில்.....

அசுவத்தாமன்                குதிரைக்கும்,

காங்கேய முனிவர்        கழுதைக்கும்,

காலக்கோட்டு ரிஷி       மானுக்கும்,

ஜம்புகர்                                நரிக்கும்,

காங்கேயர்                         கழுதைக்கும்,

மாண்டவியர்                     தவளைக்கும்,

சவுனகர்                               நாய்க்கும்,

கணாதர்                              கோட்டானுக்கும்,

சுகர்                                        கிளிக்கும்,

ஜாம்புவந்தர்                       கரடிக்கும்

என்றிவ்வாறாக, மனிதர்களை விலங்குகளும் பறவைகளும் பெற்றெடுத்ததாகக் கதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன[ஆதாரம்: ‘ஞான சூரியன்’, சாமி புக்ஸ், மயிலாப்பூர், சென்னை]                                     

செவ்வாய், 3 பிப்ரவரி, 2026

மூளைப் புற்றுநோய்... அறிகுறிகள்:

மூளைப் புற்றுநோய்க் கட்டி மிகவும் ஆபத்தானது. இதற்கான அறிகுறிகள்:

*வலி நிவாரணிகளுக்குக்  கட்டுப்படாத  நீடித்த தலைவலி.

*குமட்டலோ வாந்தியோ ஏற்படுதல்.


*பார்வை மங்குதல்; இரட்டைப் பார்வை.


*அடிக்கடி கண்களைச் சுருக்குதல், கவனம் செலுத்துவதில் சிரமம், பிரகாசமான விளக்குகளைப் பார்க்கும்போது கண் கூசுதல்[கண்ணாடி அணிந்திருந்தாலும் கூட]. 


*தற்காலிக மனக் குழப்பம், பேசுவதில் சிரமம், சிறிது நேரத்திற்குச் சுயநினைவு இழப்பு. 


*நினைவாற்றல், முடிவெடுக்கும் திறன், மனதைக் கட்டுப்படுத்துதல் போன்றவற்றில் பாதிப்பு.


*மறதி, எரிச்சல்,  மனச்சோர்வு, பதற்றம்.


இவ்வறிகுறிகள் சிலவாகவோ பலவாகவோ இருப்பினும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது.

====================

***‘புற்றுநோய்’ குறித்தான தேடலில் கிடைத்த தகவல்களின் தொகுப்பு[சுருக்கமாக].

திங்கள், 2 பிப்ரவரி, 2026

‘அது’[உடலுறவு அல்ல]க்கு அரை மணி நேரம் போதாது![குடும்பக் கதை]

ர்வ அலங்காரங்களுடன் அடக்கவொடுக்கமாகக் காப்பி கொண்டுவந்து கொடுத்த செண்பகாவை, மணிமொழியனின் வீட்டாருக்குப் பிடித்திருந்தது. பெண் வீட்டார் முகங்களிலும் மகிழ்ச்சி தெரிந்தது.

நாட்டு நடப்பு பற்றிய இருதரப்பாரின் பொதுவான கருத்துப் பரிமாற்றங்களுக்கிடையே, “மாப்பிள்ளையும் பொண்ணும் தனிமையில் கொஞ்ச நேரம் பேசட்டும்” என்று தரகர் சொன்னார்.இரு வீட்டுப் பெரியவர்களும் தலையசைத்த நிலையில், மணிமொழியனோ செண்பகாவோ இருந்த இடத்தைவிட்டு நகரவில்லை.

மணிமொழியனின் தோள் தொட்டு, “எழுந்து போப்பா” என்றார் அவனின் சித்தப்பா.

“வருசக்கணக்கில் குடும்பம் நடத்திப் பிள்ளைகளைப் பெத்ததுக்கு அப்புறமும் விவாகரத்துக் கேட்டு அலைகிறவங்க எண்ணிக்கை அதிகரிச்சிட்டே போகுது. நாங்க ரெண்டு பேரும் அரை மணி நேரம் போல் தனிமையில் பேசுறதால எந்தவிதப் பயனும் இல்லை. பொண்ணு விரும்பினா தனியாப் பேசச் சம்மதம்” என்றான் மணிமொழியன்.

சில நிமிட அமைதிக்குப் பிறகு பெண் வீட்டார் சார்பாக வயதான பெண்மணி ஒருவர் சொன்னார்: “செண்பகாவும் அதையேதான் சொல்லுறா.”

“பொது அறிவு விசயத்தில் எங்களுக்குள்ள நல்ல பொருத்தம் இருக்கு. மனப் பொருத்தமும் இருக்கும்னு நம்புறேன். அடுத்து நடக்க வேண்டியதைப் பேசுங்க” என்று முகத்தில் புன்னகை தவழச் சொன்னான் மணிமொழியன்.

