எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வியாழன், 31 ஜூலை, 2025

மனிதரும் கடவுளும் ‘ஏறத்தாழ’க் கடவுள்களும்!!!

பொருள்களோ உயிர்களோ மாறாதவை என்று எவையும் இல்லை[அணுக்கள் உட்பட>https://www.google.com/search]  உரு மாறி மாறி ஒரு கட்டத்தில் அழிந்துபோகின்றன.

மாற்றமோ அழிவோ இல்லாத ஒன்று உண்டா என்பது எவருக்கும் தெரியாது[ஆராய்ந்து கண்டறியப்படவில்லை].

ஆனாலும், அழிவே இல்லாத ஒன்று இருந்தால், அதை வழிபட்டுச் செத்தொழிந்த பின்னரும் ஏதோ ஒரு வடிவில்[கண்ணுக்குப் புலனாகாதது] வாழ்ந்திட ஆசைப்பட்டான் மனிதன்.

அதன் விளைவு..... 

‘கடவுள்’ உண்டு என்றான்; அவர் அழிவே இல்லாதவர், அதாவது என்றென்றும் இருந்துகொண்டே இருப்பவர் என்றான். தனக்காக அழிவில்லாத ‘ஆன்மா’ வையும் கற்பித்தான்.

கற்பனை செய்வதில் முன்னிலை வகித்தவர்களை அவதாரங்கள் என்றும், மகான்கள் என்றும், ஞானிகள் என்றும் புகழ்ந்தான். அவர்களையும் ‘ஏறத்தாழ’ கடவுள்கள் ஆக்கினான்.

உண்மையில் கடவுளையோ ஆன்மாவையோ கண்டவரில்லை; பிறருக்குக் காட்டியவரும் இல்லை; உணர்ந்ததாகச் சொன்னவர் உண்டே தவிரப் பிறருக்கு உணர்த்தியவரும் இல்லை.

ஆசை காரணமாக இவன் கடவுளைக் கற்பித்ததன் விளைவு, குரங்கு[எங்கள் ஊர் குரங்குக் கடவுள் ‘ஆஞ்சநேயர்’ உலகப் புகழ் பெற்றவர். ஹி... ஹி... ஹி!!!], சிங்கம்[நரசிங்கம்] மயில், மாடு, கழுகு, நாய், பன்றி[வராகம்], பாம்பு போன்ற ஆறறிவில்லாத உயிரினங்கள் எல்லாம் கடவுள்களாக ஆக்கப்பட்டுவிட்டன.

மனிதன் மட்டும் ஆறறிவு இருந்தும் மிகப் பெரும்பாலான நேரங்களில் ஐந்தறிவு விலங்காகவே வாழ்ந்துகொண்டிருக்கிறான்.

பாவம் மனிதன்!

புதன், 30 ஜூலை, 2025

‘ஐசியூ’வில் பாகிஸ்தான்... “ஆஸாத் காஷ்மீரை மீட்பதற்கான அரிய தருணம் இது மோடிஜி”...

//பாகிஸ்தான் இன்னும் ஐசியூ[ICU]வில்தான் உள்ளது என்றும் இந்தியாவின் நோக்கம் பயங்கரவாதிகளை அழிப்பதுதான் என்றும் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர்[PM Modi Speech on Operation Sindoor] மீதான விவாதத்தின்போது கூறினார்//[செய்தி]*

‘பாகிஸ்தான் ‘ஐசியூ’வில் உள்ளது என்றால், அந்த நாட்டின் முப்படைகளும் ‘ஐசியூ’வில் உள்ளன என்று கொள்ளலாம். மோடிஜி இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி ஒட்டுமொத்தப் பாகிஸ்தானையே அழித்து மண்ணோடு மண்ணாக்கியிருக்கலாம். மிகு கருணை நெஞ்சினர் என்பதால் அவர் இதைச் செய்யவில்லை.

மோடிஜியை மனதாரப் புகழ்ந்து போற்றுவோம்.


அதே வேளையில், நாடு சுதந்திரம் பெற்ற சூட்டோடு, பாகிஸ்தானியன் நம்மிடமிருந்து கைப்பற்றிய ‘ஆசாத் காஷ்மீர்’[Azad Kashmir]ஐ தலைவர் மோடி மீட்டெடுத்திருக்கலாம்.

நம் மக்கள் அனைவருடைய எதிர்பார்ப்பும் இதுதான்.

இந்த நம் தலைவரின் கூற்றுப்படி, பாகிஸ்தான் இப்போதும் ‘ஐசியூ’விலேயே இருப்பதால், நம் படைகளை[சில நூறு வீரர்கள் போதும்] அனுப்பி, ‘கத்தியின்றி ரத்தமின்றி’ ஆஸாத் காஷ்மீரை மீட்டெடுப்பதோடு[தேவையெனின் நண்பர் டிரம்ப்பிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம்], இந்த வரலாற்றுச் சாதனையை மோடிஜி பாரத மாதாஜிக்கு அர்ப்பணிக்கலாம்; அர்ப்பணித்திட வேண்டும் என்பது நம் வேண்டுகோள்!

                                                          *   *   *   *   *

*https://tamil.samayam.com/latest-news/india-news/pm-modi-said-on-operation-sindoor-debate-pakistan-still-in-icu-and-india-aim-is-to-destroy-terrorists/articleshow/122977873.cms


செவ்வாய், 29 ஜூலை, 2025

“இந்தப் பிரபஞ்சம் அழியும்”... விஞ்ஞானிகளின் அண்டப்புளுகு!!!

அளவுக்கு அதிகமாகப் பொய் பேசித் திரிபவனை ‘அண்டப் புளுகன்’என்று கிண்டலடிப்பது நம்மவர் வழக்கமாக உள்ளது. 

அதென்ன அண்டப்புளுகு?

அண்டம்[பிரபஞ்சம்> சமஸ்கிருதச் சொல்.  தமிழில் அண்டம்’ அல்லது ‘புடவி’] என்பது நீளம், அகலம், சுற்றளவு, எல்லை[விளிம்பு], கனபரிமாணம் என்றிவற்றில் எந்தவொன்றையும் அளந்து கணக்கிட இயலாதவாறு விரிந்து பரந்து கிடக்கிற ஒன்றாகும். ‘அண்டப் புளுகன்’ என்னும் சொல்லாட்சி உருவானதன் பின்னணி இதுதான்.

