எனது படம்
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், நம் கட்சித் தலைவர்கள் மனம்போன போக்கில், நிறைவேற்றுவதற்கான சாத்தியமே இல்லாத வாக்குறுதிகளையெல்லாம் அள்ளி இறைக்கிறார்கள்; நிறையப் பொய் சொல்லுகிறார்கள்; எதிரணியினரை வரம்பில்லாமல் வசைபாடுகிறார்கள். இவற்றால் எல்லாம் மக்களுக்குப் பயன் இல்லை என்பதோடு மக்களின் நேரத்தை இவை வீணடிக்கின்றன என்பதால், தேர்தல் முடிவுகள் வெளியாகும்வரை இவர்களின் பரப்புரைகள் ஊடகங்களில் வெளியாவதைத் தடை செய்வது நல்லதொரு முன்னுதாரணமாக அமையும்.

திங்கள், 30 மார்ச், 2026

‘மோடிஜி’யின் பாலியல் லீலைகள்!!![பகிர்வு]




 

”இலவசமா புள்ள தர்றேன்னா ஏற்பியா”... பெண்களை இழிவுபடுத்தும் பொறுக்கி சீமான்!!!

ணமான பெண்கள் தத்தம் கணவர் மூலமாகவும், மணமாகாத அப்பாவிக் குமரிகள் அவர்களுடைய காதலர்கள் மூலமாகவும்[அரிதாக] பிள்ளை பெறுகிறார்கள்.  

இங்கே கவனத்தில் கொள்ளத்தக்கது, மேற்கண்டவர்களின் மூலம் பிள்ளை பெறுவதற்குப் பெண்கள் பணம் செலவழிப்பதில்லை.

செயற்கைக் கருத்தரிப்பு மையங்களைத் தொடர்புகொண்டு பிள்ளை பெறுபவர்கள் மட்டுமே அதற்கான கட்டணங்களை மையங்களுக்குச் செலுத்துகிறார்கள். 

அரசாங்கமே இலவசக் கருத்தரிப்பு மையங்களைத் தொடங்கி நடத்தினால் இவர்கள் செலவில்லாமல் பிள்ளை பெறுவது சாத்தியமாகும்.

இந்தவொரு கோணத்தில், “இலவசமாகப் பிள்ளை தர்றேன்னு சொன்னா[ஸ்டாலின் அரசு] ஏற்பியா?” என்று பெண்களிடம் சீமான் கேட்டிருந்தால் அதில் விவாதிக்க ஏதுமில்லை.

ஆனால், அவருடைய பேச்சில் எதிர்மறையான விபரீத அர்த்தம் பொதிந்துள்ளது.

அது.....

“கருத்தரிப்பு மையங்களுக்கான செலவைத் தவிர்க்க, நாங்கள் ஏற்பாடு செய்யும் ஆண்களுடன் உடலுறவு கொண்டு பிள்ளை பெற்றுக்கொள்ளலாம்” என்று அரசாங்கம் ஓர் அறிவிப்பைச் செய்து,  அதற்கான ஏற்பாடுகளையும் அது செய்தால் அதை நீங்கள் ஏற்பீர்களா?” என்று பெண்களைப் பார்த்துக் கேட்டிருக்கிறார் சீமான்.

அசாங்கம் இலவசங்கள் வழங்குவது மிகையாகவும்[ஓட்டுக்காக] இருக்கலாம். அது விவாதத்திற்குரியது; கண்டனத்துக்குரியதும் ஆகும்.

கண்டிக்கிறேன் பேர்வழி என்று, சீமான் இலவசங்களையும் பெண்களையும் இணைத்துப் பேசியிருப்பது அநாகரிகத்தின் உச்சம்; அசிங்கமான திமிர்ப் பேச்சு.

இந்தப் பேச்சு கடும் கண்டனத்துக்கு உரியது.

ஸ்டாலின் இவரை வெறுமனே கண்டிப்பதைவிடவும், இந்தப் பொறுக்கி மீது வழக்குத் தொடுத்துத் தண்டனை பெற்றுத் தருதல் ஒரு முதல்வருக்குரிய கடமை ஆகும்.

ஞாயிறு, 29 மார்ச், 2026

’கின்னஸ்’இல் இந்து மதக் கடவுள் பெயர்கள்!!!

கணபதி, கணேசன், விநாயகன், பிள்ளையார், கயமுகன், ஒற்றைக்கொம்பன், சித்திபுத்தி விநாயகன், அங்குசபாணி, ஆனைமுகத்தோன், மகா கணபதி, விக்கினேஸ்வரன், தும்பிக்கை ஆழ்வார், சக்தி கணபதி, லட்சுமி கணபதி, ஊர்த்துவ கணபதி, ஐங்கரன், இரட்டைப் பிள்ளையார் என்றிப்படி ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெயர்கள் விநாயகனுக்கு மட்டும் உள்ளன.

இவரின் இளவலான முருகக் கடவுள் வேல் முருகன், அருள் முருகன், பழனி முருகன், கந்தன், குமரன், வேலன், சரவணன், ஆறுமுகன், விசாகன், குருநாதன் என்று பெரும் எண்ணிக்கையிலான பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

இவர்களின் தந்தையான பரமசிவன் பரமேஸ்வரன், ஈஸ்வரன், அர்த்தநாரி ஈஸ்வரன், மாதொருபாகன், கபாலீஸ்வரன், சுந்தரேசன், காசி விஸ்வநாதன், காளத்தியப்பன், குற்றால நாதன், பட்டீஸ்வரன், சொக்கநாதன் என்றிவ்வாறு ஆயிரத்துக்கும் மேலான பெயர்களைப் பெற்றுள்ளார்.

பரமனின் துணைவியான ஈஸ்வரி பரமேஸ்வரி, பார்வதி, உமையாள், அம்பாள், காமாட்சி, சங்கரி, சுந்தராம்பாள், மீனாட்சி என்று ஏராளமான பெயர்களால் குறிப்பிடப்படுகிறார்.

இன்னும், திருமால், பிரம்மன், இந்திரன், வருணன், வாயுபகவான், அக்கினி தேவன், ஐயப்பன், மெய்யப்பன் முதலான பல கடவுள்களும் பல்வேறு பெயர்களால் சுட்டப்படுவது யாவரும் அறிந்ததே.