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2026

'தமிழ்நாடே எதிர்பார்த்த முதல் பேட்டி' -இது காணொலித் தலைப்பு! பேட்டி தராமலிருந்திருந்தால்?

நடிகன்[விஜய்] பேட்டி தராமலிருந்திருந்தால்.....

தமிழர்கள் அத்தனைப் பேரும் தூக்கில் தொங்கியிருப்பார்கள்! தற்கொலைகள்!!

படங்களில்[images] உள்ள பிறமொழி வாசகங்களைத் தமிழாக்கம் செய்வது எப்படி?

தேர்ந்தெடுத்த படத்தை[+வாசகங்கள்] .JPG, .PNG, ... ஆக சேமித்திடுக.

https://openl.io/translate/image/tamil[copy&paste] என்னும் முகவரிக்குச் சென்று சேமித்த .JPG படத்தை உரிய முறையில் பதிவு செய்தால் படத்திலுள்ள ஆங்கில[+பிற மொழிகள்]ச் சொற்றொடர்கள் மொழியாக்கம் செய்யப்படும்.

எடுத்துக்காட்டு:

Renal Diet for Kidney Patients

மொழியாக்கம்:

சிறுநீரக நோயாளிகளுக்கான உணவு:

நீங்கள் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்?

சிறுநீரக உணவு திட்டமிடும் போது:

⚫ புரதம் உட்கொள்ளுதலை வரையறுக்கவும் (ஒரு கிலோ உடல் எடைக்கு 0.6-0.8 கிராம் புரதம் தினசரி)

• பாக்கெட் உணவுகள் அல்லது விரைவு உணவுகளை தவிர்க்கவும்; அவை சோடியத்தில் செறிவாக இருக்கும்

• உப்பை குறைக்கவும்

கேனில் உள்ள காய்கறிகள் மற்றும் பருப்புகளை நன்கு கழுவவும்; அவை உப்பை கொண்டுள்ளன

• تازா மற்றும் வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட உணவுகளை முன்னுரிமை அளிக்கவும்

⚫ மதுபானம் உட்கொள்ளுதலை குறைக்கவும்

உணவுகள் சாப்பிட:

⚫ எதிர்ப்பு அழற்சி உணவுகள்: பூக்கோசு, கொழுப்பு நிறைந்த மீன், பூண்டு, ஆப்பிள் மற்றும் அன்னாசி.

⚫ எதிர்ப்பு ஆக்சிடேண்ட் உணவுகள்: முள்ளங்கி, காப்சிகம், வெங்காயம், நீலப்பழம், செர்ரி மற்றும் திராட்சை.

⚫ நார்ச்சத்து நிறைந்த உணவுகள்: புல்கர், பக்குவீட், கோசு, கிரான்பெர்ரி மற்றும் குவாவா.

⚫ குறைந்த பொட்டாசியம்/பாஸ்பரஸ்/சோடியம்/ஆக்சலேட் கொண்ட உணவுகள்: முட்டை வெள்ளை, தோல் இல்லாத கோழி, பனீர், ஸ்ட்ராபெர்ரி மற்றும் பீச்.

வரையறுக்க வேண்டிய உணவுகள்:

⚫ பொட்டாசியம் நிறைந்த உணவுகள்: சிறுநீரக பருப்பு, உருளைக்கிழங்கு, அவகாடோ, கிவி, பால், மீன் மற்றும் பிற.

⚫ சோடியம் நிறைந்த உணவுகள்: கியூர்டு மாமிசம், உறைந்த உணவுகள், கேனில் உள்ள உணவுகள் மற்றும் பிற.

www.hcgoncology.com HG

புற்றுநோய் பராமரிப்பில் நிபுணர்

வயதுக்கு வாழ்க்கையை சேர்க்கிறது

⚫ புரதம் நிறைந்த உணவுகள்: செயலாக்கப்பட்ட உணவுகள், சிவப்பு மாமிசம், பால் பொருட்கள், பருப்பு மற்றும் பிற.

பாஸ்பரஸ் நிறைந்த உணவுகள்: பருப்பு மற்றும் விதைகள்,legumes, செயலாக்கப்பட்ட உணவுகள், பானங்கள் மற்றும் பிற

                                         =============================

***நம் மொழி மரபுக்கேற்ப உரிய மாற்றங்களைச் செய்தல் அவசியம்.

TELUGU TEXT[image]:

மொழியாக்கம்:
www.LegendDetails.BlogSpot.Com
ஒருவரைக் கிண்டலடித்துத்
தன்னைப் பெரியவர் போல்
காட்டிக்கொள்ளுதல்
பலவீனமானவரின்
Legend Details.
Blogspot.com
குணம்.
ஒருவர் நன்றாக இருந்தால் போதும் நமக்கு நல்லது
நடக்கும் என்று நினைத்தல்
புத்திசாலிகளின் குணம்.

