வியாழன், 17 ஏப்ரல், 2025

வறுமையில் வாடும் சாதியாருக்கு அரசாங்கச் செலவில் கோயில்!!![பரிந்துரைப் பதிவு]


“கடவுள் என்றொருவர் இருப்பதே உறுதிப்படுத்தப்படாத நிலையில், ஏன் இப்படிக் கண்ட கண்ட சாமியின் பெயரால் அடித்துக்கொள்கிறீர்கள்?என்று பகுத்தறிவு பேசி அறியாமையில் உழலும் மனிதர்களைத் திருத்துவது இயலவே இயலாது.

எத்தனை எத்தனைப் பெரியார்கள் வந்து, இன்னும் எத்தனை எத்தனை ஆண்டுகளுக்குப் பரப்புரை செய்தாலும், இவர்களைத் திருத்துவது அத்தனை எளிதல்ல.

மேற்கண்டது[காணொலி] போன்ற பிரச்சினைகள் எங்குமே எழாமலிருக்க, அனைத்துக் கிராமப்புறக் கோயில்களையும் அரசு தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, விழாக்கள் நடத்தும் பொறுப்பையும் ஏற்கலாம்.

ஆனால், கோயிலுக்கு உரிமை கொண்டாடும் ஜாதிக்காரகள் கடும் எதிர்ப்புத் தெரிவிப்பார்கள்[தேர்தலில் வாக்களிக்கமாட்டார்கள்] என்பதால் இது சாத்தியமே இல்லை.

எனவே, இது மாதிரியான நடவடிக்கைகளைத் தவிர்த்துவிட்டு, எந்தெந்த ஊரிலெல்லாம் எந்தெந்தச் சாதியாருக்குக் கோயில் இல்லையோ அந்தந்தச் சாதியாருக்கென்று அரசாங்கம் தனித் தனிக் கோயில் கட்டிக் கொடுக்கலாம்[சாதிக்காரர்களின் எண்ணிக்கையைப் பொருத்து கோயில் எழுப்ப ஆகும் செலவை நிர்ணயிக்கலாம்?].

தங்களுக்கான கோயிலைத் தவிர பிற சாதிக்காரர்களின் கோயிலுக்குள் அவர்களின் அனுமதியில்லாமல் நுழையக்கூடாது என்று ஆணை பிறப்பித்தல் மிக அவசியம்.

திருந்தவே திருந்தாத முட்டாள்களை அவர்கள் வழியில் சென்று திருப்திப்படுத்தினால் மட்டுமே, சாமிகளின் பெயரால் நிகழும் மோதல்களைத் தடுத்திட இயலும் என்பது கருத்தில் கொள்ளத்தக்கதாகும்.

புதன், 16 ஏப்ரல், 2025

கடவுளை நம்புவதால் தடைபடும் ஆறறிவு வளர்ச்சி!!!

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் இயங்கிக்கொண்டே இருக்கின்றன, சூரியனைச் சுற்றியுள்ள கோள்களின் சுற்றுப்பாதையில் இருந்து விண்மீன் திரள்களின் சுழற்சிவரை. 

இயங்குவது நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. விண்வெளியில் அசைவில்லாமல் இருப்பது எதுவும் இல்லை. அசைவற்றிருப்பவை போல் காட்சியளிக்கிற கற்பாறை, இரும்புத்தூண் போன்றவற்றில்கூட இயக்கம்[இதன் விளைவுதான் அவற்றின் உருமாற்றம்] இடம்பெற்றிருக்கிறது.

இந்த இயக்கம்தான் அண்டவெளியின்[பிரபஞ்சம்] அடிப்படை அம்சங்களில் மிக முக்கியமானது.

கோள்கள் மட்டுமல்ல, விண்மீன்கள் மட்டுமல்ல, மிகச் சிறிய துகள்களும்கூட இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றன.

ஏன் இந்த இடைநிறுத்தம் இல்லாத இயக்கம்?

'விண்வெளியில் இரண்டு பொருள்கள் ஒன்றையொன்று நெருங்கி வரும்போது, ​​அவற்றின் பரஸ்பர ஈர்ப்பு விசையால் பெரும்பாலும் அவை மோதுவதற்கு அல்லது பிரிந்து செல்வதற்குப் பதிலாக ஒன்றையொன்று சுற்றி வருவதற்கு இந்த இயக்கம்தான் காரணம்'

இயக்கம் பிரபஞ்சத்தின் உயிர்நாடி. 

இயக்கம் என்பது ஆற்றலின் வெளிப்பாடு.

இந்த இயக்கம் தானாக நிகழ்கிறதா, நிகழ்த்தப்படுகிறதா?

“ஆண்டவனால் நிகழ்த்தப்படுகிறது என்று அறிவியலாளர்கள்[பெரும்பாலோர்] சொல்வதில்லை; சொல்லப்படுவதை ஏற்பதும் இல்லை.

ஏற்றால்.....

கேள்விக்கு விடை தேடும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி விழும். அறிவு வளர்ச்சி முற்றிலுமாய்த் தடைபடும்.

ஆகவே, இவ்வகையான எந்தவொரு கேள்விக்கும் முற்றுப்புள்ளி வைப்பதை அவர்கள் விரும்புவதில்லை.

கேட்கிறார்கள்; கேள்விகளைக் கேட்கிறார்கள். இதனால் அவர்களின் அறிவு வளர்கிறது; அறிவியலும் வளர்ச்சி பெறுகிறது.

முற்றுப்புள்ளி வைப்பவர்கள் மதவாதிகள். கடவுளின் பெயரால் கணக்குவழக்கில்லாமல் மூடநம்பிக்கைகளை உற்பத்தி செய்தவர்கள்... செய்பவர்கள் அவர்கள்!

செவ்வாய், 15 ஏப்ரல், 2025

“செருப்புப் போடமாட்டேன்”... சபதம் செய்த[மோடி பிரதமராகும்வரை] ஹரியானா பைத்தியம்!!!

‘கப்ஸா’ என்னும் அரபுச் சொல்லுக்கு, ‘மெய் என்று நம்பும் வகையில் பேசும் பொய்’ என்று பொருள்.

இதற்கு உதாரணம் தேடி நீங்கள் எங்கும் அலையவே வேண்டாம். தொடர்ந்து வாசியுங்கள்.