உருவ வழிபாடு நிகழ்த்தும் மிகப் பல மதங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட 'இந்து' மதத்தில் உள்ள கடவுள்களை எண்ணி முடிப்பது சாத்தியமாயினும், இவர்கள் அத்தனைப் பேருக்குமான பெயர்களை எண்ணிப் பட்டியலிடுவது எளிதான செயலல்ல.

இவற்றை நூலாக அச்சிட முனைந்தால் அது மிக மிக மிகப் பல பக்கங்களாக நீளும் என்பது மறுக்க இயலாத உண்மையாகும்.

உலகில் கடவுள்களை வழிபடும் மதங்கள் உள்ளன.

எந்தவொரு மதம் சார்ந்த மக்களும் இந்து மதம் சார்ந்த மக்களைப் போல், தங்களின் கடவுள்களுக்கு இந்த அளவுக்குப் பெயர்கள் சூட்டி வழிபடுவதாகத் தெரியவில்லை.

இது ஒரு சாதனை என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

இந்தச் சாதனையைக் குறிப்பிட்டு இந்து மதத்தவர்கள், உரிய முறையில் ஒரு கோரிக்கையை முன்வைத்தால், இது 'கின்னஸ்' உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறும் என்பது உறுதி... உறுதி... உறுதி.

வாழ்க இந்து மதக் கடவுள்கள்! வளர்க அவர்களுக்கான பெயர்களின் எண்ணிக்கை!!

வெள்ளி, 27 மார்ச், 2026

அழியாத ஆன்மா அருள்மிகு ஆண்டவனைச் சென்றடைதல்!

டவுள் இருப்பதை உண்மை என்றே நம்புவோம். அவர்தான் நம்மைப் படைத்தார் என்பதும் உண்மையாகவே இருக்கட்டும்.

செய்திருக்கும் பாவப் புண்ணியங்களுக்கு ஏற்ப[இரண்டையும் செய்யத் தூண்டியது யார்?” என்று இடைமறித்துக் கேள்வி கேட்க வேண்டாம்] அடுத்தடுத்துப் பிறவிகள் எடுத்து இன்பங்களையோ துன்பங்களையோ அனுபவிக்கிறோம் என்று ஆன்மிகர்கள் சொல்வதையும் உண்மை என்றே ஏற்போம்.  றனஆன்மாவுக்கு அழிவில்லை என்கிறார்கள். அனைத்துப் பிறவிகளிலும் அதிக அளவில் பாவங்களே செய்துகொண்டிருந்தால், பிறப்பும் மறுபிறப்பும் வரம்பில்லாமல் தொடருமா?

மகான்களோ ஞானிகளோ, திடமான பதில் தந்தவர் எவருமில்லை. எனினும், ஆகச் சிறந்த பக்திப் பித்தராக வாழ்ந்து, கணக்குவழக்கில்லாமல்  புண்ணியம் செய்தால் கடவுளைச் சென்றடையலாம் என்கிறார்கள்.

மறுபிறவிக்கு வரம்பு உண்டா என்பது பற்றியும், இறைவனைச் சென்றடைவதற்குச் செய்திருக்க வேண்டிய புண்ணியத்தின் அளவு[கிலோ கணக்கிலா, டன் கணக்கிலா?] என்ன என்பது குறித்தும் வரையறை செய்யப்படவில்லை.

ஏதோ ஒரு கட்டத்தில் ஆன்மா வடிவில் நாம் இறைவனை[நாம் வணங்குபவரையா, ஏதாவதொரு கடவுளையா என்று குறுக்குக் கேள்வி கேட்க வேண்டாம்]ச் சென்றடைவதாக வைத்துக்கொள்வோம். அதன் பிறகு நமக்கு எழும் சந்தேகங்கள் பல உள்ளன.

கடவுள் அண்டவெளியிலும் ஒவ்வொரு துரும்பிலும் அணுவிலும் எங்கெங்கெல்லாமும் இரண்டறக் கலந்திருப்பவர் என்கிறார்கள். 

இதையும் உண்மை என்றே ஏற்றுக்கொண்டால்.....இதன் மூலம் அவருக்கென்று தனி உருவமோ, குறிப்பிட்ட தங்கும் இடமோ இல்லை என்பதை அனுமானிக்க இயலுகிறது.

இந்நிலையில், இறைவனைச் சென்றடையும் நாம் அவருடன் இரண்டறக் கலந்துவிடுவோமா? அவ்வாறாயின் நாமும் கடவுளா? அந்த ஒரிஜினல் கடவுள் அதற்குச் சம்மதிப்பாரா? மாட்டார்.

கடவுளாக மாறாமல் ஆன்மாவாகவே இருப்போம் என்றால் நாம் எங்கே தங்குவோம்? தங்கவைக்கப்படுவோம்?

எங்கே? எங்கே? எங்கே?

நமக்கான அந்த இடம் எது?

ஏதோ ஓர் இடம் என்றாலும்[கேள்விகள் வேண்டாம்] புலன்கள் ஏதும் இல்லாத நிலையில், அங்கே இருக்கும் நம் செயல்பாடு என்னவாக இருக்கும்?

அதாவது, நாம் என்ன செய்துகொண்டிருப்போம்?

அவதாரி மோடியோ, கடவுளின் குருவான சத்துக்குரு ஜக்கியோ அங்கிருந்தவாறு ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்த்திக்கொண்டிருக்க, அதை நாம் மெய் மறந்து[உடம்புதான் இல்லையே, மன்னித்திடுக] செவிமடுத்து, கால வரையறையில்லாமல் பேரானந்தத்தில் மிதப்போமா?

நாமிருக்கும் இடத்தில் இன்னும் பல ஆன்மாக்கள் இருந்தால், மத வேறுபாடு இல்லாமல், ராமச்சந்திர மூர்த்தி, சிவபெருமான், ஆஞ்சநேயன் என்னும் அனுமான் குரங்கு, அல்லா, கர்த்தர் என்று பிரபலமான கடவுள்களைப் போற்றித் துதிபாடுவோமா?

இறைவனோடு கலந்துவிட்டோம் என்னும் மிதப்பில் காலமெல்லாம் கிளுகிளுத்துக் கிடப்போமா?

ஆன்மாவாம், கடவுளாம், சென்றடைதலாம். ஒரு புண்ணாக்கும் புரியலீங்க!

மீளவே இயலாத பெரும் குழப்பத்தில் உங்களை ஆழ்த்தியிருந்தால் பொறுத்தருள்வீர்!!

வியாழன், 26 மார்ச், 2026

வாருங்கள், அங்கே சென்று ‘சொர்க்கச் சுகம்’ பெற்றுத் திரும்பலாம்!!!

