திங்கள், 16 செப்டம்பர், 2024

மனிதர்களுக்கு ஆறறிவு! மற்ற உயிர்களுக்கு ஐந்தறிவு[அதிகபட்சம்]!! கடவுளுக்கு?!

10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் கடவுள் மனிதர்களைப் படைத்தார் என்கிறார்கள் அறிவியல் அறிஞர்கள். 

படைத்ததோடு அமையாமல், இவர்களுக்குச் சிந்திக்கும் அறிவையும்[ஆறறிவு] அருளியிருக்கிறார்.

அதன் விளைவு, இவருக்குக் கோயில் கட்டி, விழாக்கள் எடுத்துக் கும்மாளம் அடித்து வழிபட்டால் துன்பங்கள் அகன்று இன்பமாக வாழலாம் என்று நம்புகிறார்கள் இவர்கள்[மிகப் பெரும்பாலோர்].

ஆனால்.....

10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் தன்னால் படைக்கப்பட்ட மனிதர்களுக்கு ஆறறிவைக் கொடுத்த கடவுள், 100 கோடி ஆண்டுகளுக்கு முன்பே தன்னால் உருவாக்கப்பட்ட பிற உயிரினங்களுக்கு[எண்ணிக்கையில் மனிதர்களைக் காட்டிலும் மிகப் பல மடங்கு அதிகம்] அந்த ஆறறிவை வழங்கவில்லை.

அவற்றிற்கு வழங்கியிருப்பது ஐந்தறிவு[ஒன்று முதல் ஐந்து] மட்டுமே.

ஆறறிவு வழங்கியிருந்தால், அவைகளும் அவரை வழிபட்டு மனிதர்களைப் போலவே[சுகபோகமாக?] வாழ்வது சாத்தியம் ஆகியிருக்கும்.

கருணைவடிவானவனும் அனைத்திற்கும் மேலான அறிவு படைத்தவனுமான அவர்ன்[கடவுள்] அதைச் செய்யவில்லை.

தான் படைத்த உயிர்களுக்கிடையே பெரிதும் பாரபட்சம் காட்டிய ‘அவன்’ கருணை வடிவானவன் அல்ல; மேலான பேரறிவாளனும் அல்ல. எனவே, அவனை ‘அறிவிலி’ என்று சொல்லலாம் அவனின் இருப்பு உண்மையானால்!

ஞாயிறு, 15 செப்டம்பர், 2024

‘அமித்ஷா’... உள்துறை அமைச்சரா, உலக மகாப் பொய்யரா?!?!

கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு மொழியின் உள்ளடக்கத்தைப் பிறிதொரு மொழிக்கு மாற்றியமைக்கும் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட நிலையில், இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 22[?] மொழிகளையும் இந்த நாட்டின் அலுவல் மொழிகளாக மாற்றுவதைத் தவிர்த்து, இந்தியை மட்டுமே கோலோச்சும் மொழியாக்கி அரசியல் நடத்துகிறார்கள் ஆட்சிப் பொறுப்பிலிருக்கும் பெரும்பான்மை இந்தி வெறியர்கள்.

இந்நிலையே நீடிக்க வேண்டும் என்பதற்காக ‘ஆண்டுதோறும் ‘இந்தி தினம்’ கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டின் கொண்டாட்டத்தில், முன்னணி இந்தி வெறியனான அமித்ஷா ஆற்றிய[தூற்றிய பொய்யுரைகள்] உரை ஊடகங்களில் வெளியாகியுள்ளது[கீழ்க்காண்பவை உட்பட].

வாசியுங்கள்.


‘இந்திக் கலாச்சார அடிப்படையில் நாடு முழுதும் பரவியுள்ள மொழி இந்தி’ என்று பேசியிருக்கிறார் மோடியின் வலக்கரமான இந்த உ.து.[தூ...!]அமைச்சர்.

இந்த நாடு பல்வேறு கலாச்சரங்களைக் கொண்டது. இவர் சொல்வது இந்திக்காரன் கலாச்சாரத்தை.

இந்திக்காரன்களின் கலாச்சாரம்தான் இந்தியாவின் கலாச்சாரம் என்கிறார் இந்திக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டிருக்கும் அமித்ஷா.

இந்தியாவிலுள்ள அனைத்து மொழிகளும் இந்தியின் வாயிலாக வளர்ச்சி அடைய வேண்டுமாம்.

அடடா, என்ன உன்னதமான இலட்சியம்! இந்தியை வளர்க்கக் கோடானுகோடி ரூபாய் செலவழித்த/செலவழிக்கும் இந்த இந்தி வெறிக் கூட்டம், தமிழ் முதலான பிற மொழிகளின் வளர்ச்சிக்கு எவ்வளவு செலவிட்டிருக்கிறது?

எத்தனைப் பேர் காதுகளில் பூச்சுற்றுகிறார்கள்!

தேசியக் கல்விக் கொள்கை மூலம் தாய்மொழிக் கல்வியை ஊக்குவிக்கிறார்களாம். உண்மைதான், இந்தி வழிக் கல்விக்கு அளவிறந்த சலுகைகளை அளித்து, இந்திய மக்கள் அனைவரையும் இந்தியைத் தங்கள் தாய்மொழியாக ஏற்கச் செய்வது இவர்களின் திட்டம்.

அடேங்கப்பா, எப்படியெல்லாம் சூதுவாது செய்து இந்தி வளர்க்கிறார்கள்!

அமித்ஷா என்னும் இந்த நபரின் பேச்சு, இந்திக்காரர்களைத் தவிர பிற மொழிக்காரர்களை எல்லாம் அடிமுட்டாள்களாக அவர் நினைப்பதன் பிரதிபலிப்பாகும்.

இந்திக்காரன்களையும் மூடநம்பிக்கையாளரையும் கவர்ந்து ஆட்சியைக் கைப்பற்றி, தங்களின் விருப்பம் போல கொட்டமடிக்கிறது இவருடன் இணைந்து செயல்படும் ஒரு கூட்டம்.

இனியேனும், இந்தி அல்லாத பிறமொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் விழிப்புணர்வு பெற்று மிகப் பெரும் போராட்டம் நடத்தினாலொழிய, இங்குள்ள அனைத்து மொழிகளையும் விழுங்கி இந்தி அசுர வளர்ச்சி பெறும்[இப்போதே தேவைக்கு மேல் பெற்றிருக்கிறது] என்றும், இந்தியா 100% ‘இந்தி’யா ஆகும் என்றும் ‘இந்தி’யர் அல்லாதோரை மிகக் கடுமையாக எச்சரிக்கிறோம்! 