வெள்ளி, 30 ஜனவரி, 2026

2026 தேர்தல்... பேரம் பேசிக் கல்லா கட்டும் பொறுக்கிகளுக்குப் புத்தி புகட்டுவோம்!

“எங்கள் கட்சி வரும் தேர்தலில்[2026> தமிழ்நாடு சட்டமன்றம்] எந்தக் கூட்டணியில் இணைகிறது என்பதை அடுத்தச் சில நாட்களில் தெரிவிப்போம்.”

“ஆட்சியில் பங்களிக்கும் கூட்டணியில் மட்டுமே எங்கள் கட்சி இடம்பெறும்.”

“பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெறுகிறது. தொகுதிப் பங்கீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.”

“நாங்கள் இணையும் அணியே வெற்றிக் கூட்டணியாக அமையும்; ஆட்சியைக் கைப்பற்றும்.”

மேற்கண்டவை போன்ற அறிவிப்புகளை வெளியிட்டு, கோடிகளில் புரளும்  கேடி அரசியல் தலைவர்களுடன், பேரம் பேசி முடித்த... பேசிக்கொண்டிருக்கும் சுயநல அரசியல் கட்சித் தலைவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.

பட்டியல்?

தேவையில்லை. அவர்கள் உங்களால் நன்கு அறியப்பட்டவர்கள்தான்.

கட்சியின் கொள்கைகளைப் பட்டியலிட்டு, மக்களுக்குச் செய்யவுள்ள பணிகள் குறித்த திட்டங்கள் இந்தக் கழிசடைகளிடம் இல்லை. 

வைப்புத் தொகையைக்கூடப் பெற இயலாத வகையில் இந்த நாசகாரக் கும்பல்களுக்கு வரும் தேர்தலில்[2026] பாடம் கற்பிப்போம்.

இங்கே[காணொலி] கடவுளைத் தேடலாம்!!!

வியாழன், 29 ஜனவரி, 2026

“முருகன்[கடவுள்] எங்கிருந்தாலும் வரவும்”


முருகா, 
உலகெங்கும் உள்ள துயருற்றவர்களின் துன்பம் களைவதையே தினசரிக் கடமையாகக் கொண்டிருப்பவன் நீ.

கோரிக்கை வைக்கிறார்களோ அல்லவோ, தீராத துன்பங்களின் தாக்குதலுக்கு உள்ளானோரின் வலி போக்க எங்கெல்லாமோ அலைந்து திரிந்துகொண்டிருப்பவன் நீ.

நிராதரவானவர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டத் தவறாத உனக்கு ஓய்வு என்பதே இல்லை. 

ஓய்வின்றி உலகம் சுற்றிக்கொண்டிருக்கும் உன்னுடைய பரிவான பார்வைக்காகத்தான் மேற்கண்ட நகல் படத்தைப் பதிவு செய்திருக்கிறோம்.

மறைந்த நடிகர் விஜயகாந்தின்[சினிமாவில் கேப்டனாக நடித்து, தமிழ்நாட்டுக் கூமுட்டைகளால் ராணுவக் கேப்டனாகவே மதித்துப் போற்றப்பட்டவர்] இல்வாழ்க்கைத் துணைவியான பிரேமலதா[‘தேமுதிக’வின் தலைவி] உன்னுடைய தீவிரப் பக்தை என்பதைத் தமிழ் மக்கள் அறிவார்கள்.

நீயும் அறிந்திருப்பாய்.

2026இல் இடம்பெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான அவகாசம் குறைவாகவே உள்ள நிலையில், அம்மையார் உன்னிடம் ஒரு வேண்டுகோளை[படத்தில் கண்டவாறு] முன்வைத்திருக்கிறார். அது.....

“முருகன் அருளால் மகத்தான கூட்டணி['தேமுதிக’வுக்கு] அமையும்” என்பதே அது.

அம்மையார்[கூட்டணி] தேர்தலில் மகத்தான வெற்றி கண்டு, தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவது தமிழர்களுக்கு ஏராள நன்மை பயக்கும் என்பதால்.....

“முருகா, நீ உலகின் எங்கோ ஒரு பகுதியில் சஞ்சரித்துக்கொண்டிருந்தாலும், புறப்பட்டுத் தமிழ்நாட்டுக்கு வந்து, ‘தேமுதிக’வின் தலைவி பிரேமலதா அம்மையாருக்கு ஏற்றதொரு கூட்டணி அமைத்துத் தருமாறு உன் திருவடி தொழுது வேண்டுகிறோம்.

வளர்க தேமுதிக! வெல்க தலைவி பிரேமலதா!!