பக்கங்கள்https://kadavulinkadavul.blogspot.com/p/blog-page_1.html
- 'பசி'பரமசிவம்
- அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.
சனி, 6 டிசம்பர், 2025
”சாமியே சரணம் ஐயப்பா”... அவனின் ஆபாசக் கதை அறியாத அப்பாவிப் பக்தர்களுக்கு...
வெள்ளி, 5 டிசம்பர், 2025
திருப்பரங்குன்றம்... தீர்ப்பளித்த சுவாமிநாதனும் தமிமுன் அன்சாரியின் 'அடடா' விமர்சனமும்!
//திருப்பரங்குன்றத்தில் கார்த்திகைத் தீபம் ஏற்றும் பிரச்சினையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பைக் கண்டிக்கும் வகையில், ‘விசிக எம்எல்ஏ’ தமிமுன் அன்சாரி, மாதவி நீதிபதியாக இருக்கும் இடத்தில் கண்ணகிக்கு நீதி கிடைக்காது என்றும், எழுதுகோலில் நீல நிற மை இருக்கலாம்; காவி இருக்கக் கூடாது என்றும் ‘கடுமையாக’ விமர்சித்துள்ளார்// என்கிறது ஊடகச் செய்தி*
என்னவாகவோ இருக்கட்டும். அதை அறியும் ஆர்வம் அடியேனுக்கு உள்ளது எனினும், தமிமுன் அன்சாரியின் அற்புதமான கவிநயம் மிளிரும் அந்தக் கற்கண்டு நடைத் தமிழை வெகுவாக ரசித்தேன்; மகிழ்ந்தேன்.
மீண்டும் மீண்டும் வாசித்து மகிழத் தூண்டும் அந்த வாசகம்;
“மாதவி நீதிபதியாக இருக்கும் இடத்தில் கண்ணகிக்கு நீதி கிடைக்காது. எழுதுகோலில் நீல நிற மை இருக்கலாம்! காவி இருக்கக் கூடாது.”
* * * * *
‘தீ’யைத் ‘தீபம்’ ஆக்கிய அந்த அயோக்கியர்கள் யார்?!
கற்கள் ஒன்றோடொன்று உரசும்போது ‘தீ’ப்பொறி சிதறுவதையும், காய்ந்த மரங்கள் ஒன்றுடன் ஒன்று உரசி காடுகள் தீப்பற்றி எரிவதையும் ஊன்றிக் கவனித்த காட்டுமிராண்டிகளாக இருந்த நம் மூதாதையர்கள், கற்களை உரசி, சருகுகளிலும் காய்ந்த மரத் துண்டுகளிலும் தீயைப் பற்றவைத்து, பச்சையான இறைச்சியை அதில் சுட்டுச் சுவைகூட்டி உண்ணப் பழகினார்கள்.
அப்போதெல்லாம் ‘தீ’ வெறும் தீயாகவே இருந்தது.
காலப்போக்கில் அதை உருவாக்குவதில் புதிய புதிய வழிமுறைகள் கையாளப்பட்ட நிலையில், இரவு நேரத்தில் இருப்பிடத்தில் சூழ்ந்துள்ள இருளை அகற்ற விளக்குகளைக் கண்டுபிடித்தார்கள்[சிம்னி விளக்கு, மண் விளக்கு, லாந்தர் என்றிப்படி...]. அப்போதும் ‘தீ’ வெறும் தீயாகவே இருந்தது.
சமையலுக்காக அதைப் பயன்படுத்திய நிலையிலும் ‘தீ’ தீதான்.
குவிந்துகிடக்கும் குப்பைகளை அள்ளி எடுத்து அப்புறப் படுத்துவதைத் தவிர்க்க, அவற்றில் தீயிட்டார்கள். பற்றிப் பரவி, பெரு நெருப்பாக அது கொழுந்துவிட்டு எரிந்தபோதும் அது சாதாரணத் ‘தீ’தான். மனிதர்கள் பகை காரணமாக ஒரு தரப்பார் மற்றொரு தரப்பாரின் உடமைகளுக்குத் தீயிட்டு அழித்தபோதும் ‘தீ’ தீயாகவே இருந்தது.
