பக்கங்கள்https://kadavulinkadavul.blogspot.com/p/blog-page_1.html
- 'பசி'பரமசிவம்
- கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.
வியாழன், 22 ஜனவரி, 2026
ஸ்ரீமதி நீதிபதியா, பகுத்தறிவாளர்களின் பரம எதிரியா?!
புதன், 21 ஜனவரி, 2026
பக்திமான்களுக்கான ஒரு ‘பத்தரைமாற்று’க் குட்டிக் கதை!
சாலையைக் கடந்துகொண்டிருந்த ஒரு பள்ளிச் சிறுவனை மோதித் தள்ளிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது அந்த வாகனம்.
செவ்வாய், 20 ஜனவரி, 2026
“இது கட்டங்கடைசி வாய்ப்பு! ‘தி.மு.க.’ காலிகள் ஆட்சியைக் கலைச்சிடுங்க பிரதமரே!”
திங்கள், 19 ஜனவரி, 2026
ஆன்மா இல்லை என்றால் கடவுளின் கதி?!
ஞாயிறு, 18 ஜனவரி, 2026
வைகுண்டத்திலா, கைலாயத்திலா எங்கே தேடலாம் அவதாரம் மோடியை?
//Dhaka: In Bangladesh’s Gazipur district, a Hindu man was beaten to death after he tried to protect a teenage worker from an attack, police told local media//
-இது அண்மை நிகழ்வு.
இதற்கு முன்பான இஸ்லாமியரின் தாக்குதல்களில், 116 இந்துக்கள்[+பிற சிறுபான்மையினர்> குறைந்த எண்ணிக்கையில்] கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
அவதாரம் மோடி எங்கே போனார்? ராமச்சந்திர மூர்த்தியைத் தேடி வைகுண்டத்திற்கா, சிவபெருமானைச் சந்திக்கக் கைலாயத்திற்கா?
அவரைக் கண்டுபிடித்துத் தகவல் சொல்வாரா ‘சத்துக்குரு’ ஜக்கிப் பகவான்?
சனி, 17 ஜனவரி, 2026
பக்தர்களே, ஆஞ்சநேயரை[நாமக்கல்] அடிமுட்டாள் ஆக்காதீர்கள்!!!
வெள்ளி, 16 ஜனவரி, 2026
ஆட்டு மூளை மனிதர்களுக்கும் தேவை ‘காப்புக்கட்டு’!!!
தை மாத அறுவடை முடிந்து விளைபொருள்கள் வீட்டுக்கு வந்துசேர்ந்த பிறகு கொண்டாடப்படுகிறது பொங்கல் பண்டிகை. அந்த விளைபொருட்கள்தான் ஓர் ஆண்டுக்கான உணவாகவும், அடுத்த விளைச்சலுக்கான விதையாகவும் இருக்கின்றன. அவை கெட்டுப்போகாமல் இருப்பதற்குத்தான் வீடுகளுக்குக் காப்புக் கட்டுவதாகச் சொல்கிறார்கள்.
இதற்கு வேப்பிலை, சங்கராந்திப் பூடு, ஆவாரம் பூக்கொத்து ஆகியவற்றின் தொகுப்பு வீடுகளின் முகப்பில் காட்சிக்கு[காவலுக்கு?] வைக்கப்படுகின்றன.
”நம்மவர்களால்[தமிழர்கள்] பாரம்பரியமாக இது செய்யப்படுவதால் இதைப் புத்திசாலித்தனமான செயல் என்று ஏற்க இயலாது. மேற்கண்ட மூன்று பொருட்களுக்கும் பண்டம் கெட்டுப்போகாமலிருப்பதற்கும் தொடர்பு ஏதுமில்லை. தமிழர்கள் தூக்கிச் சுமக்கும் மூடநம்பிக்கை[திணிக்கப்பட்டது> மகர சங்கராந்தி என்னும் பெயரில் கொண்டாடப்படும் போகிப் பண்டிகை]களில் இதுவும் ஒன்று” என்கிறார் என் நெருங்கிய நண்பர் ஒருவர்.
மேலும், காப்புக்கட்டு அன்று[14.01.2026], மேற்கண்ட முப்பொருள்களின் தொகுப்பைத் தன் கழுத்தில் தொங்கவிட்டுத் தெருத்தெருவாகச் சுற்றிவந்தார்.