விஞ்ஞானிகள் எதைச் சொன்னாலும் அதை இந்த உலகம் நம்புகிறது.

இந்த அண்டத்தின் ஆயுள் பற்றி இவர்கள் வெளியிட்ட ஒரு புளுகுச் செய்தி[?] அண்மையில் வெளியாகியிருக்கிறது.*

அது.....

அண்டத்தின் மொத்த ஆயுட்காலம் சுமார் 33.3 பில்லியன் ஆண்டுகளாம்.

அந்த ஆயுளில் கிட்டத்தட்ட 13.8 பில்லியன் ஆண்டுகள் முடிந்துவிட்டன. எஞ்சியிருக்கும் ஆயுட்காலம் 20 பில்லியன் ஆண்டுகள்தான். அவை கழிந்த பிறகு இது அழிந்துபோகும்[அண்டமே அழிந்தால் மிஞ்சுவது என்ன? அதை இவர்களால் படமெடுத்துக் காட்சிப்படுத்த இயலுமா?] என்கிறார்கள் இவர்கள்.

ஐயாயிரம்... பத்தாயிரம் ஆண்டுகளுக்கப்புறம் இந்த அண்டம்[பிரபஞ்சம்] எப்படியிருக்கும் என்று சிந்தித்தாலே நமக்கெல்லாம் தலை சுற்றுகிறது.

மில்லியன்> பத்து லட்சம்;  பில்லியன் என்பது 100 கோடி அல்லது ஆயிரம் மில்லியன் ஆண்டுகள். 'அண்டத்தின் மொத்த ஆயுட்காலம் 33.3 பில்லியன் ஆண்டுகள்(வேலைவெட்டி இல்லாமல் சும்மா இருந்தால் 33.3ஐ 100ஆல் பெருக்கிக் கோடிகளாக்கி, லட்சங்களாக்கி, ஆயிரங்களாக்கி, நூறுகளாக்கி மொத்த ஆண்டுகளைக் கண்டறியுங்கள்); 13.8 பில்லியன் ஆண்டுகள் கழிந்துவிட்டன; எஞ்சியிருப்பவை 20 பில்லியன் ஆண்டுகள் மட்டுமே' என்றெல்லாம் இவர்கள்[விஞ்ஞானிகள்] எப்படிக் கணக்கிட்டார்கள்?

நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, இந்த விஞ்ஞானிகளும் அவ்வப்போது எதையாவது புளுகிவைத்துப் ‘பந்தா’ பண்ணுகிறார்கள் என்பது என் எண்ணம்! ஹி... ஹி... ஹி!!!

                                          *   *   *   *   *

*//In a stunning new twist to the story of our cosmos, scientists say the universe may not expand forever.....// https://www.indiatoday.in/science/story/our-universe-will-die-astronomers-have-calculated-when-2761068-2025-07-25

திங்கள், 28 ஜூலை, 2025

‘இந்தியா’வின் பிரதமரான ‘இந்தியர்’ மேதகு மோடி அவர்களே.....

[//உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்க வேண்டும் - மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு//> மாலைமலர்]

இந்தியா என்னும் இந்த நாட்டின் பிரதமரான இந்தியர் மோடி அவர்களே,

இந்தியாவின் குடிமக்களுக்கு, இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களையே வாங்குதல் வேண்டும் என்று நீங்கள் வழங்கியுள்ள ‘புத்திமதி’ ஏற்கத்தக்கதே. ஆனால்.....

இந்தியா’வின் பிரதமரான நீங்கள் குறைந்தபட்சம் ஓர் ஆண்டில் பாதி நாட்களாவது இந்தியாவிலேயே தங்கியிருந்து, இந்தியாவின் குடிமக்களுக்கு உள்ள பிரச்சினைகளை ஆராய்ந்து அறிந்து அவற்றிற்குத் தீர்வு காண[வாயால் வடை சுடாமல்] முயலுதல் வேண்டும்.

நாளுக்கு நான்குவிதமான மிக மிக மிக உயர் ரக அயல்நாட்டு ஆடைகளை உடுப்பதைத் தவிர்த்து இந்தியாவில் தயாரிக்கப்பட்ட எளிய[பொதுமக்களுக்கானது> காந்தியடிகள் இடுப்பில் முண்டோடுதான் வாழ்ந்துமுடித்தார்] ஆடைகளையே உடுக்கப் பழகுங்கள்.

இந்தியாவில் பேசப்படும் மொழிகள் பல. இந்தியை மட்டும் பேணி வளர்க்காமல் அவற்றின் வளர்ச்சிக்கும் பாடுபடுங்கள்.

இந்தியா என்பது பல இன மக்கள் இணைந்து வாழும் ஒரு நாடு. அவர்கள் வாழும் மாநிலங்களுக்கான சுய உரிமைகளைப் பறித்து, ஒட்டு மொத்த இந்தியாவின் மக்களையும் உங்களின் அடிமைகளாக ஆக்கும் தொடர் முயற்சியைக் கைவிடுங்கள்.

இந்தக் குறிப்பிடத்தக்க கோரிக்கைகளை[இன்னும் பல உள்ளன] நிறைவேற்றிய பின்னர், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களையே வாங்குங்கள்” என்று இந்தியாவின் குடிமக்களுக்கு நீங்கள் புத்திமதி சொல்லலாம்.

இது இந்தியாவில் வாழும் பெரும்பான்மைக் குடிமக்களின் உங்களுக்கான புத்திமதி கோரிக்கை ஆகும்.

இந்தியா வாழ்க! இந்தியா வளர்க! இந்தியா வெல்க!

* * * * *

https://www.maalaimalar.com/news/national/mann-ki-baat-program-pm-modi-says-should-buy-locally-made-products-782036

ஞாயிறு, 27 ஜூலை, 2025

இந்தியில் மட்டும் பட்டங்கள்... திட்டங்கள்! இது இந்தியாவா, ‘இந்தி’யாவா?!