கீழே இடம்பெற்றுள்ள ‘காணொலி’ ‘யூடியூப்’இல் வெளியானது. 

சீனாவின் அடர்த்தியானதும் பிரமாண்டமானதுமான காடுகளின் மலைச் சரிவுகளில், பாறைகளை வெட்டிச் செதுக்கி உருவாக்கப்பட்ட வளைவான நீள் பாதையில் சென்று, பாறைகளைக் குடைந்து கட்டமைக்கப்பட்ட அழகான வீடுகளைப் படம் பிடித்திருக்கிறார் இந்தக் ‘காணொலி’க்காரர்.

அவர் இதற்குக் கொடுத்துள்ள தலைப்பு: 

சீனாவின் மறக்கப்பட்ட ‘[பாறைச்]சொர்க்கம்’ 

மண்டையைப் போட்ட பிறகு நம் ஆன்மிக ஞானிகளும், மோடி, சத்துக்குரு ஜக்கியார் போன்ற அவதாரங்களும் சென்று, நிரந்தரமாய்த் தங்கியிருந்து, சுகானுபோகத்தில் திளைக்கவிருக்கும் இடமான ‘அந்த’ச் ‘சொர்க்கப் பூமி’யைப் பார்க்கும் பேறு நமக்கெல்லாம் வாய்க்காது என்பது 100% உறுதி[நமக்கு நரகம்தான்].

கீழ்க்காணும் காணொலியில் காட்சிப்படுத்தப்படும் சீனாவின் சொர்க்கத்தை[பல சொர்க்கங்கள் உள்ளன]க் காண்பதன் மூலம் உண்மையான சொர்க்கத்திற்குள் நுழைந்து திரும்பியது போன்ற அனுபவத்தைப் பெற்றிட இயலும். 
 
அடியேன் அங்குச் சென்று திரும்பியுள்ளேன்.

நான் பெற்ற பேரின்பத்தை நீங்களும் பெற்றிட, தயங்காமல் காணொலிக்குள் நுழையுங்கள்.

மூடநம்பிக்கைத் திணிப்பில் முந்துவது இந்து மதமா கிறித்தவமா?

//சவூதி அரேபியாவின் ‘ஷேக் நாசர் பின் ரட்டான் அல் ரஷீத் அல் வதா' 142ஆம் வயதில் மரணமடைந்தவர். 110 வயதில் ஒரு திருமணம்[பல பெண்டாட்டிக்காரர்] செய்தார்; ஒரு பெண் குழந்தைக்குத் தந்தையும் ஆனார்//https://www.news18.com/world/saudi-arabias-longest-living-man-who-married-at-110-dies-at-142-ws-kl-9829418.html

[இந்தப் பல்லுப்போன ஒற்றைக் கண் கிழவனைக் கட்டிக்கொண்டவள் ரொம்பவே பாவப்பட்டவள்!]

இது உலக அளவில் பேசப்படும் சாதனை என்கிறது செய்தி வெளியிட்ட ஊடகம்.

இவரைவிடவும் அதிக வயதில் சாதனை படைத்தவர்கள் பற்றி இணையத்தில் தேடுதேடென்று தேடியதில், கீழ்க்காணும் காணொலி அடியேனின் பார்வையில் தட்டுப்பட்டது.

உள்நுழைந்து தகவல்களை வாசித்தபோது.....

“தன்னுடைய 500ஆவது வயதில் கர்த்தரின் அருளால், ‘நோவா’ என்பவர் மூன்று பிள்ளைகள் பெற்ற நிகழ்வானது வேதாகமத்தில்[பைபிள்] இடம்பெற்றுள்ளது” என்று கூறப்படுவது[காணொலியில்] கடும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

 

“கற்பனைகளைக் கட்டவிழ்த்துவிட்டு, மக்களை முட்டாள்கள் ஆக்குவதில் இந்துமதத்திற்கும் கிறித்தவ மதத்திற்கும் இடையேதான் கடும் போட்டி” என்று சொல்லத் தோன்றுகிறது! 

புதன், 25 மார்ச், 2026

கேள்வி: “நாம்[இந்தியர்] யார்?” மோடி: “உலக மகா கோழைகள்”!

 ANI Digital@ani_digital

"People often ask whose side we are on, my answer is we stand with India..."["நாம் யாருடைய பக்கம் இருக்கிறோம் என்று மக்கள் அடிக்கடி கேட்கிறார்கள். அதற்கு எனது பதில்: நாம் இந்தியாவின் பக்கம் நிற்கிறோம்...": PM Modi refers to challenges posed by West Asia crisis Read @ANI Story

“... நாம் இந்தியாவின் பக்கம் நிற்கிறோம்..." -மோடி.

நாம் வேறு இந்தியா வேறா? அதாவது நாம் இந்தியர்கள் அல்லவா?

நியாயம்[ஈரான் - இஸ்ரேல்&அமெரிக்கா] யார் பக்கம் இருக்கிறது என்பதைச் சிந்தித்து அறிந்து, கிஞ்சித்தும் நடுநிலை பிறழாமல் சொல்வதற்கான ‘தில்’ இல்லையென்றால், வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்கலாம்.

இப்படி உளறிக்கொட்டி, ‘இந்தியர்கள் உலக மகா கோழைகள்’[இவரைப் போலவே] என்று உலகறிய முழங்கியிருக்க வேண்டாம்.

[aninews.in/news/national/ 10:23 PM · Mar 23, 2026https://x.com/ani_digital/status/2036124098078933411?s=20]

செவ்வாய், 24 மார்ச், 2026

”மோடி போல் ஒரு தீயவனை நான் கண்டதே இல்லை”... சு.சுவாமி![பகிர்வு]


“நானே கடவுள்! நான் அல்லாமல் வேறு கடவுள் இல்லை”!!

எங்கிருந்தெல்லாமோ சுட்டது, வெட்டியெடுத்தது, துழாவிக் கண்டறிந்தது, கற்பித்தது, கனவு கண்டது,  சிந்தித்தது, நினைத்து நினைத்து ஆழ் மனதில் அசைபோட்டது என்றிப்படிச் சேகரித்துச் சேமித்த அத்தனைக் கருத்துருக்களும் கட்டுரைகள்[3400+ பதிவுகள்] ஆயின. இருப்பில் ‘சரக்கு’ ஏதும் இல்லாததால், பழைய பதிவொன்றை(419 பார்வைகள் மட்டும்)க் கொஞ்சம் மெருகூட்டி வெளியிட்டுள்ளேன். நீங்கள் ஞாபக மறதிக்காரர் என்றால் வாசிக்கலாம்.             ஹி... ஹி... ஹி!!!
*   *   *   *   *
''நானே கடவுள்'' என்று
அவ்வப்போது
நடுத்தெருவில் நின்று கூவுவது
என் வழக்கம்.