திமுக ஆட்சியை அகற்றும்வரை செருப்புப் போடமாட்டேன் என்று நம்ம ஊர்க் கிறுக்கன் அண்ணாமலை சபதம் செய்தது போல,  மோடியின் தீவிர ரசிகனான ராம்பால் காஷ்யப் என்பவன்[ஹரியானாவின் கைதல் மாவட்டத்தைச் சேர்ந்தவன்]. 'மோடி இந்தியாவின் பிரதமரான பிறகு அவரைச் சந்திப்பேன். அப்போதுதான் காலணிகளை அணிவேன்; அதுவரை காலணிகளை அணிய மாட்டேன்" என்று சபதம்[2011இல் சபதம்> 2025வரை>14 ஆண்டுகளாகச் செருப்பணியவில்லை] செய்தானாம்[https://www.vikatan.com].

இவனின் இந்தச் சபதம் ஏற்கத்தக்கதுதான்.

ஆனால்.....

மோடி முதன்முதலாக 2014இல் இந்தியாவின் பிரதமராகப் பதவி ஏற்றபோதே இந்த ‘மெண்டல்’ காலணி அணிந்திருக்கலாம். அல்லது, மோடியால் பாராட்டப்பட வேண்டும் என்று ஆசைப்பட்டிருந்தால் அதையும் நிறைவேற்றியிருக்கலாம்{தகவல் தெரிந்ததும் இவரின் வீடு தேடி ஓடிவந்து தன்னுடைய பொற்கரங்களாலேயே[கடவுளால் அனுப்பப்படவரின் கை சாதாரண மனிதக் கையா என்ன?] அவனுக்குக் காலணி அணிவித்திருப்பார்}.

இப்படியான நிகழ்வு ஏதும் நடைபெறவில்லை.

மாறாக.....

2011ஆம் ஆண்டிலிருந்து வெறும் காலுடனேயே இருந்துவந்த இந்த ஆளுக்கு[ராம்பால் காஷ்யப்], ஹரியானவின் யமுனா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட[2025இல்] பிறகு, மோடி புதிய ஷூவை வழங்கி “இனி இதுபோல செய்யக் கூடாது” என்று கண்டித்தாராம்[மனப்பூர்வமாக அல்ல; இம்மாதிரியான அடிமுட்டாள்கள்தானே அவருக்குத் தேவை].

2014இல் நடைபெற வேண்டிய இந்த நிகழ்ச்சி, 11 ஆண்டுகள் காலதாமதமாக 2025இல் இடம்பெற்றுள்ளது.

இந்தக் காலதாமதமே ‘பாஜக’ சங்கிகளின் திட்டமிட்ட நாடகம் இது என்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது.

மூடநம்பிக்கைகளை வளர்த்தும், அடுக்கடுக்காய் மக்களிடையே இட்டுக்கட்டிய பொய்களைப் பரப்பியும் ஆட்சியைக் கைப்பற்றும் இந்தப் பொய்யர்கள் அரசியல் களத்திலிருந்து விரட்டியடிக்கப்படுவது எப்போது?

* * * * *

https://www.vikatan.com/government-and-politics/modi-criticizes-volunteer-who-went-14-years-without-wearing-shoes

தலைவனின்[மோடி] தந்திரம் தொண்டனின்[அண்ணாமலை] மந்திரம்!!!

பொதுமக்களுக்குப் பணி செய்வதே ஓர் அரசியல்வாதியின் தலையாய கடமையாகும்.

தனக்கானதும் தன்னைச் சார்ந்துள்ள சொந்தபந்தங்களுக்கானதுமான பணிகளைச் செய்வதும் அவருக்குள்ள பிற கடமைகள்தான். ஆனால், இவற்றைப் பொதுமக்கள் அறியும் வகையில்{சுற்றுலாச் செல்வது, கோயிலுக்குப் போவது, பொது இடங்களில் நூற்றுக்கணக்கானவர்கள் மத்தியில் தியானம்[மூச்சுப் பயிற்சி&உடற்பயிற்சி போன்றவற்றால் பயனுண்டு; தியானத்தால் பயன் ஏதுமில்லை] என்னும் பெயரில் ‘பந்தா’ பண்ணுவது போன்றவை} அவர்கள் செய்தல் கூடாது.

{அவதாரி[கடவுள் அவதாரம்] மோடியின் சீடர் அண்ணாமலையார் திருவடி போற்றி!}

இவற்றைத் தவறுகள் என்பதைக் காட்டிலும் மன்னிக்கத் தகாத குற்றங்கள் என்பதே பொருந்தும்.

இம்மாதிரிக் குற்றங்களைச் சர்வ அதிகாரம் படைத்த மோடி செய்வதை[உலகம் அறிந்திட மோடி கையாளும் தந்திரமும்கூட] ஒட்டுமொத்த உலகமும் அறியும்.

மோடியின் ஆயுட்கால அடிமைகளில் முதல்நிலை வகிக்கும் அண்ணாமலை தன் தலைவனான மோடியின் மேற்கண்ட தந்திர உத்தியைத் தனக்கான ‘செயலூக்கி மந்திரமாக’ ஏற்றிருக்கிறார் என்பதைக் கீழ்க்காணும் ஒரு நிகழ்வு உறுதிப்படுத்துகிறது.

#ஆன்மீகப் பயணமாக இமயமலை சென்றுள்ள பாஜக தேசியப் பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, ஸ்ரீ ஸ்ரீ மகாவதார் பாபாஜி குகையில் தியானம் செய்தார்# [தினத்தந்தி].

இந்தக் கொத்தடிமையைத் தமிழ்நாடு ‘பாஜக’ தலைவர் பதவியிலிருந்து நீக்கியதன் தீய விளைவு இதுவாகும்..

‘திமுக’ ஆட்சி மீது குற்றங்கள் கண்டுபிடித்துப் பட்டியலிடுவது, அடுக்கடுக்காய்ப் பொய்கள் பேசுவது, பொது இடங்களில் சவுக்கால் அடித்துக்கொண்டு சபதம் ஏற்பது போன்றவற்றை முழுநேரக் கடமையாகச் செய்துகொண்டிருந்தவருக்கு வேறு வேலை எதுவும் இல்லாததால், மேற்கண்ட தன் தன்னிகரில்லாத் தலைவனின் வழியைப் பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்.

இதை இவர் தவிர்க்க வேண்டுமாயின், திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகளை வசைபாடுவதற்கும், சவால்கள் விடுவதற்கும், சபதங்கள் ஏற்பதற்கும் வசதியாக மீண்டும் தமிழ்நாடு ‘பாஜக’ தலைவராக அண்ணாமலையையே நியமிக்கலாம்[பாஜக தலைமை, நயினார் நாகேந்திரனுக்கு  வேறு நல்ல பதவி கொடுத்துச் சமாளிக்கலாம்].