//பார்லிமென்டில் சிறப்பாகச் செயல்பட்டதற்காகப் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 17 எம்.பி.,க்களுக்கு, 'சன்சத் ரத்னா' விருது அறிவிக்கப்பட்டுள்ளது//[https://www.dinamalar.com].

அதென்ன ‘சன்சத்’? இந்திக்காரன்களுக்கு மட்டுமே புரிந்தால் போதும் என்கிறான்களா நம்மை ஆளும் ‘இந்தி’யன்கள்?

“எங்கும் எதிலும் இந்திதான். புரியலேன்னா மூடிகிட்டுச் சும்மா கிட” என்பார்களோ?

தமிழ் முதலான ஏனைய இந்திய மொழிப் பெயர்கள் சூட்டினால்[மாற்றி மாற்றி] இந்திய ஒருமைப்பாடு சிதைந்துவிடுமா?

‘இந்தி’ய அரசு வழங்கும் விருதுகள் & திட்டங்களுக்கான பெயர்களை ஓரளவுக்குத் திரட்டிப் பட்டியலிட்டிருக்கிறேன்[கீழே].

பட்டியலை வாசித்துவிட்டு இது இந்தியாவா, ‘இந்தி’யாவா என்று இந்தியர் எவரும் முணுமுணுக்க வேண்டாம். முணு முணுப்பதே தேசத் துரோகம் ஆகும்!

சிறைவாசம் உறுதி!!

அர்ஜூனா விருது

ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது

பாரத ரத்னா

பத்மஸ்ரீ

பத்ம பூஷன்

பத்ம விபூஷன்

பரம் வீர் சக்கரா

மத்ஸ்ய சம்பதா யோஜனா

PM மத்ஸ்ய சம்பதா,

சுவாமித்வ திட்டம் யோஜனா,

ஜல் ஜீவன் திட்டம்,

அடல் புஜல் திட்டம்

ஆயுஸ்மான பாரத் திட்டம்

ஜன் விகாஸ் காரியகாரம்

சமக்ரா சிஷா

மாத்ரி வந்தனா யோஜனா

ராஷ்ட்ரிய கிராம் ஸ்வராஜ் அபியான்

பிரதம மந்திரி மாத்ரி வந்தனா யோஜனா

பி.ம உஜ்வாலா திட்டம்

கிரிஷி சிஞ்சி யோஜனா

பிம சுரக்‌ஷா பீமா

தீன் தயாள் அந்த்யோதயா திட்டம்

ராஷ்ட்ரிய உச்சதர் சிக்ஷா அபியான்

நிதி ஆயோக்

* * * * *

வயிறு எரியுதா? அடி நெஞ்சு பதறுதா? கவுந்து படுத்துகிட்டுக் கதறுங்க!

சனி, 26 ஜூலை, 2025

அண்ணாமலை ராஜேந்திர சோழனின் வழிவந்தவரா?!

டபுலத்து அரசர்கள் தமிழினத்து மன்னர்களை இழிவுபடுத்திப் பேசியதற்காகக் கங்கைவரை படை திரட்டிச் சென்று, பழித்தவர்களைத் தன் தாள் பணியச் செய்து, தமிழரின் வீரத்தை உலகறியச் செய்தவன் கங்கைகொண்ட மன்னனான ராஜேந்திர சோழன்.

அவனை நினைவுகூர்ந்து போற்றும் வகையில் கங்கைகொண்ட சோழபுரத்தில் கொண்டாடப்படும்[கங்கைகொண்ட சோழபுரத்தின் ஆயிரமாண்டு கொண்டாட்டத்தின் நிறைவு விழா] நிகழ்வில் கலந்துகொள்ளவரும் மோடியை, தன் கட்சித் தலைவன் என்ற வகையில் அண்ணாமலை வரவேற்பதோ, மரியாதை செலுத்துவதோ, கருத்துப் பகிர்வு செய்துகொள்வதோ தவறல்ல.

அவருடன் உரையாடும்போது தொண்டனுக்குரிய தன்னடக்கத்துடன் நடந்துகொள்வதும் தேவைதான். அதற்காக.....

உலகறிய, செவி மறைத்து வாய்பொத்திய கோலத்தில் அவர் காட்சிதருவது, மோடியிடம், “உன் அடிமைகளில் எனக்கு இணையானதொரு அடிமை உண்டா?” என்று கேட்பது போல் இருக்கிறது.

தன்மானச் சிங்கமான ராஜேந்திர சோழனின் பரம்பரையில் வந்தவரா அண்ணாமலை?

நாம் மட்டும் கேட்கவில்லை; ஒட்டுமொத்தத் தமிழினமும் கேட்கிறது.....

“தன்மானத் தமிழன் ராஜேந்திர சோழனின் இனத்தவரா இந்த அண்ணாமலை?”

“கடவுள் எங்கிருந்தாலும் வரவும்”... 001% கற்பனை கலந்த உண்மைக் கதை!

ய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க உள்விளையாட்டு[+அரட்டை] அரங்கம்.

வெட்டிக் கதைகள் பேசிப் பொழுதைக் கழித்துக்கொண்டிருந்த கிழங்களில் ஒரு ‘கத்துக்குட்டி’, தனக்கான ஒரு சந்தேகத்தைச் சபையில் சமர்ப்பித்தது. அது.....

“சாமிக்குப் பூஜை செய்யும்போது அர்ச்சகர் மணி அடிக்கிறாரே, அது எதற்கு?”

உடனடியான பதில் இல்லை. எல்லோருமே தீவிரச் சிந்தனையில் ஈடுபட்டார்கள்.

மௌனம் கலைத்தார் நெற்றி நிறைய விபூதி பூசிய ஒரு கிழவர்; “பூஜை ஆரம்பம் ஆயிடிச்சி. எல்லோரும் சாமி தரிசனம் பண்ணுங்கன்னு தெரியப்படுத்துவதற்காக” என்றார்.

திருநீற்றுப் பட்டையின் நடுவே குங்குமப் பொட்டு வைத்திந்த ஒரு பழங்கிழம், “தும்மல், இருமல் போன்ற ஓசைகளோ, ஒழிக, தொலைஞ்சிபோ என்பனவாக அக்கம்பக்கத்தில் இருப்போர் சொல்லும் அமங்கல வார்த்தைகளோ சாமி மீதான பக்தர்களின் கவனத்தைச் சிதைக்காமலிருக்க” என்றது. 