இவ்வாறு, பலவகையிலும் பயன்படுத்தப்பட்ட அதே ‘தீ’தான் கோயில்களில் விளக்கு ஏற்றும்போது ‘தீபம்’ ஆன பேரதிசயம் நிகழ்ந்தது.
அது தானாக நிகழவில்லை; கட்டப்பட்ட கோயில் கலசங்களில், வேத மந்திரங்கள் சொல்லி அவற்றைப் புனிதமாக்குவதாகவும், உள்ளே வைக்கப்படும் சிலைகளுக்கு மந்திரங்கள் ஓதி, அபிஷேகம் செய்து, அவற்றில் கடவுளைக் குடியேற்றுவதாகவும் கதையளந்து மக்களை நம்ப வைத்த ‘அவர்கள்’தான் ‘தீ’யைப் புனிதமான ‘தீபம்’ ஆக்கினார்கள்.
மக்களும் அதை நம்பினார்கள்.
கோயில்களில், உலோகங்களால் ஆன விளக்குகளில் தீபம் ஏற்றும் வழக்கம், காலப்போக்கில் கடவுள்கள் குடியிருப்பதாகச் சொல்லப்படும் மலை உச்சிகளில், அகன்ற பெரிய குண்டாக்களிலும் அண்டாக்களிலும்[கொப்பரை] பிரமாண்டமான திரிகள் வைத்து தீயைப் பற்றவைத்து ‘மகா தீபம்’ ஏற்றுவது வழக்கத்திற்கு வந்தது.
வெறும் ‘தீ’, இன்று மக்களுக்கிடையேயான மோதல்களுக்கும் கலவரங்களுக்கும் காரணமாகவுள்ள ‘மகா தீபம்’ ஆன கதை இதுதான்!
வியாழன், 4 டிசம்பர், 2025
திருப்பரங்குன்றம் பிரச்சினை... நயினார் பக்தியை மெச்சி ஓடோடி வந்து உதவிய இறைவன்!!!
"திருப்பரங்குன்றம் வழக்கில் இன்று வந்திருப்பது இறைவனின் தீர்ப்பு” என்று சற்று முன்னர், ஊடகவியலாளர் பேட்டியில் நயினார் நாகேந்திரன் கூறினார்[ராஜ் தொ.கா].
குறிப்பாக, தமிழர்களுக்கிடையேயான வழக்கில் இறைவன் தீர்ப்பளித்தது ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் பரவசத்தில் ஆழ்த்துகிறது.
ஒரு தமிழனாக நாமும் பரவசப்படுகிறோம். நயினார் நாகேந்திரன் அவர்களிடம் ஒரு கோரிக்கையையும் சமர்ப்பிக்கிறோம்.
நயினார் அவர்களே,
நீங்கள் 100% உண்மையான பக்தர் என்பதால்தான் இறைவனே தாமாக முன்வந்து உதவியிருக்கிறார்.
ஆகவே, இனியும் இந்தியாவெங்கும் உள்ள இது மாதிரியான வழக்குகளில் உதவுமாறு, பரிசுத்தப் பக்திமானான நீங்கள் வேண்டிக்கொண்டால், சந்தேகத்திற்கு இடமின்றி இறைவன் மனமுவந்து உதவி செய்வார்.
வேண்டிக்கொள்ளுங்கள் நயினார்.
உங்கள் வேண்டுதலுக்குப் பிறகு இந்த மண்ணில் நீதிமன்றங்களின் தேவையே இல்லாமல்போகும். இவற்றிற்காக அரசு கோடிக்கணக்கிலான ரூபாய் செலவிடுவது தவிர்க்கப்படும்.
இனியும் தங்களின் மக்கள் பணி சிறக்க மனமுவந்த வாழ்த்துகள்!
‘ஏவிஎம்’ சரவணன்> நேற்று பிறந்த நாள் கொண்டாட்டம்> இன்று உயிரிழப்பு... நல்ல சாவு!
பெரும் செல்வந்தராயினும் தன்னடக்கம் என்னும் உயரிய பண்பினராக வாழ்ந்தவர் ‘ஏவிஎம்’ சரவணன் அவர்கள். இரு கைகட்டி, சற்றே தலை தாழ்த்தி, அடங்கி ஒடுங்கிய கோலத்தில் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை வழக்கமாக்கிக்கொண்ட பெருந்தன்மையாளர் அவர்.
“அடுத்த பிறவியில் என்னவாகப் பிறப்போம்? சொர்க்கமா நரகமா செத்த பிறகு நமக்கு வாய்க்கவிருப்பது எது?” என்றெல்லாம் புலம்பிக்கொண்டிராமல், ஆயுள் முழுவதும் இயன்றவரை நல்லவராக வாழ்ந்து, நோய்நொடிகளின் தாக்குதல் இல்லாமல், அமைதியான மனநிலையில் மரணத்தைத் தழுவுவதே விரும்பத்தக்கதாகும்.
அத்தகையதொரு நல்ல மரணம் ‘ஏவிஎம்’ சரவணன் அவர்களுக்கு வாய்த்துள்ளது.
இன்று அதிகாலை ‘மரணம்’ தழுவிய அவர், நேற்று ‘பிறந்த நாள்’ விழா கொண்டாடினார்* என்னும் ஊடகச் செய்தி அதை உறுதிப்படுத்துகிறது.
*https://cinema.vikatan.com/kollywood/tamil-cinema-producr-avm-saravanan-passed-away
புதன், 3 டிசம்பர், 2025
காலங்காலமாய்ச் 'சொர்க்க வாசல்' காட்டுகிறார்கள்! 'சொர்க்கம்' காட்டுவது எப்போது?!
//ஜனவரி 13ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி தினம். இதற்காக 13ஆம் தேதியிலிருந்து 22-ஆம் தேதி வரை சொர்க்க வாசல் தரிசனத்திற்குப் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். ஜனவரி 13ஆம் தேதி அதிகாலை 2:00 மணிக்குச் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது// https://temple.dinamalar.com].
செவ்வாய், 2 டிசம்பர், 2025
திரு அண்ணாமலையாரும் திரு காடாத் துணியும்!!
திங்கள், 1 டிசம்பர், 2025
அண்டவெளியில் உள்ள அனைத்தும் உருவாகக் காரணம் அணுக்களே; ஆண்டவன் அல்ல!
*** //அணுக்கள் என்பவை பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் பொருட்களையும் உருவாக்கும் சிறிய அலகுகள்// -https://education.nationalgeographic.org/resource/nuclear-energy/
***//atoms are now understood to be fundamental building blocks of matter…..// -https://medium.com/starts-with-a-bang/the-atom-lost-its-original-me aning-and-thats-good-for-science-bc39e828e75b
ஞாயிறு, 30 நவம்பர், 2025
பாவத்திற்குச் சம்பளம் தருபவர் ‘இல்லாத’ கடவுள் அல்ல; மனிதர்களே!
*‘பாவத்தின் சம்பளம் மரணம்’[கடைசிப் பத்தி]
சனி, 29 நவம்பர், 2025
நம் பிரதமருக்கு உலகின் உயரமானதொரு[600 அடி] தங்கச் சிலை வைப்போம்!
//தெற்குக் கோவாவில் உள்ள ஸ்ரீ சம்ஸ்தான் கோக்கரன் பர்த்தகலி ஜீவோட்டம் மடத்தின் 550ஆவது ஆண்டினைக் கொண்டாடும் சார்தா பஞ்சாஷ்டமனோத்சவ நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அங்கு வெண்கலத்தால் செய்யப்பட்ட 77 அடி உயர[உலகின் அதிக உயரமான ராமரின் வெண்கலச் சிலை] ராமரின் திருவுருவச் சிலையைத் திறந்து வைத்தார். ஜீவோட்டம் மடம் உருவாக்கியுள்ள ராமாயண நிகழ்வுகளைச் சித்தரிக்கும் பூங்கா தோட்டத்தையும் அவர் திறந்து வைத்தார்.....
சிறப்பு அஞ்சல் தலை & நினைவு நாணயத்தை வெளியிட்டு உரையாற்றிய பிரதமர் மோடி, "இன்று இந்தியா ஒரு கலாச்சார மறுமலர்ச்சியை அனுபவித்துவருகிறது. அயோத்தியில் ராமர் கோயில் மறுசீரமைப்பு, காசி விஸ்வநாதர் கோயில் விரிவாக்கம் & புதுப்பித்தல், உஜ்ஜயினியில் உள்ள மகாகாலேஸ்வர் கோயில் விரிவாக்கம் ஆகியவை நாட்டில் மீண்டும் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு & ஆன்மிகப் பாரம்பரியத்தின் தீவிர மறுமலர்ச்சியை எடுத்துக்காட்டுகின்றன//[செய்தி*]
ஆன்மிகத் துறையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தவும், பக்தர்களின் எண்ணிக்கையைப் பெருக்கவும் கோயில்கள் கட்டுதல், விரிவாக்கம் செய்தல், புதுப்பித்தல் என்று மோடி ஆற்றிய/ஆற்றும் பணிகள் அளப்பரியன.
உலகச் சுற்றுலாச் செல்வதற்குச் செலவழிக்கும் நேரத்து இணையாக இதற்குச் செலவழிக்கிறார் என்று உறுதிபடச் சொல்லலாம்.
மேலும், 100% கற்பனைப் படைப்பான ராமாயணத்தின் கதாநாயகன் ராமனை ஒரு கடவுளாக[ஏற்கனவே கடவுள் ஆக்கப்பட்டவன்] மக்களின் மனங்களில் பதியச் செய்ய.....
வெளியூர்ப் பயணங்களில், ஆங்காங்கே உள்ள பிரபலமான கோயில்களுக்குப் பரிவாரங்களுடன் செல்லும்போதெல்லாம், அர்ச்சகர்கள் இவருக்கு மலர் மாலை அணிவித்துக் கிரீடம் சூட்டி வரவேற்பதையும், தான் குனிந்து தரை தொட்டு, அல்லது குப்புற விழுந்து சாமி கும்பிடுவதையும், நாட்டு மக்கள் கண்டு மெய் சிலிர்க்கும் வகையில் காணொலியாக்கி, அவற்றை ஊடகங்களில் வெளியிடுதல் போன்ற இவர் ஆற்றிய/ ஆற்றும் இறைத் தொண்டு அளவிடற்கரியது.
சுருங்கச் சொன்னால், இவர் பக்தி நெறி பரப்புவதற்கென்றே கடவுளால் இம்மண்ணுக்கு அனுப்பப்பட்ட ஓர் ஆன்மிக ஞானி என்று உறுதிபடச் சொல்லலாம்.
இத்தகையதொரு அர்ப்பணிப்பாளர் இந்நாள்வரை இந்த மண்ணில் அவதரித்ததில்லை என்பதால்.....
ஒட்டுமொத்த உலகமும் வியக்கும் வகையில், 600 அடி[உலகிலேயே அதிக உயரமானது> வல்லபாய் படேல் சிலை 597 அடி]யில், தங்கத்தால் ஆனதொரு சிலையை நிறுவுவது இந்தியக் குடிமக்களின் கடமை ஆகும்.
வெள்ளி, 28 நவம்பர், 2025
நாள்தோறும் முட்டை சாப்பிடுவது நல்லதா கெட்டதா?
முட்டையில் கொழுப்பு அதிகம் இருப்பதாக அஞ்சி அதை உண்பதைப் பெரும்பாலோர் தவிர்க்கிறார்கள்.
உண்மையில் புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள், கோலின், செலினியம், ஃபோலேட், இரும்பு போன்ற தாதுக்களும், பயோட்டின், பி12, ஏ, டி, ஈ கே போன்ற வைட்டமின்களும், தசைகள் & இணைப்புத் திசுக்களுக்கு அத்தியாவசியமான அமினோ அமிலங்களும் நிறைந்தது முட்டை. இதில் லுடீன், ஜீயாக்சாண்டின் எனப்படும் ஆக்ஸிஜனேற்றிகளும் உள்ளன.
முட்டையில் நிறைவுற்ற கொழுப்புகள் குறைவாகவே உள்ளன. எனவே, பெரும்பாலும் முட்டையால் கொழுப்பு அதிகரிக்காது; இது கண்புரை உருவாவதைத் தடுக்கிறது; மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது; தசைகளை வலுப்படுத்துகிறது; ஹார்மோன்களைச் சமநிலைப்படுத்துகிறது. இதனால் HDL[நல்ல கொழுப்பு] அளவு கூடுகிறது.
வெள்ளை, பழுப்பு என்னும் இரு நிறங்கள் கொண்ட முட்டைகளும் உடம்புக்கு நன்மை பயப்பனவே.
ஆக, தினமும் முட்டை உண்பதால் பல நன்மைகள் உண்டே தவிர, தீமைகள் இல்லை என்பது அறியத்தக்கது.
* * * * *
வியாழன், 27 நவம்பர், 2025
தைராய்டு புற்று நோய்... ஒரு ஊசி மருந்து ரூ3.55 லட்சமாம்? அடக் கடவுளே!
பிரபல கன்னட நடிகர்களில் ஒருவரான ஹரிஷ் ராய், தனது 55ஆவது வயதில் தைராய்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். புற்று வயிற்றுக்கும் பரவியதால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் காலமானார் என்பது செய்தி*
அவரின் மறைவு குறித்த செய்தியில், தைராய்டு சிகிச்சைக்கான மருத்துவச் செலவு பற்றிய விவரமும் கீழ்க்காணும் வகையில் வெளியாகியிருந்தது.
இப்படி லட்சக்கணக்கில் செலவு செய்தாலும், தைராய்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் உயிர்பிழைப்பது அரிது என்னும் நிலையில்***, சாமானியர்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டால் சிகிச்சை பெறுவதற்கே வழியில்லை என்பது மிகப் பெரிய சோகம்.
ஆகவே, “அயல் கிரக ஆராய்ச்சி, உயிர்களைப் பலிகொள்ளும் கொடூர ஆயுதங்களைக் கண்டுபிடிப்பது, சொகுசுப் பயணத்திற்கான நவீன வாகனங்களை உற்பத்தி செய்வது போன்றவற்றிற்கு அறிவியலைப் பயன்படுத்தாமல், புற்றுநோய் போன்ற எளிதில் குணப்படுத்த இயலாத நோய்கள் குறித்த ஆராய்ச்சிக்கு அதை பயன்படுத்துவது மனித இனத்திற்கு மிகவும் நன்மை பயப்பதாக அமையும்” -இப்படிச் சொல்ல வேண்டியவர்கள் அறிவியல் ஆய்வில் முன்னணி வகிக்கும் நாடுகளின் ஆட்சியாளர்கள்.
* * * * *
***//தைராய்டு நோயை முழுமையாகக் குணப்படுத்த முடியாது என்றாலும், மருந்துகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் அதைத் திறம்பட நிர்வகிக்கலாம். தைராய்டு கோளாறுகள் உள்ளவர்கள், தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டைச் சீராகப் பராமரிக்கத் தொடர்ந்து மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்// -கூகுள் AI
புதன், 26 நவம்பர், 2025
'மசுரு' விதி!
இடி மின்னலுடன் மழை பொழிகிறது. தன் இருப்பிடத்திலிருந்து ஒருவன் வெளியே வருகிறான். சக்தி வாய்ந்த மின்னல் பளீரிட, அவன் பார்வை பறி போகிறத
பேய் மழையின்போது, மிதி வண்டியில் செல்கிற ஒருவன், வேரோடு சாய்ந்த ஒரு மரத்தடியில் சிக்கி உயிரிழக்கிறான்.

கடவுளா?
ஒரு தனி மனிதனைத் தண்டிப்பதற்காக ஒரு மின்னலா? மின்னலடிக்கும் போது அவன் வெளியே வந்தது கடவுளின் செயலா?
சரியாக மரம் சாய்கிற நேரத்தில் மிதி வண்டிக்காரனை அங்கே கொண்டு சேர்த்ததும் அவர்தானா?
இவை எல்லாமே கடவுளால் உருவாக்கப்பட்ட ‘விதி’ காரணமாக நடை பெறுகின்றனவா?
அளவிடற்கரிய அண்டவெளியில் இடம்பெற்ற அத்தனை பொருள்களும் உயிர்களும் விதிக்கப்பட்டபடிதான் தோன்றி இயங்கி மறைகின்றனவா?
அத்தனை மரங்களுக்குமா? புல், பூண்டு, தூசு, தும்பு, அணு, அணுப்புள்ளி என்று எல்லாவற்றுக்குமா?
ஏதேனும் ஒரு விலங்கின் தலையில் உருக்கொண்டு, தோன்றி, வளர்ந்து, உதிர்கின்ற 'மயிருக்கும்’கூட தலை எழுத்து உண்டா?
இவ்வாறாக எழுப்பப்படும் எண்ணற்ற கேள்விகளுக்குச் சரியான விடை அறிந்து சொன்னவர் எவருமில்லை.
சொல்லப்படும் பதில்கள் எல்லாம் அனுமானங்களே.
அனுமானங்களைப் பதில் ஆக்குவதும், அவற்றை ‘உண்மை’ என நம்ப வைப்பதும் மன்னிக்க முடியாத குற்றங்கள்.
எதுவும் புரியாத நிலையில், “புரியவில்லை” என்று ஒத்துக் கொள்வது பெருந்தன்மை.
செவ்வாய், 25 நவம்பர், 2025
ராமர் ‘கைவசம்’ இருக்க 2047வரை காத்திருப்பது தேவையா மோடி?!
மோடி: “அயோத்தி ராமர் கோவில் கொடியேற்ற விழாவை முன்னிட்டு ஒட்டு மொத்தத் தேசமும், உலகமும் ராமரின் பக்தியிலும், உணர்விலும் மூழ்கி உள்ளன.....”
நாம்: உலக மக்கள் தொகையில், பெரும்பான்மையினர் பக்தி இல்லாதவர்களாகவும், ராமன் அல்லாத சாமி பக்தர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை இந்த ராமனடிமைக்கு யாராவது எடுத்துச் சொல்லுங்கய்யா.
மோடி: “அயோத்தியில் இன்று காவிக் கொடி ஏற்றியது வரலாற்றுச் சிறப்பு மிக்கது. இது கொடி அல்ல, இந்தியாவின் கலாச்சார அடையாளம்.”
நாம்: ராம பக்தர்கள் என்னும் ஒரு மிகச் சிறுபான்மைக் கும்பலில் கலாச்சார அடையாளமே தவிர, பல்வேறு இனத்தவரையும் மதத்தவரையும் உள்ளடக்கிய இந்தியாவின் கலாச்சார அடையாளம் அல்ல இது. இந்த உண்மையைக்கூட அறியாத தற்குறிதான் இந்த இந்தியாவின் பிரதமர்.
மோடி: “வாய்மையே வெல்லும் என்பதை இந்த ராமர் கொடி காட்டுகிறது......”
நாம்: பொய்களை மட்டுமே பரப்பி ஒரு நபர்[மோடி] அப்பாவி முட்டாள்களை ஏமாற்றி, தொடர்ந்து இந்த நாட்டை ஆள முடியும் என்பதைக் காட்டுகிறது இக்கொடி.
மோடி: “கடந்த 11 ஆண்டுகளில், பெண்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பழங்குடிச் சமூகங்கள், தாழ்த்தப்பட்டோர், விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள் என்று சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் வளர்ச்சி அடை ந்துள்ளனர்.”
நாம்: ஒவ்வொரு பிரிவினரும் வளர்ச்சியடைந்த லட்சணத்தைக் கீழே இடம்பெற்றுள்ள ஆதாரபூர்வமானதொரு பட்டியல் மூலம் அறியலாம்***
மோடி: “நாடு சுதந்திரத்தின் 100 ஆண்டுகளைக் கொண்டாடும் 2047ஆம் ஆண்டுக்குள், அனைவரின் முயற்சிகளாலும் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவோம்.”
நாம்: எப்போதும் இவர்[மோடி] ‘கைவசம்’ ராமச்சந்திர மூர்த்தி இருக்கையில், இன்னும் 20 ஆண்டுகளுக்கும் மேலான அவகாசம் தேவையே இல்லை[இவருக்கு வாக்களிக்கும் களிமண்டையர்கள் மூளையில் இதெல்லாம் உறைக்குமா?].
***நாட்டில் வறுமையின் பிடியில் சிக்கியுள்ள முன்னணி மாநிலங்கள்:
பீகார்[முதலிடம்]. அங்கு ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 37 விழுக்காட்டினர் வறுமையில் வாடுவதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ஜார்க்கண்ட்[2ஆம் இடம்]: 35 விழுக்காடு.
மேகாலயா[3ஆம் இடம்]: 32.4 சதவீதம்.
உத்தரப்பிரதேசம்[4ஆம் இடம்]: 26.3 விழுக்காடு.
மத்திய பிரதேசம்[5ஆம் இடம்]: 25.3 விழுக்காடு.
https://www.puthiyathalaimurai.com/india/poverty-line-in-india
திங்கள், 24 நவம்பர், 2025
“இந்துக்கள் இல்லையென்றால் உலகம் அழியும்”... ஞானி மோகன் பகவத்!!!
மனித நாகரிகம் என்பது மாற்றங்களுக்கு உள்ளாவது.
பழைய நாகரிகங்கள், காலவெள்ளத்தில் மாறுதல்களுக்கு உள்ளாகிப் புதிய நாகரிகங்களாக உருவாவது இயற்கை.
மனிதர்கள் ஓர் இனத்தை[மனித இனம்]ச் சார்ந்தவர்கள் ஆயினும், அவர்கள் வாழும் நாட்டுச் சூழ்நிலைக்கேற்பவும், மனநிலைக்கேற்பவும் அவர்களின் நாகரிகமும் மாறுபடும்; அழிதலும் நிகழும்.
மாறுதலுக்கு உள்ளாகாத, அல்லது அழியாத மனித நாகரிகம் என்று எதுவும் இல்லை. இந்தியா என்னும் நிலப்பகுதியில்[ஆங்கிலேயரின் வருகைக்குப் பின்னரே இந்தியா என்றொரு நாடு உருவானது. ‘பாரதம்’ என்னும் பெயரில் ஒரு நாடு இருந்ததற்கான ஆதாரம் ஏதுமில்லை] நிலவிய வேறு வேறு நாகரிகங்களும் இதற்கு விதிவிலக்கானவை அல்ல.
வேறு வேறு நாகரிகங்களை உள்ளடக்கிய இந்திய மண்ணில், ‘இந்துச் சமூகம்’ என்ற ஒன்று என்றும் இருந்ததில்லை; இன்றும் இல்லை. பல்வேறு இனங்கள் மட்டுமே உள்ளன.
இஸ்லாம், கிறித்துவம் போன்ற மதச் சார்புடையவர்களை ஒதுக்கி, எஞ்சியுள்ளவர்களை[பல இனத்தவர்] ‘இந்துக்கள்’ ஆக்கியவர்கள் இந்து ஆதிக்க வெறியர்கள்.
வரலாறு இதுவாக இருக்க.....
ஏதோ ஒன்று இருக்கிறதாம். அந்த ஏதோ ஒன்று எது? அது இந்துமத வெறி.
மேலும், “பாரதம் என்பது அழியாத நாகரீகத்தின் பெயர். நமது சமூகத்தில் ஒரு வலையமைப்பை உருவாக்கியுள்ளோம். அதனால் இந்துச் சமூகம் எப்போதும் இருக்கும். இந்துக்கள் இல்லாமல் போனால் உலகம் இல்லாமல் போய்விடும். உலகை நிலை நிறுத்துவதற்கு இந்துச் சமூகம் மையமானது” என்றும் கதையளந்திருக்கிறார்.
உலகின் தோற்றம் குறித்த உண்மை அறியப்படாதது போலவே, இதன் அழிவு எப்போது நிகழும் என்பதும், அது எவ்வகையானதாக இருக்கும் என்பதும் எவருக்கும்[விஞ்ஞானிகள் உட்பட] தெரியாது. அழிவு நிகழுமாயின், இந்துச் சமூகமோ விந்துச் சமூகமோ வேறு எந்தச் சமூகமோ எதனாலும் உலகை நிலைநிறுத்த இயலாது.
‘ஆர் எஸ் எஸ்’ என்னும் கும்பலின் ஆதிக்கம் நீடித்தால், உலகம் அழிகிறதோ அல்லவோ, இந்து மதம் அழியும் என்று வேண்டுமானால் உறுதிபடச் சொல்லலாம்.
ஞாயிறு, 23 நவம்பர், 2025
எத்தனைப் பிணங்கள் விழுந்தால் இந்தி வெறியன்கள் திருந்துவான்கள்?!
சனி, 22 நவம்பர், 2025
கிறங்கடிக்கும் இசை மேதை ரஹ்மானின் கலங்கடிக்கும் ‘சூபித்துவம்’ தத்துவம்!
“ஏ.ஆர். ரஹ்மான், சமீபத்திய யூட்யூப் பாட்காஸ்ட் ஒன்றில் மதங்கள் குறித்துப் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “நான் எல்லா மதங்களுக்கும் ரசிகன். இஸ்லாம், இந்து மற்றும் கிறிஸ்தவ மதங்களைப் படித்திருக்கிறேன்...” -இது ‘நக்கீரன்’ செய்தி*
இஸ்லாமியரான இந்த இசை மேதை, அனைத்து மதம் சார்ந்த மக்களின் ஆதரவைப் பெற்றிட மேற்கண்டவாறு பேசியிருக்கிறார். இதில் விமர்சிக்க ஏதுமில்லை.
இசையரசரே,
‘’இறப்பது’ என்றால் எல்லோருக்கும் தெரியும். அதென்னய்யா இறப்பதற்கு முன்பு இறப்பது?
மனிதராகப் பிறந்த அத்தனைப் பேருமே ஒரு முறைதான் இறக்கிறார்கள். அந்த ஒரு முறை இறப்பின்போதே ஒட்டுமொத்த உடம்பும் மிச்சம் தொச்சம் என்று எதுவும் இல்லாமல் முற்றிலுமாய் அழிந்துபோகிறது.
மீண்டும் சொல்கிறோம்... இறப்பது என்பது ஒரே ஒரு தடவை மட்டுமே முழு உடம்பும் அழிந்துபோகிற ஒரு நிகழ்வு.
அவ்வாறு இறந்துபோவதற்கு முன்பு ஒரு முறை இறந்து காட்டுங்கள் என்கிறீரே, சொல்லுகிற நீர் மட்டுமல்லாமல், சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கிற[+வாசித்துக்கொண்டிருக்கிற] அத்தனைப் பேருமே முழுப் பைத்தியங்களா?
இறக்கும் முன்பு இறப்பதென்பது[திரை நரை என்று ஏதோ குறுக்கே இருப்பதாக உளறியிருந்தாலும்] காமம், ஆசாபாசம், பொறாமை போன்ற அனைத்தையும் துறந்து, உணர்ச்சியற்ற சவம் போல ஆவது என்றும் சொல்லியிருக்கிறீர்.
இது நடைமுறைச் சாத்தியமே இல்லாத ‘கற்பனா வாதம்’. இதைப் பேசுகிற சில மதங்களைப் போன்றதுதான் எங்களின் இஸ்லாம் மதமும் என்பதை உங்களின் இந்தப் பேச்சின் மூலம் உலகறியச் செய்திருக்கிறீர்.
மேலும், கடவுளைப் போல ஆகலாம் என்கிறீர். அப்படி ஆனவர்களுக்கான பட்டியலை எவரேனும் தந்திருக்கிறார்களா?[இதைக் கேட்பதற்கான காரணம், சூபித்துவம் மூலம் அடியேனுக்கும் கடவுளைப் போல ஆக வேண்டும் என்னும் ஆசைதான். ஹி... ஹி... ஹி!!!].
ரஹ்மானே,
அற்புதமானதொரு இசையமைப்பாளர் என்னும் முறையில் உலகளவில் பிரபலமானவராக உள்ள நீர், இனியும் இம்மாதிரிப் பித்துக்குளித்தனமாக ஏதும் உளறி வைக்க வேண்டாம் என்பது என் வேண்டுகோள்.
வேண்டுகோள்தான்; அறிவுரையல்ல.
https://www.nakkheeran.in/cinema/ar-rahman-about-releigion-10801760*