இதை வேடிக்கை பார்த்து, கமுக்கமாகப் பலர் சிரிக்க, நெருங்கிவந்து விசாரித்தவர்களிடம், “வீட்டிலுள்ள அறுவடை செய்யப்பட்ட உணவுப் பொருள் கெட்டுப்போகாமலிருக்க வீடுகளில் கட்டுற மாதிரி, சில நாட்களேனும் என் மனசு கெடாமலிருக்கக் ‘காப்புக்கட்டு’ கட்டியிருக்கேன். இது முட்டாள்தனம்னா, வீடு, மிதிவண்டி, பைக், கார் போன்ற வாகனங்களுக்கும் கட்டுவது இதைவிடவும் பல மடங்கு முட்டாள்தனமானது. தைப் பொங்கல் கொண்டாடுவதில் புத்திசாலித்தனம் இருக்கிறது. தமிழனை முட்டாள் ஆக்குவதற்காகவே நம் இனத் துரோகிகள் வலிந்து திணித்தது இந்த வழக்கம்” என்று ஒரு குட்டிச் சொற்பொழிவு நிகழ்த்தி அவர்களைத் திகைக்க வைத்தார்.
இன்றுதான் அவரின் கழுத்தில் ‘காப்புக்கட்டு’ தொங்கிக்கொண்டிருப்பதைக் கவனிக்க நேர்ந்தது. படம் எடுத்து[படத்தில் முகம் தெரியக்கூடாது என்பது அவர் விதித்த கட்டுப்பாடு] வெளியிட்டிருக்கிறேன்.
====================அதனால் அவர்களுக்குப் பிடித்த உணவைப் படைத்து, தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், புத்தாடைகளை வைத்து, தீப ஆராதனை செய்து வணங்க வேண்டும்.
பொங்கலிடுவதற்கு முன்னர் "காப்புக்கட்டுதல்" என்ற பெயரில் வீட்டின் வாசலில் வேப்பிலை, பீளைப்பூ, ஆவாரம்பூ கொத்துகளைச் சொருகி, சுற்றியுள்ள ஆன்மாக்களை வீட்டருகே வரச் செய்வார்கள்//
=================
இதற்கு எதற்கு ஒரு பண்டிகை?!
//போகி என்ற சொல் சமஸ்கிருதத்தின் போக அல்லது போக்ய என்ற சொல்லிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் பொருள் – அனுபவம், செல்வம், வளம் என்பதாகும். மேலும், பழைய துன்பங்கள், சோம்பல், துக்கங்கள் ஆகியவற்றை ஒதுக்கி வைத்து> பழைய பொருட்களை எரிப்பதற்கும் இதற்கும் என்ன தொடர்பு?], புதிய நம்பிக்கைகளுடன் வாழ்க்கையைத் தொடங்கும் நாளாகவும்[மற்ற நாட்களில் இந்த நம்பிக்கைகள் தேவையில்லையா?] போகி கருதப்படுகிறது//
வியாழன், 15 ஜனவரி, 2026
தாங்காது மோடி மகானே, இந்தப் பூமி தாங்கவே தாங்காது!!!
“பொய் பேசினாலும் பொருந்தப் பேசு” எனபது வழக்கு மொழி.
“மனம்போனபடியெல்லாம் புளுகிப் பிறரை மனம் நோகச் செய்யாதே” என்பது இதன் மூலம் நாம் பெறும் அறிவுரை; வாழ்க்கைக்கான நெறிமுறையும்கூட.
இது சாமானிய மக்களுக்கு மட்டுமே ஆனது; நாட்டை ஆளும் பெரிய தலைவர்களுக்குப் பொருந்தாது என்று சொல்லத் தோன்றுகிறது.
சொல்ல வைப்பது.....
கீழ்க்காணும் நாளிதழ்ச் செய்திகள்[நகல் பதிவு].
புதன், 14 ஜனவரி, 2026
உடலுறுப்பை முடமாக்குவது தண்டனைக்குரிய குற்றம். ஆறறிவை முடமாக்குவது?
செவ்வாய், 13 ஜனவரி, 2026
அணுவும் அணுக்களும் கடவுளும்... ஒரு சிறு குறு ஆய்வு!
