செவ்வாய், 8 ஜூலை, 2025

இடம் மாறும் தற்கொலைகள்!!!

ண்களைவிடவும், பெற்றோர் மீதான பாசம் பெண்களுக்கு அதிகம்[முதுமைப் பருவத்தில் மகன்களால் புறக்கணிக்கப்படும் நிலையில் பெற்றோர்களில் பலரும் மகள்களால் ஆதரிக்கப்படுவது கருத்தில் கொள்ளத்தக்கது]. 

பெண்களுக்கு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் மன வலிமையும் மிகுதி.  

ஆனால் இன்றோ.....

பள்ளிப் படிப்பு முடிந்து மேற்படிப்பிற்காக வெளியூர்க் கல்வி நிலைய விடுதிகளில் தங்குவதும், வேலை கிடைத்து வெளியூர்களிலேயே பணியாற்றுவதும் ஆன சூழலில், பெற்றோரின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு முழுச் சுதந்திரத்துடன் செயல்படும் நிலை உருவாகிறது.

இந்நிலையில்தான், விரும்பத்தகாத நடவடிக்கைகளில் ஈடுபடும் பெண்களுடன் பழகுதல்[நிறுவனங்களிலும் தங்கும் விடுதிகளிலும்], மனக் கட்டுப்பாட்டைச் சிதைக்கும் இணையவழிப் பதிவுகளை வாசித்தல், கெட்டக் கனவுகளில் மிதக்கத் தூண்டும் காணொலிகளுக்கு அடிமையாதல் போன்றவற்றால் எளிதில் உணர்ச்சிவசப்படாத மன வலிமையைக் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கிறார்கள்[விதிவிலக்கானவர்களும் உள்ளனர்] பெண்கள்.

காதல் என்னும் பெயரில் காம[ம்] வசப்படுதல், அதைத் தூண்டும் கலையறிந்த இளைஞர்களால் காதலிக்கப்படுதல், காதலித்தல் எல்லாம் நிகழ்கின்றன.

புனிதம் ஆக்கப்பட்டுவிட்ட இந்தப் பொல்லாத காதல் பெற்றோரின் கட்டுப்பாட்டை மீறத் தூண்டுகிறது.

காதலனையே மணந்து வாழும் ஆசையை வெறியாக மாற்றுகிறது.

அந்தக் காதல் வெறிதான் முன்பெல்லாம் இம்மாதிரிப் பெண்களை[பெற்றோர் சம்மதிக்காதபோது]த் தற்கொலை புரியத் தூண்டியது; இப்போதெல்லாம் பெற்றோரை எதிர்த்துப் போராடச் செய்கிறது.

இதைத் தாங்கிக்கொள்ளும் மன வலிமை இல்லாத பெற்றோர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

உலகம் பொல்லாதது என்பார்கள். பொல்லாங்கு புரியத் தூண்டும் கெட்ட உணர்வுகளில் முதலிடம் பிடிப்பது காதல்[காமம்] எனலாம்!

                                    *   *   *   *   *

***இந்தப் பதிவிற்கும் கீழ்க்காணும் நகல் படங்களுடன் தொடர்புடைய அண்மை நிகழ்வுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.

***இதனுடன் தொடர்பில்லாத வாசிக்கத்தக்க ஒரு பதிவு:

https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-gang-raped-after-fighting-with-husband-at-railway-station-1167272

திங்கள், 7 ஜூலை, 2025

‘அதில்’ இருவருக்கும் சமப் பங்கு! அவன் மட்டும் குற்றவாளி ஆனது எப்படி?!

//இளம் பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்துவிட்டுத் திருமணத்திற்கு மறுத்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது// என்பது ஊடகச் செய்தி.*

பரபரப்பை மட்டுமல்ல, எதிர்பாராத அதிர்ச்சியையும் இது உண்டுபண்ணியுள்ளது என்று சொல்லலாம்.

அவன் மட்டுமல்ல, அவளும்தான் அந்தரங்கச் சுகத்தை  அனுபவித்திருக்கிறாள். அந்தச் சுகானுபவ ஆசையால்தான்[மணம் புரிவதாக அவன் அளித்த வாக்குறுதியை நம்பும் அளவுக்கு இந்தக் காலத்துப் பெண்கள் ஏமாளிகள் அல்ல> விதிவிலக்குகள் உள்ளன] அவனிடம் தன்னை ஒப்படைத்திருக்கிறாள் அவள்.