ஒரு 'பொக்கை வாய்'க் கிழம், "பக்தர்கள் மனதை ஒருமுகப்படுத்த நம் முன்னோர் செய்த ஏற்பாடு. காரணத்தை ஆராய்வது தப்பு” என்றது அழுத்தம் திருத்தமாக.

“இதெல்லாம் இல்லை. சிலையிலிருந்து வெளியேறி ஊர் சுற்றப்போன சாமியை, ‘பக்தர்கள் ரொம்ப நேரமா காத்திருக்காங்க, நீ எங்கிருந்தாலும் வந்துசேர்’ என்று எச்சரிக்கும் அவசர அழைப்பு” -இது அடியேன்.

சில முழுச் செவிடுகளைத் தவிர, அனைத்துக் கிழங்களும்[சங்கத்திற்குக் கிழவிகள் வருகை தராதது புரியாத புதிர்] ஒருங்கிணைந்து என்னை முறைத்ததுகள்.

அசட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்து ஒரு மாதிரியாகச் சமாளித்தேன் நான்.

ஹி... ஹி... ஹி!!!

தூ.குடி வி.நிலைய முனையத்தைக் காணொலி மூலம் திறப்பாரா தர்மச் சக்கரவர்த்தி?

//தூத்துக்குடி விமான நிலையத்தில் 451 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய முனையத்தை[terminal]ப் பிரதமர் மோடி திறந்துவைக்கிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு விமான நிலையம் & சுற்றுப்பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது// என்பது ஊடகச் செய்தி.

இதன் பொருட்டு இன்று இரவே மாலத்தீவிலிருந்து[5 நாள் சுற்றுலா முடிந்து] விமானம் மூலம் தமிழ்நாடு வருகிறார் ‘தர்மச் சக்கரவர்த்தி’ மோடி.

மோடியின் பயணங்கள், அயல்நாடுகளுடனான உறவை மேம்படுத்துவதற்கானவை[அண்மையில் பாகிஸ்தானுடனான போரில் மிகப் பல நாடுகள் இந்தியாவை ஆதரித்தமை கவனத்தில் கொள்ளத்தக்கது! ஹி... ஹி...ஹி!!!].

அவரின் தூ.குடி வருகை, அவர் தொடர்ந்து மேற்கொள்ளும் உலகச் சுற்றுப் பயணத்தைத் தாமதப்படுத்தும் என்பது உறுதி[2025 நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிவதற்குள்ளாகவே அவர் தன் 5 நாள் சுற்றுலாவை மேற்கொண்டது நினைவுகூரத்தக்கது].

எனவே, அடுத்த சுற்றுலாவுக்கான ஏற்பாட்டைச் செய்வதற்கும், அதைத் தொடங்குவதற்கும் வசதியாக, தூத்துக்குடிக்கான பயணத்தை ரத்து செய்து, முனையத் திறப்பு நிகழ்வைக் காணொலி[நேரலை] வாயிலாக[குறைந்த அவகாசத்தில்] நம் தர்மச் சக்கரவர்த்தி மோடி அவர்கள் செய்துமுடிக்கலாம் என்பது நம் எண்ணம்; பரிந்துரையும்கூட.

* * * * *

https://www.puthiyathalaimurai.com/tamilnadu/police-security-increased-due-to-pm-modi-to-visit-thoothukudi//

வெள்ளி, 25 ஜூலை, 2025

யார்..... யார்..... யார்..... ‘அவர்’ யாருங்க?!

“எனக்குச் சாவு நேராமல் காத்தருள்” என்று எந்தவொரு பக்தனும்[இஸ்லாமியனோ கிறித்தவனோ இந்துவோ] இந்நாள்வரை தன் கடவுளிடம் கோரிக்கை வைத்ததாக அறியப்படவில்லை.

காரணம், மரணம் என்பது கடவுள் வகுத்த வாழ்க்கை நெறி. அவர் வகுத்த அந்த நெறியை மாற்றியமைக்க அவர் ஒருபோதும் சம்மதிக்கமாட்டார்[மரணம் நிகழாமல்போனால், எக்குத்தப்பாக உயிர்களின் எண்ணிக்கை பெருகுதல் போன்ற விபரீத விளைவுகள் உண்டாகும்] என்பார்கள் பக்தி நெறி பரப்புவோர்.

மரணத் துன்பத்தை அனுபவிப்பது கடவுள் வகுத்த வாழ்க்கை நெறி என்றால், வறுமை, நோய், பகைமை, ஆதிக்க வெறி போன்றவற்றால் விளையும் துன்பங்களை அனுபவிக்கும் வாழ்க்கை நெறியை வகுத்தவர் யார்? 

அவர் யாருங்க?

அந்த அவரும் கடவுள்தான் என்பதால் அவரிடம் கோரிக்கைகள் வைத்து வழிபடுவதால் பயன் ஏதும் இல்லை.

ஏனென்றால், தான் வகுத்த நெறியை மாற்றியமைத்திட அவர் ஒருபோதும் சம்மதிக்கமாட்டார்!

வியாழன், 24 ஜூலை, 2025

பிள்ளைப் பாசத்தைச் சிதைக்கும் கள்ளக் காம உறவுகள்! தேவை உடனடி ஆய்வுகள்.


ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தன் கள்ள உடலுறவுக்கு இடையூறாக இருந்ததாகக் கருதி, தான் பெற்ற இரு மழலைகளையே கொலை செய்த ஒரு மிகு காமுகிக்கு[+கள்ளக் காமுகன்] இன்று தண்டனை வழங்கியிருக்கிறார் நீதியரசர்[முழு விவரம் காணொலிகளில்].

தீர்ப்பு குறித்து இணையத்தில்[+காணொலிப் பின்னூட்டங்கள்] மிகப் பல கருத்துரைகள் வெளியாகியுள்ளன.

கருத்துரைப்பது நம் நோக்கமல்ல.

அவ்வப்போதோ, அரிதாகவோ இது போன்ற[காமக் களியாட்டத்திற்கு இடையூறாக இருப்பதாக எண்ணிப் பெற்ற மகவைச் சுவற்றில் அடித்துக் கொன்றாள் ஒரு தாய் என்பதும் ஒன்று] அவலங்கள் இந்த மண்ணில் நிகழாமல் தடுப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிவது மிக அவசியம் என்பதை வலியுறுத்துவது இப்பதிவின் நோக்கம் ஆகும்.