//பொருள்கள் உருவாகக் காரணமாக இருப்பவை அணுக்கள். பொருள்கள் அழிந்தாலும், மீண்டும் மீண்டும் இணைந்து வேறு வேறு வடிவங்களாக[பொருள்களாக> உயிர்களாக] அணுக்கள் மாறுகின்றனவே தவிர அழிவதில்லை. மேலும், அவை சுழற்சியில்[அண்டவெளியில்> பிரபஞ்சத்தில்] இருந்துகொண்டே இருக்கின்றன//
இதன் மூலம், அணுக்கள் இணைவதையும்[இரண்டறக் கலந்து?] பிரிவதையும் வழக்கமாக்கிகொண்டிருப்பவை என்பதை அறிய இயலுகிறது.
இங்கே ‘அணுக்கள்’ என்பது அணுக் கூட்டத்தைக் குறிக்கிறது. அதாவது, கூட்டமாக இயங்குகிற அணுக்களில் எதுவும் அழிவதில்லை என்பதும் உறுதியாகிறது.
கூட்டமாக இயங்கும்போது எந்தவொரு அணுவும் அழிவதில்லை என்றால்.....
ஓர் அணு தனித்திருக்கும்போதும் அழியாமல் இருக்குமா?
இணையத் தேடலில் கிடைத்த விடை:
அறிவியல் ஆராய்ச்சிகளின்படி, அது அழிவதில்லை.
Scanning Tunneling Microscope (STM) மற்றும் Atomic Force Microscope (AFM) போன்ற கருவிகள் மூலம் தனி அணுக்களைப் பிடித்து நகர்த்த முடியும், இது அணுக்கள் தனித்து இயங்க முடியும் என்பதைக் காட்டுகிறது; அது ஒரு ஆதரவுப் பொருளுடன் இணைந்து ஒரு அமைப்பாகச் செயல்படுகிறது. வாயு நிலையில்(Gaseous state): அணுக்கள் வாயு நிலையில் தனித்திருக்கலாம், ஆனால் திடப்பொருட்களில் அவை பெரும்பாலும் கூட்டாகவே இருக்கும்.
சுருக்கமாக, அறிவியல் நுட்பங்களைப் பயன்படுத்தி ஓர் அணுவைத் தனிமைப்படுத்தி இயக்க முடியும்[விரிவான தகவல்கள் இங்கு இடம்பெறவில்லை]. ஆனால் இயற்கையில், அணுக்கள் பெரும்பாலும் கூட்டாகவே இயங்குகின்றன.
ஐயம்:
அணு தனித்து இயங்கட்டும், கூட்டணி[அணுக் கூட்டம்] சேர்ந்தும் இயங்கட்டும், சுற்றிவளைத்து இங்கே முன்வைக்கப்படும் கேள்வி.....
உடல் சிதைவு: நம் உடல் அணுக்களால் ஆன மூலக்கூறுகளால் ஆனது; நாம் இறந்த பிறகு, இந்த மூலக்கூறுகள் சிதைந்து, அணுக்கள் மீண்டும் மண்ணில் கலந்து, தாவரங்கள் மற்றும் பிற உயிரினங்களின் பகுதிகளாக மாறுகின்றன.
புதிய வடிவங்கள்: ஒரு கட்டிடம் இடிந்து போனாலும் அல்லது ஒரு பொருள் எரிந்து போனாலும், அதிலுள்ள அணுக்கள் அழிவதில்லை; அவை காற்று, சாம்பல் மற்றும் பிற பொருட்களின் பகுதிகளாக மாறுகின்றன.
திங்கள், 12 ஜனவரி, 2026
மோடியே சிவபெருமான்! சிவபெருமானே மோடி!!
முன் குறிப்பு:
மோடி பற்றிய விமர்சனங்களை இயன்ற அளவுக்குத் தவிர்ப்பதே என் விருப்பம். எனினும், இவருடைய குறிப்பிடத்தக்க சில நடவடிக்கைகள் அவ்வப்போது எழுதத் தூண்டுகின்றன என்பது விரும்பத்தகாதது.