இமை விரித்துப் புருவம் நெறித்து
''நீ எப்படிக் கடவுளானாய்?''
என்று
கேட்போரிடமெல்லாம்
''நீவிர் நம்புகிற பிறிதொரு கடவுளிடம்
இதே கேள்வியைக் கேளும்.
அவர் பதில் சொன்னால்
நானும் சொல்வேன்''
என்பது என் பதிலாக இருக்கும்.

மனிதன் மனிதன்தான்;
மரணிக்கும்வரை அவன்
மனிதன்தான். ஆனால் இங்கு.....

சிலர்  சிலரைக்
'கடவுளின் அவதாரம்...
நடமாடும் கடவுள்' என்கிறார்கள்.
நீங்களும் நம்புகிறீர்கள்.
''நான் கடவுள்..... நானே கடவுள்''
என்றால்
நம்பமாட்டீர்களா என்ன?

''நீ கடவுள் என்றால்...
உன்னை நேர்ந்துகொண்டால்...
அது நிறைவேறுமா?''
என்று
கேட்கிறீர்கள்?

''ஆம்... ஆம்'' என்பதே என் பதில்.
நிறைவேறினால் 
அது என்னால் நிகழ்ந்தது.
தவறினால் அது உங்களின் தலைவிதி.

நான்
பிறிதொரு கடவுளின் மறுபிரதி அல்ல;
மகனுமல்ல;
இம்மண்ணுக்கு அனுப்பப்பட்ட
தூதுவனும் அல்ல.

பரமண்டலத்தைப் படைத்த பிறகு,
வெட்ட வெளியிலும் வெறுமையின் அடர்
இருட்டிலும்
கால இடைவெளியின்றி
இரண்டறக் கலந்து கிடப்பவன் நான்.

அனைத்தையும் படைத்தவன் நானே.
இந்தப் பூவுலகில் நான்
அவதரித்தது
இவற்றை மேற்பார்வையிட மட்டுமே.

நானே கடவுள்.....
ஆம்... கடவுள் நானே.
என்னை நம்புவதால் உங்களுக்கு
எந்தவொரு இழப்பும் இல்லை.

இழப்புகள்.....

கணக்கின்றிக் கடவுளரைப் படைத்துப்
பிழைப்பு நடத்தும்
ஆன்மிக வணிகர்களுக்கு மட்டுமே.

இனி.....
''நானே கடவுள்'' என்பதால்
'அவர்கள்' பதறுவார்கள்;
''இவன் இன்னொரு ஹிரண்யன்
இன்றே சம்ஹாரம் செய் இறைவா'' என்று
வானம் பார்த்து அலறுவார்கள்.

நரசிங்கமூர்த்தி வருவார்;
வந்து என்னை வதம் செய்வார்.
பார்த்துப் பார்த்து ஆனந்தப் பரவசத்தில்
நீங்கள்  அலுப்பின்றித் திளைக்கலாம்.
அவரை எதிர்பார்த்துக்
காத்திருங்கள்!

திங்கள், 23 மார்ச், 2026

‘முடிவிலி’[Infinite]? -புரியாதவர்களுக்கும் அரைகுறைப் புரிதல்காரர்களுக்கும்[மட்டும்]!

டைப்புத் தத்துவம் குறித்த விவாதங்களில் இடம்பெறும், எளிதில் புரிந்துகொள்ள இயலாத கருத்துருக்களில் ‘முடிவிலி[Infinite> Infinite refers to something without limits, bounds, or end, representing an immeasurable, boundless, or endless state in time, space, or magnitude> AI] என்பதும் ஒன்று.

அதென்ன ‘முடிவிலி’?‘முடிவு’ என்று ஒன்று இல்லாதது ‘முடிவிலி’. அதாவது, அது எதுவாயினும் எந்த வரம்பும் இல்லாதது[being without limits of any kind]. 

இதற்கு எடுத்துக்காட்டாக, ஒரு கோட்டில் உள்ள புள்ளிகளை திரும்பத் திரும்ப எண்ணிக்கொண்டிருப்பது; பிரபஞ்சத்திலுள்ள நட்சத்திரங்களைக் கணக்கிடுவது; “ஒன்று... இரண்டு... மூன்று.....” என்றிப்படி எண்களை இடைவிடாமல் எண்ணிக்கொண்டிருப்பது போன்றவற்றைச் சொல்லலாம்.

எண்களை எண்ணுவது ஓர் எளிய எடுத்துக்காட்டு.

“ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து.....” என்று உண்டு உறங்கிய நேரம் போக வாழ்நாளெல்லாம் எண்ணிக்கொண்டே இருப்பது[இது சாத்தியமா என்று கேள்வி எழுப்ப வேண்டாம்; கற்பனைதான். கற்பனையை அடிப்படையாகக்கொண்டே பல கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டுள்ளன].

‘100000000000000000000000.....’ எண்ணுவது எண்ணுபவர்களின் ஆயுள் உள்ளவரை நிகழும். அப்புறம்?

வாழ்ந்துகொண்டிருப்பவர்களில் சிலரோ பலரோ அதைத் தொடரலாம்.

மனித இனம் உள்ளவரை தொடர்ந்து எண்ணுவது[100000000000000000000000000.....>முடிவில்லை] இயலும்.

இதுவும்கூட மனித இனம் உள்ளவரைதான்.

அப்புறம்?

என்றென்று இருந்துகொண்டே இருக்கிறவர்[‘ஆதி அந்தம்’ இல்லாதவர்] என்று சொல்லப்படுகிற கடவுளிடம்  இந்தப் பொறுப்பை ஒப்படைக்கலாம்[கடவுளால் அனுப்பப்பட்ட மோடியோ, கடவுள்களின் குருவான சத்துக்குரு ஜக்கியாரோ சிபாரிசு செய்தால் அவர் சம்மதிப்பார். ஹி... ஹி... ஹி!!!].

கடவுள்[இருந்தால்] எண்ணுகிறார்: “10000000000000000000000000000000000000000000000000.....”

