பக்கங்கள்https://kadavulinkadavul.blogspot.com/p/blog-page_1.html
செவ்வாய், 11 மார்ச், 2025
அந்த ‘மூன்று நாட்கள்’... அம்மனும் விதிவிலக்கல்ல!!!
அம்மனைக் கோயிலுக்கு வெளியே தங்க வைத்து, மூன்று நாட்கள் கழித்து ஆற்றில் குளிப்பாட்டிய பின்னர், ஐயன் சிவபெருமான் வரவேற்க, கோயிலுக்குள் குடியமர்த்தினார்கள். அப்புறம் ஆண்டாண்டுதோறும் நடைபெறும் நிகழ்ச்சியாக்கப்பட்டது இது. இதற்கு 'ஆறாட்டு' என்று பெயர்.
'அந்த' மூன்று நாட்களும் கோயிலில் கன்னியர்கள் காவல் காக்கிறார்கள்.
அம்மனின் கற்சிலை வீட்டுக்குத் 'தூரம்' ஆகிறதாம். மூன்று நாள் காவலாம். அப்புறம், ஆறாட்டாம்[இம்மாதிரி மூடநம்பிக்கைக் கதைகள் நாடெங்கும் பரவிக் கிடக்கின்றன]. அடச் சே.....
அம்மனுக்கு மாதவிலக்கு உண்டாகிறது என்று சொல்லப்படும் இது போன்ற கதைகளுக்கும், ஐயப்பன் என்றொரு சாமி பிரமச்சாரியாக[ஏன்? 'பொண்ணு’ கிடைக்கவில்லையா?!] இருக்கிறார் என்று சொல்லப்படும் கதைகளுக்கும் இந்த நாட்டில் பஞ்சமே இல்லை.
இம்மாதிரிக் கதைகளைக் கட்டுகிற அயோக்கியர்களும் சரி, நம்புகிற முழு மூடர்களும் சரி இனி ஒருபோதும் திருந்தப்போவதில்லை.
உலகம் அழியும் அழியும் என்கிறார்கள். சீக்கிரம் அழிந்து தொலைத்தால் நல்லது!
'இந்தி’யன் எதிர்ப்புப் போராட்டம் எப்போது தொடங்கும்?
//தமிழக எம்.பி-க்கள் ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளுக்கு ஜோதிராதித்ய சிந்தியா இந்தியில் பதிலளித்தார். இது மக்களை அவமதிக்கும் செயல் என்று சசி தரூர் கூறினார். உங்கள் கருத்து என்ன?//
மேற்கண்ட 'Quora'இன் கேள்விக்கான என் பதில்:
பின்தொடர்
இது, இந்தி பேசாத மக்களை அவமதிக்கும் செயல் மட்டுமல்ல, இந்திய ஒருமைப்பாட்டுக்கு உலை வைக்கும் அடாவடித்தனமும்கூட.
தொடர்புக்கு ஆங்கிலம் மட்டுமே போதும். இதனாலெல்லாம் இனியொரு முறை நாம் ஆங்கிலேயனுக்கு அடிமை ஆகிவிட மாட்டோம்.
வங்கிகள், ரயில்வே, தபால் நிலையங்கள் என்று எங்கெங்கு முடியுமோ அங்கெல்லாம் இந்தியைத் திணித்துவிட்டார்கள்.
இந்தியை மட்டுமே இந்தியாவின் மொழியாக்கி ஏனைய மொழிகளை அழிக்கும் வேலையை வெறித்தனமாகச் செய்கிறார்கள்.
தமிழ்நாட்டைப் போலப் பிற மாநிலங்களும் இந்தியை மிகக் கடுமையாக எதிர்க்காவிட்டால், இந்த வெறியர்களின் கனவு வெகு விரைவில் நிறைவேறும்.
இந்தி பேசாத மாநிலத்தவரின் ஒருங்கிணைந்த போராட்டம் உடனடித் தேவை.