வழிமுறைகள்:

இம்மாதிரிக் குற்றவாளிகளுக்கென்று[பந்தப் பாசங்களை முற்றிலுமாய்த் துறந்து, பாலுறவே பிரதானம் என்ற முடிவுக்கு வருதல், பெற்ற மகளைத் தந்தையே வன்புணர்வு செய்தல், தாயே தன் மகள்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துதல் போன்றவை> முற்றிய மனநோய்கள்] தனிச் சிறைகளை உருவாக்கி, குழந்தைப் பருவம் தொட்டு, இவர்கள் வளர்க்கப்பட்ட... தன்னிச்சையாய் வளர்ந்த சூழ்நிலைகளை உளவியல் மருத்துவர் குழுக்களைக்கொண்டு நுணுகி ஆராய்வது போன்றவை.

இதன் மூலம், குழந்தைப் பருவத்திலிருந்து இவர்கள் எதிர்கொண்ட இழி நிகழ்வுகளையும், அவற்றின் பாதிப்புகளையும் கண்டறிவதன் மூலம், ஆணோ பெண்ணோ இனி எவரும் இம்மாதிரிச் சூழல்களை எதிர்கொள்ளாதிருப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து அவற்றைச் செயல்படுத்தலாம்[பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் போன்ற ஊடகங்களின் உதவியுடன்].

இதுவொரு ஆரம்ப நடவடிக்கையாயினும், காலப்போக்கில் இதை விரிவுபடுத்துவதன் மூலம் இம்மாதிரிக் குற்றங்கள் நிகழாமல் தடுக்கலாம், அல்லது வெகுவாகக் குறைக்கலாம்.

இதுவொரு சாமானியனின் பரிந்துரை. பாலியல் மருத்துவ நிபுணர்களால் மட்டுமே இதற்கான செயல் திட்டத்தைச் சிறப்பாக வகுத்தளிக்க இயலும்.
                                 *   *   *   *   *
தொடர்புடையதொரு செய்தி[பயப்படாம படியுங்க]:

புதன், 23 ஜூலை, 2025

கோயில்களின் வாயில்களில் காத்துக்கிடக்கும் கருணைக் கடவுள்கள்!!!

ந்துவோ இஸ்லாமோ கிறித்தவமோ நீங்கள் எம்மதம் சார்ந்தவராயினும், உங்களுடைய வழிபடு கடவுளின் அருளைப் பெற்றிட[உடனடியாக] ஓர் எளிய வழி.

முதலில் கைப்பை ஒன்றில் சில்லரையாக ரூபாய்த் தாள்களையோ சில்லரை நாணயங்களையோ நிரப்பிக்கொள்ளுங்கள்.

அனைத்து மதக் கோயில் வாசல்களிலும் உங்களிடம் தர்மம் பெறுவதற்காகப்  பிச்சைக்காரகள் அணிவகுத்துக் காத்திருப்பார்கள்.

நீங்கள் இவற்றில் எந்தவொரு கோயிலுக்கும் செல்லலாம். சென்று, கைவசம் இருக்கும் சில்லரைகளை[ஐம்பது நூறாகவும் இருக்கலாம்] அவர்களுக்குத் தர்மம் செய்யுங்கள்.

அடுத்த வினாடியே நீங்கள் எதிர்பார்க்கிற புண்ணியம் உங்களின் ‘பாவ புண்ணியம்’ கணக்கில் சேர்க்கப்பட்டுவிடும். கடவுளிடம் வைக்கவிருந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுவிடும்.

அடுத்த வினாடியே அது நிகழக் காரணம்.....

பிச்சைக்கார்களுக்கிடையே வழக்கமாகக் காத்திருக்கும்[அருவமாக], கடவுள்[எந்தவொரு மதத்தவர்க்கு உரியவராயினும்] நீங்கள் தர்மம் செய்வதைப் பார்த்ததும் உங்கள் மீது அருள்மழை பொழிவதுதான்.


நீங்கள் எதிர்பார்க்கும் பலன் கோயில் வாசலிலேயே கிடைத்துவிடுவதால்,  கோயிலுக்குள்[மசூதி, தேவாலயம்+ + +] செல்லாமலே வீடு திரும்பி வேறு முக்கிய வேலைகளில் நீங்கள் ஈடுபடலாம்.

மற்றபடி, பிச்சைக்கார்களுக்குத் தர்மம் செய்யாமல் கோயிலுக்குள் சென்று வழிபடுவதால், கடவுளின் அருளைப் பெற்றிட வாய்ப்பே இல்லை என்பதை அறிவீராக.

"எல்லாம் சரி, உலகத்தைப் படைத்து, உயிர்களுடன் மனிதர்களையும் படைத்து, அவர்களில் பிச்சைக்காரர்களையும் உருவாக்கி, மற்றவர்களில் கொஞ்சம் பேரைத் தர்மவான்கள் ஆக்கி..... கடவுள்[கள்?!] எதற்காக   இப்படியெல்லாம் செய்கிறார்?”னு யாரும் கேள்வி எழுப்ப வேண்டாம்.

சொன்னால் அற்ப ஆறறிவு மனிதர்களாகிய உங்களுக்குப் புரியாது!

அடியேனுக்கும் புரியும்படி சொல்லத் தெரியாது!! ஹி...ஹி...ஹி!!!

செவ்வாய், 22 ஜூலை, 2025

பாவப்பட்டவர்களா ‘பலான’ தொழில் செய்யும் அத்தனைப் பெண்களும்?!