அடியேனின் இந்த ஆசை நிறைவேற, பரலோகத்திலிருந்து இந்த நரகலோகத்திற்கு மோடியை அனுப்பி வைத்த எல்லாம் வல்ல இறைவன் கருணை காட்டுவாராக!

  * * * * *

https://www.dailythanthi.com/news/tamilnadu/annamalai-meditation-in-sri-mahavatar-babajis-cave-1152732?utm_source=newsshowcase&utm_medium=gnews&utm_campaign=CDAqKggAIhBAUQ6VKwIUuERCN2qDtgZWKhQICiIQQFEOlSsCFLhEQjdqg7YGVjDto8AD&utm_content=rundown

திங்கள், 14 ஏப்ரல், 2025

கன்னடம் வாழ்க! கன்னடச் சகோதரர்களும் வாழ்க!!

தமிழ்நாடு மட்டுமின்றித் தென்னிந்தியாவின் மற்றொரு மாநிலமான கர்நாடகாவிலும் இந்தித் திணிப்பிற்கு[இந்தி மொழிப் பாடத்தில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்தனர்] எதிராகக் கர்நாடகாவில் உள்ள பள்ளி மாணவர்கள் வீதியில் இறங்கிப் போராடினார்கள். இந்தி எதிர்ப்புக் குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன.

மெட்ரோ ரயில் போன்ற பொது இடங்களில் இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தில் கன்னட அமைப்புகள் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகின்றன.

இதனிடையே, கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின்[மிகவும் பெரியது] அறிவிப்புப் பலகையில், சத்தமே இல்லாமல் இந்தி மொழி அதிரடியாக நீக்கப்பட்டுக் கன்னடமும் ஆங்கிலமும் மட்டுமே இடம்பெற்றுள்ளன.

கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் கன்னட மொழியின் பயன்பாடு மிகக் குறைந்த அளவில் உள்ளதால், அது குறித்து அங்குள்ள கன்னடர்களும், கன்னட அமைப்பினரும் மிக அதிக அளவில் கவலையடைந்திருக்கிறார்கள்.

இதன் விளைவுதான் மேற்கண்ட அதிரடி நடவடிக்கை.

இந்த நடவடிக்கையைச் சமூக வலைதளங்களில் கன்னட அமைப்பினர் கொண்டாடிவருகின்றனர்.

* * * * *

https://minnambalam.com/hindi-removed-at-bengalurus-kempegowda-airport/

ஞாயிறு, 13 ஏப்ரல், 2025

அந்த ‘ஜந்து’வைத் திருத்துவது தன்மானத் தமிழர்களின் கடமை!!!

சனிக்கிழமையன்று மதுரைக் கல்லூரி ஒன்றில் மாணவர்களிடையே உரையாற்றிய அந்த ‘ஜந்து’, ​​இந்துக் கடவுள் ராமருக்கு அஞ்சலி செலுத்துமாறு அழைப்பு விடுத்தது.

அது "ஜெய் ஸ்ரீ ராம்" என்று சொல்ல,  மாணவர்களும் “ஜெய் ஸ்ரீராம்” என்று முழக்கமிட்டார்கள்’ -இது ஊடகச் செய்தி.

உச்ச அதிகாரம் படைத்தவர்கள் கண்டித்தும் திருந்தாமல், தொடர்ந்து அந்த ஜந்து திமிர்த்தனமாய் நடந்துகொள்வதற்குக் காரணமாக இருக்கும் அந்த ‘இரட்டையர்கள்’ யாவர் என்பது தமிழ் மக்களுக்குத் தெரியும்.

மக்கள் மனம் வைத்தால் மட்டுமே அந்த நச்சுப் பாம்பு திருந்தும்; அதை ஆட்டுவிக்கும் அந்த அடாவடியர்களும் திருந்துவார்கள்! 

'சப்கா சாத், சப்கா விகாஸ்'... “இந்த மந்திரம் நம் நாட்டின் கொள்கை” -மோடி!!!

வெள்ளிக்கிழமையன்று தனது பயணத்தின்போது, ​​பிரதமர் மோடி இசாகரில் உள்ள ஸ்ரீ பரமஹன்ஸ் அத்வைத் மந்திர் மற்றும் குருஜி மகாராஜ் கோவிலில் பிரார்த்தனை செய்தார்[ஊடகச் செய்தி].

மோடி இந்த இடத்தை, “அழியாத ஞானத்தை வெளிப்படுத்தும் ஆன்மீக மையம்” என்றார்.

மந்திரில் இருப்பதை உண்மையிலேயே பாக்கியமாக உணர்கிறேன்” என்றும் பெருமிதப்பட்டிருக்கிறார்[இந்த நாட்டின் பிரதமராக இருப்பதை அவர் பாக்கியமாகக் கருதவில்லை?]

அவர் கோயில் வளாகத்தையும் சுற்றிப் பார்த்தார்.

“ஸ்ரீ பரமஹன்ஸ் அத்வைத் மடத்துடன் தொடர்புடைய அனைவரும் ஆன்மீகப் பாரம்பரியத்தை வளர்ப்பதற்குப் பங்களித்துள்ளனர்” என்று மடத்துடன் தொடர்புடையவர்களைப் பாராட்டினார்.

ஆனந்த்பூர் தாமில் நிறுவப்பட்ட தியானத்தின் ஐந்து வழிகாட்டும் கொள்கைகளை[தியானமாம். அதில் ஐந்து கொள்கைகளாம். நம்புங்கய்யா]ப் பற்றி அவர் பேசினார்.

இந்த இடத்துடன் தொடர்புடைய துறவிகள் மற்றும் முனிவர்களின் போதனைகளையும் மரபுகளையும் பிரதமர் பாராட்டினார்.

"நமது இந்தியா, நமது சமூகம், ஒரு கடினமான கட்டத்தைக் கடந்து செல்லும் போதெல்லாம், இந்தப் பூமிக்கு வந்து[இவர் கடவுளால் அனுப்பப்பட்டு இங்கு வந்தது போல்] சமூகத்திற்கு ஒரு புதிய திசையை[???] வழங்குகிறார்கள்" என்று அவர் கூறியிருக்கிறார்.

"'சப்கா சாத், சப்கா விகாஸ்' என்ற மந்திரம்... எங்கள் அரசாங்கத்தின் கொள்கை[!?!?!]" என்று உலகறியப் பறைசாற்றியிருக்கிறார்.

ஒரு ‘மந்திரம்’ ஒரு பெரிய நாட்டிற்கான கொள்கையா?