* * * * *
//குஜராத்தில் உள்ள சோம்நாத் ஆலயத்தில் நடைபெற்றுவரும் சோம்நாத் சுவாபிமான் பர்வ் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். ஜனவரி 8 முதல் 11 வரை நடைபெறும் இந்த ஆன்மிக & பண்பாட்டு நிகழ்வின் ஒரு பகுதியாக, சோம்நாத் ஆலயத்தில் 72 மணி நேரம் தொடர்ந்து நடைபெறும் ‘ஓம்’ ஜபத்தில் பிரதமர் கலந்துகொண்டார்//* என்பது செய்தி.
எத்தனை எத்தனை இன்பங்கள்! அத்தனையும் அனுபவிக்க ஆயுள் இல்லை!!
ஞாயிறு, 11 ஜனவரி, 2026
அதிகாரப் போதையில் மிதக்கும் அவதாரி மோடி!!!
மனிதர்கள் சைவ உணவு உண்பதும் அசைவம் சேர்த்துக்கொள்வதும், அவரவர் மனப்பக்குவத்தையும் வாழும் சூழலையும் உணவுப் பண்டங்களைப் பெறுவதற்கான வாய்ப்பையும் பொருத்தது.
அயோத்தியைச் சுற்றி 15 கிலோ மீட்டர் தொலைவுக்கு அசைவ உணவு பயன்படுத்தக்கூடாது என்னும் மோடி[அயோத்தி மாவட்ட நிர்வாகம்] அரசு பிறப்பித்துள்ள உத்தரவு* அத்தகையதுதான்.
கோயிலைச் சுற்றிக் குறைந்த அளவிலான தூரத்தை[100 மீட்டர், 150 மீட்டர் என்றிப்படி] நிர்ணயித்தல் போதுமானது.
100 மீட்டர், 150 மீட்டர் தொலைவுக்குள் அசைவம் பயன்படுத்தினால், அதன் கெட்ட வாசம் கோயிலுக்குள் குடியிருக்கும் ராமனின் மூக்கைத் துளைக்குமா?
”ஆம்” என்கிறார் ராமச்சந்திர மூர்த்தியால் ஆசீர்வதித்து அனுப்பப்பட்ட மோடி. கோயிலின் புனிதமும் கெட்டுவிடுமாம்.
கடவுள் என்று சொல்லப்படுபவர் படைத்த அத்தனை இடங்களுமே புனிதமானவைதான். இந்தியாவில் எங்குமே அசைவம் உண்ணக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கலாமே? செய்வாரா செயற்கரிய செயல்கள் செய்யும் மோடி?
15 கிலோ மீட்டர் என்றால் எத்தனை வேகமான காற்று வீசினாலும் இறைச்சியின் கெட்ட வாசனை ராமனைச் சென்றடையாதா?
“அடையாது” என்கிறார் மோடி.
அதிகார மமதையில் இவர் மக்களுக்கு எதிராகச் செய்யும் மாபாதகங்களில் இதுவும் ஒன்று.
முட்டாள் பக்தர்களின் ஆதரவைத் தக்க வைப்பதற்காக, இனியேனும் இம்மாதிரி ஆறறிவுக்கு ஒவ்வாத நடவடிக்கைகளில் ஈடுபடாமலிருப்பது மோடிக்கு நல்லதோ அல்லவோ, இந்த நாட்டிற்கு நன்மை தருவதாக அமையும்.
======================
*அயோத்தி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டப்பட்டது. இந்தக் கோவிலைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்நிலையில், இந்த ராமர் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் இறைச்சி மற்றும் அசைவ உணவு விற்பனை மற்றும் விநியோகத்திற்கு அயோத்தி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, ”அயோத்தி ராமர் கோவிலைச் சுற்றி 15 கி.மீ., தொலைவில் உணவகங்கள் இந்தப் பகுதிக்குள் அசைவ உணவுகளைத் தயாரிக்கவோ அல்லது சேமித்து வைக்கவோ கூடாது. அதே போல, அசைவ உணவுகளை விநியோகம் செய்யவும் கூடாது. அயோத்தியின் புனிதத் தன்மையைப் பாதுகாக்கவும், பக்தர்களின் உணர்வுகளை மதிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என அயோத்தி மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. https://theekkathir.in/News/states/delhi/meat-should-not-be-sold-within-a-15-km-radius-around-the-ram-temple!#google_vignette - ஜனவரி 10, 2026
சனி, 10 ஜனவரி, 2026
"ஆண்களும் நாய்களும் ஒன்று”... நடிகை ஸ்பந்தனாவுக்கு ஆயிரம் கோடி வந்தனங்கள்!!!
