எனது படம்
ஆண்களோ பெண்களோ அவர்களைக் கட்டுப்படுத்தி ஒழுக்க நெறி பிறழாமல் வாழச் செய்வது ஓரளவுக்கே சாத்தியம். வாழ்தல் குறித்த அனுபவ அறிவும், மனதைப் பக்குவப்படுத்துவதற்கான தீவிர முயற்சியும், பிரச்சினை எதுவாயினும் அது குறித்துச் சிந்தித்து முடிவெடுக்கும் திறனும் அதற்கான இன்றியமையாத் தேவைகள் ஆகும்.

புதன், 11 பிப்ரவரி, 2026

“கடவுளை மற; மனிதனை நினை”... தேவை நினைவுகூர்தல் தினம்!

முதியோர் தினம், மகளிர் தினம், தந்தையர் தினம், அன்னையர் தினம், காதலர் தினம், காமுகர் தினம்[ஹி...ஹி...ஹி!] என்றெல்லாம் உலகளவில் சிறப்பு ‘நினைவுகூர்தல்’ தினங்கள் கொண்டாடப்படுகின்றன.


இவற்றோடு, ‘கடவுளை மற. மனிதனை நினை’ தினமும் கொண்டாடப்படுதல் வேண்டும்.

நிரூபிக்கவே இயலாத கடவுளைப் பற்றிச் சிந்தித்ததால் ஆன்மிகம் போற்றும் மதங்கள்[விதிவிலக்கானவை உள] பல தோன்றின. கருத்து வேறுபாடுகள் காரணமாக அவற்றிடையே மோதல்கள் நிகழ்ந்தன; போர்கள் வெடித்தன; உலகம் பெரும் பெரும் அழிவுகளை எதிர்கொண்டது.

சுருங்கச் சொன்னால், கடவுளைப் போற்றும் மதங்களால் விளைந்த நன்மைகளைக் காட்டிலும் நேர்ந்த தீமைகள் மிக மிக மிக அதிகம். இதைக் கருத்தில் கொண்டுதான் பெரியார், “கடவுளை மற; மனிதனை நினை” என்றார்.

ஆண்டுதோறும், பல மூடநம்பிக்கைகளுக்குக் காரணமான  கடவுளை மறந்து, ‘கடவுளை மற. மனிதனை நினை’ தினம் கொண்டாடப்பட்டால்.....

மனிதப் பண்பு சிறக்கும். சாதி, மதம், இனம், மொழி போன்றவற்றால் உருவாகும் வேறுபாடுகள் மறையும். மக்களிடையே மோதல்கள் இல்லை; போர்கள் இல்லை; பேரழிவுகளும் இல்லை என்னும் நிலை உருவாகும்.

சுருங்கச் சொன்னால்.....

மனிதர்கள் மனிதர்களுக்காகவே வாழ்வார்கள்[பிற உயிர்களுக்கு உதவுவதும் நிகழும்].

மனிதர்கள் மனிதர்களுக்காகவே வாழும் காலம் வருமா?

‘வரும்’ என்று நம்புவோம்.