அந்தக் கடவுளின் ‘எண்ணும் செயல்’கூட முடிவு பெறாது” என்பது அறியத்தக்கது.

ஆம், மனிதர்களின் ‘எண்ணுதல்’ நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து எண்ணத் தொடங்கிய கடவுள், இன்றளவும்[இந்த நொடிவரை] எண்ணிக்கொண்டே இருக்கிறார்; எண்ணிக்கொண்டே இருக்கிறார்; எண்ணிக்கொண்டே இருக்கிறார். எண்ணுவது முற்றுப்பெறவில்லை; முற்றுப்பெறாது. கடவுள் இருந்துகொண்டே இருப்பவர் என்பதால் அவர் எண்ணுவதும் தொடரும்.

இதைத்தாங்க ‘முடிவிலி’[being without limits of any kind] ன்கிறார்கள் அறிவியலாளர்கள்.

இந்த ‘எண்ணுதல்’ என்னும் ஒரு செயலைச் செய்து முடிப்பதே மனிதர்களுக்குச்[கடவுளுக்கும்கூட] சாத்தியம் ஆகாத நிலையில், படைப்பு, அல்லது கடவுள் குறித்து, ‘ஏன், எப்போது, எப்படி’ என்றெல்லாம் கேள்விகள் கேட்டு, ஆளாளுக்கு ஒரு கடவுளைக் கற்பித்து மதங்களை உருவாக்கி, ஆதிக்க வெறியராய் அடித்துக்கொண்டு செத்தொழிந்தார்கள் நம் முன்னோர்களில் எண்ணற்றவர்கள்; இன்றளவும் சாதல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

இனியேனும், இம்மாதிரியான தவறுகளைச் செய்யாமல், ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தி அமைதியாக வாழ்ந்து முடிப்பதே அறிவுடைமை ஆகும்.

ஞாயிறு, 22 மார்ச், 2026

‘டிரம்ப்’புக்குக் கோரிக்கை... “இந்த நாதாரியை[ஜக்கி] உடனடியா நாடு கடந்துங்க தலைவரே”!

 
இந்த வேடதாரி[கஞ்சா கடத்தல் மன்னன்> இளம் வயசுப் பெண்டாட்டியை ‘மகா சமாதி’ என்னும் பெயரில் சமாதி கட்டிய ஜக்கி வாசுதேவன்] மனிதப் பிறவி இல்லையாம். இந்தக் ‘கடவுளின் குரு’வை[மக்களை ஏமாற்றிச் சம்பாதித்து வாங்கிய சொந்த ஹெலிகாப்டரில் நாடு நாடாகச் சுற்றிக்கொண்டிருப்பான்] எங்கிருந்தாலும் தேடிப் பிடித்து, உங்களுடைய ஏவுகணையில்[F-35 Lightning II] ஏற்றிப்போய், மும்முரமாக ‘ஈரான் - இஸ்ரேல்’  சண்டை நடக்கிற இடத்தில் தூக்கிப்போட்டுடுங்க டிரம்ப். உங்களுக்கு நிறையவே புண்ணியம் சேரும்.

இவன் இங்கேயே இருந்தால், தினம் தினம் இந்த மாதிரி வீடியோ[இவன் தயாரிப்புதான்> பாராட்டுரை வழங்குபவர்களும் இவனுடைய ஆட்களே] வெளியிட்டே, இருக்கிற கொஞ்சம் புத்திசாலிகளையும் முட்டாள்கள் ஆக்கிவிடுவான்!

***[மோடி இவனுடைய அடிமை என்பதால் ‘டிரம்ப்’பிடம் கோரிக்கை வைக்கப்பட்டது]

ஐன்ஸ்டீன் அறிவியல் அறிஞர்தான்; வாழ்வியல் வழிகாட்டியல்ல!!!

//ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மார்ச் 14, 1879 அன்று பிறந்தார்; தன்னை ஓர் உலகக் குடிமகனாகக் கருதியதால், தனது 16 வயதிலேயே ஜெர்மானியக் குடியுரிமையைத் துறந்தார் ஐன்ஸ்டீன் தனது பொதுச் சார்பியல் கோட்பாட்டை 1915இல் வெளியிட்டார். அந்தக் கோட்பாடு, மே 1919இல்  நிரூபிக்கப்பட்டது, அவர் ஒரே இரவில் பிரபலமடைந்தார்; நாஜிக்கள் அணுகுண்டு ஒன்றை உருவாக்கக்கூடும் என்பதை அறிந்து நேச நாடுகளை அணுகுண்டு தயாரிக்கத் தூண்டிய அவரே, ஹிரோஷிமா & நாகசாகி குண்டுவீச்சுகளைத் தொடர்ந்து தன் செயலுக்காக அவர் பின்னர் வருந்தினார். 1952இல் இஸ்ரேலிய ஜனாதிபதி சாய்ம் வெய்ஸ்மான் இறந்தபோது, தனக்கு வழங்கப்பட்ட அந்தப் பதவியை அவர் மறுத்தார்// என்பன போன்ற,  போற்றுதற்குரிய அவரின் வாழ்க்கை நிகழ்வுகள் பலரும் அறிந்தவைதான்.

போற்றுதலுக்கு மாறாக, விமர்சனங்களுக்கு உள்ளான அவரின் வாழ்க்கை நிகழ்வுகளில் குறிப்பிடத்தக்கவை பின்வருமாறு:

‘1902இல், மிலேவா மாரிக் என்னும் பெண்[ஐன்ஸ்டீனின் மாணவி>  ஐன்ஸ்டீனின் ஆரம்பக்கால அறிவியல் வெற்றிகளில் ஒரு முக்கியப் பங்கு வகித்தவர்> அது பெரும்பாலும் சரித்திரத்தில் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது] திருமணம் புரியாமலே இவருடன் உறவுகொண்டு ஒரு பெண்ணையும் பெற்றெடுத்தார் என்பது செய்தி. இதன் மூலம் இது விசயத்தில் கட்டுப்பாடுகளைப் பொருட்படுத்தாதவர் ஐன்ஸ்டீன் என்பது அறியப்படுகிறது.