மேற்கண்டது நாளிதழில் வெளியான செய்தி[நகல் பதிவு].
இதைவிடவும் வேறெவ்வகையிலும் ஆணினத்தை இழிவுபடுத்துதல் சாத்தியமே இல்ல.
பெண்களின் அடங்காத காமமும் ‘அது’ விசயத்தில் அப்பாவி ஆண்களும்!!!
//கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் தேதி இரவு தன் கணவன் ரமேஷூக்கு அதிகளவு தூக்க மாத்திரைகளைத் தண்ணீரில் கலந்து கொடுத்துள்ளார் சவுமியா. இதனால் அயர்ந்து தூங்கிய ரமேஷை, சவுமியா தனது கள்ளக்காதலன் திலீப்பையும் ரவுடி கும்பலையும் வரவழைத்து, கணவனின் கழுத்தைத் துணியால் சுற்றி மூச்சைத் திணறடித்துக் கொலை செய்தாள்.
மேற்கண்டது ஊடகத்தில் வெளியான செய்தியின் ஒரு பகுதி.
இதன் பிறகு, வெளிநாட்டில் இருக்கும் ரமேஷின் தம்பி கோதாரிக்கு [அண்ணனின் இறுதிச் சடங்குக்கு வரமுடியாத நிலையில்] அவர் கேட்டுக்கொண்டதால் செல்போனில் இறுதிச் சடங்குப் புகைப்படங்கள் அனுப்பப்பட்டன. சடலத்தின் கழுத்தில் தென்பட்ட காயத்தைப் பார்த்துச் சந்தேகப்பட்டு, இங்கே இருக்கும் தன் மனைவிக்குக் கோதாரி தகவல் சொல்ல, அவர் காவல்துறையினரிடம் புகார் அளிக்க, அவர்கள் புலனாய்வு செய்ததில், நடந்த உண்மை வெளிப்பட்டு சவுமியா கள்ளக் காதலனுடன் கைது செய்யப்பட்டாள்[புகைப்படங்களை அனுப்பாமல் இருந்திருந்தால் தப்பித்திருப்பாள்].
இது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நம் நாட்டில் இடம்பெறுவதால் இதை விவரிப்பது தேவையற்றது.
ஆனாலும்,
கள்ளப் புணர்ச்சிக்குத் தடையாக இருக்கும் கணவனைப் போட்டுத்தள்ளும் கொடூர மனைவிமார்களில், எத்தனைப்பேர் பிடிபட்டுத் தண்டிக்கப்படுகிறார்கள் என்னும் கேள்வி எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.
அது மிக அரிதாக இருக்கவே வாய்ப்புள்ளது என்பதால், தண்டனையிலிருந்து தப்பித்து, காதலனுடன்(காமுகர்களுடன்) ஜாலிலோ ஜிம்கானா பாடிக்கொண்டு குஷியாக வாழும் காமுகிகள் கணக்குவழக்கில்லாமல் பெருகிவிட்டார்களோ என்று கேட்கத் தோன்றுகிறது.
“ஆம்” என்றால்.....
‘அது’விசயத்தில் பலவீனமான ஆண்களாக இருந்து, 'அப்பாவி'களாகவும் வாழ்பவர்களைப் பார்த்து, “ஐயோ பாவம் அவர்கள்” என்று அனுதாபப்படத் தோன்றுகிறது.
அனுதாபம் தீர்வுக்கு வழிவகுக்குமா என்ன?
முழுத் தகவலுக்கு:
https://www.dinakaran.com/news/wife-kills-husband-for-opposing-illicit-affair/
====================
பின்குறிப்பு:
பெண்களிலும் அப்பாவிகள் நிறையவே உள்ளனர்.
வெள்ளி, 9 ஜனவரி, 2026
'அதிமுக' அல்லாத, ஆளுங்கட்சியை ஆதரிக்காத உதிரிக் கட்சிகளுக்குக் கடும் எச்சரிக்கை!!!