விபச்சார விடுதியிலிருந்து அதிரடியாகக் கைது செய்யப்பட்டவர்களில் அவளும்[பெயர் தவிர்க்கப்படுகிறது] ஒருத்தி. விசாரித்த காவல்துறை அதிகாரியிடம் அவள் சொன்னாள்:

"அப்பாவும் அம்மாவும் கட்டடத் தொழிலாளிகள். என் எதிர்காலம் நல்லா இருக்கணும்னு படிக்க வைத்தார்கள். முகநூலில் அறிமுகமான ஒருத்தனைக் காதலிச்சேன். வீட்டில் கடுமையான எதிர்ப்பு. ஓடிப்போய்க் கல்யாணம் கட்டிகிட்டு வெளியூரில் குடும்பம் நடத்தினோம். ஆறு மாசம் போல ஆசை தீர என்னை அனுபவிச்சிட்டு, ஒரு விபச்சார விடுதியில் வித்துட்டு ஓடிட்டான் அந்தப் பொறுக்கி. அங்கிருந்து என்னால தப்பி வர முடியல. கெஞ்சிக் கேட்டுக்கிறேன், வழக்குப்போடாம என்னை என் பெற்றோரிடம் சேர்த்துடுங்க....."

சொல்லிக்கொண்டிருக்கும்போதே சரம் சரமாக அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

இது சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி[நண்பர்] பத்திரிகை நிருபரிடம் சொன்னது.

“அவனும் நானும் திருப்பூரில் ஒரு தையலாடை நிறுவனத்தில் ஒன்னா வேலை பார்த்தோம். மனப்பூர்வமா காதலிச்சோம். கல்யாணம் கட்டிக்காம சேர்ந்து வாழ்ந்தோம். கொஞ்ச நாள் சந்தோசமா வாழ்க்கை கழிஞ்சது. அவன் குடிக்கு அடிமை ஆனான். வேலை போச்சு. என் ஒருத்தி வருமானம் போதுமானதா இல்ல. அவனுக்குத் தெரிஞ்சவங்கள அழைச்சிட்டு வந்து என்னோடு ‘இருக்க’ அனுமதிச்சான். அதாவது, என்னோடு சேர்ந்து வாழ்ந்த அவனே எனக்குப் புரோக்கராகவும் ஆனான்.....

கொஞ்ச நாளுக்கு அப்புறம் போதையில் மாடிப்படியில் தடுக்கி விழுந்து செத்துப்போனான். வேறு வழியில்லாம முழு நேர விபச்சாரியா மாறினேன்.”

சம்பந்தப்பட்ட பெண்ணிடம் ஒரு பத்திரிகை நிருபர் நடத்தியப் பேட்டியில் வெளியான செய்தி இது.

“அப்பா மொடாக்குடியர். தினம் தினம் அம்மாவுக்கும் அவருக்கும் சண்டைதான். ஒரு நாள், சண்டை வலுத்ததில் அம்மாவை விறகுக் கட்டையால் அடிச்சிக் கொன்னுட்டு அப்பா ஜெயிலுக்குப் போய்ட்டார்.....

சித்தப்பா வீட்டில் கொஞ்ச நாள் வளர்ந்தேன். சித்தி என்னை வேலைக்காரியா நடத்திச்சே தவிர வயிறாரச் சோறு போடல.....

வீட்டிலிருந்து வெளியேறிப் பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்தேன். அங்கேயே படுத்துத் தூங்கினேன். ஒரு நாள் ஒரு நடுத்தர வயசுக்கார அம்மா, ‘உனக்கு என்ன வயசு?’ன்னு கேட்டாங்க. பத்து நடக்குதுன்னு சொன்னேன். ‘அடிப் பாவிப்புள்ள, இந்த வயசுல இப்படி அனாதையாப் படுத்துக் கிடந்தா காலிப் பசங்க தூக்கிட்டுப்போயிடுவாங்க. வா என்னோடு’ன்னு தன் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனாங்க. அங்கே போனப்புறம்தான் அந்த அம்மா விபச்சாரத் தொழில் நடத்துறவங்கன்னு தெரிஞ்சுது. தெரிஞ்சும் வயித்துப்பாட்டுக்காக அங்கேயே தங்கியிருந்தேன். நான் வயசுக்கு வந்ததும் வராததுமா என்னையும் அந்தத் தொழிலில் இறக்கிட்டாங்க அந்த அம்மா.” 

இது, குடியிருப்பில் விபச்சாரம் நடப்பதாகக் கேள்விப்பட்டு, வீட்டைச் சோதனையிட்ட காவல்துறையாரிடம் அந்தச் சின்னப் பெண் சொல்ல, அவர்கள் மூலம் ஊடகங்களில் வெளியான செய்தி.

புருசன்காரன் ரொம்பவே அப்பாவி. காலையில் புறப்பட்டுப்போனா, தள்ளுவண்டி வியாபாரத்தை முடிச்சுட்டு ஏழு எட்டு மணிக்கு மேல்தான் வீடு திரும்புவான். அதைப் பயன்படுத்தி, அண்டை அயல் வாலிபர்களோடு அவளுக்குக் கெட்ட சகவாசம் ஏற்பட்டுது....

இது தெரிஞ்சி அவளை அவன் கண்டிச்சான். அவள் திருந்தல. மானஸ்தனான அவன் ஒரு நாள் தூக்கில் தொங்கிட்டான்.....

கொஞ்ச நாள் கழிந்ததும் பிழைப்புக்கு வேறு வழியில்லாம, முழுநேரத் தொழில்காரியா அவள் மாறினாள்.

அவள் மீது தீராத கோபத்திலிருந்த அண்டை அயல் தெரு மக்கள் ஒன்றுகூடிக் காவல்துறையிடம் புகார் செய்ய, அவர்கள் அவளைக் கைது பண்ணினார்கள். இதை ஊடங்கங்கள் செய்தியாக வெளியிட்டன.

முதல் தர முட்டாள் தமிழனா, தெலுங்கனா?

க்தி வாய்ந்த சாமிகள் எனப்படும் தில்லை நடராசர், மதுரை மீனாட்சித் தாய், இவர்கள் ஈன்று புறம் தந்த முருகப் பெருமான், இவரின் தாய்மாமன் திருவரங்கம்[ஸ்ரீரங்கம்] அரங்கநாத சுவாமி[விஷ்ணு] என்று விதம் விதமானவையும் வகை வகையானவையுமான சாமிகளுக்கான ஆயிரக்கணக்கான கோயில்கள் தமிழ்நாட்டில்  இருக்க, இவர்களினும் மேலான கடவுள் திருப்பதி வெங்கடேசுவர சாமியே[மும்மூர்த்திகளில் ஒருவரான ‘விஷ்ணு’வே வேறு வேறு பெயர்களில் தரிசனம் தருகிறார்] என்று எண்ணித் தினம் தினம் ஆயிரக்கணக்கில் அங்கே குவிகிறார்கள் தமிழர்கள்.

உலக அளவில் புகழ் பெற்ற இந்த வெ.சாமி கைக்கெட்டும் தூரத்தில் இருந்தும்[திருப்பதி], மாநிலம் கடந்து தமிழ்நாட்டின் திருவண்ணாமலையிலுள்ள அண்ணாமலையாரை நம்பர் 1 கடவுளாக்கி[வெங்கடேசுவரர் என்னும் ஏழுமலையானை நம்பர் 2 கடவுள் ஆக்கிவிட்டார்கள்] அவரை வழிபடுவதற்காகப் பல்லாயிரக்கணக்கில் கூட்டம் கூட்டமாக வந்து குவிகிறார்கள் தெலுங்கர்கள்.

திருப்பதி செல்லும் தமிழர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் இது மிக அதிகம். 

நிர்வாகம் விதித்துள்ள எந்தவொரு கட்டுப்பாட்டையும் மதிக்காமல் முட்டி மோதி, நெட்டித் தள்ளி, கோயிலுக்குள் நுழைந்து அண்ணாமலையாரையே மூச்சுத் திணற வைக்கிறார்கள் தெலுங்கர்கள் என்பது செய்தி.

ஆக, முன்னாள் நம்பர் 1 கடவுளை[திருப்பதி வெங்கடேஸ்வரர்] நம்பர் 2 ஆக்கி, அண்ணாமலையாரை நம்பர் 1 கடவுள் ஆக்கியதன் மூலம், நம்பர் 1 முட்டாள்களாக இருந்த தமிழர்களை முட்டாள்தனத்தில் நம்பர் 2 ஆக்கி, தெலுங்கர்கள் முதலிடத்தைப் பெற்றுவிட்டார்கள்.

இது மூடர் உலகில் நிகழ்த்தப்பட்ட மாபெரும் சாதனை ஆகும்

சாதனை நிகழ்த்திய தெலுங்கர்களால் இங்கே பெரும் பிரச்சினைகள் உருவாகியுள்ளன.

நல்ல தமிழ்ப் பெயரான திருவண்ணாமலையைத் திருவண்ணாமலை என்று சொல்லாமல், ‘அருணாச்சலம்’ என்கிறார்கள் இவர்கள்.

இவர்களுக்காக, ஆந்திரா[+கர்னாடகா] செல்லும் பேருந்துப் பெயர்ப் பலகைகள் அருணாச்சலம் என்று மாற்றப்பட்டனவாம்[மீண்டும் திருவண்ணாமலையாக மாற்றப்பட்டுள்ளது என்பது அண்மைச் செய்தி> தமிழார்வலர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததன் விளைவு].

தமிழர்களோ தெலுங்கர்களோ முட்டாள்களின் எண்ணிக்கை அதிகரித்தால் மொழிப் பிரச்சினை மட்டுமல்ல, சாதி மதம் இனம் போன்றவை தொடர்பான பிரச்சினைகளும் பெருமளவில் அதிகரிக்கும்.

ஆகவே, தெலுங்கராகட்டும் தமிழராகட்டும், இவர்கள் திருப்பதிக்கோ திருவண்ணாமலைக்கோ செல்லப் பேருந்து வசதி செய்துதருவது அரசுகள் செய்யும் மாபெரும் தவறு.

பழனிப் பக்தர்களைப் போல இவர்களும் பாதயாத்திரை செல்லட்டும்.

நடந்து நடந்து பாதங்களில் ரத்தம் கசிந்தால்தான் அதைக் கண்டு மனம் இளகி, திருப்பதி ஏழுமலையானும் திருவண்ணாமலை அண்ணாமலையானும் தாமதிக்காமல் அருள்பாலிப்பார்கள்!

                                           *   *   *   *   *

***//ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்குச் செல்லும் தமிழக அரசுப் பேருந்துகளில் "அருணாசலம்" என்று எழுதப்பட்டிருந்தது. திருவண்ணாமலைக்கு பதிலாக அருணாசலம் என்று பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது சில சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது//> https://tamil.oneindia.com/news/thiruvannamalai/arunachalam-name-boards-are-removed-from-the-tiruvannamalai-buses-after-outburst-720551.html

ஞாயிறு, 20 ஜூலை, 2025

மோடி கடவுளா, பித்தேறிய புத்தி கெட்ட பக்தரா?!

னைத்து உயிரினங்களுக்குள்ளும் மனிதன் மட்டுமே கடவுளைப் போற்றி வழிபடுகிறான். 

இந்த வழிபாட்டின் மூலம் பல நன்மைகளைப் பெற்றிட முடியும் என்று நம்புகிறான்; கடவுள் வழங்கிய ஆறறிவைப் பயன்படுத்திப் பல தகாத செயல்களிலும் இவன் ஈடுபடுகிறான்.

தன் விருப்பம்போல் பயன்படுத்துவதற்கான இந்த ஆறறிவை, பிற உயிரினங்களைத் தவிர்த்து மனிதனுக்கு மட்டுமே ஏன் அருள்பாலித்தார் கடவுள்?

இது அவரால் படைக்கப்பட்ட அந்தப் பிற உயிரினங்களுக்குச் செய்த துரோகம் அல்லவா?

துரோகம் செய்பவர் துரோகி.

கடவுள் துரோகியா, அல்லவா?

கோயில், குளம், புண்ணியத்தலம் என்று கோரிக்கைகளுடனும், காணிக்கை செலுத்த மூட்டை மூட்டையாய்ப் பணத்துடனும் அலையும் சுத்தப் பக்திமான்கள்> பக்திப் பித்தேறியவர்கள் சிந்திப்பார்களா?!

இந்திய மண்ணை ‘மயான பூமி’ ஆக்கும் மதவெறிச் சங்கிகள்!!!

//தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சிலின் (NCERT) 8ஆம் வகுப்புச் சமூக அறிவியலுக்கான புதிய புத்தகத்தில், பாபர் ஒரு காட்டுமிராண்டித்தனமானவராகவும் வன்முறையான வெற்றியாளராகவும், மக்களைக் கொன்று குவிப்பவராகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

அக்பரின் ஆட்சிக்காலத்தைக் கொடுங்கோல் மற்றும் சகிப்புத்தன்மையின் கலவையாக இந்தப் புத்தகம் காட்டுகிறது. இவற்றைத் தவிர, ஔரங்கசீப் ஆலயங்களையும் குருத்வாராக்களையும் அழித்தவராக விவரிக்கப்பட்டுள்ளார்//https://www.bbc.com/tamil/articles/cwyrl54lgjyo

மத வெறியர்கள் சொல்கிறபடி, பாபரும்  அக்பரும் இரக்கமற்ற கொடூரர்களாகவே இருப்பினும், அவர்களைப் பற்றியப் பாடங்களை மாணவர்களுக்குப் போதிப்பதன் உள்நோக்கம் என்ன? 
எப்போதோ செத்தொழிந்த அவர்கள் மீது வெறுப்புணர்வையும் பழிவாங்கும் வெறியையும் வளர்ப்பது ஏன்?
இவற்றைச் செய்வது  எப்போதோ மரணித்து மண்ணோடு மண்ணாகிவிட்டவர்களைப் பழிவாங்கியதாக ஆகுமா?
ஆகாது. அது சாத்தியமே இல்லை என்பது இப்பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துபவர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் தெரியும்.
தெரிந்தும் இந்த வேண்டாத செயலை அவர்கள் ஏன் செய்கிறார்கள்?
கொஞ்சம் சிந்தித்தாலே புரியும், அந்த இஸ்லாமிய அரசர்களைப் பழிவாங்க முடியாத நிலையில் அவர்களுடைய வாரிசுகளை வஞ்சம் தீர்ப்பதுதான்.
வாரிசுகளைத் தண்டிப்பது கொடூரக் குற்றங்களில் ஈடுபட்ட அந்த மன்னர்களையே தண்டித்ததாக ஆகுமா?
“ஆம்” என்றாலும்.....
இந்த நாட்டில் அவர்கள் சிறுபான்மையினராக இருந்தாலும் அவர்களின் மதத்தைச் சார்ந்தவர்கள் உலகெங்கும் நிறைந்திருக்கிறார்கள். தங்கள் மதத்தவர் பழிவாங்கப்படுவதை அவர்கள் வேடிக்கை பார்ப்பார்களா?
மாட்டார்கள்.
இந்த மண்ணில் ஊடுருவிப் பழி வாங்கியவர்களைப் பழிக்குப் பழி வாங்குவார்கள்.
இந்தப் புண்ணியப் பூமி கலவரப் பூமியாக மாறும்.
இரு தரப்பிலும் காலனுக்குப் பலியிடப்படும் உயிர்களின் எண்ணிக்கை அபிரிதமாகப் பெருகும்.
மனிதத்தைப் போற்றி வளர்க்காமல், மத வெறியையும் மட்டுப்படுத்தப்படாத பக்தியையும் ஆயுதங்களாக்கி, ஆட்சியில் நீடிக்கத் திட்டமிடும் இந்த நாசகாரக் கும்பலை அடித்து விரட்டாமல் மக்கள் வேடிக்கை பார்ப்பது நாட்டு நலனுக்குப் பெரும் கேடு விளைவிப்பதாகும்!
தொடர்புடைய செய்தி:

சனி, 19 ஜூலை, 2025

படுத்தும் பாலுறவு இச்சையும் தூண்டும் ஆண்பாலின இயக்குநீரும்!!!

தினம் தினம் காதல் தோல்வித் தற்கொலைகளும், கள்ளக் காமம், கடத்தல், வன்புணர்வு, கொலை போன்ற பாலியல் குற்றங்களும் இம்மண்ணில் பெருகிவருகின்றன.

இந்நிலையில்.....

இக்குற்றங்களால் பாதிப்பப்படாமலிருக்கக் கடைசி மூச்சுவரை, திருமணம் செய்யாமலே கிடைக்கும் வருமானத்தில் கவுரவமாக உடையுடுத்து, நாட்டு நடப்பை வேடிக்கை பார்த்து, உண்டு, உறங்கி வாழ்ந்துமுடிப்பதே நல்லது என்றெண்ணும் ஆடவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.

ஆனாலும், அவர்களால் உடலுறவு ஆசையைத் துறப்பது என்பது முற்றுப்பெறாத போராட்டமாகவே உள்ளது.

துறக்கவிடாமல் தடுப்பது ஆண்களின் விந்தகங்களில் உற்பத்தியாகும் பாலின இயக்குநீர்[வேதிப்பொருள்]. 

ஆண்களின் உடலுறவு இச்சையைத் தூண்டிப் பெண்களைத் தேடி அலையவிட்டு வேடிக்கை பார்க்கும் அந்தப் பாலின இயக்குநீரை Testosterone’[ஆண்களின் விந்தகங்களில் உற்பத்தி செய்யப்படுவது] என்கிறார்கள் உடற்கூற்று விஞ்ஞானிகள்.

மூளையிலிருந்து மூளையின் அடிப்பகுதியில் உள்ள பிட்யூட்டரிச் சுரப்பிக்கு அனுப்பப்படும் குறிப்பலைகள்[சிக்னல்கள்] இந்த  வேதிப்பொருளைக்[டெஸ்டோஸ்டிரோன்] கட்டுப்படுத்துகின்றனவாம்.

சிக்னல்கள் அனுப்பப்படுவதை முற்றிலுமாய்த் தடை செய்துவிட்டால், காம உணர்ச்சியைத் தூண்டும் வேதிப் பொருள்[Testosterone] உற்பத்தியாகாது; ஆண்களுக்குக் காம உணர்ச்சியும் தோன்றாது.

உலகின் ஆகச் சிறந்த உடற்கூற்று விஞ்ஞானிகள் மனம் வைத்தால் சிக்னலைத் தடை செய்வது சாத்தியப்படக்கூடும். 

பட்டால்.....

ஆண்களில் பலரும் நிம்மதி பெறுவார்கள்; விஞ்ஞானிகளுக்கு மனப்பூர்வமாய் நன்றி சொல்வார்கள்.

ஹி... ஹி... ஹி!!!