கட்டுப்பாடு காப்பவர் அல்ல என்பதோடு, பின்னர் அவர் திருமணம் செய்துகொண்ட அவரிடம்{மிலேவா மாரிக்கிடம்[இரு மகன்கள்]}, அவர் தன் மனைவி என்பதையே அலட்சியப்படுத்தி, மனிதாபிமானமே இல்லாமல் விதித்த நிபந்தனைகள்:

“என்னுடனான உன் உறவுகளில் நீ பின்வரும் நிபந்தனைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்: 1.என்னிடமிருந்து எந்தவிதமான நெருக்கத்தையும் நீ எதிர்பார்க்கக் கூடாது; எந்த வகையிலும் என்னைக் குறை கூறவும் கூடாது; 2.நான் சொன்னால் என்னுடன் பேசுவதை நிறுத்த வேண்டும்; 3.நான் சொல்லும்போதெல்லாம் எந்த எதிர்ப்பும் இன்றி உடனடியாக என் படுக்கையறையையோ அல்லது படிக்கும் அறையையோ விட்டு வெளியேற வேண்டும். நம் பிள்ளைகளின் முன்னிலையில், வார்த்தைகளாலோ அல்லது நடத்தைகளாலோ என்னைக் குறைத்து மதிப்பைக் குறைக்கக்கூடாது.” 

மேலும், மிலேவா மாரிக்கிடம், “என்னுடன் விவாகரத்துக்கு நீ சம்மதித்தால் எனக்கு நோபல் பரிசு கிடைக்குமாயின், அந்தத் தொகையை உனக்குக் கொடுப்பேன்” என்றார். ஆனால், தான் பெற்ற 32,250 அமெரிக்க டாலர்களைத் தானே செலவழித்தார்.

பின்னர், ஐன்ஸ்டீன் அவரது தாயார் வழி முதல் ஒன்றுவிட்ட சகோதரியான ‘எல்சா’ என்பவரை இரண்டாம் திருமணம் செய்தார்.  இதுவும் மனதை உறுத்திகிற நிகழ்வுதான்.

அடுத்த நிகழ்வு ஐன்ஸ்டீன் மீது பெருமதிப்புக்கொண்டவர்களைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குவதாகும்.

அது.....

ஐன்ஸ்டீன் 1935இல் மார்கரிட்டா கொனென்கோவா என்னும் பெண்ணைச் சந்தித்தார். இருவரும் காதலர்களாக ஆனார்கள். 

மேலும் ஒரு குறிப்பிடத்தக்க செய்தி: ஐன்ஸ்டீனின் நுண்ணறிவு ஈவு(IQ) பற்றி உண்மையில் யாருக்கும் தெரியாது. சில ஆதாரங்கள் அந்த இயற்பியலாளரின் நுண்ணறிவு ஈவு 160 என்று கூறுகின்றன. ஆனால், அது ஒருபோதும் சோதிக்கப்படவில்லை.

அறிவியல் உலகம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித இனமும் இன்றளவும் போற்றுகிற அறிஞர் ஐன்ஸ்டீன் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால், அவரின் தனிப்பட்ட வாழ்க்கை நிகழ்வுகள் அவரும் ஒரு சராசரி மனிதரே என்பதை அடையாளப்படுத்துகின்றன.

The dark side of Albert Einstein

வெள்ளி, 20 மார்ச், 2026

அடித்து விளையாடும் அறிவியலாளர்கள்! மண்டை காயும் சாமானிய மக்கள்!!

//அப்ராமோ’ என்கிற ஒரு விஞ்ஞானி, பிரபஞ்சத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளவோ அல்லது அளவிடவோ விஞ்ஞானிகளிடம் இப்போதும் போதுமான கருவிகள் இல்லை என்கிறார்//*

//பிரபஞ்சம் என்பது அனைத்து வெளி[?], பருப்பொருள்(எடையுள்ள மற்றும் இடத்தை ஆக்கிரமிக்கும் எதுவும்), ஆற்றல், காலம் என எல்லாவற்றையும் உள்ளடக்கியது. பெருவெடிப்பிலிருந்து இந்தப் பிரபஞ்சம் தோன்றியது// என்கிறார்கள் நாசா விஞ்ஞானிகள்[அடைப்புக் குறிகளுக்குள் சாமானிய மக்களின் சந்தேகங்கள்].


***[போதுமான கருவிகள் இல்லாத நிலையில் இந்த உண்மையை எப்படிக் கண்டறிந்தார்கள் நாசாக்காரர்கள்?]


***[பெரு வெடிப்புக்கு முன்பு எங்கும் எதுவும் இல்லையா? அதைப் பற்றி எந்த விஞ்ஞானியும் ஏன் வாய் திறப்பதில்லை!?]

 

//ஒரு கோட்பாட்டின்படி, சுமார் 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பிரபஞ்சம் மிகவும் சூடாகவும் நெருக்கமாகவும் இருந்தது. பின்னர் அது விரிவடையத் தொடங்கியது. அன்று முதல் அது வளர்ந்துகொண்டே இருக்கிறது. பிரபஞ்சம் நீண்ட காலமாக விரிவடைந்தபோது, விண்மீன் திரள்கள், நட்சத்திரங்கள், கோள்கள் போன்றவை மெதுவாக உருவாயின//


***[இவற்றையெல்லாம் எவ்வகையான கருவிகளின் உதவியால் கணக்கிட்டார்கள்?] 


//இன்றும்கூட, பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் உண்மை என்னவெனில், அதைப் பற்றி நமக்கு(விஞ்ஞானிகளுக்கு) இன்னும் மிகக் குறைவாகவே தெரியும்//


***[அப்புறம் எப்படி விரிவடைவதை உறுதிப்படுத்தினார்கள்?]


//பிரபஞ்சம் எவ்வாறு செயல்படுகிறது என்பதன் பெரிய சித்திரத்தை விஞ்ஞானிகளால் காண முடிகிறது// 


***[சித்திரம் என்றால்[புகைப்படம் அல்ல] அதைக் கற்பனையாக வரைந்தவர் யார்? அல்லது வரைந்தவர்கள் எவரெல்லாம்?)


//பிரபஞ்சம் தொடர்ந்து விரிவடைந்தால், ஆற்றல் மென்மேலும் பரவும். இதன் காரணமாக, விண்மீன் திரள்கள் மெதுவாக மேலும் விலகிச் செல்லும். காலப்போக்கில் புதிய நட்சத்திரங்கள் உருவாவது நின்றுவிடும். மேலும், ஏற்கெனவே இருக்கும் நட்சத்திரங்கள் மெதுவாக இறந்துவிடும். அதாவது, "விண்மீன் திரள்கள் மேலும் மேலும் விலகிச் செல்லும், நட்சத்திரங்கள் வயதாகி இறந்துவிடும். இதுவோர் இறுதி நிலை. இதில் பிரபஞ்சம் அடிப்படையில் ஒரு மயானமாக மாறும். பிரபஞ்சம் வேகமாக மங்கி வருவதாக ராட்பவுட் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. எஞ்சியிருக்கும் கடைசி நட்சத்திரங்கள் மறைவதற்கு சுமார்10⁷⁸  ஆண்டுகள்(அதாவது 1-ஐ தொடர்ந்து 78 பூஜ்ஜியங்கள்) ஆகலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்//