இந்தியா பல்வேறு இனத்தவருக்கும் உரிமையானது என்றாலும், ஒவ்வொரு இந்திக்காரனும் இந்தியாவை இந்திக்காரனே ஆள வேண்டும்[குறிப்பாக, ‘பாஜக’ ஆட்சியில்] என்று நினைக்கிறான்.
இந்தியைப் பரப்புவதற்கு இந்திய மக்களின் வரிப்பணத்தில் மிகப் பெரும் தொகையை ஆளும் பாஜக செல்விடுவது, இந்திக்காரன்களின் ஆதரவைத் தக்கவைத்து, ஆட்சி[ஒன்றியம்]யில் நீடிக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
ஆட்சியில் இருந்தபோதும், இல்லாத இன்றைய நிலையிலும் உரிய சன்மானம் பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு உடந்தையாக இருந்து சேவகம் செய்பவர் ‘அதிமுக’ பழனிசாமி[எடப்பாடியார்> அவ்வப்போது அவர்களைப் புறக்கணிப்பது போல் பேசுவதும் நடந்துகொள்வதும் வெறும் பாசாங்கு].
எடப்பாடி ‘ருசி’ கண்ட அடிமை. இந்த அடிமையை ஆண்டவானாலும்[இருந்தால்] திருத்த இயலாது.
இந்தத் தந்திரக்கார நரியின் ஒத்துழைப்புடன், சங்கித் தலைவர்கள்[நம்பர் 1 & நம்பர் 2] ‘தமிழ் ஆதரவாளர்’களாகத் தங்களைக் காட்டிக்கொள்வதெல்லாம் ‘வெளி வேடம்’ என்பது தமிழர்களுக்கு அத்துபடியாய்த் தெரியும் என்பதால்.....
சங்கிகளின் கட்சி[+கூட்டணி] இங்கு வேரூன்றுவதோ, ஆட்சியைக் கைப்பற்றுவதோ ஒருபோதும் நடைபெறாது.
மீண்டும் முதல்வராகும் எடப்பாடியின் கனவும் பலிக்காது.
ஆகவேதான், ‘அதிமுக’வுடனும் ‘பாஜக’வுடனும் கூட்டணி அமைத்துப் பலன் பெறலாம் என்று கனவுகூடக் காண வேண்டாம் என்று அமமுக, தேமுதிக, பாமக[இரு அணிகள்] ஆகிய கட்சிகளின் தலைவர்களையும், வெற்றிக் கட்சித் தலைவர், ஓபிஎஸ், சீமான், சசி அம்மா ஆகியோரையும் வேண்டிக்கொள்கிறோம்.
பரிந்துரை> எச்சரிக்கையும்கூட:
பெருமதிப்பிற்குரியீர், வடக்கன்களுக்கு அடிமை ஆகாமல், தமிழருக்காகக் கட்சி நடத்துங்கள்.
நடத்தினால்.....
2026 தேர்தலில் அதிக அளவில் வெற்றி வாய்ப்பைப் பெறாவிட்டாலும், மக்களிடம் இப்போது உள்ள ஆதரவையேனும் தக்கவைக்கலாம்.
ஆகவே, எப்போதும் தமிழர்களாகவே இருங்கள்; தமிழர்களுக்காகவே கட்சி நடத்துங்கள்; அவர்களின் வாழ்வை மேம்படுத்தும் நோக்கத்துடனேயே தேர்தலில் போட்டியிடுங்கள்.
எதிர்பார்க்கும் பலன் கிட்டுகிறதோ அல்லவோ, தமிழினம் உங்களை வாழ்த்தும்; நன்றி செலுத்தும்; என்றென்றும் உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கும்.
வியாழன், 8 ஜனவரி, 2026
கேளுங்கள் கிடைக்காது[அறுவைத் தத்துவம்]!
பிறப்புக்கும் இறப்புக்குமான இடைப்பட்ட காலத்தில் ஆணும் பெண்ணுமாய்ச் சதையோடு சதை தேய்த்து, உறுப்பினுள் உறுப்பு சேர்த்துப் புணர்ந்து சந்ததிகளை உருவாக்குகிறோம். இதன் காரணமாக நாம் எதிர்கொள்ளும் போராட்டங்களும் படும் துன்பங்களும் எண்ணிலடங்காதவை.

.jpg)
.jpg)







.jpg)



.jpg)