ஞாயிறு, 29 செப்டம்பர், 2024

‘தி.லட்டு’... “பெருமாள் பார்த்துக்கொண்டிருக்கிறார்”-குஷ்பு! நடவடிக்கை எப்போது மேடம்?!

லகெங்கும் மிகுந்த பரபரப்பை உண்டாக்கியுள்ள ‘திருப்பதி மாட்டுக் கொழுப்பு கலந்த லட்டு’ப் பிரச்சினை நீடிக்கிறது. குற்றம் புரிந்தவர்களை அடையாளம் கண்டு உரிய தண்டனைகளை வழங்கினால் மட்டுமே பிரச்சினை தீரும்.

அது அத்தனை எளிதல்ல என்றே தோன்றுகிறது.

இந்நிலையில் முன்னாள் நடிகையும் இந்நாள் பிரபல அரசியல்வாதினியுமான ‘குஷ்பு’ வெளியிட்டுள்ள அறிவிப்பு கவனிக்கத்தக்கதாக உள்ளது.

குசுபுவின் அறிவிப்பு:

#கலப்படம் செய்யப்பட்ட திருப்பதி லட்டு விவகாரம் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான இந்து மக்களின் உணர்வுகளையும், நம்பிக்கைகளையும் புண்படுத்தியிருக்கிறது. இதற்குப் பொறுப்பானவர்கள் யாராக இருந்தாலும் அதற்கான விலையைக் கொடுத்தாக வேண்டும். வெங்கடேசப் பெருமாள் பார்த்துக் கொண்டிருக்கிறார்"[vikatan.com/]#

‘வெங்கடேசப் பெருமாள் பார்த்துக்கொண்டிருக்கிறார்’ என்று குசுபு குறிப்பிட்டிருப்பதன் மூலம் பெருமாள் பார்ப்பதை அவர் பார்த்திருக்கிறார் என்று தெரிகிறது[பெருமாள் பார்ப்பதை அற்ப மனிதர்களால் பார்க்க இயலாது. இத்தொடர்பு ஞானிகளுக்கும் மகான்களுக்கும்கூட வாய்க்கப்பெறாதது].

லொழுப்பு லட்டு குறித்த நிகழ்வுகளைப் பார்த்துக்கொண்டிருக்கிற வெ.பெருமாள் எடுக்கவிருக்கும் அல்லது, எடுத்த நடவடிக்களைக் குசுபு உரிய நேரத்தில் விவரிப்பார் என்று 100% நம்பலாம்.

குசுபுவுக்கு வெ. பெருமாளின் பக்தர்கள் சார்பில் கோடானுகோடி நன்றிகள்!

                                *   *   *   *   *

https://www.vikatan.com/government-and-politics/actress-and-bjp-cadre-kushboo-about-tirupati-laddu-issue