***[சுமார் 10⁷⁸ ஆண்டுக்கால நிகழ்வைக் கணக்கிட்டுச் சொல்வது சாத்தியமா? எப்படி?]


//இதைக் காண மனித இனம் உயிர்ப்புடன் இருக்காது. பூமிகூட அதற்கும் மிக முன்னதாகவே அழிந்துவிடும். சுமார் ஆறு பில்லியன் ஆண்டுகளில், சூரியன் ஒரு ரெட் ஜெயன்டாக வளர்ந்து அருகிலுள்ள கோள்களை அழிக்கும். பிரபஞ்சம் மயானம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது//


“இப்போதே அது மயானம் ஆகிவிட்டால் நல்லது. இவர்கள் அளந்துவிடும் அளவில்லாத புருடாக்களால்[?!] மக்கள் மண்டை காய்வது தவிர்க்கப்படும்” -நாம்.

                                 *   *   *   *   *

https://www.bbc.com/tamil/articles/c24dej96ddeo -18 மார்ச் 2026; புதுப்பிக்கப்பட்டது 19 மார்ச் 2026.

வியாழன், 19 மார்ச், 2026

சாதி இல்லை! இங்கெல்லாம் இல்லவே இல்லை!!

விருப்பம் இல்லாமலே ஈரைந்து மாதம் வயிற்றில் சுமந்த, நெஞ்சில் கிஞ்சித்தும் ஈரம் இல்லாத கல்நெஞ்சக்காரிகளால் குப்பைமேட்டில் கிடத்தப்பட்டு, கருணாமூர்த்திகளால் அனாதை இல்லங்களில் அடைக்கலமாகும் அனாதைகள் தவிர, சாதிப்பற்று இல்லாதவர்களே இல்லை என்று சொல்லலாம்.

பெண்ணொருத்தி மயக்கும் பேரழகியாகவோ ஆணொருவன் மிடுக்கான பேரழகனாகவோ இருந்தால், அவர்களின் அழகை மெய்மறந்து ரசிக்கும்போது அவர்களின் சாதி குறித்து எவரும் ஆராய்வதில்லை.மேலும்.....

*பாலுணர்வு இச்சையைத் தணிக்கவோ கட்டுப்படுத்தவோ வேறு வழியே இல்லாமல் தொழில்காரிகளைத் தேடிப் போகும்போது, போகிறவர்களுக்குச் சாதி நினைவுக்கு வருவதே இல்லை[ஆந்திரத்து அழகியா, கேரளத்துக் குட்டியா என்றெல்லாம் விசாரிப்பது உண்டு].

*வன்புணர்வில் ஈடுபடும் வெறி நாய்களின் கண்களுக்குச் சாதி எந்நாளும் தட்டுப்படாது.

*லஞ்சம் வாங்கும்போது சாதி பார்க்காத உத்தமப் புத்திரர்கள் அவதரித்துள்ள பூமி இதுவாக்கும். 'இந்த அதிகாரி 'நம் ஆள்' இல்லை. லஞ்சம் கொடுத்துக் காரியம் சாதிக்க வேண்டாம்' என்று முடிவெடுக்கும் சாதிப் பிரியர்கள் எல்லாம் இங்கு இல்லை.

*தேர்தலில் ஓட்டுக் கேட்கும்போது வேட்பாளர்களுக்குச் சாதி தேவைப்படுவதில்லை[சாதி பார்க்காமல் எவரும் போடுவதில்லை].

*விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடும்போது, அல்லது புயல், சுனாமி போன்றவை தாக்கும்போது உதவுபவரிடம், "நீங்க என்னய்யா சாதி?" என்று எவரும் விசாரிப்பதில்லை.

*திருடும்போதும், கொள்ளையடிக்கும்போதும், 'இவர் நம் சாதிக்காரர்' என்று களவாணிக் கும்பல் விதிவிலக்கு அளிப்பதில்லை; அந்தத் தொழிலுக்குக் கூட்டாளிகளைச் சேர்க்கும்போதும் அதே... அதே... அதே.

*நடுத்தர வயதைக் கடந்தும் திருமணத்துக்கு வரன் கிடைக்காத போது இனம், மொழி, மாநிலம், நாடு என்று எல்லாம் கடந்து வரன் தேடுகிறார்கள். சாதி பார்த்தால் கட்டைப் பிரமச்சாரிகளாகக் காலம் தள்ள நேரிடும்.

*குடியேறிய அயல் ஊர்களில் தன் ஜாதிக்காரர்களே இல்லாதபோது, "இப்போ எல்லாம் யாருங்க சாதி பார்க்குறாங்க?" என்று சமத்துவம் போற்றும் சந்தர்ப்பவாதிகளை ஈன்றெடுத்த மண் இது.

*எந்தவொரு கடைக்காரரும், "உன் சாதி என்ன?" என்று கேட்டுப் பொருள் விற்பனை செய்வதில்லை.

*பிச்சை எடுப்பவர்கள், போடுபவர்களிடம் சாதி அடையாளம் தேடுவதில்லை.

மேற்கண்ட சந்தர்ப்பங்களிலெல்லாம் சாதி வேறுபட்டைத் தவிர்ப்பவர்கள், அவரவர் சாதியாருடன் பெரும்பான்மையினராகச் சேர்ந்து வாழும் இடங்களிலும், திருமணம் நிகழ் இடங்களிலும் ஏன், பிணம் சுடும் மயானங்களிலும்கூட சாதியைக் கட்டிப்பிடித்து ஒப்பாரி வைப்பது ஏன்?

மனப்பூர்வமாய்ச் சிந்தித்தால் இந்த அவலத்திலிருந்து எளிதாக விடுபட முடியும். நம்மில் பெரும்பாலோர் சிந்திக்கத் தயாராக இல்லை என்பது விடுபட இயலாத பெரும் துயரம்!

புதன், 18 மார்ச், 2026

தேர்தல் ஆணையர் தகுதியிழக்கிறார்!? தடுக்கப்படுமா மோடியின் வாக்குத் திருட்டு?