அதன் முதல் கட்டமாக, பொதுத் துறை நிறுவனங்களிலிருந்து இந்தியை அறவே நீக்க வேண்டும்[அவர்கள் மாநிலத்தில் அது கோலோச்சுவதைத் தடுப்பாரில்லை].
இம்மாதிரியான கருத்துகள் மிக விரைவாகப் பரப்பப்பட்டு, அதை இந்தி பேசாத மாநில மக்களும் அரசியல் தலைவர்களும் உணர்வது மிக மிக மிக முக்கியம்.
சில நூற்றாண்டுகள் ஆங்கிலேயனுக்கு அடிமைகளாக இருந்த நாம் இனி காலமெல்லாம் இந்திக்காரனுக்கு அடிமைகளாக வாழப்போகிறோமா?
* * * * *
திங்கள், 10 மார்ச், 2025
உலக மகா மூடன் ‘பாஜக’காரனின் ரூ99 லட்சம் பரிசு அறிவிப்பு!!!
திருப்பூர்: 'பிரதமர் மோடி அரசின் மும்மொழிக் கல்விக் கொள்கையில் ஹிந்தித் திணிப்பைக் கண்டுபிடித்தால், 99 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்' என்று, பா.ஜ., சார்பில், திருப்பூரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன[https://www.dinamalar.com/
மொழியை, அல்லது மொழிகளைக் கற்பது என்பது அறிவை வளர்ப்பதற்கும் வேலை வாய்ப்பைப் பெறுவதற்கும்தான். எனவே, ஒரே ஒரு மொழியைப் படிப்பதோ, இரண்டோ மூன்றோ அதற்கும் மேலேயோ மொழிகளைப் படிப்பதோ அவரவர் தேவையைப் பொருத்தது.
திணிக்கப்படும் மொழிகளில் இந்தியும் ஒன்று.
மும்மொழிச் சட்டம் அமலாக்கப்பட்டதும், இந்தி படித்தால் இன்னின்ன சலுகைகள் கிடைக்கும் என்று ஆசை காட்டி அனைவரையும் படிக்கத் தூண்டுவது ஒன்றிய ‘இந்தி’ய அரசின் உள்நோக்கம்[ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள அஞ்சலகம், காப்பீட்டு நிறுவனம், ரயில் நிலையம் போன்றவற்றில் இந்தி முழுமையாகத் திணிக்கப்பட்டுவிட்டது. இந்த அவல நிலையை மாற்றவே மிக மிக மிகப் பெரிய போராட்டம் நடத்தவேண்டியுள்ளது].
இதைப் புரிந்துகொள்ளும் குறைந்தபட்ச அறிவுகூடத் தமிழர்களுக்கு இல்லை என்று நினைத்து 99 லட்சம் ரூபாய் பரிசு அறிவித்த திருப்பூர் ‘பாஜக’காரனைப் போன்ற முட்டாள் உலகெங்கும் தேடினாலும் கிடைக்கமாட்டான்!
பரிசு அறிவித்த மூடனுக்கு நாம் சொல்லிக்கொள்ள விரும்புவது.....
உன்னுடைய இந்தப் பரிசுத் திட்டம் பற்றிய அறிவிப்பை உன் கட்சியின்[பாஜக] மேலிடத்துக்கு நீ தெரியப்படுத்தினால், இங்குள்ள பாஜக அடிமைகளின் தலைவனாக உன்னை நியமிப்பார்கள்[ஆட்டுக்காரனுக்குப் பதிலாக].
செய்வாயா?!
* * * * *
ஞாயிறு, 9 மார்ச், 2025
‘எயிட்ஸ்’[AIDS]... தொற்றலும் தொற்றாமையும் அறிகுறிகளும்[நினைவூட்டல் பதிவு]!
பரவுதல்:
ஹெச்.ஐ.வி தொற்றியுள்ள நபர்களின் ரத்தம், விந்து, பெண் குறித் திரவம், தாய்ப் பால் போன்ற உடலிலுள்ள நீர்மங்களைப் பரிமாறிக்கொள்வதன் மூலமும், மருந்துகளைச் செலுத்துவதற்கு அல்லது பச்சை குத்துவதற்கு ஊசிகளைப் பகிர்ந்து கொள்வதன் மூலமும் பரவுகிறது.
ஆரம்பத்தில் அறிகுறிகள் லேசானதாக இருப்பதால், எச்.ஐ.வி உள்ளவர்கள் தங்களுக்கு அது இருப்பது தெரியாமல் இருக்கலாம். அந்நிலையில் அது மற்றவர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளது.
கீழ்க்காணும் காரணங்களால் பரவுவது இல்லை.
ஒரே காற்றை சுவாசித்தல்,
கட்டியணைத்தல், முத்தமிடுதல், கைகுலுக்குதல்,
நீர்நிலைகளில் ஒன்றாகக் குளித்தல்,
பிறர் கையாண்ட ஜிம் உடற்பயிற்சி கருவிகள், கழிவறை இருக்கை போன்றவற்றைப் பயன்படுத்தல்.
மற்றவர்கள் தொட்ட கதவின் குமிழ், கைப்பிடி முதலானவற்றைத் தொடுதல்.
சிறுநீர், மலம், எச்சில், இருமல், தும்மல், வாந்தி, வியர்வை(ரத்தம் இல்லாதவரை) போன்றவை; குடிக்கும் கோப்பைகள் அல்லது சாப்பிடும் பாத்திரங்களைப் பகிர்ந்துகொள்ளுதல்.
- நோயின் அறிகுறிகள்:
காய்ச்சல், இருமல், மூச்சு விடுவதில் சிரமம், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வாந்தி, விழுங்குவதில் சிரமம், தொண்டைப் புண், தடிப்புகள், வீங்கிய நிணநீர் கணுக்கள்.
வெள்ளி, 7 மார்ச், 2025
எல்லாம் வல்ல கடவுள் குறித்துக் கொஞ்சம் ‘ஏடாகூட’க் கேள்விகள்!!!
படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில் புரிபவர் கடவுள் என்பார்கள்.
எல்லா உலகங்களையும்[மொத்த எண்ணிக்கை யாருக்கும் தெரியாது] முதல் தடவையாக எப்போது படைத்தார்?
வியாழன், 6 மார்ச், 2025
புனித மதங்களும் பொல்லாத பேய்களும் பிசாசுகளும்!!!
முன்னறிவிப்பு:
இது மீள்பதிவு எனினும், ஏற்கனவே இதை நீங்கள் வாசித்திருக்க வாய்ப்பே இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு இது வெளியானபோது வருகை புரிந்து இதை வாசித்து வயிறு எரிந்தவர்கள்[மதப் பற்றாளர்கள்] 21 பேர் மட்டுமே. ஹி... ஹி... ஹி!!!
புதன், 5 மார்ச், 2025
அவர்கள் பாவப்பட்டவர்கள்! நாம் வெறும் பார்வையாளர்கள்!!
*பார்வையற்றவர்களில் சுமார் 10-15 சதவீதம் பேர்கள் எதையும் பார்க்க இயலாதவர்கள்.
*அவர்களில் சிலரால் வண்ணங்களையும், பொருள்களின் வடிவங்களையும், மாறுபட்ட அளவிலான ஒளியையும் பார்க்க முடியும்.
*பார்வையற்றவர்கள் தூங்கும்போது தெளிவான கனவுகளை அனுபவிக்கும் வாய்ப்பு வேறு எவரையும் போலவே உள்ளது. வித்தியாசம் என்னவென்றால், அவர்களின் கனவுகள் ஒலிகளாலும் வாசனைகளாலும் ஆனவை.
*பார்வைக் குறைபாடுள்ளவர்களில் 2 சதவீதத்திற்கும் குறைவானவர்களே பிரம்புகளைப் பயன்படுத்துகிறார்கள். அயல்நாடுகளில் வழிகாட்டி நாய்களைப் பயன்படுத்துவது வழக்கத்தில் உள்ளது.
*வழிகாட்டி நாய்களால் போக்குவரத்து விளக்கு பச்சையா அல்லது சிவப்பா, வேறு நிறத்துக்கு மாறுமா என்பதையெல்லாம் அறிய முடியாது. ஆனால், ஒரு கார் வந்தால் உடனே நின்றுவிடும்.
*பார்வையற்றவர் அல்லது பார்வைக் குறைபாடுள்ள ஒருவர், போக்குவரத்து சத்தம் போன்ற கேட்கக்கூடிய குறிப்புகளைப் பயன்படுத்தி, எப்போது கடப்பது பாதுகாப்பானது என்று தீர்மானித்துச் செயல்படுவதுண்டு.
*உலகளவில் 80 சதவீத பார்வைப் பிரச்சினைகளை உடனடி மருத்துவப் பராமரிப்புகளின் மூலமும், வழக்கமான கண் பரிசோதனைகள் மூலமும் தவிர்க்கலாம்; குணப்படுத்தவும் செய்யலாம்.
*50 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களிடையே குருட்டுத்தன்மைக்கு முக்கிய காரணம் கண்புரை ஆகும், இதை அறுவைச் சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்.
*அமெரிக்காவில் பார்வையற்றவர்களில் 70 சதவீதம் பேர் போதுமான உறக்கமின்றித் தவிப்பவர்கள்.
*பார்வையிழப்பு மற்ற புலன்களைக் கூர்மைப்படுத்துகிறது என்பதை ஆய்வாளர்கள் மறுத்துள்ளார்கள்.
பார்வைக் குறைபாடுகளை நீக்குவதற்காக உலகச் சுகாதார அமைப்புகள் பாடுபடுகின்றனவாம். இது போதாது.
ஒட்டுமொத்த விஞ்ஞானிகளும் கருந்துளை வெண்துளை, பெரு வெடிப்பு, பிரபஞ்ச எல்லை, கடவுள் அணு போன்றவை பற்றிய ஆராய்ச்சிகளையெல்லாம் கிடப்பில் போட்டுவிட்டு, மனிதாபிமானத்துடன் பார்வை இழப்பை முற்றிலுமாய்த் தடுப்பதற்கான வழிகளைக் கண்டறிதல் வேண்டும்
உலக நாடுகள் ஒருங்கிணைந்து செய்ல்பட்டால் மட்டுமே இது சாத்தியம்!
* * * * *
https://www.perkins.org/10-little-known-facts-about-blindness/
செவ்வாய், 4 மார்ச், 2025
திருமணமும் உடலுறவும் நிலை தடுமாறும் குடும்ப உறவும்!!!
தம்பதியர் விவாகரத்துச் செய்துகொள்வதற்கான காரணங்கள் பல உள்ளன{குறட்டைவிடுவது, ஒழுங்காகக் குளிக்காதது, அடிக்கடி மூக்கை நோண்டுவது, பல்லிடுக்கில் சிக்கிய உணவுத் துணுக்கை நோண்டி எடுத்து முகர்ந்து பார்ப்பது[ஹி... ஹி... ஹி!!!] என்றிவை உட்பட}.
'இல்லற வாழ்க்கையில் ஒருவர் தனது இணையருடன் உடலுறவு கொள்ளாமல் நீண்ட நாட்கள் விலகி இருந்தால், அது இந்து[மற்ற மதங்களும்தான்] திருமணச் சட்டத்தின் கீழ் கொடுமையான விஷயமாகக் கருதப்படும். அத்துடன் இதையே காரணமாகக் கூறி ஒருவர் விவாகரத்து கோரலாம்' என்று இது தொடர்பான பல வழக்குகளின் தீர்ப்புகளில் நீதிமன்றங்கள் தீர்ப்பளித்திருக்கின்றன’ என்பது நான் எப்போதோ வாசித்த ஒரு செய்தியின் சாரம்.
உடலுறவைத் தொடர்புபடுத்தி ஒருவர் விவாகரத்துக் கோரிய ஒரு வேடிக்கையான வழக்கு பற்றிச் சற்று முன்னர் அறிய நேர்ந்தது.
//தனது மனைவி 5 மாதங்களில் தன்னுடன் 10-15 முறைதான் உடலுறவு கொண்டிருந்தார். அத்துடன் உடலுறவின்போது அவர் எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் ஒரு ‘ஜடம்’ போல் இருப்பார் என்பது மணவிலக்குக்கான காரணமாக விவாகரத்து கோரிய வழக்கில் ஒரு நபர் குறிப்பிட்டிருந்தார். அவருக்கு அதற்கான அனுமதியை வழங்கினார் நீதிபதி// என்பது செய்தி[https://www.bbc.com/tamil/articles/cek19mz00vvo
இதே நீதிபதி[டெல்லி உயர் நீதிமன்றம்], 2012ஆம் ஆண்டில், முதலிரவில் மனைவி உடலுறவுக்கு மறுத்ததற்காக அவளின் கணவருக்கு விவாகரத்துச் செய்துகொள்ள அனுமதி வழங்கினார்.
“உடலுறவு சார்ந்த பிரச்னைகளின் காரணமாக அதன் புனிதத்தன்மை கெட்டுவருவதுடன், திருமணப் பந்தத்தின் உத்வேகமும் குறைந்துவருகிறது என்றும், இதன் விளைவாகப் பாலினப் பாகுபாடற்ற திருமணங்கள் தொற்றுநோய் போலப் பரவி வருவதை யாராலும் தடுக்க முடியாது” என்றும் நீதிபதி தம் வேதனையை வெளிப்படுத்தியிருந்தார்.
* * * * *
நாடு போகிற போக்கைப் பார்த்தால், ஒரு மாதத்தில் தம்பதியர் கொள்ளும் உடலுறவுக்குக் குறைந்தபட்ச வரம்பு விதிக்கும் காலமும் வரும் என்று தோன்றுகிறது.
‘திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன’ என்று சொல்லிப்போன அந்தக் கூமுட்டை யார்?!
திங்கள், 3 மார்ச், 2025
ஜெய் ஜோதிர்லிங்கம்! அடுத்த நம் பிரதமரும் மோடிஜியே!!
ஞாயிறு, 2 மார்ச், 2025
சிந்திப்பாரா ‘பிறவி இந்து’ சிவக்குமார்[கர்னாடகா து.முதல்வர்]?!?!?
#புதன்கிழமை செய்தியாளர் சந்திப்பின்போது சிவகுமாரிடம்[கர்னாடகா துணை முதல்வர்], அவரது கோவை வருகை[ஈஷா நவராத்திரிக் கூத்து] குறித்துச் செய்தியாளர்கள் கேட்டபோது, "..... நான் ஒரு இந்து. நான் பிறந்தது இந்துவாக. நான் ஒரு இந்துவாகவே இறப்பேன் என்று அவர் கூறினார்# [https://english.varthabharati.in/karnataka/i-am-born-hindu-and-will-die-hindu-karnataka-dcm-shivakumar].
அன்புக்குரிய கன்னடச் சகோதரர் சிவக்குமார் அவர்களே,
ஆனால், நீங்கள் பிறந்தபோதோ, வளர்ந்து சிந்திக்கும் பருவத்தை எட்டும்வரையோ நீங்கள் ஒரு மனிதப் பிறவி என்பதேகூட உங்களுக்குத் தெரியாது என்று நாம் சொன்னால் அதை மறுக்கமாட்டீர்கள் என்று நம்புகிறோம்.
அறிவு வளரும் வயதில் நீங்கள் ஒரு இந்துக் குடும்பத்தில் பிறந்தவர் என்பதையே உங்களின் பெற்றோர் சொல்லித்தான் அறிந்துகொண்டிருப்பீர்கள். அவர்கள் சொன்னதை வைத்துத்தான் “நான் பிறந்தது இந்துவாக” என்று சொல்லியிருக்கிறீர்கள். இது ஒரு பொருட்டல்ல.
“நான் இந்துவாகவே இறப்பேன்” என்று உறுதி மொழிந்திருக்கிறீர்களே, இங்கேதான் தவறிழைத்திருக்கிறீர்கள்.
இறப்பு என்பது மூளை உட்பட உடல் உறுப்புகள் முற்றிலுமாய்ச் செயலிழக்கும்போது நிகழ்வது. அதாவது, அந்த நேரத்தில் முழுமையாகச் சுயநினைவை இழக்கிறோம்.
இறப்பது மனிதனாகவாக, மிருகமாகவா வேறு எதுவாகவும் ஆகவா என்பது பற்றியெல்லாம் சாகும்போது அறிந்திருக்க வாய்ப்பே இல்லை. இருந்துகொண்டிருந்தவர் ‘இல்லாமல்’ ஆகிறார் என்பதே உண்மை.
அறிவு, உணர்ச்சி, குணம் என்று பெற்றிருந்த அனைத்தையும் இழந்து நாம் ‘வெறுமை’யில் கலக்கும் நிலையில் மதம் இல்லை; ஒரு மண்ணும் இல்லை.
இவ்வாறெல்லாம் சிந்தித்திருந்தால்.....
“அவர்[சத்துக்குரு] எனக்குத் தெரிந்தவர்; நேரில் வந்து அழைத்தார். போனேன். சொல்வதற்கு வேறு எதுவுமில்லை” என்று சொல்லிப் பேட்டியை முடித்துக்கொண்டிருப்பீர்கள்.
மாறாக, அந்த வேடதாரியை வெகுவாகப் புகழ்ந்திருப்பது உங்கள் மீதான மதிப்பை மிகவும் குறைத்திருக்கிறது.
‘கடவுளுக்குக் குரு’[சத்குரு: சத்> பரம்பொருள்> கடவுள்; சத்குரு> கடவுளுக்குக் குரு] என்று புளுகி[உலகின் நம்பர் 1 புளுகன்] உலகின் ஒட்டுமொத்த மக்களையும் முட்டாள்களாக்கி, கோடி கோடியாய்ப் பணம் கொள்ளையடித்துச்[+ஏராள குற்றச்சாட்டுகள்] சொகுசாக வாழும் ஓர் அயோக்கியனுடனான உங்களின் தொடர்பு நீடித்தால், விளைவு என்னவாக இருக்கும் என்பதைச் சிந்தித்து அறியும் அறிவு உங்களுக்கு உண்டு என்று நம்புகிறோம்.
கர்னாடகச் சகோதரர்களுக்கான உங்களின் தொண்டு தொடர்வதாக.
சனி, 1 மார்ச், 2025
பெண்ணைத் ‘திருப்தி’படுத்தலும் அடிமை ஆக்குதலும்!!![வாழ்வியல் கதை]
பிறந்த கிராமத்திலேயே பள்ளிப் படிப்புப் படித்து, வெவ்வேறு நகரங்களில் மேற்படிப்பை முடித்து, அவன் சென்னையிலும் நான்[‘நான்’ அடியேன் அல்ல; தன்னை முன்னிலைப்படுத்திக் கதை சொல்வது ஒருவகை உத்தி] கோவையிலும் வேலை பார்க்கிறோம்.
அவன்? ஆறுமுகம்.
//According to recent data, a significant portion of the Indian population remains unmarried, with estimates suggesting that over 23% of young people are not interested in marriage, which translates to a large number of unmarried bachelors in India in 2024; however, the exact number is difficult to pinpoint due to variations in data sources and age brackets considered// -https://www.google.com/search?q=number+of+unmarried+bachelors+in+india+2024
வெள்ளி, 28 பிப்ரவரி, 2025
2இல் 1 நடந்தால்தான் இவன்[ஜக்கி] அடங்குவான்!!!
ஜக்கி வாசுதேவனுக்கு மெய்யான ஆன்மிகம் தெரியாது, குறைந்தபட்சச் சிந்திக்கும் அறிவுகூட இல்லாதவன். சரளமாகப் பேசத் தெரிந்த ஆங்கிலத்தை வைத்துக்கொண்டு போலி ஆன்மிகம் பேசி ஊர் உலகை ஏமாற்றித் திரிகிறான்; மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி ‘லட்சம் கோடி’க்கும் மேலாகச் சொத்துச் சேர்த்திருக்கிறான்.
வியாழன், 27 பிப்ரவரி, 2025
பிரதமர் மோடியின் ஆட்சி... '-’!!! ‘+’???
*நாட்டின் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படும் அளவுக்கு, கற்பனையான புராணக் கதை மாந்தர்களுக்குக் கோடிகளில் செலவழித்துக் கோயில் கட்டுகிறார். பக்திப் பயணம் என்னும் பெயரில் வெட்டியாய் ஊர் சுற்றும் மூடர்களுக்கு வசதிகள் செய்துதரப் பெரும் தொகை செலவிடப்படுகிறது.
*பக்தி தொடர்பான தன்னுடைய நடவடிக்கைகளை இவரளவுக்கு எந்தவொரு பிரதமரும் விளம்பரம் செய்ததில்லை. சிந்திக்கும் அறிவை வளர்ப்பதற்கு எதிரான நடவடிக்கை இது.
*கடும் தண்டனைக்குரிய குற்றச் செயல்களில் ஈடுபடும் சாமியார்களுக்கு அதிக அளவில் மரியாதை தருகிறார்; நிரந்தரப் பாதுகாப்பும் உண்டு.
*அயல்நாட்டு உறவுகளை மேம்படுத்தப் பயணம் தேவைதான் என்றாலும், அதையே காரணம் காட்டி உலகம் சுற்றுவதில் அதீத ஆர்வம் காட்டுகிறார் நம் பிரதமர்.
*போதுமான ஆதாரங்கள் இல்லாமல் “அதைச் செய்தேன்; இதைச் சாதித்தேன்” என்று வெறும் வாயால் அடிக்கடி வடை சுடுகிறார்.
*குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் எதிர்க் கட்சிக்காரர்களுடன் விவாதித்து, அவை குறித்த உண்மைகளை மக்களுக்குத் தெரியப்படுத்துவதில் போதுமான அக்கறை காட்டுவதில்லை.
*அடிக்கடி, சட்டங்களைத் திருத்தி மசோதாக்களை நிறைவேற்றும் நடவடிக்கைகள், கிட்டத்தட்ட ஒரு சர்வாதிகாரியாகத் தன்னை ஆக்கிக்கொள்ளும் முயற்சியில் இவர் தொடர்ந்து ஈடுபடுகிறாரோ என்று எண்ணத் தூண்டுகிறது.
*பிரச்சினைகளைக் கையாளுவதற்கும், வளர்ச்சித் திட்டங்களை வகுத்து அவற்றை நிறைவேற்றுவதற்கும் தேவையான அறிவாற்றலும் அனுபவமும் பெற்றவர்கள் இவரின் அமைச்சரவையில் இல்லை என்றே சொல்லலாம்.
*பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியைக் கருத்தில் கொண்டுதான் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன; மாநிலங்களுக்கென்று அதிகாரங்களும் வழங்கப்பட்டன. அதை அலட்சியப்படுத்தி, மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுகிறார் மோடி. மாநில அரசுகளால் இந்த அடாத செயல் சுட்டிக்காட்டப்படினும் தன்னைத் திருத்திக்கொள்ள அவர் தயாராக இல்லை.
மேற்கண்டவை மோடி ஆட்சி குறித்த மதிப்பீட்டு[-]ப் பட்டியல்!
‘+’?..... தேடித் தேடித் தேடிக் கண்டறிக!!
புதன், 26 பிப்ரவரி, 2025
கும்பமேளா நீராடல்... புனிதம் சேர்த்த மோடியும் தவிர்த்த காஞ்சி மட விஜயேந்திரனும்!
உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் நடந்துவரும் கும்பமேளாவில் கலந்துகொண்டு காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு வந்தாராம்[செய்தி].
‘ஓர் அனாதை இல்லத்திற்கு நன்கொடை வழங்கினார்; சங்கர மடம் சார்பில் ஒரு முதியோர் இல்லம் தொடங்கி வைத்தார். ஏழை மக்களின் புகலிடமான அரசு மருத்துவமனைக்குச் சென்று தீராத நோய்களால் அவதிப்படுவோருக்கு ஆறுதல் சொன்னார்…’ என்றிப்படியான நல்ல காரியங்கள் ஏதும் செய்தாரா என்றால், இல்லை.
பின்னே என்ன செய்தார்?
ஊடகக்காரர்களுக்குப் பேட்டியளித்து அருள்பாலித்தார்.
பேட்டியில் என்ன சொன்னார்?
என்னென்னவோ சொன்னார். அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று: #அகில இந்திய அளவில் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த புண்ணிய தீர்த்த அடையாளமாக உள்ள அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் கும்பமேளாவில் கலந்துகொள்ளும் மக்கள் அனைவருக்கும் நற்பலன்கள் கிடைக்க வேண்டும் என பிரார்த்தித்தோம்# என்பதும் ஒன்று[இவர் பிரார்த்திக்கலேன்னா பக்தர்களுக்கு நற்பலன்கள் கிடைக்காவோ?].
#காஞ்சி மடத்தின் மூலம் அங்கு மண்டபம் அமைத்து, கடந்த 40 நாட்களாக வேதபாடசாலைகள் மூலம் உலக நன்மைக்காக யாகங்கள், பூர்ணாஹூதி[!?] ஹோமங்கள், புனித பூஜைகள் மற்றும் அன்னதானங்கள் நடக்கிறது# இதுவும் அவர் சொன்னதே.
இப்படிச் சொன்ன அவரிடம்.....
“ஆண்டவனால் அனுப்பப்பட்ட மோடியும், இக உலகப் ‘போகம்’ துறந்த ‘யோகி’[ஆதித்யானந்த்]யும் குளியல் போட்டதால் கூடுதல் புனிதத்துவம் பெற்ற திரிவேணி சங்கமத்தில், ஈஸ்வரனின் அனுக்கிரஹம் பெற்ற தாங்களும் நீராடி அதில் அபிரிதமாகப் புனிதம் சேர்த்தீர்களா?” என்று ஊடகத்தார் கேட்டிருக்கலாம்.
கேட்டிருந்தால்…..
அவர் திருவாய் மலர்ந்தருளுவாரோ அல்லவோ, அவரின் சிஷ்யர்களில் எவரேனும் ஒருவர், “நீச மனிதர்கள் நீராடுகிறதும் பாவங்களின் கழிப்பிடமும் ஆன திரிவேணி சங்கமத்தில் அவர் நீராடமாட்டார்” என்று பதில் சொல்லியிருப்பார்.
ஏனோ எவரொருவரும் கேட்கவில்லை!
* * * * *