ஒரு மந்திரத்தை நாட்டின் கொள்கையாக அறிவித்த முதல் பிரதமர் உலகில் இவராகத்தான் இருக்கமுடியும்.

இந்த நாட்டின் கதி?!

சனி, 12 ஏப்ரல், 2025

அண்ணாமலையை அவமானப்படுத்திய ‘உள்குத்து’ அமைச்சர் அமித்ஷா!!!

ஆகப் பெரிய மூடநம்பிக்கைக் கட்சியினரின் ஆயுட்கால அடிமையான அண்ணாமலை புத்திசாலியோ அல்லவோ, அவர் மிக மிக மிக நல்லவர்; அப்பாவி; சூதுவாது இல்லாதவர் என்பதில் சந்தேகத்திற்கு இடமே இல்லை.

[இத்தனைப் பணிவு எதற்கு அண்ணாமலை?]

அவமானங்களைப் பொருட்படுத்தாமல் ‘பாஜக’ வளர்ச்சிக்காக இவரளவுக்கு இதுவரை எந்தவொரு த.நா. பாஜக தலைவரும் பாடுபட்டதில்லை.

எவரொருவர் தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்தாலும், இந்த மண்ணில் இக்கட்சி வளரவே வளராது என்பது புரியாத அமித்ஷா, அண்ணாமலையின் தலைவர் பதவியைப் பறித்தார்; இந்திய அளவில் உயர் பதவியொன்றில் அவர் நியமிக்கப்படுவார் என்று அறிவித்த அந்த ‘உள்குத்து’ அமைச்சர், தேசியப் பொதுக் குழு உறுப்பினராக அண்ணாமலையை நியமித்துள்ளார்.

தில்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு உதவியாளருக்கு[பழைய பெயர் ‘பியூன்’] உள்ள அதிகாரம்கூட இந்த உறுப்பினருக்கு இல்லை என்பது 100% உண்மை.

அ.மலை மட்டும் உறுப்பினர் ஆக்கப்படவில்லை; எச்சில் ராஜா, தமிழிசை, பொன்னார், எல்.முருகன், வானதி என்று ஒரு பெரிய பட்டாளமே இந்த உறுப்பினர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

பாவம் அண்ணாமலை.

‘பாஜக’வின் நம்பர் 2 தலைவர் அமித்ஷாவைவிடவும் வேறு எவரும் இவரை இந்த அளவுக்கு இழிவுபடுத்த இயலாது.

அண்ணாமலைக்கு நம் ஆழ்ந்த அனுதாபங்கள்!

* * * * *

https://minnambalam.com/annamalai-get-new-post-in-bjp-when-nainar-become-bjp-president/

தமிழைப் புறக்கணித்து ஆங்கிலம் பேசும் தமிழனும் தாய்மொழி காக்கும் மராட்டியனும்!

காராஷ்டிரா, டோம்பிவ்லியில் இரண்டு பெண்கள் தாங்கள் வசித்து வந்த குடியிருப்புக்கு இருசக்கரவாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, இளைஞர் ஒருவர் அவர்களைத் தடுத்து நிறுத்தி, “இனிமேல் இங்கு மராத்தி மொழியில் மட்டும்தான் பேசவேண்டும்” என்று கூறினார்.

அந்தப் பெண்கல், மராத்தி தெரிந்தவரெனின், "சரி” என்று பதிலளித்துவிட்டுச் சென்றிருக்கலாம்.

மாறாக, “எக்ஸ்கியூஸ்மீ" என ஆங்கிலத்தில் கூறியுள்ளார் ஒரு பெண்..

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர், எக்ஸ்கியூஸ்மீ என மரத்தியில் சொல்ல முடியாதா எனக் கேட்டு 2 பெண்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் அந்த இளைஞருடன் சிலர் சேர்ந்துகொண்டு இரண்டு பெண்களையும் தசரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

அந்தப் பெண்கள் காவல்துறையினரிடம் இது குறித்துப் புகாரளித்துள்ளனர்.

அவர்கள் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது[ibctamilnadu.com/ ].

maharashtra

மராட்டிய இளைஞர்கள் பெண்களைத் தாக்கியது கண்டிக்கத்தக்கது என்றாலும், அவர்களை வழிமறித்துத் தங்கள் தாய்மொழியில்  பேசும்படிச் சொன்னதற்குக் காரணம், அந்த அளவுக்கு அங்கே அவர்களின் தாய்மொழியான ‘மராட்டி’  புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பது அறியத்தக்கது.

தாய்மொழியைப் பாதுகாத்து வளர்க்க இம்மாதிரியான தீவிர நடவடிக்கைகள் தேவையே.

மராட்டி இளைஞர்களிடையே ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் பெரிதும் வரவேற்கத்தக்கது; மகிழ்ச்சியூட்டுவதும் ஆகும்.

“தமிழ் வாழ்க! தமிழ் வெல்க” என்று வெறுமனே வாய் கிழியக் கூச்ச போட்டுக்கொண்டு, தப்பும் தவறுமாகவேனும் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதையே வழக்கமாக்கியுள்ள தமிழர்கள்[குறிப்பாக இளைஞர்கள்] மேற்கண்ட இளைஞர்களிடமிருந்து பாடம் கற்பது மிக அவசியம்.

                                                  *   *   *   *   *

https://ibctamilnadu.com/article/omen-attacked-for-refusing-to-speak-marathi-viral-1744286539?itm_source=parsely-api

வெள்ளி, 11 ஏப்ரல், 2025

பொன்முடியின் ‘ஆபாசப் பேச்சு’... புரியாதவர்களுக்காக!

விலைமாதர் இல்லத் தலைவிக்கும் வாடிக்கையாளனுக்கும் இடையிலான ‘மறைமுக உரையாடலை, சைவ & வைணவச் சமய அடையாளங்களுடன் ஒப்பிட்டு அமைச்சர் பொன்முடி பேசியதை, அமைச்சர் கனிமொழி உள்ளிட்ட பலரும் கண்டித்தார்கள் என்பதைத்தான் ஊடகங்கள் வாயிலாக அறிய முடிந்தது. அவரின் கண்டனத்துக்கு உள்ளான உரையை வாசிக்கும் பேறு[ஹி... ஹி... ஹி!!!] வாய்க்காமல் வருந்தியவர்களில் அடியேனும் ஒருவன்.

நீண்ட நேரத் தேடலுக்குப் பின்னர், ‘யூடியூப்’ காணொலி ஒன்று என் வருத்தத்தைப் போக்கியது.