சனி, 14 செப்டம்பர், 2024

பல நேரங்களில் பல பெண்கள்!

‘யூடியூப்’இல் சில நிமிடங்களுக்கு முன் வெளியான காணொலி. 


உங்கள் சிந்தனைக்கு.....

இந்தக் காணொலியின் உள்நோக்கம் குடும்பத் தலைவிகளைப் பாராட்டுவதா, பழிப்பதா?


வியாழன், 12 செப்டம்பர், 2024

அவன் சொன்னான், “நீ வேசி”... அவள் கேட்டாள், “நீ.....”[உண்மைக் கதை]

‘அவள்’ தனக்குத் துரோகம் செய்கிறாள் என்று ‘அவன்’ நம்பினான்.

அவன் தன் மீது வீண் பழி சுமத்துவதாக அவள் சொன்னாள்.

இது தொடர்பாக அடைக்கடி வாக்குவாதம் செய்தாலும் இருவரும் தத்தம் நிலையில் உறுதியாக இருந்தார்கள்.


ஒரு கட்டத்தில்…..


“ஆயிரம் கோயில்களில் நான் சத்தியம் பண்ணுவேன். நீ வேசி.” -அவன்.


“நான் வேசிதான். என்னை என்ன பண்ணுவே?” -ஆவேசக் கூச்சல் எழுப்பினாள் அவள்.


“துண்டு துண்டா வெட்டிப்போடுவேன். நமக்கு இருக்கிற ஒரே பொண்ணு அனாதை ஆயிடுமேன்னு யோசிக்கிறேன்” -அவன் முணுமுணுத்து அமைதி காத்தான்.

விவாதம் பிறிதொரு நாளில்  தொடர்ந்தபோது…..

“நீ திருந்துவேன்னு நினைச்சேன், திருந்தல. இப்பவும் நீ வேசிதான்” என்றான் அவன்.

“ஆமாடா, நான் இப்போ மட்டுமல்ல, எப்பவும்  வேசிதான். நீ சரியான ஆண்பிள்ளையா இருந்தா நான் ஏன் வேசித்தனம் பண்ணுறேன்?” என்று எகத்தாளம் தொனிக்கக் கேட்டு, நக்கலாகச் சிரித்தாள் அவள்.


அவள் கேள்வியில் நியாயம் இருப்பதாக அவனின் உள்மனம் நினைத்தது. ஆனால், அது குறித்து ஆராயவிடாமல் அவனின் தன்மானம்[“சரியான ஆண்பிள்ளையாக இருந்தால்…”] தடுத்தது.


அன்று இரவே அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது அவனால் கழுத்து நெறித்துக் கொல்லப்பட்டாள்.


அவனுக்குச் சாகும்வரை ஆயுள் தண்டனையோ, மரண தண்டனையோ கிடைக்கலாம்.


போதிய பாதுகாப்புடன் வாழும் பெண் பிள்ளைகளையே கடத்தி வன்புணர்ந்து சீரழிக்கும் கயவர்களும் காலிகளும் நடமாடும் உலகில், இனி நிராதரவான இவர்களின் பெட்டைக்  குழந்தையின் கதி?


ஒட்டுமொத்த உலகமும் கேட்கவேண்டிய கேள்வி இது. கேட்டால்…..


காலப்போக்கில் விடைகள் கிடைக்கப்பெறலாம். 


புதன், 11 செப்டம்பர், 2024

இனியேனும் உண்மை பேசுவாரா மோடி?!

எதிர்வரும் 2047-க்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். அந்த லட்சியத்தை நோக்கி முன்னேறி வருகிறோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார் என்பது செய்தி [https://www.hindutamil.in/news/india/1185414-a-developed-india-by-2047-pm-narendra-modi-promises.html].

“லட்சியத்தை நோக்கி முன்னேறிவருகிறோம்” என்று மோடி பெருமிதப்பட்டது ஏறத்தாழ எட்டு மாதங்களுக்கு முன்பு[19 ஜனவரி 2024].

“லட்சியத்தை நோக்கிய நம் பயணத்தில் பின்தங்கியிருக்கிறோம்” என்று உண்மையை உரைக்காமல் பொய் பேசியிருக்கிறார் பிரதமர்.

இந்தியா 2024-க்கான உலகின் சிறந்த நாடுகளின் பட்டியலில் சரிவைக் கண்டிருக்கிறது என்பதே உண்மை.

ஆதாரச் செய்தி:

#யுஎஸ் நியூஸ் அண்ட் வேர்ல்ட் ரிப்போர்ட் இதழ் 2024-ஆம் ஆண்டுக்கான உலகின் ‘சிறந்த நாடுகள்’இன் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இம்முறையும் சுவிட்சர்லாந்து முதல் இடம் பிடித்துள்ளது. 2-ஆவது இடத்தில் ஜப்பான், 3-ஆவது இடத்தில் அமெரிக்கா, 4-ஆவது இடத்தில் கனடா, 5-ஆவது இடத்தில் ஆஸ்திரேலியா ஆகியவை உள்ளன.

வாழ்க்கைத் தரம், தொழில்முனைவு, சாகசம், சுறுசுறுப்பு, பாரம்பரியம், கலாச்சார நோக்கம் உட்பட 10 தன்மைகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.

89 நாடுகள் இடம்பெற்றுள்ள இந்தப் பட்டியலில் இந்தியா 33-ஆவது இடத்தில் உள்ளது. சென்ற ஆண்டு, பட்டியலில் இந்தியா 30-ஆவது இடத்தில் இருந்தது. இந்நிலையில் தற்போது 3 இடங்கள் பின்னகர்ந்துள்ளது#

* * * * *

https://www.hindutamil.in/news/world/1309305-best-countries-in-world-switzerland-tops-india-at-33rd-place-1.html




காணும் பொருளில் எல்லாம் கடவுள்! சாமி சிலைகளுக்குச் சமஸ்கிருத மந்திரம் எதுக்கு?!

ஆன்மிகச் செம்மல்களின் அனுமானங்களின்படி..... 

ஆண்டவர் அணுவில் இருக்கிறார்; தூசுதுரும்புகளிலும் இருக்கிறார்.

சிலைகள் வடிப்பதற்கான கல்லிலும், களி மண்ணிலும், வார்த்தெடுப்பதற்கான உலோகங்களிலும் இருக்கிறார்.

வழிபடு கடவுள் எதுவோ அதை மேற்கண்டவற்றில் ஒன்றிலோ அனைத்திலுமே வடிவமைத்து விரும்பும் இடங்களில் நிறுவலாம். வழிபடலாம்.

வழிபடுவது சிலைதான் என்றாலும் சிலைக்குள்ளும் கடவுள் இருக்கிறார் என்பது உண்மை[நம்பிக்கை]. ஏனென்றால்.....

தன்னால் படைக்கப்பட்ட அனைத்துப் பொருள்களிலும் உயிர்களிலும் இரண்டறக் கலந்திருக்கிறார்   அவர் என்பதால்.

அப்புறம் எதற்குப் புதிதாக நிறுவப்படும் கோயில் சிலைகளில் அவரைக் குடியமர்த்த வேதமந்திரம் ஓதுகிறார்கள் விற்பன்னர்கள்?

சக்தி வடிவமான கடவுளுக்கே, செத்தால் புழுத்து நாறி மண்ணோடு மண்ணாகும்  இந்த அற்ப மனிதர்கள் ஓதுகிற மந்திரம் புதிய சக்தியை வழங்குகிறதா? புத்துணர்வு ஊட்டுகிறதா?

எதுக்குடா மந்திரம்? கடவுள் அசரீரியாகச் சொன்னார்; முன்னோர்கள் அதை வழிவழியாகப் பின்னவர்களுக்குக் கற்பிக்கிறார்கள் என்று ஏன் மனசாட்சியே இல்லாமல் பொய் சொல்லுகிறீர்கள்?

நீண்ட நெடுங்காலமாக நிகழ்த்தப்படும் இந்த மோசடியைத் தடுத்து நிறுத்துவதற்கான அறிவு முன்னோர்களுக்கு இல்லை.

அறிவியல் யுகத்தில் வாழும் இந்நாள் மனிதர்களுக்கும் இல்லாமல்போனது அவர்களுக்கான நல்ல காலம்; இவர்களுக்கான கெட்ட காலம்! 

செவ்வாய், 10 செப்டம்பர், 2024

‘மகா விஷ்ணு’[ஆன்மிக ரவுடி] எப்போது வைகுண்டம் திரும்புவார்?!?!?!

‘ரவுடி’ என்பவன் மக்களைத் தாக்கி, அவர்களுக்குச் சொந்தமான பொருட்களைப் பறிப்பவன் மட்டுமல்ல, சிறைவாசத்துக்கு அஞ்சாமல், அடிதடி, குத்துவெட்டு, கடத்தல், கொலை என்று அனைத்துக் குற்றச் செயல்களிலும் ஈடுபடுபவன்.

அடுத்தடுத்துப் பல நடவடிக்கைகள் எடுத்தும் இவனைக் கட்டுப்படுத்தவே முடியாத நிலையில், ‘என்கவுண்டர்’இல் போட்டுத் தள்ளுகிறது காவல்துறை.

‘மகா விஷ்ணு’ என்பவன் எதற்கும் அஞ்சாத ஓர் ஆன்மிக ரவுடி[மக்களின் சிந்திக்கும் அறிவை முற்றிலுமாய்ச் சிதைத்து ஒழிப்பவன்; மேல் மட்டப் புள்ளிகளின் ஆதரவைப் பெற்றவன்].

பாஜக சங்கிகளின் ஆதரவோடு, மக்களிடையே குறிப்பாக, மாணவர்கள் மத்தியில், அளப்பரிய மூடநம்பிக்கைகளைப் பரப்பியதற்காகக் கைது செய்யப்பட்டிருக்கிறான்.

அதை ஒரு பொருட்டாக மதிக்காத இவன், என்னிடம் சித்தர்கள் சொன்னதையே பேசினேன். என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது”[விகடன்] என்று தன் திமிர்த்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறான்[இவனின் குறிப்பிடத்தக்கதோர் உரை கீழே* இடம்பெற்றுள்ளது].

சமுதாய ரவுடிகளைப் ‘போட்டுத்தள்ள’ ‘என்கவுண்ட்டர்’ உத்தியைப் பயன்படுத்தும் காவல்துறை, இந்த ஆன்மிக ரவுடி மகா விஷ்ணுவை இதே உத்தியைப் பயன்படுத்தி வைகுண்டம் அனுப்பினால் அது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என்பது நம் எண்ணம்!

                            *   *   *   *   *

*மகா விஷ்ணு, தனது ‘பரம்பொருள்’ என்னும் யூ-டியூப் சேனலில் ‘சூரியனுக்குச் சென்றுவந்த மகா விஷ்ணு, வானத்தில் பறந்த மகா விஷ்ணு, ஆண் துணையே இல்லாமல் குழந்தை பிறக்கும் அதிசயம், நெருப்பு மழை பொழிய வைக்கும் ரகசியம்...' என அறிவியலுக்குச் சம்பந்தம் இல்லாத விஷயங்களை மனம்போன போக்கில் பேசி இருக்கிறார். தற்போது மகா விஷ்ணுவின் இந்த எல்லை தமிழ்நாடு மட்டுமல்லாமல் நாடு கடந்து சென்றுள்ளது. ஆஸ்திரேலியா, இலங்கை, சிங்கப்பூர் என தற்போது ஆறு நாடுகளில் தனது பரம்பொருள் பவுண்டேஷனின் கிளையைப் பரப்பி இருக்கிறார் இந்த மகா விஷ்ணு.! https://www.vikatan.com/government-and-politics/superstitious-speech-in-schools-re-treat-camp-abroad-the-story-of-pramporul-mahavishnu

‘மகா விஷ்ணு’ என்னும் மூடனை வள்ளுவருடன் ஒப்பிட்டு மகான் ஆக்கும் சங்கிகள்!!!

#பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனன் ஆன மகா விஷ்ணு, சென்னை அசோக் நகர் பள்ளியில் மறுபிறவி, பாவம், புண்ணியம் பற்றிப் பேசியது சர்ச்சை ஆகியுள்ளது. மறுபிறவி என்பதே மூடநம்பிக்கை என்று வெவ்வேறு அரசியல் பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், மறுபிறவி பற்றிய கருத்துக்கள், சங்க இலக்கியங்களில் நிறையக் காணப்படுகின்றன. உலகம் முழுவதும் போற்றிப் புகழப்படும் திருக்குறளில்கூட, இது குறித்த ஏராளமான குறட்பாக்கள் உள்ளன#

யாரோ முகவரி இல்லாத ஒரு சங்கியின் கருத்தை வெளியிட்டு, மகா விஷ்ணு என்னும் மகாப் பெரிய மூடனுக்கு[போன பிறவியில் செய்த பாவம்தான் அழகில்லாமலும் ஊனமாகவும் பிறக்கக் காரணம் என்கிறான்] வக்காலத்து வாங்கியிருக்கிறது தினமலம் இதழ்.







இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த திருவள்ளுவர் போன்ற அறிஞர்களின் கருத்துகளில் சில காலப்போக்கில் அர்த்தமற்றதாக ஆகிவிடுவதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

வள்ளுவரும் மனிதர்தான்[தெய்வப் புலவரல்ல]. அவரின் கருத்துகள் காலமாறுதலுக்கு ஏற்ப மறுக்கப்படுவதில் தவறே இல்லை.

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை’ என்னும் குறட்பா முற்றிலும் பகுத்தறிவுக்கு ஒவ்வாததாகும்.

அந்த அறிஞனின் ஆகச் சிறந்த 1330 குறள்களில் சில ஏற்கத்தக்கவை அல்ல என்பதால் அவர் மீதான மதிப்பும் மரியாதையும் எவ்விதத்திலும் குறைந்துவிடாது.

இந்த அறிவியல் யுகத்தில், பாவம் தண்டனை என்று பேசித் திரியும் ஓர் எச்சக்கலையின்[‘முழுமுதல் கடவுள்’ என்னும் பெயரில்கூட ஊருலகை ஏமாற்றலாம்] உளறலுக்கு வள்ளுவரைத் துணைக்கு அழைப்பது அயோக்கியத்தனம் ஆகும்.

மூடநம்பிக்கைகளை வைத்தே பிழைப்பு நடத்தும் சங்கிகளின் ஆதரவோடு இவன் மாதிரியான நச்சுக் கிருமிகள் இனியும் உருவாகாமல் தடுப்பது நம் தலையாய கடமை ஆகும்.

* * * * *

https://www.dinamalar.com/news/tamil-nadu-news/-reincarnation-ideas-abound-thirukkural-is-a-witness-to-maha-vishnus-speech--/3725845


திங்கள், 9 செப்டம்பர், 2024

கரையும் பிள்ளையார்! காலியாகும் பக்தர்களின் களிமண் மண்டைகள்!!

... பிள்ளையார் பக்தர்களே, ஆண்டு தவறாமல் களிமண் பிள்ளையார் சிலையை, நீங்கள் புனிதமானவை என்று நம்பும் அசுத்த நீர்நிலைகளில் கரைக்கிறீர்கள்.

பிள்ளையார் கரைகிற அதே வேளையில் உங்களுக்கு இருக்கிற கொஞ்சம் மூளையும் கரைகிறது என்பதை நீங்கள் அறிந்திருக்கவில்லை.

அறிவுறுத்தினாலும் திருந்தமாட்டீர்கள்.

இனி அடுத்தடுத்துவரும் பிள்ளையார் பிறந்த[சதுர்த்தி] நாட்களில், கரைப்பு விழாவில் கலந்துகொள்வதைத் தவிர்க்கும் பிற இந்துமதத்தவரையும், மிரட்டியோ, தேவைப்பட்டால் அடித்து உதைத்தோ கலந்துகொள்ளச் செய்வீர்கள் என்பது நம் எதிர்பார்ப்பு.

‘இந்து’ எனப்படுகிற அத்தனைப் பேரும் கரைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டால் உங்களைப் போலவே அவர்களின் மண்டை மூளையும் மிச்சம் மீதியில்லாமல் கரையும். கரைந்தால்.....

இந்தப் புண்ணியப் பாரதத்தில் பெரும்பான்மையாக உள்ள முட்டாள் இந்துக்களின் எண்ணிக்கை மிக மிக அதிகரிக்குமே தவிர அவர்களில் புத்திசாலிகளைக் காண்பது அரிதினும் அரிதாகும்.

முன்பு அறியாமையில் மூழ்கிக் கிடந்த இந்நாட்டு மக்களை அடக்கி ஆண்டு அடிமைகள் ஆக்கினார்களே ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும்[அவர்கள் பெற்றிருந்த அறிவியல் அறிவு அதற்குப் பயன்பட்டது], அதற்கு அந்தக் கால இந்துக்கள் புளுகுப் புராணக் கதைகளை நம்பி ஏறத்தாழக் காட்டுமிராண்டிகளாய் வாழ்ந்ததுதான் காரணம்.

அந்த அவல நிலை எதிர்காலத்தில் மீண்டும் உருவாகலாம். அது நிகழாமல்போனாலும், பெரும்பான்மை இந்துக்கள் மீது கிறித்தவ மதமோ இஸ்லாம் மதமோ திணிக்கப்படலாம். 

இதன் விளைவாக இந்துமதம், இருந்த அடையாளம் தெரியாமல் முற்றிலுமாய் அழிந்துபோக நிறையவே வாய்ப்புள்ளது.

இந்த அவலம் நிகழாமலிருக்க, உடனடியாக இந்து மதத்தில் சீர்திருத்த நடவடிக்கைகள் தேவை.

தேவைகளை நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ள தலைவர்களோ பக்தர்களைக் காட்டிலும் பல மடங்கு மூடநம்பிக்கைகளைச் சுமந்து திரியும் அவலம் நிலவுவது நாட்டின் நலனில் அக்கறை கொண்டோரை மிகுந்த கவலையில் ஆழ்த்துகிறது!

ஞாயிறு, 8 செப்டம்பர், 2024

‘போப் பிரன்சிஸ்’ உரையும் கொஞ்சம் உறுத்தலும் நிறையப் பாராட்டுகளும்!!!

போப் பிரான்சிஸ் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள இந்தோனேசியா, கிழக்கு தைமூர், பப்புவா நியூ கினியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு 11 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அவர் ஜகார்த்தாவில் உள்ள அதிபர் மாளிகையில், அதிபர் ஜோகோ விடோடோவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

சுற்றுப் பயணத்தின் 3-ஆவது நாளில் ஜகார்த்தாவில் உள்ளதும், தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பெரியதுமான இஸ்திக்லால் மசூதிக்குச் சென்றார். அங்கு மசூதியின் இமாம் ஆன நசுருதீன் உமர் போப் பிரான்சிஸை வரவேற்றார்.

அப்போது இந்தோனேசிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட புத்த மதம், இஸ்லாம், இந்து மதம், கத்தோலிக்க மதம், புரோட்டஸ்டன்ட் மதம், கன்ஃபூசிய மதம் ஆகிய மதத் தலைவர்களும் அங்கு இருந்தனர்.

இந்த நிகழ்வில் பேசிய போப் பிரான்சிஸ் நாம் அனைவரும் சகோதரர்கள், யாத்ரீகர்கள். அனைவரும் கடவுளை நோக்கிச் செல்லும் வழியில், வேற்றுமைகள் இருந்தாலும் ஒற்றுமையுடன் முன்னேற வேண்டும். போர்கள் போன்ற மனிதகுலத்தின் எதிர்காலத்தை அச்சுறுத்தும் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்ளும் பொறுப்பை நாம் ஏற்கவேண்டும்” என்றார்.

முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் இந்தோனேசியாவுக்குப் போப் ஆண்டவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டது 35 ஆண்டுகளில் முதன் முறையாகும். இதனால் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணமாக இது கருதப்படுகிறது.

“நாம் கடவுளை நோக்கிப் பயணிக்கும் யாத்ரீகர்கள்”[மண்ணில் பிறந்து வாழும் நாம் மரணத்தை நோக்கிப் பயணிக்கிறோம் என்பதுதானே உண்மை?] என்று அவர் குறிப்பிட்டது நம் உள்மனதில் உறுத்தலை ஏற்படுத்தினாலும், புத்த மதம், இஸ்லாம், இந்து மதம், கத்தோலிக்க மதம், புரோட்டஸ்டன்ட் மதம், கன்ஃபூசிய மதம் என, உலகின் முன்னணி மதங்களின் தலைவர்கள் ஒருங்கிணைந்து அவரை வரவேற்றது உலகம் கண்டிராத அதிசய நிகழ்வாகும்.

இந்த அதிசயத்தை நிகழ்த்தி, மத இணக்கத்திற்கு வழிகோலிய பாதிரியார் பிரான்சிஸ் அவர்களை மனதாரப் போற்றுகிறோம்!

வாழ்க பாதிரியார்! வளர்க மத நல்லிணக்கம்!!

* * * * *

https://tamil.indianexpress.com/international/southeast-asia-mosque-indonesia-pope-francis-unity-6953371

சனி, 7 செப்டம்பர், 2024

பேரழிவை நோக்கிப் பிரபஞ்சம்! ஆகவே மானிடரே.....

லகின் மிகவும் சக்தி வாய்ந்த தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி இரண்டு லட்சம் நட்சத்திரக் குழுமங்களைக் கண்காணித்த அறிவியல்[வானிலை] ஆய்வாளர்கள், கடந்த இரண்டு பில்லியன் ஆண்டுகளில் பிரபஞ்சம் வெளியிடும் சக்தி அரைவாசியாக குறைந்துள்ளது என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

‘புதிய நட்சத்திரங்கள் பிறக்கும் வேகமும் குறைந்துவருகிறது’ என்னும் பழைய ஆய்வின் முடிவை அவர்கள் உறுதி செய்துள்ளனர்.

14 பில்லியன் ஆண்டுகள் பழமையான பிரபஞ்சத்தின் விதி முடிய காலம் இருக்கிறது என்றாலும், அந்தக் கால வரம்பு நிரந்தரமற்றது[எப்போது வேண்டுமானாலும் பிரபஞ்சம் அழியலாம்] என்றும் அவர்கள் கூறியுள்ளனர். -https://www.bbc.com/tamil/science/2015/08/150811_universe

ஒட்டுமொத்தப் பிரபஞ்சமும் அதில் உள்ளடங்கிய பூமியும்  அழிந்துபோகும் நிலையில் மனித இனம் பூண்டோடு அழியும் என்பதில் கிஞ்சித்தும் ஐயத்திற்கு இடமில்லை.



மீண்டுமொரு பெரு வெடிப்பு அல்லது அதிரடி வெடிப்பு காரணமாகப் புதிய பிரபஞ்சம் தோன்றக்கூடும். அது எப்போது நிகழும் என்பது எவருக்கும் தெரியாது.

அது நிகழ்ந்தாலும், மனித இனமும் பிற உயிரினமும் வாழ்வதற்கு உகந்த ஒரு பூமியோ அதைப் போன்ற பிறிதொரு கோளோ புதிய பிரபஞ்சத்தில் உருவாகும் என்று சொல்வதற்கில்லை.


ஆகவே, 


‘மனித இனம் உள்ளவரை, மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் தத்தமக்குரிய குறுகிய வாழ்நாளைத் தமக்கும் பிறருக்கும் பயன் தருவதாய் வாழ்ந்து முடிப்பதே அறிவுடைமை ஆகும். 


அத்தகையதொரு வாழ்வுக்கு ஆறறிவை முழுமையாகப் பயன்படுத்துவது அவசியம்.

அதைத் தவிர்த்து, ஞானி சொன்னார், மகான் சொன்னார், அவதாரம் சொன்னார், அவர் சொன்னார், இவர் சொன்னார்[அண்டசராசரமே இருந்த இடம் தெரியாமல் வெடித்துச் சிதறிக் காணாமல்போகும் நிலையில் அவதாரமும் இல்லை; மகானும் இல்லை; புனிதரும் இல்லை; ஒரு புடலங்காயும் இல்லை] என்று கடவுளை நம்பி, மூடநம்பிக்கைகளை வளர்த்து முட்டாள்காக வாழ்வது வருந்துதற்குரியது! கண்டிக்கத்தக்கது!!

வெள்ளி, 6 செப்டம்பர், 2024

‘மகா விஷ்ணு’ என்னும் பெயரில் ஒரு புதிய ஆன்மிகப் புளுகன்!!!

#மாணவிகள் அழகாக இல்லாததற்குக் கடந்த பிறவிகளில் செய்த பாவம்தான் காரணம்; மாற்றுத்திறனாளிகளாகப் பிறக்கவும் அதுவே காரணம். பாவம், புண்ணியம், பிரபஞ்சச் சக்தி போன்றவை பூமியில் இறங்கும்# என்றெல்லாம் மனம்போன போக்கில் நஞ்சு கக்கியிருக்கிறான் ‘மஹா விஷ்ணு’ என்று ‘புனை பெயர்’ சூட்டிக்கொண்டு மக்களை ஏமாற்றிவந்த ஓர் ஆன்மிகப் பொறுக்கி; நிறையவே சம்பாதித்திருக்கிறான்.

டாக்டர் ராமதாஸ் உட்பட இணையவாசிகள் பலரும் இவன் பேச்சை மிகக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார்கள்.

தமிழ்நாடு அரசு இவனைக் கைது செய்து நடவடிக்கை எடுப்பதில் முனைப்புக் காட்டுவது அறிந்து இவன் ஆஸ்திரிலேயாவுக்குத் தப்பி ஓடியிருக்கிறான் என்பது ஊடகச் செய்தி.

கந்தன், முருகன், பெருமாள், ஐயப்பன், ஆறுமுகம், பரமசிவம் என்பன போன்ற கடவுள்களின் பெயர்களைப் பிள்ளைகளுக்கு வைப்பது வழக்கத்தில் உள்ளது. ஆனால், ‘மஹா விஷ்ணு’ என்னும் பெயர் எப்போதும் வைக்கப்படவில்லை என்றே சொல்லலாம்.

எனவே, ‘மஹா விஷ்ணு’ என்பது இவனின் புனை பெயராக இருக்க வாய்ப்புள்ளது. தான் கடவுளின் அவதாரம்[சத்குரு> பரம்பொருளின் குரு என்பது போல]மக்களை நம்பச் செய்வதற்கு இப்பெயர் பயன்படும் என்பது இவனின் நம்பிக்கை.

கண்ட கண்ட கழிசடைகள் எல்லாம் அவதாரம் என்றும், மகான் என்றும் தம்மைத்தாமே அழைத்துக்கொள்வதற்குத் தடை விதித்து, மீறுவோர் மீது மிகக் கடும் நடவடிக்கைகளை அரசு[கள்] எடுத்திருந்தால் இம்மாதிரி, கடவுள் பெயரில் காலிப் பயல்கள் உருவாகியிருக்க வாய்ப்பே இல்லை!

இனியேனும், இவன் போன்றோர் விசயத்தில் ஆளுவோர் எச்சரிக்கையுடன் செயல்படுதல் வேண்டும் என்பது நம் வேண்டுகோள்.

https://www.vikatan.com/trending/viral/expert-warns-psychological-issues-in-mahavishnus-speech-in-chennai-govt-school


‘இந்துமதம் வாழ... வளர...’ -சங்கிகளுக்குக் கொஞ்சம் புத்திமதிகள்!!!

மூடத்தனத்தின் உச்சமான பிள்ளையார் வழிபாடு, மாடுகள் வதைக்கப்படுவதாகச் சொல்லிச் சங்கிகள் நிகழ்த்தும் வன்முறைகள் போன்றவை நீடிக்கும்வரை இந்துமதம் வளரவே வளராது; ஒரு காலக்கட்டத்தில் அழிந்தேதீரும்

பிள்ளையார் பிறப்பு, சிவலிங்கத் தோற்றம், ஐயப்பன் அவதாரம் போன்ற படு அசிங்கக் கதைகளைக் கற்பிக்கும் ஆபாசப் புராணங்களை தீயிட்டு எரித்துச் சாம்பலாக்குவது போன்ற உடனடி நடவடிக்கைள் தேவை.

கோயில்களில் உள்ள கூடா ஒழுக்கங்களைக் கற்பிக்கிற சிலைகளையும், விதானங்களில் வரையப்பட்டுள்ள சில காணச் சகிக்காத ஓவியங்களையும் முற்றிலுமாய் அகற்றுதல் அவசியம்[உடலுறவுக் கலையைக் கற்பிப்பது வேறு விசயம்].

‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’[திருமூலர்] என்பதுதான் இந்துமதத்தின் உயிர்நாடிக் கடவுள் கொள்கை என்று அறிவிப்பதோடு, அதை உலகறியச் செய்வதற்கான தீவிர முயற்சிகளையும் மேற்கொள்ளுதல் வேண்டும்.

கோயில்களில் இப்போதுள்ள சிலைகளை அகற்றுவதோடு, கோயிலின் எந்தவொரு இடத்திலும் அமர்ந்து[கட்டுப்பாடுகள் தேவையில்லை] கண்மூடி, அனைத்திற்கும் மேலான ஏதோவொரு சக்தியை நினைத்து தியானிக்கப் பக்தர்களை அனுமதிக்கலாம்.

அறிஞர் குழு அமைத்து அவ்வறிஞர்களின் பரிந்துரைப்படி கோயில்களில் தேவைப்படும் மாற்றங்களைச் செய்யலாம். 

இவை போன்ற அறிவுபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால்.....

பிற மதத்தவரும் பெரும் எண்ணிக்கையில் இந்துமதத்தைத் தழுவும் அதிசம் நிகழும்; விரைவில் உலகின் முதன்மை[நம்பர் 1] மதமாக இந்துமதம் மாறும்; மேலும் மேலும் வளரும் என்று நம்பலாம்.

வியாழன், 5 செப்டம்பர், 2024

விநாயகன் சதுர்த்தி! நாசகாரக் கும்பலின் சதி!!

அம்மாக்காரி[மினாட்சி] குளிக்கும்போது தன் உடம்பின் அழுக்கைத் திரட்டி[கடவுள்களுக்கும் உடம்பு உண்டா? அதில் அழுக்குச் சேருமா? கேனயன்களா, சிந்தியுங்கடா] ஒரு குழந்தையை உருவாக்கிக் காவலுக்கு வைத்தாள்.

அபோது அங்கு வந்த அவளின் புருஷன்காரர்[ஈஸ்வரன்>அவர் விந்துவில் உருவாகாததால் அவருக்கு விநாயகன் பிள்ளையல்ல] குளியலறைக்குள் நுழைய, அழுக்குப் பிள்ளை[பிறந்தவுடனே காவல் பணி புரிந்ததாம்] தடுத்தது.

சினம் கொண்ட சிவனானவர் அதன் தலையை வெட்ட, குய்யோமுறையோன்னு அம்மையார் கதறி அழ, ஒரு யானையின் தலையை[இது தனிக் கதை] குழந்தை உடம்பில் ஒட்டவைத்தார் முழுமுதல் கடவுள்.

இவர் அதிசயப்[யானைத் தலை] பிள்ளையார் மட்டுமல்ல, ஆபாசப் பிள்ளையாரும்கூட[இதற்கும் ஓர் கதை உள்ளது. படம் காண்க]. பின்னர் பரம்பரைப் புத்திசாலிகளால் உலகம் போற்றும் பிரபலக் கடவுள் ஆக்கப்பட்டார்.

அம்மையும் அப்பனும் இணைந்து உருவாக்கிய பிள்ளையாரின் பிறந்த[பிறக்கவில்லை; உருவாக்கப்பட்டான்] நாளைத்தான் ஆண்டுதோறும் ‘விநாயகர் சதுர்த்தி’ என்னும் பெயரில் கொண்டாடிக் குதூகலிக்கிறது மூளை மழுங்கிய பெரும் கூட்டம்.

ஏனையோரை முட்டாள்கள் ஆக்கி, அவர்கள் தயவில் உழைக்காமலே பிழைப்பு நடத்தும் ஒரு சுயநலக் கும்பலின் சதி வேலை எது.

அவர்கள் அன்று முதல் இன்றுவரை புத்திசாலிகளாகவே இருக்கிறார்கள். அன்று முதல் இன்றுவரை கூமுட்டைகளாகவே இருக்கிறார்கள் பெரும் எண்ணிக்கையிலான நம்மவர்கள்!

ஆளுவோர் எவரும் நம்மவர்களின் அவல நிலை குறித்துக் கவலைப்படுவதில்லை, அவர்கள் 'அவர்கள்’இன் ஆயுட்கால மெய்க்காப்பாளர்கள் என்பதால்!!

புதன், 4 செப்டம்பர், 2024

கடனாளி ஏழுமலையானுக்கு வாரி வழங்குங்கள்! வைகுண்டப் பதவி பெறுங்கள்!!

‘நான் பெற்ற கடனைக் கலியுகத்தில் எனது பக்தர்கள் அடைப்பார்கள்’ என்னும் இந்த வாசகம், திருவேங்கடவன்[ஏழுமலையான்] குபேரனுக்கு[இவன்தான் கடவுள்களுக்கெல்லாம் கடன் கொடுப்பவன்!] எழுதிக் கொடுத்த கடன் பத்திரத்தில்[பட்டயம்] உள்ளதாம்.

வேங்கடவனின் வேண்டுகோளை ஏற்று, பக்தர்கள் அவனுக்கு அள்ளி அள்ளி அள்ளிக் கொடுக்கிறார்களாம்.

இந்துமதம் உதயமானதே புராணக் கதைகளிலிருந்துதான். புனிதமானவை என்று நம்பப்படும் புராணங்களில் ஒன்று பவிஷ்யோத்ர புராணம்’. அதில்தான் ஏழுமலையான் என்னும் திருவேங்கடவன் கடன்காரன் ஆன கதை இடம்பெற்றுள்ளது.

எனவே, இது கதை அல்ல, உண்மை நிகழ்வு என்று மனப்பூர்வமாய் நீங்கள் நம்பலாம்[ஹி...ஹி... ஹி!!!].

நம்பி.....

நீங்களும் கட்டுக்கட்டாய்ப் பணம், கொத்துக்கொத்தாய் நகைகள், டன் டன்னாக தங்கக் கட்டிகள் என்று உங்களால் இயன்ற காணிக்கைகளையெல்லாம் திருப்பதி உண்டியலில் போடுங்கள்.

பக்தக்கோடிகளான உங்களை நம்பித்தான் திருவேங்கடத்தான் குபேரனிடம் கணக்கு வழக்கில்லாமல் கடன் வாங்கியிருக்கிறான்.

கடனை அடைக்க உதவுகிற உங்களுக்கு நீங்கள் செத்த பிறகு வைகுண்டப் பதவி கிட்டும் என்பது 100% உறுதி!

பழம்பெரும் புராணக் கதைக்குப் புத்துயிர் ஊட்டி, அதை வாசிக்கும் அத்தனைப் பேரும் வைகுண்டப் பதவி பெற்றிட வழிவகுத்த ‘விகடன்’ ஆசிரியருக்கும் அங்கே ஓரிடம் உண்டு என்பது நிச்சயம்!!

* * * * *

https://www.vikatan.com/spiritual/tirumala-tirupati-devasthanams-lord-balaji-worship?utm_source=newsshowcase&utm_medium=gnews&utm_campaign=CDAqEAgAKgcICjCejf8KMN389wIw15ieAw&utm_content=rundown&gaa_at=g&gaa_n=AWsEHT4EHRjdAdgitKPairpsGbzW7mS97M_vFwIh1Gbcw0AM3FwjqIy2hFuJR6I7pFPI7xa-V53z5CQpa_DavEe0ScVKX9EU86-oIWU%3D&gaa_ts=66d837fb&gaa_sig=05b0Fzv6AsaMlTcqkz8bBxEkOVJR_TJdBIn5HpFWzqkE-MAOa1Ip2cVoXTLhCrK2INwvH8xYt-y_E8PiqdXv1A%3D%3D Yesterday at 12 AM


செவ்வாய், 3 செப்டம்பர், 2024

படையலும் பிரசாதமும் பசியாறும் கடவுள்களும்!!!

//கோவிலில் பூஜைகளின் போதும் சரி, வீட்டில் பூஜை செய்தாலும் சரி சுவாமிக்கு நைவேத்தியம்[படையல்] வைத்துத்தான் வழிபட வேண்டும் என்கின்றன இந்து சாஸ்திரங்கள். நாம் எதை உணவாக உண்கிறோமோ அதையே கடவுளுக்கும் படைப்பது பக்தி யோகத்தின் ஒரு அங்கமாக உள்ளது[“நீ எதைச் செய்கிறாயோ, எதை உண்கிறாயோ, அதை நீ எனக்குக் காணிக்கையாக கொடு” என்கிறாராம் கிருஷ்ண பரமாத்மா]//*

கடவுள்[இருந்தால்] வழிபாடு என்பது முழுக்க முழுக்க மனம் சம்பந்தப்பட்டது.

வழிபட்டால் அவர் அருளால் துன்பங்கள் அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எனவே, மனத்தளவில் கடவுளை வழிபடுவதே போதுமானது.

உணவு உண்பது என்பது மனிதர்கள் தம் உடலைப் பேணி வளர்ப்பதற்காக.

“நீ எதை உண்கிறாயோ அதை எனக்குக் காணிக்கையாகக் கொடு” என்கிறார் ஒரு கடவுள்[காணிக்கை, பிரசாதம் என்று கதை அளந்தவர்களிடம் அசரீரியாக மற்றக் கடவுள்களும் சொல்லியிருக்கக்கூடும்]. .

அது[உணவு] காணிக்கை ஆக்கப்பட்டதன்[படையல் இடப்பட்டதன்] பயன் என்ன?

பட்டினியால் வாடும் கடவுள்கள் அதில் உள்ள சத்துக்களை உறிஞ்சி எடுத்து உயிர் வாழ்கிறார்களா?

என்றோ ஒரு காலக்கட்டத்தில் எழுதப் படிக்கத் தெரிந்த சில அயோக்கியர்கள் கட்டிவிட்ட இம்மாதிரிக் கதைகளை, இந்த அறிவியல் யுகத்திலும் நம் மக்கள் நம்புவது எத்தனை முட்டாள்தனம்?

படையலுக்கான உணவைச் சமைப்பவர்கள் மனிதர்கள். அதைச் சாமிகளின் முன்னால் வைத்து மணியடித்து, பிரசாதம் என்னும் பெயரில் தொட்டுக் கொடுப்பவர்களும் மனிதர்கள். அதைப் பயபக்தியுடன் பெற்றுக்கொள்பவர்களும் மனிதர்களே.

என்ன நோக்கத்தில் சாமிகளுக்குப் படைக்கிறார்கள்?

படைப்பதால், அந்த உணவில் ஏதேனும் நச்சு உயிரினங்கள் கலந்திருந்தால் அவை அழிந்து, படைக்கப்பட்ட உணவு முழுத் தூய்மை பெற்றுவிடுமா?

“ஆம்” என்றால்.....

உண்டவுடன் உயிர் பறிக்கும் நஞ்சு கலந்த உண்வை ஏதேனும் ஒரு சக்தியுள்ள சாமிக்குப் படையலாக்கி, வழக்கமான சடங்குகளை முடித்து, படையலை மருத்துவப் பரிசோதனைக்கு உள்ளாக்கி, அதிலிருந்த விஷம் முற்றிலுமாய் அகன்றுவிட்டதை நிரூபிப்பார்களா, காலங்காலமாய்க் கடவுள்களை வைத்துப் பிழைப்பு நடத்தும் பரம்பரைப் பொய்யர்கள்?

இந்தக் கேள்வியை நாம் மட்டும் கேட்டால் போதாது, அறிவுள்ள மனிதர்கள் அத்தனை பேரும் கேட்க வேண்டும்.

கேட்பார்களா? எப்போது?

* * * * *

* ஒரு தினசரியின்’ஆன்மிகம்’ இணைப்பு

திங்கள், 2 செப்டம்பர், 2024

இது ஒன்றே உலக அதிசயம்! ஏழு என்பது தவறு!!

சீனப் பெருஞ்சுவர்[8850 கி.மி], மெக்ஸிகோவில் உள்ள ‘மாயன்’ நகரம்இது 16ஆம் நூற்றாண்டின் ஸ்பானிஷ் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியின்போது பயன்படுத்தப்பட்ட ரகசிய இன்கா கோட்டையான வில்காபாம்பா[மச்சு பிச்சு], ஜோர்டானின் பெட்ராவில் உள்ள கஸ்னா ("கருவூலம்"), ரியோ டி ஜெனிரோவில் உள்ள கிறிஸ்துவின் சிலை, ‘ரோம்’இல் உள்ள கொலோசியம்[மனிதர்கள் மனிதர்களுடனும் விலங்குகளுடனும் போரிடும் அரங்கம்], தாஜ்மகால் ஆகியவற்றை உலகின் 7 அதிசயங்கள் என்பார்கள்.

இவை அனைத்துமே அதிகப்பட்ச மனித அறிவால் உருவாக்கப்பட்டவையே.

இவற்றை, கள்ளக் காமுகனுடனான உடலுறவுக்கு இடையூறாக இருப்பதாகக் கருதி, பெற்றெடுத்த தாயே தன் குழந்தையைக் கொன்றுவிடும் அதிசயத்தோடு[பாசத்தைப் பணயம் வைக்கும் அளவுக்குக் காமம் அத்தனை வலிமையானதா?!] ஒப்பிட்டால் இவை அதிசயங்களே அல்ல!

மற்ற நாடுகளில் எப்படியோ, நம் புண்ணியப் பாரதத்தில் இத்தகைய அதிசயங்கள் அவ்வப்போது[அடிக்கடி?] நிகழ்வதை எண்ணி நாம் பெருமிதப்படலாம்!

வாழ்க பெண்ணினம்! வாழ்க வளர்க அவர்களின் கள்ள உடலுறவு!!  

[கொலேசியம்]

எடுத்துக்காட்டாக ஓர் அதிசயம்:

#ப.வேலுார்: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், குழந்தையைக் கிணற்றில் வீசிக் கொலை செய்த தாய் உள்பட இருவரை, பரமத்தி வேலுார் போலீசார் கைது செய்தனர்#Dinamalar Logo

ஞாயிறு, 1 செப்டம்பர், 2024

விஞ்ஞானிகளின் பாதம் பணிந்து ஒரு விண்ணப்பம்!!!

"சிஓபி[COB>ஒரு வட்டமான நிறை, கட்டி அல்லது குவியல்] முற்றிலும் விண்மீன் திரள்களால் ஏற்படுகிறது" என்று லாயர்[விஞ்ஞானி] கூறினார். "விண்மீன் திரள்களுக்கு வெளியே பார்த்தால், அங்கே இருளைக் காண்கிறோம், அதற்கு மேல் எதுவும் இல்லை."["The simplest interpretation is that the COB is completely due to galaxies," Lauer said. "Looking outside the galaxies, we find darkness there and nothing more."Scientists confirm that most of the universe is 'darkness and nothing more' (msn.com)]

அறிவியலாளரே,

விண்மீன் திரள்களிலா, அவற்றிற்கு வெளியே பரவிக்கிடக்கும் இருளிலா, இருளுக்கு அப்பால் வெற்றிடம் இருந்தால், அந்த வெற்றிடத்திலா கடவுள் எங்கே இருக்கிறார் என்பதை அதி விரைவில் கண்டுபிடித்துச் சொல்லுங்கய்யா.

அந்தக் கண்டறியப்படாத கடவுளை வைத்துக்கொண்டு இங்குள்ள மதவாதிகளும், மகான்கள் அவதாரங்கள் எனப்படும் ஆன்மிகவாதிகளும் செய்யும் அலப்பறை கொஞ்சநஞ்சமல்ல.

இவர்களால் மக்கள் பக்திப் பித்தர்களாகிக் கோயில் கோயிலாக அலையும் பரிதாபத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.

ஆகவே.....

மேற்கண்ட இடங்களில் கடவுள் எங்கேனும் ஒளிந்துகொண்டிருக்கிறாரா, அல்லது அப்படியான ஒரு நபர் எங்கேயும் இல்லையா என்பதை விரைவில் கண்டறிந்து அறிவியுங்கள் அய்யா!