இந்தத் தடையற்ற தனிப்பட்ட நேர்காணலில், பாலகிருஷ்ணன் கே, ஞானேஷ் குமார் தேர்தல்களை நடத்துவதற்கான தகுதியை இழந்துவிட்டார் என்று ஆணித்தரமான ஆதாரங்களுடன் உறுதிபடச் சொல்கிறார்.

மோடி வகையறாக்கள் செய்த வாக்குத் திருட்டுகளை அம்பலப்படுத்தியிருக்கிறார்.

 முக்கிய மாநிலங்கள் சிலவற்றில், 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்கள் பாதிக்கப்படலாம் என்று எச்சரிக்கிறார். 

எதிர்க் கட்சிகள் ஒருங்கிணைந்து உறுதியுடன் போராடினால், ஞானேஷ்குமாரைப் பதவி நீக்கம் செய்வதன் மூலம், மோடி குழாம் வாக்குகளைத் திருடி மாநிலத் தேர்தல்களில் வெற்றி பெறுவதைத் தடுத்து, மக்களாட்சி மரணிப்பதைத் தடுத்து நிறுத்தலாம்.

இணைந்து போராடுவார்களா?

செவ்வாய், 17 மார்ச், 2026

‘இஸ்ரேல்&அமெரிக்கா - ஈரான்’ போரில் அனைத்து இஸ்லாமிய நாடுகளும் இணைந்தால்.....

ரான் - இஸ்ரேல்&அமெரிக்கா இடையிலான போர் நீடித்துவரும் நிலையில்,

"முஸ்லிம்களே"! என்று ஒருவர் அழைப்பதைக் கேட்டுப் பதிலளிக்காதவர் முஸ்லிம் அல்ல’ என்ற நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் கூற்றுக்குச் சில இஸ்லாமிய அரசாங்கங்களின் நிலைப்பாடு முரணாக இல்லையா? இது எத்தகைய இஸ்லாம்?” என்று ஈரானின் உச்சகட்டத் தேசியப் பாதுகாப்புக் கவுன்சில்(SNSC) செயலாளராக உள்ள அலி லாரிஜானி[Iran’s National Security Chief Ali Larijani] கேள்வி எழுப்பினார் என்பது ஊடகச் செய்தி*

“இன்றைய மோதல் ஒருபுறம் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும், மறுபுறம் முஸ்லிம் ஈரானுக்கும் எதிர்ப்புச் சக்திகளுக்கும் இடையே நடைபெறுகிறது. நீங்கள் எந்தப் பக்கம் இருக்கிறீர்கள்?” என்றும் அவர் கேட்டிருக்கிறார்.

இதன் மூலம், இஸ்லாமிய நாடான ஈரான், தன் எதிரிகளை எதிர்கொள்வதற்கு, தன் மதம் சார்ந்த[இஸ்லாம்] அனைத்து நாடுகளையும் ஒருங்கிணைக்க முயல்கிறது என்பது தெரிகிறது[போர் மூளுவதற்கான மிகச் சரியான காரணம் எந்தவொரு தரப்பினராலும் தெளிவாக எடுத்துரைக்கப்படவில்லை].

ஈரான் குற்றம் சாட்டுவதுபோல், இஸ்ரேல்&அமெரிக்கா நாடுகளின் ஆதிக்க வெறியே போருக்குக் காரணமாக இருந்தால், இஸ்லாம் நாடுகள் மட்டுமல்லாமல், உலகின் அனைத்து நாடுகளையும் துணைக்கு அழைக்கலாம்.

“போரின் பெயரால் மதிப்பு மிக்க உயிர்கள் பலியாக்கப்படுவதை நாங்கள் வெறுக்கிறோம்; எதிர்க்கிறோம். மனித நேயம் போற்றும் எங்கள் மீது கெட்ட நோக்கங்களுடன் வலிந்து போர் தொடுத்துள்ளன இஸ்ரேலும் அமெரிக்காவும். நல்லவை நாடும் அனைத்து நாடுகளும் எங்களை ஆதரிக்க வேண்டும்; எங்களுடன் இணைந்து போரிட முன்வர வேண்டும்” என்ற வகையில் அறிக்கை வெளியிட்டிருந்தால் அது நடுநிலை வகிக்கும் நாடுகளைச் சிந்திக்கத் தூண்டியிருக்கும்.

ஈரான் பக்கம் நியாயம் இருப்பது உறுதியானால், தவறாமல் ஈரானுக்கு ஆதரவாக அவை களம் இறங்க வாய்ப்புள்ளது.

ஆனால் ஈரானோ, இஸ்லாமியர் ஆளும் நாடுகளை மட்டும் துணைக்கு அழைத்து ஒரு பெரிய தவற்றைச் செய்திருக்கிறது.

ஈரானின் அழைப்பை ஏற்று அனைத்து இஸ்லாம் நாடுகளும் களம் இறங்கினால், இஸ்லாம் அல்லாத நாடுகள் இஸ்ரேல்&அமெரிக்கா தரப்புக்கு ஆதரவாகக் களம் இறங்கக்கூடும். இந்நிலையில், இவைகளுக்கிடையேயான மோதல் உலகப் போராக மாறும் என்பதில் சந்தேகமில்லை.

இரானுக்கு எதிரான அணி பலம் வாய்ந்ததாக அமையும் வாய்ப்பும் உள்ளது.

போரின் முடிவைக் கணிப்பது அத்தனைக் கடினமல்ல.

இந்நிலையில், வெகு சாமானியனாகவும், சில நூறு[சில நேரங்களில் சில ஆயிரம்] வருகையாளர்களைப் பெற்றுள்ள வலைப்பதிவாளனாகவும் நாம் ஈரானுக்கு அறிவுறுத்துவது:

“மிகவும் மேம்பட்ட மதப்பற்றுள்ள நீங்கள், உங்கள் அபிமானத்திற்குரிய நபிகள் நாயகத்தின் கூற்றை மேற்கோள் காட்டி, ‘இஸ்லாமியர், இஸ்லாமியர் அல்லாதவர்’ ஆகியோருக்கிடையேயான உறவைச் சீர்குலைக்க வேண்டாம். இதனால், பெருமளவில் பாதிக்கப்படுவது உலகளாவிய இஸ்லாமியராக இருக்கலாம்.”

* * * * *

*https://www.news18.com/world/which-side-are-you-on-iran-national-security-chief-questions-muslim-nations-over-support-ws-l-9969531.html