அமைச்சரின் அந்தக் காணொலிப் பேச்சின் மூலம்தான், விலைமாதர் விடுதிகளில், நின்றுகொண்டோ[வாடிக்கையாளனும் விலைமாதும்] நீட்டிப் படுத்த கோலத்திலோ உடலுறவு கொள்வதற்குத் தனித் தனி ‘ரேட்’ உண்டு என்பதை அறிய முடிந்தது.

இந்த அசிங்கத்தை அம்பலப்படுத்தியதோடு அமைச்சர் தன் பேச்சை முடித்துக்கொண்டிருந்தால் வசுவுகளுக்கு உள்ளாகி அவர் வதைபட்டிருக்கமாட்டார்.

அவர் செய்த மாபெரும் தவறு.....

அந்தப் ‘பலான’ இடத்து ‘நின்றும் நீட்டிப் படுத்தும்’ செய்யும் ஆபாச நிகழ்வைச் சைவ&வைணவ மதக் குறியீடுகளுடன் ஒப்பிட்டதுதான்.

ஒப்பீட்டை, பலான விடுதித் தலைவிக்கும் வாடிக்கையாளனுக்கும் இடையேயான உரையாடல் மூலம் அறியச் செய்திருக்கிறார் அமைச்சர்.

உரையாடல்:

பலான இல்லத் தலைவி: “இது விசயத்தில் நீங்க வைணவமா சைவமா?”

வாடிக்கையாளன்:[கேள்வியின் பொருள் புரியாமல்] “புரியலையே”

தலைவி: “வைணவம்னா[நின்றுகொண்டு.....!] அஞ்சு[ரூபாய்?> எந்தக் காலத்தில்? 1971?]

 சைவம்னா[படுத்த கோலத்தில்....!] பத்து.

அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு[ஆபாசத்தின் உச்சம்; மூடநம்பிக்கைச் சாடலல்ல]ப் பலரும் கண்டனங்கள் தெரிவித்ததாக அறிகிறோம். 

காணொலி:

சிறுமதியாளன் ‘சித்பவானந்தா’ பள்ளி[கோவை]த் தாளாளனைச் சிறையில் தள்ளுக!!!

கோவை மாவட்டம்  கிணத்துக்கடவு அருகே உள்ள கிராமத்தில் உள்ளது ‘சித்பவானந்தா’ பள்ளி.

இப்பள்ளியின் மாணவி ஒருவர் பூப்பெய்திய நிலையில் தேர்வு எழுதச் சென்றார்.

மதத்தின் பெயரால் மடமையை வளர்க்கும் இந்தப் பள்ளி நிர்வாகம் சிறுமியை வகுப்பறையின் படிக்கட்டில் அமரவைத்துத் தேர்வு எழுதச் செய்துள்ளது[செய்தி: ‘பாலிமர் தொ.க.> காலை 06.45[11.04.2015]  செய்தி].

பக்தி வேடம் தரித்துத் தங்களை மகா யோக்கியர்களாக மக்களை நம்பவைத்துக் கோடிகளில் கொள்ளை அடிக்கும் அயோக்கியர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. அவர்களில் பலரும் மூடநம்பிக்கை வளர்ப்பில் முனைப்புடன் செயல்படுபவர்கள்.

‘சித்பவானந்தா’ பள்ளி அவற்றில் ஒன்று.

கொஞ்சமும் தயக்கத்திற்கு இடம்தராமல் பள்ளி உரிமையாளனை{பங்குதார்கள்[?] உட்பட}க் கைது செய்து வழக்கு[இதுவும் வன்கொடுமைதான்]த் தொடுத்துத் தண்டிப்பது தமிழ்நாடு அரசின் தலையாய கடமை ஆகும்[பள்ளியை நடத்தும் பொறுப்பை அரசே ஏற்றல் வேண்டும்].

மு.க.ஸ்டாலின் அவர்கள் தம் கடமையைச் செவ்வனே செய்துமுடிப்பார் என்பது நம் நம்பிக்கை.

                                      *   *   *   *   *

***சிறுமியின் பெற்றோர் புகார் அளிக்க, பள்ளியின் முதல்வர் மட்டும் பணி ‘இடைநீக்கம்’ செய்யப்பட்டிருக்கிறார் என்பது செய்தி.

                                    *   *   *   *   *

தினகரன்[நாளிதழ்]:

கோவை,ஏப்.10: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு செங்குட்டைபாளையம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் 8ஆம் வகுப்பு படித்துவருகிறார். பள்ளியில் தற்போது முழு ஆண்டுத் தேர்வு நடைபெற்றுவருகிறது. இதற்கிடையே அந்த மாணவி கடந்த 5ஆம் தேதி பூப்பெய்தினார்.

அதன்பிறகு கடந்த 7ஆம் தேதி மற்றும் நேற்று நடைபெற்ற தேர்வின்போது, மாணவியை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் படியில் அமர வைத்து தேர்வு எழுத வைத்துள்ளனர். இதனையறிந்த மாணவியின் தாய் பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியபோது அலட்சியமாகப் பதில் கூறியுள்ளனர். எனவே இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

https://www.dinakaran.com/%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/

புதன், 9 ஏப்ரல், 2025

உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்... அமைதி! கடவுள் எண்ணுகிறார்... “ஒன்று இரண்டு மூன்று...”

த்துவம் பேசுவோர், ‘முடிவிலி[Infinite]' பற்றி விவாதிப்பதுண்டு.

அதென்ன ‘முடிவிலி’?

‘முடிவு’ என்று ஒன்று இல்லாதது ‘முடிவிலி’. அதாவது, அது எதுவாயினும் எந்த வரம்பும் இல்லாதது[being without limits of any kind]. 

இதற்கு எடுத்துக்காட்டாக, ஒரு கோட்டில் உள்ள புள்ளிகளை எண்ணுவது, பிரபஞ்சத்திலுள்ள நட்சத்திரங்களைக் கணக்கிடுவது, “ஒன்று... இரண்டு... மூன்று... ” என்றிப்படி எண்களை இடைவிடாமல் எண்ணிக்கொண்டிருப்பது போன்றவற்றைச் சொல்லலாம்.

எண்களை மட்டுமே எண்ணுவது ஓர் எளிய எடுத்துக்காட்டு.

“ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து.....” என்று உண்டு உறங்கிய நேரம் போக வாழ்நாளெல்லாம் எண்ணிக்கொண்டே இருப்பது[இது சாத்தியமா என்று கேள்வி எழுப்ப வேண்டாம், புரிய வைத்திட வேறு வழியில்லை என்பதால்]

‘100000000000000000000000.....’ எண்ணுவது எண்ணுபவர்களின் ஆயுள் உள்ளவரை நிகழும். அப்புறம்?

வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் அதைத் தொடரலாம்.

மனித இனம் உள்ளவரை தொடர்ந்து எண்ணுவது[100000000000000000000000000.....>முடிவில்லை] இயலும்.

இதுவும்கூட மனித இனம் உள்ளவரைதான்.

அப்புறம்?

என்றென்று இருந்துகொண்டே இருக்கிறவர்[‘ஆதி அந்தம்’ இல்லாதவர்] என்று சொல்லப்படுகிற கடவுளிடம்  இந்தப் பொறுப்பை ஒப்படைக்கலாம்[கடவுளால் அனுப்பப்பட்ட மோடியோ கடவுள்களின் குருவான ஜக்கியாரோ சிபாரிசு செய்தால் அவர் சம்மதிப்பார். ஹி... ஹி... ஹி!!!].

ஆனால், “அந்தக் கடவுளின் ‘எண்ணும் செயல்’கூட முடிவு பெறாது” என்பது அறியத்தக்கது.

ஆம், “ஒன்று ஒரண்டு மூன்று நான்கு ஐந்து.....” என்று எண்ணத் தொடங்கிய கடவுள் இன்றளவும்[இந்த நொடிவரை] எண்ணிக்கொண்டே இருக்கிறார்; எண்ணிக்கொண்டே இருக்கிறார்; எண்ணிக்கொண்டே இருக்கிறார்; எண்ணிக்.....

இதைத்தாங்க ‘முடிவிலி’[being without limits of any kind] ன்கிறார்கள் அறிவியலாளர்கள்.

இந்த ‘எண்ணுதல்’ என்னும் ஒரு செயலைச் செய்து முடிப்பதே மனிதர்களுக்குச்[கடவுளுக்கும்கூட] சாத்தியம் ஆகாத நிலையில், படைப்பு, அல்லது கடவுள் குறித்து, ‘ஏன், எப்போது, எப்படி’ என்றெல்லாம் கேள்விகள் கேட்டு, ஆளாளுக்கு ஒரு கடவுளைக் கற்பித்து மதங்களை உருவாக்கி, ஆதிக்க வெறியராய் அடித்துக்கொண்டு செத்தொழிந்தார்கள் நம் முன்னோர்களில் எண்ணற்றவர்கள்; இன்றளவும் சாதல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

இனியேனும், இம்மாதிரியான தவறுகளைச் செய்யாமல், ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தி அமைதியாக வாழ்ந்து முடிப்பதே அறிவுடைமை ஆகும்.

செவ்வாய், 8 ஏப்ரல், 2025

ஆட்டு மூளையன் அண்ணாமலைக்கு.....

 ‘மாநில முதல்வர்’ என்பவர் அந்த மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர். அவர் மக்களின் பிரதிநிதி.

முதலமைச்சரைப் போலவே பிரதம அமைச்சரும் மக்களின் பிரதிநிதிதான்[தேர்ந்தெடுத்தவர்களின் எண்ணிக்கை மாறுபடலாம்].

அந்தப் பிரதிநிதி[பிரதமர்]க்கு இந்தப் பிரதிநிதி[முதலமைச்சர்] அடிமையல்ல.

அவரை இவர் எதிர்கொண்டு வரவேற்பதோ, அவருக்கான நிகழ்வில் கலந்துகொள்வதோ[இருவருக்குமான புரிதலைப் பொருத்தது],  இவரின் விருப்பத்துக்கு உட்பட்டது.

ஒரு மாநிலத்தில் இடம்பெறும் பிரதமரின் நிகழ்ச்சியில் அந்த மாநில முதல்வர் கலந்துகொள்வது கட்டாயம் என்பதற்கான சட்ட விதி எதுவும் இல்லை.

உன் தலைவன் மோடி தமிழ் மக்களுக்குப் பணி செய்ய வந்ததாகச் சொல்லியிருக்கிறாய். அவர் வருவது பணி செய்ய அல்ல; தமிழையும் தமிழினத்தையும் பைசா செலவில்லாமல்[இந்தி& சமஸ்கிருத வளர்ச்சிக்கு ஒதுக்குகிற நிதியையும் தமிழுக்கு ஒதுக்குவதையும் ஒரு முறையேனும் ஒப்பிட்டுப்பார்] புகழ்ந்து பணிய வைப்பதற்காக.

நீ புத்திசாலியோ அல்லவோ, அவ்வப்போதைய உன்னுடைய பேச்சும் நடவடிக்கையும் நீ படு முட்டாள் என்பதையே பறைசாற்றுகின்றன.

உன் தலைவன்[கள்] இடுகிற பணிகளைச் செய்துமுடிப்பதோடு நிறுத்திக்கொண்டு, சுயமாக எதையும் சொல்லாமலோ செய்யாமலோ இருப்பதுதான் உன் அடிமைத் தொழிலுக்கு உகந்ததாக இருக்கும் என்பதை இனியேனும் புரிந்துகொள். 

                                        *   *   *   *   *
பரிந்துரை:
அடிமைத் தொழிலைத் தவிர்த்துவிட்டு, உன் மூதாதையர் செய்துவந்த விவசாயத் தொழிலை மேற்கொள்வது தன்மானத்துடன் நீ வாழ்ந்திடத் துணைபுரியும். செய்வாயா?

திங்கள், 7 ஏப்ரல், 2025

இந்தக் குஜராத்திக்கு[மோடி] இத்தனை வாய்க்கொழுப்பா!?!?!

‘மோடி’ என்பவர் இந்த நாட்டின் பிரதமராக அறியப்படுகிறவர்.

இந்திய அரசாங்கச் சார்புள்ள எந்தவொரு நிகழ்வில் கலந்துகொள்ளும்போதும் இவர் ஒரு ‘இந்தியர்’ ஆகவே கருதப்படுவார்.

தன்னைப் பற்றி எதுவும் குறிப்பிட நேர்ந்தால் ‘நான் இந்தியன் என்றுரைப்பதே பின்பற்றத்தக்க நெறிமுறையாகும்.

மோடியோ பாம்பன் பாலத்தைத் திறந்துவைத்தபோது.....

"இந்தப் பாம்பன் பாலத்தை 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டியவர் ஒரு குஜராத்தி. தற்போது இதே பாம்பனில் இந்தப் புதிய பாலத்தைத் திறந்து வைப்பதும் அதே குஜராத்தில் பிறந்த குஜராத்தியான நான்" எனக் கூறி உள்ளார்[ஊடகச் செய்தி]


இது இவரின் குறுகிய மனப்பான்மையைக் காட்டுகிறது. இதை உணரும் குறைந்தபட்ச அறிவுகூட இவருக்கு இல்லாதது நம்மை வியக்கச் செய்கிறது.