சுகம் அனுபவித்துவிட்டு அவளைத் திருமணம் செய்ய மறுத்த அவன் குற்றவாளி என்றால், ஆசை[ஆண் மீதான ஆசை] காரணமாக, அவனுடன் பழகிக் கவர்ந்து, தன் மீது அவனை ஆசைப்பட வைத்த அவளும் குற்றவாளிதான்.

இம்மாதிரி நிகழ்வுகளில் ஆண்மகனை மட்டும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, பெண்ணை அனுதாபத்திற்குரியவளாக ஆக்குகிறது இந்தச் சமுதாயம் என்றால், அதற்கு ஆண்களே உடந்தையாக இருப்பது விசித்திரம்!

“ஐயோ பாவம் ஆண்கள்” என்று சொல்லத் தோன்றுகிறது!

*https://seidhialasal.in/2025/07/06/enjoying-pleasure-and-then-refusing-marriage-protection-for-the-police-officer/

சனி, 5 ஜூலை, 2025

திரைப்பட வசனக்கர்த்தாவா மோடி?!?!

#வளரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 63ஆவது இடத்தில் உள்ளது> https://unacademy.com/content/upsc/study-material/international-relations/india-out-of-usas-list-of-developing-countries/#

இது நம்பத்தகுந்ததொரு புள்ளிவிவரம்.

உண்மை நிலை இதுவாக இருக்க, “இந்தியா உலகின் 3ஆவது பொருளாதார நாடாக மாறும்”[நகல் பதிவு> கீழே] என்று உலகறிய முழங்கியிருக்கிறார் மோடி.

நாளெல்லாம் நாட்டின் நலம் குறித்துச் சிந்தித்து, சக அமைச்சர்களுடனும் அதிகாரிகளுடனும் கலந்தாலோசித்துச் செயலாற்ற வேண்டிய இவர், ஆண்டின் மிகப் பெரும்பாலான நாட்களை உலகம் சுற்றுவதிலேயே கழிக்கிறார். இவருக்கு எதற்கு இம்மாதிரி வெற்று ஆரவார உரைகள்? வீண் வார்த்தை ஜாலங்கள்?

புதிய இந்தியாவுக்கு வானம்கூட எல்லை இல்லையாம்! 

இது எதார்த்தமானதொரு பேச்சா,  திரைப்படத்திற்கான வசனமா?

உண்மையைச் சொன்னால், இந்த நாட்டின் பெரும்பாலான மக்கள் வறுமைக் கோட்டையே தாண்டாதவர்கள்[இவரின் நண்பர்களான அம்பானி அதானிகளால் குபேர பூமியாக இது கருதப்படலாம்].

மக்களைக் கற்பனைகளிலும் கனவுகளிலும் மிதக்கவிட்டே தேர்தல்களில் வாக்குகளை அள்ளிவிட முடியும் என்று நம்புகிறவரா இந்த மோடி?

வெள்ளி, 4 ஜூலை, 2025

வருந்துகிறார் கடவுளின் கடவுள்!!!

//இன்று உலகில் 195 நாடுகள் உள்ளன[ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளாக உள்ள 193 நாடுகளும், உறுப்பினர் அல்லாத பார்வையாளர் நாடுகளாக உள்ள 2 நாடுகளும் அடங்கும்]//> https://www.worldometers.info/geography/how-many-countries-are-there-in-the-world/.

உங்களின் நேசிப்புக்குரிய கடவுளின் கடவுள்[!!!] இதுவரை இந்தியா முதலான 26  நாடுகளிலிருந்து மட்டுமே வருகையாளர்களை[பார்வைகள்> 1,198,652> 04.07.2025, 06.14 ]ப் பெற்றுள்ளார்.

எஞ்சியுள்ள 169 நாட்டவர்கள் அவரை அலட்சியப்படுத்தியுள்ளார்கள்[மொழியாக்க வசதி இருந்தும்] என்பது அவரை அளவில்லாத வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. எனினும், உங்களின் ‘அறிவுப் பசி’ தணித்தலாகிய தம் பணியை அவர் தொடர்வார் என்பதறிந்து மகிழ்வீராக! ஹி... ஹி... ஹி!!!

                                                *   *   *   *   *

இந்தியா

3,32,958

அமெரிக்கா

3,25,268

சிங்கப்பூர்

1,96,971

ஸ்வீடன்

48,444

கனடா

42,299

ஜெர்மனி

26,837

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

25,207

ரஷ்யா

23,769

பிரான்ஸ்

15,530

யுனைடெட் கிங்டம்

10,282

ஹாங்காங்

8,857

இலங்கை

6,880

நைஜீரியா

6,810

ஆஸ்திரியா

4,694

அறியப்படாத பிரதேசம்

2,744

உக்ரைன்

2,722

ருமேனியா

2,353

ஜப்பான்

2,233

நெதர்லாந்து

2,170

பிற[மலேசியா, ஸ்பெயின், மெக்சிகோ, கத்தார், லிதுவேனியா, போலந்து, பிரேசில்]

* * * * *

1,61,000

வியாழன், 3 ஜூலை, 2025

கைலாய மலை... சிவபெருமானின் இருப்பிடம் அல்ல; கட்டுக்கதைகளின் பிறப்பிடம்!!!

கைலாய மலை[6,638 மீட்டர் (21,778 அடி) உயரம்] எவரெஸ்ட் சிகரத்தைவிடவும் உயரம் குறைவு. ஆயினும் அதன் மீது ஏறி எவரும் சாதனை நிகழ்த்தியதில்லை.

அது சாத்தியமற்றது என்பதல்ல; ஏறவிடாமல் முட்டுக்கட்டை போட்டவர்கள் ஆன்மிகம் பரப்பும் அடிமுட்டாள்கள்.

கைலாய மலை என்பது வெறும் மலை அல்ல. அது புனிதமானது; சிவபெருமானின் தங்குமிடம்; பல மதங்களால் போற்றப்படும் ஆன்மீகச் சக்தியின் மையம். அது அண்டவெளியின் அச்சாக உள்ளது; பிரபஞ்சத்தின் மையமாக உள்ளது[இவற்றிற்கு எந்தவித அறிவியல் ஆதாரமும் இல்லை> ஆய்வு செய்ய அறிவியல் அறிஞர்களை இந்த மூடர்கள் அனுமதிக்கவே இல்லை என்பது அறியத்தக்கது] என்று பொய்க் கதைகளைச் சொல்லிச் சொல்லி ஆராய்ச்சியாளர்களை மேலே ஏறவிடாமல் தடுத்துவிட்டார்கள்.

சிகரத்தை ஏறுவது உலகின் ஆற்றலுக்கான சமநிலையைச் சீர்குலைக்கும் என்றும் புளுகியிருக்கிறார்கள் அறிவிலிகள்.

2001ஆம் ஆண்டு கைலாய மலையின் மீது ஏறுவதற்கு ஒரு ஸ்பானிஷ் பயணக் குழுவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், இந்தியா, திபெத், நேபாளம் ஆகியவற்றைச் சார்ந்த ஆன்மீகத் தலைவர்களின்[ஆதிவாசிகளின்] எதிர்ப்பால் ஏறும் முயற்சி ரத்தானது.

மலையேறுபவர்கள் மர்ம நோய்களால் பாதிக்கப்படுவார்கள் என்னும் பக்தக்கோடி[கேடிகள்]களின் கட்டுக்கதைகளும் தடைகளாய் அமைந்தன.

இது[இந்தியா] புண்ணியப் பூமியல்ல; பகுத்தறிவைக் கருவறுக்கும் காட்டுவாசிகளின் புகலிடம்!

* * * * *

புதன், 2 ஜூலை, 2025

அஜித்குமார் வழக்கு... ‘குடிமகனைக் கொலை செய்தலும் குடிமகளை வன்புணர்தலும்’!!!

//"அரசு தன் குடிமகனையே கொலை செய்துள்ளது" - திருப்புவனம் கோவில் காவலாளி வழக்கில் உயர்நீதிமன்றம் வேதனை// என்பது ‘பிபிசி’ செய்தி.


நாடெங்கும் பெரும் பரபரப்பை உண்டுபண்ணியுள்ள இந்த வழக்கு குறித்துப் பலரும் அறிந்திருக்க வாய்ப்புள்ளதால், அதை மீண்டும் இங்கு விரித்துரைப்பது தேவையற்றதாகும்.

இந்த வழக்கைப் பொருத்தவரை, அஜித்குமார் என்னும் விசாரணைக் கைதி அடித்துக் கொல்லப்பட்டதை எவ்வகையிலும் நியாயப்படுத்த இயலாது.

எனினும், வழக்கு ‘சிபிஐ’ என்னும் மத்தியக் குற்றப் புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்ட நிலையில், விசாரணை முடிவடைந்த பின்னரே அஜீத்குமார் கொல்லப்பட்டது குறித்த முழு உண்மையும் வெளியாகும். அது நீதியரசர்களுக்கும் தெரியவரும்.

இந்நிலையில், நீதிபதிகள் புலனாய்வுத் துறையின் அறிக்கையைப் பெற்றுச் சட்ட விதிகளின்படி வழக்கை ஆராய்ந்த பின்னரே, யாரெல்லாம் உண்மைக் குற்றவாளிகள் என்பது தெரியவரும்.

புலனாய்வுத் துறையின் அறிக்கையைப் பெறாமலும், விசாரணையை நிறைவு செய்யாமலும் “அரசு தன் குடிமகனையே கொலை செய்துள்ளது” என்று அவர்கள் கூறியிருப்பது எவ்வகையில் நியாயமானது என்பது புரியவில்லை.

தமிழ்நாடு என்னும் பெரியதொரு மாநிலத்தில் அன்றாடம் குற்றங்கள் நிகழ்ந்துகொண்டுதான் உள்ளன(அரசு நிர்வாகத்தில் காவல் துறைக்கு முக்கியப் பங்குண்டு என்றாலும், அதில் சிலர் குற்றம் செய்தால் அரசாங்கமே அதைச் செய்ததாக ஆகிவிடாது. அவர்களை அரசு தண்டிக்கலாம். அதன் பிறகு அத்துறையில் குற்றமே நிகழாது என்பதில்லை). ஸ்டாலின் மட்டுமல்லாமல் வேறு எவரொருவர் முதல்வராக இருந்தாலும், கூடக் குறைய குற்றங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கும்.

இடம்பெறுகிற ஒவ்வொரு குற்றத்தையும் இந்த அரசே செய்ததாகச் சொல்வது முறையல்ல.

ஒரு கொலைக் குற்றத்தை[“அரசு தன் குடிமகனையே கொலை செய்துள்ளது”] தமிழ்நாடு அரசே செய்ததாகச் சொல்லலாம் என்றால்.....

பெண்ணொருத்தியை ஒருவன் கடத்திச் சென்று வன்புணர்வு செய்து கொன்றால், அவன் செய்த அந்தக் குற்றத்தை அரசே செய்ததாக[“அரசே தன் குடிமகளை வன்புணவு செய்து கொன்றது”]ச் சொல்லலாம்தானே?

நீதியரசர்களும் மனிதர்களே. அவர்கள் உணர்ச்சிவசப்படுதலும் இயல்பே.

ஆனால், சட்ட விதிகளை நன்கு அறிந்திருக்கும் அவர்கள் அதன் அடிப்படையில் குற்ற வழக்கு குறித்து அறிக்கை தரலாமே தவிர, உணர்ச்சி வசப்பட்டுப் பேசுதல் கூடாது என்பது என் எண்ணம்.

நீதியரசர்களின் கடமை ‘நீதி’ வழங்குவது; அரசியல்வாதிகள்போல் விரும்பத்தகாத வகையில் அறிக்கை விடுவதல்ல!
* * * * *

செவ்வாய், 1 ஜூலை, 2025

பாரு பாரு... நல்லாப் பாரு... பகவான் படைச்சிருக்கான் பாரு!!!


காணொலியில் காணப்படுபவை பிறந்து மிகக் குறைந்த நாட்களே ஆன பறவைக் குஞ்சுகள்.

போதிய மயிர் வளர்ச்சி இல்லை. திடமாக நிற்பதற்கான வலிமையைக்கூட உடம்பு பெற்றிடவில்லை.

அம்மாக்காரி கொண்டுவந்து கொடுக்கும் இரையைப் பெறுவதற்கான பார்வைத் திறனும் இல்லை.

இரை என்று நினைத்து ஒன்றையொன்று கொத்திக்கொள்வது காணச் சகிக்காத கொடூரம்.

கொடூரம் நிகழக் காரணம்?

பசி அய்யா பசி, வயிற்றுப் பசி!!

இவை போன்ற உயிரினங்கள் முழு வளர்ச்சி பெற்ற பிறகு அவற்றைப் படுத்துவது உடலுறவுப் பசி!

[காணொலி காண்போரைச் சங்கடப்படுத்தும் என்பதால் தவிர்க்கப்பட்டது]

மேற்கண்ட ‘பசி’கள் அனைத்து உயிரினங்களுக்கும் உண்டு மனித இனம் உட்பட.

‘பசி’களைத் தணிக்க அன்றாடம் போராடித் துன்புறும் வகையில் உயிரினங்களை ஏன் படைத்தான் எல்லாம் வல்ல அந்த ஆண்டவன்?

“இனவிருத்திக்காக” என்பார்கள் அவதாரங்களும் மகான்களும்.

உயிரினங்களைப் படைத்து அவற்றை விருத்தி செய்யும்படி  அந்த ஆண்டவனிடம் அவர்கள் கோரிக்கை வைத்திருப்பார்களோ?

“ஆம்” என்றால்.....

அவர்கள் மகா மகா மகா பாவிகள்!