இவர், “திமுக கூட்டணி வகித்த ஆட்சி காலங்களைவிடத் தற்போது 3 மடங்கு[வாய்ப்பே இல்லை] நிதியினை மத்திய அரசு தமிழ்நாட்டிற்குக் கொடுத்துள்ளது” என்று ஆதாரம் ஏதும் தராமல் கதையளந்திருக்கிறார்.

கொடுத்திருந்தாலும்கூட, “இவ்வளவு கொடுத்தும், போதவில்லை என அழுகிறார்கள்''  என்று பேசி தமிழ்நாடு முதல்வரை[ராமேஸ்வரம் விழாவில்] மோடி[இந்தியப் பிரதமர் அல்ல; ஒரு குஜராத்தி] மறைமுகமாகத் தாக்கிப் பேசியது[ஊடகச் செய்தி] அநாகரிகத்தின் உச்சம்; வடிகட்டிய அயோக்கியத்தனம்.

பக்தி என்னும் பெயரால் மூடத்தனத்தை வளர்த்து ஆட்சியைக் கைப்பற்றும் தந்திரத்தை மட்டுமே தெரிந்துவைத்திருக்கும் இந்தக் குஜராத்தி, பழம்பெரும் நாகரிகமும் பண்பாடும் அதீத அறிவு வளர்ச்சியும் பெற்ற தமிழனைவிட எந்த வகையில் உயர்ந்தவர்?

எந்த வகையிலும் இல்லை.

மேற்கண்ட இழிப்புரைக்கு[அழிவுக்கால உரையும்கூட], வர் இந்த நாட்டின் பிரதமர் என்னும் அகங்காரமே காரணம்!

6ஆவது பேரழிவைத் தடுக்கலாம், வாரீர்!!!

'சுமார் 44 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பூமி ஒரே நிலப்பரப்பாக இருந்தது. அதாவது, கண்டங்களாகப் பிரிந்திருக்கவில்லை. பூமியின் வட பகுதி கடலாகவும் தென் பகுதி நிலமாகவும் இருந்தது. குறைந்த எண்ணிக்கையிலான உயிரினங்களே இருந்தன. அவையும் கடலுக்குள் வாழ்ந்துகொண்டிருந்தன.

பருவநிலை மாற்றங்களால், கடலின் பெரும்பகுதி பனியாக மாறியது. விளைவு.....

85% உயிரினங்கள் அழிந்துபோயின. இவ்வாறு, பெரும்பாலான உயிரினங்கள் அழிவதற்குக் காரணமான அந்த நிகழ்வை, 'முதல் பேரழிவு' என்று குறிப்பிடுகிறார்கள்' விஞ்ஞானிகள்.

சுமார் 41 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்நிலவுலகில் இரண்டாவது பேரழிவு இடம்பெற்றது. அப்போது, ஐரோப்பாவும் வட அமெரிக்காவும் ஒரு கண்டமாகவும், ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா ஆகியவை ஒரு கண்டமாகவும் இருந்தன. வடக்கே சைபீரியா தனியாக இருந்தது.

அக்காலக் கட்டத்தில் இம்மண்ணில் பலவித செடிகொடிகளும் பூச்சிகளும் உருவாயின.

காலப்போக்கில், கடல் மட்டம் வெகுவாகக் குறைந்ததாலும், அஸ்டிராய்ட்[Asteroid -என்பது சூரியக் குடும்பத்தின் உட்புறப் பகுதியில் சூரியனைச் சுற்றிவரும் கோள் -விக்கிப்பீடியா] ஒன்று பூமியைத் தாக்கியதாலும் உயிரினங்களில் பெரும்பகுதி அழிந்துபோனது.

மூன்றாவது பேரழிவு 29 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. அப்போது கண்டங்கள் அனைத்தும் ஒரே நிலப்பரப்பாக இருந்தன.  இந்தப் பேரழிவின்போது, கடல்வாழ் உயிரினங்களில் 96 விழுக்காடும், நிலப்பகுதியில் 70 விழுக்காடும் அழிந்தன.

20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது 4ஆவது பேரழிவு. அப்போது மீண்டும் கண்டங்கள் தனித்தனியே பிரிந்திருந்தன. உயிரினங்களில் பாதி அழிந்தன. இக்காலக் கட்டத்தில்தான் 'டைனோசர்கள்' என்னும் உயிரினங்கள் தோன்றின.

அடுத்து நிகழ்ந்தது ஐந்தாவது உயிரினப் பேரழிவு. இது நிகழ்ந்தது ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு. டைனோசர் இனம் முற்றிலுமாய் அழிந்தது. அழிவுக்குக் காரணம் பூமியை ஒரு விண்கல் தாக்கியதே. அந்தக் கல் மெக்சிகோ நாட்டுக்கு அருகே கடல் பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது.

விண்கல் மோதினால் இந்த அளவுக்குப் பேரழிவு நேருமா என்ற ஐயம் நமக்குத் தோன்றும். 'பூமி மீது அதி பயங்கர வேகத்தில் விண் கல் மோதினால், பெரும் தூசுப் படலம் உருவாகும். அது பூமியை முற்றிலுமாய்ச் சூழ்ந்துகொள்ளும். பூமியில் வெப்பம் குறையும். பருவநிலை மாறும். தாவரங்கள் அழியும். உணவின்றிப் பெரும்பாலான உயிரினங்கள் பட்டினியால் அழியும்' என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

ஆக,

பேரழிவுகள் நிகழ்வதும், பூமியில் வாழும் உயிரினங்களில் பெரும்பகுதி அழிந்தொழிவதும், தப்பிய உயிரினங்களும், புதிதாகத் தோன்றுவனவும் தத்தம் இனத்தை விருத்தி செய்து வாழ்ந்து மீண்டும் அழிவதும் வாழ்வதுமான நிகழ்வுகள் தொடர்கின்றன. 

ஐந்து பேரழிவுகளைத் தொடர்ந்து 6ஆவது பேரழிவு நிச்சயம் நிகழும் என்கிறார்கள் அறிவியல் அறிஞர்கள். அதற்குக் காரணமாக அமையவிருப்பது அஸ்ட்ராய்டுகளோ, விண்கற்களோ அல்ல; மனிதனின் இழிசெயல்களே என்கிறார்கள் அவர்கள்.

ஆறாவது பேரழிவில், கரப்பான், குதிரைலாட நண்டு, ஜெல்லி மீன்கள் போன்ற உயிரினங்கள் தப்பிக்க வாய்ப்பு அமையலாம். மனித இனம் மட்டும் பூண்டோடு அழியும் என்றும் அவர்கள் எச்சரிக்கிறார்கள்.

மனித குலம் அழிவதா? அழிய அனுமதிக்கலாமா? கூடாது... கூடவே கூடாது.

நம்மிடம்தான் எத்தனை கடவுள்கள்! எத்தனை எத்தனை மகா மகா மகா பெரிய அவதாரக் கடவுள்கள்!

இனி, மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும், கர்த்தர், அல்லா, சிவன், விஷ்ணு, பிள்ளையார் போன்ற பெரிய கடவுள்களையும், காளியம்மன், மாரியம்மன, கருப்பனார், முனியப்பனார், எல்லையம்மன், வெள்ளையம்மன், சொள்ளையம்மன் போன்ற குட்டிக் குட்டிக் கடவுள்களையும், கடவுளால் அனுப்பப்பட்டு மனித உருவில் நடமாடும் மோடிக் கடவுளையும், அனைத்துலகுக்கும் அருள்பாலிக்கும் ஆதியோகியைப் படைத்தருளிய வெள்ளியங்கிரிக் கடவுளையும், கண்ணுக்குத் தெரியாமல் நம்மைக் கண்காணித்துவரும் மகா.....ப் பெரிய மகான்களையும் வழிபட்டு உலகை அழியாமல் காக்குமாறு வேண்டுகோள் வைப்போம். 

இப்போது உள்ள கோயில்கள் போதாது. கோடிகோடியாய்ச் செலவு செய்து புதிய புதிய கோயில்கள் கட்டுவோம். மில்லியன் கணக்கில் பணத்தை வாரி இறைத்து  நாளும் விழாக்கள் எடுப்போம். 

இவற்றைச் செய்தால், மானுட இனம் அழியாது..... அழியவே அழியாது.

இது உறுதி; 100% உறுதி.

இந்த நம்பிக்கையில்தான்.....

வாரத்தில் ஒரு நாள் விரதம்[முழுப்பட்டினி]  இருக்கிறேன். காலை, மாலை, நண்பகல், பின்பகல், மாலை, இரவு, நள்ளிரவு என்று கண்ட கண்ட நேரங்களிலெல்லாம் எனக்குப் பிடித்த, பிடிக்காத கடவுள்களையெல்லாம் வழிபடுகிறேன்[ஹி...ஹி...ஹி!!!].

                                          *   *   *   *   *
***இணையத்தில் தகவல்களைத் திரட்டி உருவாக்கப்பட்டது இந்தப் பதிவு.

ஞாயிறு, 6 ஏப்ரல், 2025

'இசை ஞானி'ப் பட்டம் போதும்; ‘இறை ஞானி’ ஆசை வேண்டாம் ராஜா!!!

சையமைப்பில் சாதனைகள் நிகழ்த்தித் தமிழினத்திற்குப் பெருமை சேர்த்த இளையராஜா அவர்களே,

ஊடகத்திற்கு அளித்த ஒரு பேட்டி முழுதும் உங்களின் அளப்பரிய கடவுள் பக்தியை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.

இயற்கை அழகைக் கண்டு ரசிக்க இரு கண்களைக் கொடுத்தான்; நறுமணம் நுகர மூக்குகள் தந்தான்; இன்னிசை கேட்டு இன்புறக் காதுகளும், ருசியாகத் தின்று செரிக்க வாயும் கொடுத்தான் என்றெல்லாம் வெகுவாக மனம் நெகிழ்ந்து பேசியிருக்கிறீர்கள்.

இதன் மூலம், உறுப்புக் குறைபாடு உடையவர்களையும், அவை இருந்தும் அனுபவிக்கக் கொடுப்பினை இல்லாதவர்களையும் ஏன் படைத்தான் உங்கள் கடவுள் என்பதை நீங்கள் ஒருபோதும் சிந்தித்ததில்லை என்பதை அறிய முடிகிறது; இசையமைப்பதில் ‘இசை ஞானி’ என்று புகழ் பெற்றுவிட்ட நீங்கள் ஆன்மிகத்திலும் ‘ஞானி’ப் பட்டம் பெற்றிட ஆசைப்படுகிறீர்கள் என்பது புரிகிறது.

ஊடகப் பேட்டியாளருடன் பேசிக்கொண்டிருக்கும்போதே உங்களுக்குள் ‘Silance'[அமைதி?] நிலவுவதாக உளறியிருக்கிறீர்கள்.

வேலைவெட்டி இல்லாமல் கட்டியக் கோவணத்துடன் திருவண்ணாமலையில் சுற்றித்திரிந்த ரமணனைக்[மகரிஷி ஆக்கப்பட்டவர்] குரு என்கிறீர்கள்[ரமண மகரிஷிகள் உங்களைச் சீடனாக ஒருபோதும் ஏற்கமாட்டார்கள் என்பதை மறந்துவிட்டீர்கள்].

இரு கேள்விகளை[பலரும் கேட்ட/கேட்கும் மிகச் சாதாரணக் கேள்விகள்] நீங்கள் கேட்டதாகவும், கிடைத்த பதில்கள் உங்களின் கன்னங்களில் ஓங்கி ஓங்கி அறைந்தது போல் இருந்ததாகவும் சொல்லி ஆர்ப்பரித்திருக்கிறீர்கள்.

இவை போல, சொல்வதற்கு இன்னும் நிறையக் குறைகள் உள்ளன. ஆயினும், அவற்றைப் பட்டியலிடாமல் நாம் உங்களிடம் அறிவுறுத்த விரும்புவது.....

இசைத் துறையில் மாபெரும் சாதனை படைத்து உலகம் போற்றும் கலைஞன் ஆகிவிட்டீர்கள்.

இப்போதும், இனி எப்போதும் நீங்கள் ‘இசை ஞானி’தான்!

‘இசை ஞானி’யாகவே இருங்கள்; ஆன்மிகம் பேசி ‘இறை ஞானி’ ஆவதற்கோ, சூத்திரன்[ஆக்கப்பட்டீர்கள்> நீசப்பிறவி] ஆன நீங்கள் ‘பிராமணன்’ஆக[ரமணனைக் குருவாக ஏற்பதன் மூலம்]  மதிக்கப்படுவதற்கோ ஆசைப்பட வேண்டாம் ராஜா!

இளையராஜாவின் காணொலிப் பேட்டி: