வெள்ளி, 20 ஜூன், 2025

மோடிக்குக் கூட்டம் சேர்க்க அரசு விடுமுறை! இந்த நாடு இவரின் ‘பட்டா’ நிலமா?!

//ஆட்சியமைத்த ஒரு வருடம் நிறைவு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று(20.06.2025)ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் செல்கிறார்இதனைத் தொடர்ந்து மதியத்திற்கு மேல் அரை நாள் விடுமுறை அளித்து மாநில அரசு அறிவிப்பு[கூட்ட நெரிசல் காரணமாம். நெரிசல் இல்லாத விடுமுறை நாட்களில் நடத்தலாமே?] வெளியிட்டுள்ளது. 

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சாபுவனேஸ்வர் மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு அலுவலகங்கள், வருவாய் மற்றும் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் & அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும், தனியார் பள்ளிகளுக்கும் 20ஆம் தேதி விடுமறை அளிக்கப்பட்டுள்ளது//[மாலைமலர்].

ஆட்சியமைத்த ஓராண்டு நிறைவு விழாவாம். ‘பைசா’ பயனில்லாத வெற்று ஆடம்பர விழா இது. மோடி பெரிதாக என்ன பேசிவிடப்போகிறார்? வாயால் நிறைய வடை சுடுவார்.

மோடி கலந்துகொள்வதால், பெரிய அளவில் கூட்டத்தைக் கூட்டி[மாணவர்களையும் பல்துறை அலுவலர்களையும் அதிக அளவில் அழைத்துவரலாம்], படம் பிடித்து, “ஆகா, மோடி பேச்சைக் கேட்க இத்தனைக் கூட்டமா?” என்று செய்தி வெளியிட்டு மக்களைப் பிரமிப்பில் ஆழ்த்தி, ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவன் என்னும் பிம்பத்தை உருவாக்க உதவும் நடவடிக்கையே இந்த விடுமுறை அறிவிப்பு.

சுயநலமிகள் நாட்டை ஆண்டால் இதுவும் நடக்கும்; இன்னும் என்னவெல்லாமும் நடக்கக்கூடும்!

சனநாயகம் என்னும் பெயரில் ஒரு சர்வாதிகார ஆட்சி இங்கு நடைபறுகிறது. ஆழ்ந்த உறக்கத்தில் இந்த நாட்டு மக்கள்!

https://www.maalaimalar.com/news/national/pm-visit-odisha-declares-half-day-holiday-in-all-govt-offices-in-bhubaneswar-on-friday-777230

வியாழன், 19 ஜூன், 2025

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் உள்துறை அமைச்சர்!!!

முன்னாள் அரசு ஊழியர் ஐஏஎஸ் அசுதோஷ் அக்னிஹோத்ரி எழுதிய 'மெயின் பூந்த் சுயம், குத் சாகர் ஹூன்' புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அமித்ஷா, "இந்த நாட்டில், ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள் - அத்தகையச் சமூகத்தை உருவாக்குவது வெகு தொலைவில் இல்லை. உறுதியானவர்களால் மட்டுமே மாற்றத்தைக் கொண்டுவர முடியும். நமது நாட்டின் மொழிகள் நமது கலாச்சாரத்தின் நகைகள் என்று நான் நம்புகிறேன் என்றார்[https://www.news18.com/amp/india/those-who-speak-english-in-country-will-soon-feel-ashamed-amit-shah-ws-l-9393567.html].

உள்துறை அமைச்சர் இப்படிப் பேசியது மனப்பூர்வமானதும் உண்மையானதும் என்றால், இந்தியாவில் பேசப்படும் அத்தனை மாநில மொழிகளையும்[இந்தி அவற்றுள் ஒன்று மட்டுமே] ஆட்சிமொழிகளாக ஆக்கியிருத்தல் வேண்டும்[இன்றைய அறிவியல்&தொழில்நுட்ப வளர்ச்சியில் இது சாத்தியமே].

இவர்[கள்> +மோடி] நடைமுறைப்படுத்தியிருப்பதோ எங்கெங்கு காணினும் இந்தி... இந்தி... இந்தி... இந்தி[+சமஸ்கிருதம்] மட்டுமே!

இத்தனை வஞ்சக நெஞ்சம் கொண்டவர்களின் பிடியிலிருந்து இந்த நாட்டை மீட்டு, மாநில மொழிகளை[தாய்மொழிகள்]க் காப்பது தாய்மொழிப் பற்றும் இனப்பற்றும் கொண்டவர்களின் கடமை ஆகும்.

இந்த உண்மையை அறிந்து உணர்ந்து செயல்படுவார்களா நம் மக்கள்?

எத்தனை விருதுகள்[28] மோடிக்கு! அத்தனைப் பெரிய ஆளுமையா இவர்?!?!

//இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து, நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு இரண்டு சர்வதேசக் கௌரவங்களைப் பெற்றார். இந்திரா காந்தியும் இதேபோல் இரண்டு விருதுகளைப் பெற்றார். டாக்டர் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் இரண்டு சர்வதேசக் கௌரவங்களைப் பெற்றார்[ராஜீவ் காந்தி எதையும் பெறவில்லை].

முன்னாள் பிரதமர்கள் பெற்ற விருதுகளின் எண்ணிக்கை மிக மிக மிகக் குறைவாக இருக்கும் நிலையில்.....

பிரதமர் மோடியின் தொலைநோக்குத் தலைமையை அங்கீகரிக்கும் விதமாக, 2016 & 2025க்கு இடையில் வெளிநாடுகளில் இருந்து 28 மிக உயர்ந்த மாநில[?] விருதுகள்[இவற்றில் கேட்டு வாங்கியவை எத்தனை?!] வழங்கப்பட்டுள்ளன// என்பது செய்தி.

மோடிக்கு அளப்பரிய இந்த விருதுகளைப் பெற்றுத்தந்தது வருடைய தொலைநோக்குத் தலைமையாம்!

அதென்ன ‘தொலைநோக்கு’த் தலைமை? ‘அண்மை நோக்கு’த் தலைமை என்று ஒன்று உண்டா?

உங்களுக்குப் புரிகிறதோ அல்லவோ, எங்கள் குலசாமி சாட்சியாக எனக்குப் புரியலீங்க.

எதற்கு இந்த ஒப்பீடு?

இரண்டிரண்டு விருதுகளைப் பெற்ற நேரு, இந்திரா அம்மையார், மன்மோகன் சிங் ஆகியோரைவிடவும் 28 பெற்ற மோடி அறிஞரா? அதீத ஆளுமைத் திறன் வாய்ந்தவரா? உயர் பண்பாளரா? 

“ஆம்” என்பார்கள் மோடியின் அல்லக்கைகள்.

நீங்கள்?

                                 *   *   *   *   *

https://www.newindianexpress.com/nation/2025/Jun/17/pm-modi-sets-record-with-most-foreign-honours-for-an-indian-pm-after-receiving-cypruss-top-honour

புதன், 18 ஜூன், 2025

‘உச்ச’ நடிகரிடம் நம் 1+1 கேள்விகள்!

'ஜெயிலர் 2' படப்பிடிப்பிற்காக வெளிநாட்டிற்குச் செல்ல சென்னை விமான நிலையத்திற்கு இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் வருகை தந்திருந்தார்.

அப்போது அவரிடம் அகமதாபாத் விமான விபத்து குறித்துச் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, "அகமதாபாத் விமான விபத்து ரொம்ப வருத்தமான விஷயம். ஆண்டவன் அருளால் இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கணும்" என்றார்[தினத்தந்தி].

“ஆண்டவன் அருளால் இனி இது போன்ற சம்பவம் நடக்காமல் இருக்கணும்” என்கிறார் புகழின் உச்சியைத் தொட்ட ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்து.

“இந்தப் படு பயங்கர அவல நிகழ்வைத் தடுக்காமல் அந்த அருள்மிகு ஆண்டவன் என்ன செய்துகொண்டிருந்தார்?” என்பது உச்ச நடிகரிடம் நாம் கேட்கும் கேள்வி.

உச்சத்திடம் கேட்கும் இன்னொரு நம் கேள்வி:

“உன்னை நான்தானே கோடி கோடி கோடீஸ்வரன் ஆக்கினேன். குறைந்தபட்சம் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்காக ஒரு கோடி ரூபாய் கொடு ரஜினி” என்று சொல்லியிருப்பாரே?”

நம் 1+1 கேள்விகளுக்கு அவர் பதில் சொல்வாரா?

* * * * *

https://www.dailythanthi.com/cinema/cinemanews/ahmedabad-plane-crash-is-very-sad-rajinikanth-1163524

செவ்வாய், 17 ஜூன், 2025

'அது'வும் ஏறத்தாழ விபச்சாரம்தான்!!!

விலைமகளிர் விடுதி.

வாடிக்கையாளனிடம் உரிய தொகையை[பணம்]ப் பெற்றுக்கொண்டு தன்னுடைய ஒட்டுமொத்த உடம்பையும் பிறந்த மேனியாய் ஒப்படைக்கிறாள் விலைமகள்[கற்பனைதான்].

அதாவது, தன் உடம்பைக் காட்சிப்படுத்துவதோடு, அதனைத் தொட்டுக் கையாண்டு உடலுறவு கொள்ளவும் அனுமதிக்கிறாள் அவள்.

இந்தச் 'சுகபோக’ நிகழ்வை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

1.காட்டுதல் 2.கையாளப்படுதல் 3.உடலுறவு கொள்ளுதல்

வாடிக்கையாளன் உடலுறவு கொள்ள விரும்பாமல்[குடுகுடு கிழம், மறை கழன்ற கலைஞன் போன்றவர்கள்], விலைமகளின் மேனி அழகை ரசித்துக் கையாளுவதோடு நிறுத்திக்கொண்டாலும், உரிய தொகையை முழுமையாகவோ சற்றே குறைவாகவோ கொடுப்பான் என்பது உறுதி.

இங்கே அறியத்தக்கது.....

காசுக்காக ஒரு பெண் தன் உடம்பைக் காட்சிப்படுத்தி[ஓரளவுக்கேனும் ஆடையால் மறைத்து]த் தொட்டுக் கையாளுவதற்கு மட்டுமே அனுமதித்தாலும் அது விபச்சாரமே.

ஆக, காசுக்காக அங்க அசைவுகளுடன் உடம்பைக் காட்சிப்படுத்திக் கையாள அனுமதிக்கிற[-உடலுறவு] ‘அவர்கள்’ஐயும் விபச்சாரிகள் என்றே சொல்லலாம்.

“யார் அந்த அவர்கள்?” என்கிறீர்களா?

உங்களுக்குத் தெரியாதா என்ன, வயசாளி எனக்கு எதுக்குங்க வீண் வம்பு?

திங்கள், 16 ஜூன், 2025

“வாள் வேண்டாம்; நூல் கொடுங்கள்”... பகுத்தறிவாளன் கமல்காசனுக்குப் பாராட்டுகள்!!!

அரசியல்வாதிகளுக்கு நடத்தப்படும் பாராட்டு விழாக்களில்[தேவையோ அல்லவோ] அவர்களைக் கவுரவிக்கும் வகையில், ‘வீரவாள்’ பரிசளிப்பது வழக்கத்தில் உள்ள ஒரு பழக்கம்.

அன்று போர்க்களங்களில் பயன்படுத்தப்பட்ட முக்கிய ஆயுதமான இதைப் பரிசாக வழங்குவதன் நோக்கம் யாது என்பது பரிசளிப்பவனுக்கும் தெரியாது; பெறுபவனும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

ஒரு வகையில், கொலை ஆயுதமான இதைப் பொது மேடையில் கையாளுவதே குற்றச் செயலாகும். நீண்டதொரு வாளால் பிறந்த நாள் ‘கேக்’ வெட்டுகிற ‘ரவுடிகள்’ கைது செய்யப்படுவது இதனால்தான். 

வாளைப் பரிசாக வழங்குகிறவனும் பெறுகிறவனும்கூடக் குற்றவாளிகள்தான். காவல்துறை இவர்களை ஏன் கைது செய்து சிறைப்படுத்துவதில்லை என்பது விடையில்லாத கேள்வி.

வருங்காலத்தில், வாளுக்குப் பதிலாக, ஒரு பெரிய வெடிகுண்டைத் தொண்டர்கள் தங்களின் தலைவனுக்கு வழங்கிப் பெருமிதப்படுவதும் நடக்கக்கூடும்.

இந்தவொரு வாள் பரிசளிக்கும் நிகழ்வு, மாநிலங்களவை[ராஜ்ய சபா]உறுப்பினராகத் தேர்வான கமல்காசன் அவர்களுக்கான பாராட்டு விழாவிலும் இடம்பெற்றுள்ளது. பரிசாக அளிக்கப்பட்ட அதை அவர் ஏற்க மறுத்திருக்கிறார்[நூல் வழங்கலாம் என்று அறிவுறுத்தியுள்ளார்; வாள் வழங்கியவரின் மனம் நோகாமலிருக்க, வாளுடன் புகைப்படம் எடுக்க அனுமதித்துள்ளார்].

வாளைப் பரிசாக வழங்குவது அநாகரிகமானது என்பதைப் பகுத்தறிவாளன் கமல் தெளிவாகப் புரிந்துகொண்டிருப்பதே இதற்கான காரணம்.

கமல்காசன் பகுத்தறிவு பேசுவது வெறும் பகட்டுக்காக அல்ல; பத்தரைமாற்றுப் பகுத்தறிவாளன் அவர் என்பதை உறுதிப்படுத்துகிறது இந்த நிகழ்வு[தன்னை ஆதரிக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைவது குறித்தெல்லாம் அவர் கவலைப்படவில்லை].

‘சொல் வேறு செயல் வேறு’ என்னும் பழிச்சொல்லுக்கு இடம்தாராத வகையில் செயல்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் கமல்காசனை மனதாரப் பாராட்டுகிறோம்.

வாழ்க பகுத்தறிவாளன் கமல்காசன்! தொடர்க அவரின் பொதுப்பணி!!

#நடிகர்-அரசியல்வாதி கமல்ஹாசன் தனது ராஜ்யசபா எம்.பி. வேட்புமனுவைக் கொண்டாடும் ஒரு கட்சி நிகழ்வில் ரசிகர்கள் அவருக்கு வாளைப் பரிசளித்தபோது அவர் பொறுமை இழந்தார். வீடியோவில் பதிவான இந்த சம்பவம், ஹாசன் முதலில் வாளைப் பிடிக்க மறுத்து, இறுதியில் செல்ஃபிக்குப் போஸ் கொடுப்பதைக் காட்டுகிறது. எதிர்காலத்தில் புத்தகங்களைப் பரிசாகத் தேர்வுசெய்யுமாறு எம்.என்.எம் கட்சித் தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது# - செய்தி.

ஞாயிறு, 15 ஜூன், 2025

தடையைத் தகர்க்கும் ‘அண்ணாமலையார்’ பக்தர்கள்... அல்ல, புத்தி பேதலித்தவர்கள்!!!


பாதுகாப்புக் காவலர்களை இடித்துத் தள்ளிக்கொண்டு, அண்ணாமலையார்’[குன்று வடிவில் குடிகொண்டிருக்கிறாராம்] என்று பெயர் சூட்டப்பட்ட கற்சிலையைக் காண முட்டி மோதிச் செல்லும் இவர்கள்[பக்தர்கள்?!] மனிதர்களே அல்ல; அம்மணக் கோலத்தில் காடுகளில் திரிந்த காட்டுமிராண்டிகளின் எச்சங்கள்.

‘அனைத்திற்கும் மேலான சக்திதான் கடவுள். அவர் அனைத்துப் பொருள்களிலும் இரண்டறக் கலந்திருக்கிறார்’ என்னும் முன்னோர்களின் கருத்தை[சரியோ தவறோ]ப் புரிந்துகொள்ளும் குறைந்தபட்ச அறிவுகூட இல்லாத இந்த முழு மூடர்களால் சமுதாயத்திற்கு கேடு விளையுமே தவிர கடுகளவும் நன்மை விளைந்திட வாய்ப்பில்லை.

எனவே,

தடுப்புகளைத் தகர்த்துக்கொண்டு கோயிலுக்குள் நுழையும் இந்த அறிவுக் குருடர்களைத் தடுத்து ஒழுங்குபடுத்தாமல், முட்டி மோதிக்கொண்டும் அடித்து உதைத்துக்கொண்டும் செத்துத் தொலைய அனுமதிப்பதே நாட்டு நலனுக்கு நல்லது என்பது நம் எண்ணம்.

“எண்ணிக்கையைப் பொருட்படுத்த வேண்டாம். அவர்களைச் சாக விடுங்கள்” என்பதே கோயில் நிர்வாகத்திற்கும் அரசுக்கும் நாம் விடுக்கும் கோரிக்கை!

                                               *   *   *   *   *
***மேற்கண்டது கடந்த கால நிகழ்வு. இன்றும் இதே நிலைமைதான்.

சனி, 14 ஜூன், 2025

அகமதாபாத் விமான விபத்து... இறந்த 270 பேரின் சிதறிய ரத்தம் உறைவதற்குள்.....

'மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டடத்தின் மீது அந்த விமானம் விழுந்து வெடித்துச் சிதறித் தீப்பிடித்தது[அகமதாபாத்தில்]. இந்த விபத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்பட 270 பேர் பலியாகியுள்ளனர்' -இது செய்தி.

'படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நபர்களை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார் பிரதமர் மோடி' -இதுவும் விபத்து தொடர்பாகப் பின்னர் வெளியான தகவல்.

மோடியின் ஆறுதல் மொழிகளால், பாதிப்புக்கு உள்ளான குடும்பத்தார்களின் துயர் முற்றிலுமாய்த் துடைக்கப்பட்டது எனலாம்.

இந்நிலையில்.....

மோடி, இந்தச் சோக நிகழ்வில் ஒரு பிரதமருக்கான கடமையைச் செவ்வனே செய்து முடித்த கையோடு, வழக்கமான தன் உலகச் சுற்றுலாவை நாளை தொடங்குகிறார் என்பது அண்மைச் செய்தி[பிரதமர் மோடி நாளை(ஜூன் 15) முதல் 4 நாள் அரசு முறைப் பயணமாகக் கனடா, சைப்ரஸ் நாடுகளுக்குச் செல்கிறார். கனடாவில் ஜூன் 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்> ஊடகங்கள்].

இதற்கு முன்பு, மோடி உலகெங்கும் சுற்றுலாச் சென்று உலக நாடுகளுடனான நட்பைப் பலப்படுத்தியதன் விளைவுதான், பாகிஸ்தானுடன் நடந்த போரில் மிகப் பல நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்தன என்பது அறிந்து மகிழத்தக்கது.

இடையில் நின்றுபோன பயணத்தைத் தொடர்வதன் மூலம், மேலும் பல நாடுகளுடனான நட்பை மோடி உறுதிப்படுத்துவார் என்பதில் சந்தேகமே இல்லை.

“விமான விபத்தில் உயிரிழந்த 274 பேரின் சிதறிய ரத்தம் உறைவதற்குள்ளாக மோடி தன் சுற்றுலாவைத் தொடர வேண்டுமா?” என்று எவரும் கேள்வி எழுப்ப வேண்டாம்.

கேள்வி கேட்டவர்கள் பிரதமரை அவமதித்ததோடு தேசத்துக்குத் துரோகம் இழைத்த குற்றவாளிகளாகவும் கருதப்படுவார்கள். 

அளப்பரிய துயரமும் மனப் பயிற்சியும் கடவுள் துதியும்!!!

வாழ்க்கை என்பது வெகு அற்பமான ஆயுளைக் கொண்டது.

இன்பமும் துன்பமும்[இதுவே அதிகம் என்பது மறுக்க இயலாத உண்மை] இரண்டறக் கலந்தது.

இன்பங்கள் துய்த்து மகிழ்வுடன் வாழ்ந்தால்தான் மன நலத்துடன் உடல்நலமும் வாய்க்கும். இதுவே இயற்கை நெறி.

இயன்றவரை மகிழ்வுடன் வாழ்வதற்கு, பெருமளவில் தாக்குகிற துன்பங்களைத் தாங்கும் மனப் பக்குவம் தேவை.

அந்தப் பக்குவத்தை உரிய பயிற்சி[வாழும் முறைகளையும், இயற்கை நெறிகளைப் புறக்கணிப்பதால் விளையும் நன்மை தீமைகளையும் ஆராய்ந்து தெளிதல்]யால் மட்டுமே பெற்றிட முடியும். 

ஓய்வு வாய்க்கும்போதெல்லாம் இந்தவொரு பயிற்சியை மேற்கொள்ளுதல் அவசியம். இதை அலட்சியப்படுத்தி, கோயில் கோயிலாக அலைவதாலும், துயரங்களைப் பட்டியலிட்டுக் கண்ட கண்ட கடவுள்களிடம் அழுது புலம்புவதாலும் மனம் பலவீனப்படுமே அல்லாமல், அது பக்குவம் அடையாது.

சிந்திப்பீர்! மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபடுவீர்!!
                                      
                                      *   *   *   *   *
***எவ்வளவுதான் பயிற்சி மூலம் மனதைப் பக்குவப்படுத்தினாலும் துன்பமே இல்லாத வாழ்க்கை சாதியமில்லை என்பது அறிந்துணரத்தக்கது. கடவுளை வழிபடுவதாலும் பயன் இல்லை.

அன்றிலிருந்து இன்றுவரை, மனிதர்கள் கடவுளை நம்பி வழிபட்டதால் இந்த இனம் அனுபவிக்கும் துன்பங்களின் அளவு குறையவே இல்லை; அதிகரித்துள்ளது என்பதே உண்மை. இதில் மதங்களின் பங்களிப்பு மிக அதிகம்.

வெள்ளி, 13 ஜூன், 2025

‘மூடநம்பிக்கை’ ஒரு முட்டாளைக் கைவிட்டது; இன்னொரு முட்டாளின் உயிர் பறித்தது!

விஜய் ரூபானி[குஜராத்தின் முன்னாள் முதல்வர்] '1206' என்ற எண்ணைத் தன் அதிர்ஷ்ட எண்ணாகக் கருதினார். அவருக்குச் சொந்தமான அனைத்து வாகனங்களுக்கும் '1206' என்ற எண்ணையே பதிவு செய்திருந்தார். 

இந்த மூடநம்பிக்கையாளன், 12.06.2025[அதிர்ஷ்ட எண்]இல் பதிவு செய்து பயணித்த விமானம் விபத்துக்குள்ளாக[அகமதாபாத்] மரணத்தைத் தழுவினார்[https://www.dailythanthi.com].

‘அதிர்ஷ்ட எண்’ மீது நம்பிக்கை கொள்ளாமல் இருந்திருந்தால், இந்த நாளில்[12.06.2025] இந்த விமானத்தில் இவர் பயணம் செய்ததும்[வேறொரு நாளில் பயணம் மேற்கொண்டிருந்திருப்பார்] உயிரிழந்ததும் நிகழ்ந்திருக்காது.

* * * * *

அர்ஜூன் பட்டோலியா(38) குஜராத்திலுள்ள அம்ரேலி மாவட்டத்தினைச் சேர்ந்தவர். கடந்த மே மாதம் 26ஆம் தேதி உயிரிழந்த தன் மனைவி ‘பாரதிபென்’னின் சாம்பலை[அஸ்தி]க் கரைப்பதற்கு இந்தியா வந்தவர், லண்டன் செல்ல, விபத்துக்குள்ளான விமானத்தில்[அகமதாபாத்] பயணித்தபோது உயிரிழந்தார்.

‘இறந்தவரின் சாம்பலைப் புனித நீரில் கரைத்தல்’ என்னும் அடிமுட்டாள்தனத்திற்கு அடிமை ஆகாமல் இருந்திருந்தால் இன்றளவும் அர்ஜுன் வாழ்ந்துகொண்டிருப்பார்.

[இவ்விருவர் உட்பட உலகிலுள்ள அத்தனை மூடநம்பிக்கையாளர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்].

https://www.dailythanthi.com]/news/india/plane-crash-former-chief-ministers-lucky-number-1206-tragedy-turns-into-final-travel-date-1162922.

https://www.puthiyathalaimurai.com/india/husband-dies-in-plane-crash-after-coming-to-cremate-wifes-ashes

சூரியன் ஒரு நிமிடம் அணைந்தால்[அச்சுறுத்தும் அறிவியல்]?!

சூரியன் திடீரென அதன் ஒளிர்வை[வெப்பம்] இழந்தால், பூமியில் உள்ள உயிரினங்கள் பாதிக்கப்படுவதற்குக் கணிசமான நேரம் எடுக்கும்.

சூரியனிலிருந்து ஒளி பூமியை அடைய 8½ நிமிடங்கள் ஆகும் என்பதால், 8½ நிமிடங்கள்வரை அதன் விளைவுகள் நமக்குத் தெரியாது. அதே சமயம், நமது கிரகம் வெப்பத்தை நன்றாகத் தக்க வைத்துக்கொள்கிறது என்பதால் நாம் உடனடியாக உறைந்து இறந்துவிடமாட்டோம்.

முதல் ஒரு மணிநேரம்:

கணிசமான சேதம் எதுவும் இல்லை. கோளின் இருண்ட பக்கத்தில் சூரியனின் கதிர்களைப் பிரதிபலிக்கும் சந்திரனும் இருட்டாகிவிடும்.

முதல் 12 மணி நேரம்:

இந்தக் கோளில் வழக்கப்போல் உயிரினங்கள் இறந்துகொண்டிருக்கும். பெரிய அளவிலான மாற்றங்கள்[உயிரின இறப்பை] நிகழா.

முதல் வாரம்:

பெரும்பாலான சிறிய தாவரங்கள் இறந்துவிடும், முதல் வாரத்திற்குப் பிறகு பூமியின் சராசரி மேற்பரப்பு வெப்பநிலை 32 டிகிரி பாரன்ஹீட்டாகக் குறைவதை நாம் அறியலாம்.

ஒரு சில மாதங்களுக்குப் பிறகு:

ஒளிச்சேர்க்கை நின்றுவிடும். என்னினும், மேலும் பல பெரிய மரங்கள் சூரிய ஒளி இல்லாவிட்டாலும் பல தசாப்தங்களாக உயிர்வாழ்கின்றன என்பது அறியற்பாலது. சில மாதங்களுக்குள், கடலின் மேற்பரப்பு உறைந்துவிடும். ஆனால், கடல்கள் திடமாக உறைவதற்கு ஆயிரம் ஆண்டுகள் ஆகலாம். இருப்பினும், சில சிறிய கடல் உயிரினங்கள் புவிவெப்பத் துவாரங்களிலிருந்து வெளிப்படும் வெப்பத்தில் உயிர்வாழக்கூடும்.

சில பத்தாண்டுகளுக்குப் பிறகு:

பெரும்பாலான மனிதர்கள் அழிவார்கள். உயிர் பிழைத்த சிலர் பூமியின் மையத்திற்கு அருகில் இடம்பெயர்ந்து, செயற்கை நகரங்களில் புவிவெப்ப ஆற்றலைப் பயன்படுத்தி வாழ வேண்டியிருக்கும்.

சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு:

வெப்பநிலை -400 ‘ஃபாரன்ஹீட்’வரை குறையும். வளிமண்டலம் சரிந்து, கதிர்வீச்சு உள்ளே ஊடுருவி, பூமி வளம் குன்றி, தரிசு நிலமாக மாறும். மேலும், கடல்களுக்கு அடியில் உள்ள பாக்டீரியாக்கள் மட்டுமே வாழும் உயிரினங்களாக இருக்கும்.

இறுதியாக, பூமி இப்படித்தான் இருக்கும்.


நன்றி: அன்வேஷ் நாகா[அமெச்சூர் வானியல் பார்வையாளர் ]

வியாழன், 12 ஜூன், 2025

🔴LIVE : விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழப்பு | Gujarat | Flight | Ahme...

ரு கோரமான விமான விபத்து குறித்து, 15 நிமிடங்களுக்கு முன்பு[பதிவிட்டபோது] வெளியானதொரு காணொலி கீழே.

பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் இந்தப் பகிர்வு[முன்னர் நிகழ்ந்த கொடூர விபத்துகள் குறித்தத் தகவல்களும் இடம்பெற்றுள்ளன].

புதன், 11 ஜூன், 2025

கொலையும் செய்வான் குருட்டுப் பக்தன்!!!

//திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் வைகாசி பௌர்ணமி கிரிவலம்  செல்வதற்கு உகந்த நேரம் 10.06.2025ஆம் தேதி மதியம் 12.32 மணியிலிருந்து 11ஆம் தேதி மதியம் 1.58 மணிவரை// என்று கோயில் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

சிவபெருமான் என்று சொல்லப்படும் கடவுள் ’திருவண்ணாமலை’ என்னும் ஊரில் மலை உருவில் காட்சியளிக்கிறார்[ஆண்டவன் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்னும் கதை காலாவதி ஆனதோ?!] என்று எப்போதோ எவனோ ஓர் அயோக்கியன் கட்டிவிட்ட கதையை நம்பி, அந்தக் கல்மலையைச் சுற்றிவந்தால்[கிரிவலம்] நினைத்த காரியம் நிறைவேறும் என்று எண்ணி, தினம் தினம் அதைச் சுற்றிவருகிறார்கள் மனித மந்தையர்கள்.

விசேட நாட்கள் என்றால், கட்டுப்படுத்த இயலாத அளவுக்கு வந்து குவிகிறார்கள். அண்ணாமலையானைத் தரிசிக்க மணிக்கணக்கில் கால்கடுக்க வரிசையில் காத்திருக்கிறார்கள்.

வைகாசிப் பௌர்ணமி நாளில் அவனைத் தரிசிக்க 8 மணி நேரம்போல்[திருப்பதி என்றால் நாள்கணக்கில்] பக்தர்கள் காத்திருக்கிறார்கள் என்கிறது கீழே இடம்பெற்றுள்ள காணொலி.

துணிக் கடையோ, மளிகைக் கடையோ, நகைக் கடையோ, பிற வணிக நிறுவனங்களோ அங்குச் செல்லுபவர்கள், அவற்றின் ‘உண்மைத்தன்மை’ குறித்து விசாரிக்கத் தவறுவதில்லை. கோயில்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கானவை.

காத்திருப்பின்போது, பக்தர்களிடையே முட்டல் மோதல் தள்ளுமுள்ளு எல்லாம் உண்டு; கடும் வாக்குவாதங்களும் இடம்பெறும்; அடிதடியும் அவ்வப்போது நிகழ்வதுண்டு.

அறிவிக்கப்படும் நேரத்திற்குள் கடவுளைத் தரிசிக்கத் தவறினால் தங்களின் கோரிக்கையை அவர் நிறைவேற்றமாட்டார் என்னும் அசைக்க இயலாத நம்பிக்கையே காரணம்.

ஒரு சோதனை முயற்சியாக.....

இந்த நாட்டிலுள்ள அத்தனைப் பிரபலக் கோயில்களிலும், காலை 08 - 09 என்பது போல ஒரு நேரத்தைக் குறிப்பிட்டு, அந்த நேரத்தில்[மட்டும்]அந்தக் கோயிலில் குடிகொண்டிருக்கும் கடவுள் சுய உருவில் தரிசனம் தருவார். தரிசித்து உய்தி பெறத் தவறாதீர்’ என்று நிர்வாகங்கள் அறிவிப்புகளை வெளியிட்டால்.....

பக்தர்கள் கூட்டம் அலை அலையாய் அங்கெல்லாம் குவிவது மட்டுமல்ல, முந்திச் சென்று தரிக்கும் போராட்டத்தில், ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டும் அடித்துக்கொண்டு ஏராளமானவர்கள் உயிர் இழப்பார்கள் என்பது உறுதி. அந்த அளவுக்குப் பக்தி என்னும் மூடக்குணம் மிகப் பெரும்பாலான மக்களை ஆட்டுவித்துக்கொண்டிருக்கிறது!!

காணொலி:

செவ்வாய், 10 ஜூன், 2025

காணும் இடமெல்லாம் காட்டுமிராண்டிகள்!!!

பாதி எரிந்த மனிதத் தலை, கை, கால் போன்றவற்றைத் தூக்கிக்கொண்டு ஆட்டம்போட்டார்களாம் பக்தர்கள்.

அவர்கள் பக்தர்கள் அல்ல; காட்டுமிராண்டிகள்.

விலங்கு மாட்டிச் சிறையில் அடைக்கப்படுவதற்குரிய மிருகங்களைப் ‘பக்தர்கள்’ என்று குறிப்பிட்டுச் செய்தி வெளியிட்ட ஊடகக்காரனும் அறிவு வளர்ச்சி இல்லாத ஆதிவாசியே.

இந்தக் கொடூரக் காட்சியைப் பரவசத்துடன் பார்த்தார்களாம் மக்கள். கண்டிக்கத் தவறிய அவர்களும் 100% காட்டுவாசிகளே.

ஆட்டம்போட்டவர்களையும் வேடிக்கை பார்த்தவர்களையும்[கண்டுபிடித்து] கட்டி இழுத்துச்சென்று சிறையில் அடைக்காத காவலர்களும் காட்டுமிராண்டி இனத்தைச் சார்ந்த கோழைகள்தான்.

அறிவிலிகளின் எண்ணிக்கை நாள்தோறும் பெருகக் காரணமான மூடத்தனங்களைக் குறைக்க முயற்சிக்காமல், கோயில்கள் கட்டுவதையும், கும்பாபிஷேகங்கள் நடத்துவதையும் வழக்கமாக்கியுள்ள ஒன்றிய & மாநிலங்களின் ஆட்சியாளர்களும் ‘கா.மி.’ பரம்பரயினரே[சிந்திக்கக் கற்றவர்கள் அஞ்சி ஒடுங்கி ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்; மறைவிடங்களில் பதுங்கிக் கிடக்கிறார்கள்] என்றியம்புவதில் நமக்குத் தயக்கம் ஏதுமில்லை.

ஆக, ஒட்டுமொத்தச் சமுதாயமும் காட்டுமிராண்டிக் குழுக்களின் ஆதிக்கத்தில்!

இந்த அவல நிலை மாறுமா? எப்போது?

திங்கள், 9 ஜூன், 2025

மணிப்பூர் ம.அரசின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வரும்! எப்போது?

                                                           
மணிப்பூர் மக்கள் படும் துன்பங்களைப் பற்றிப் பிரதமர் மோடியின் உணர்வின்மை உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கிறது என்கிறார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்.

மணிப்பூரில் மலைவாசிகளான பூர்வீகக் குடிமக்களுக்கும் குடியேறிகளுக்கும் இடையிலான கலவரம் தொடர்கிறது.

கலவரத்தை அடக்க மோடியால் அனுப்பப்பட்ட ராணுவத்தின் முயற்சி வெற்றி பெறவில்லை.

இந்தக்கலவரச் சூழல் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடிப்பதால், மணிப்பூர் வாசிகள் மீதான பற்றுதலை நம் பிரதமர் வெகுவாக இழந்துவிட்டார், அல்லது முழுமையாகத் துறந்துவிட்டார்[நம்போலின் சனோய் கல்லூரியின் உதவிப் பேராசிரியை நிங்கோம்பம் ஸ்ரீமா பிபிசியிடம் பேசுகையில், “மக்களே தங்களை தற்காத்துக் கொள்ளும்படி அரசாங்கம் விட்டுவிட்டது. குகி மற்றும் மெய்தேய் ஆகிய இரு சமூகத்தினரும் அரசாங்கம் தங்களுக்காக எதையும் செய்யாததால் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதன் காரணமாக, வன்முறையைச் சமாளிக்க மக்களே வன்முறையில் ஈடுபடுவதால், நிலைமை மோசமாகிக் கொண்டே வந்தது” என்கிறார்[https://www.bbc.com/tamil/articles/cml1z28n3r2o]. என்று சொல்லலாம்.

தொடரும் கலவரம் காரணமாக, மணிப்பூர் மக்கள் முற்றிலுமாய் அழிந்துபோனால்[வெகு விரைவில்], அந்த வெற்று மாநிலத்தைத் தன் கட்டுக்குள் வைத்திருப்பது எளிது என்பது மோடியின் திட்டமோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.

இதைப் புரிந்துகொண்டால் ஜெய்ராய் ரமேஷ் போன்ற நாட்டுப் பற்றாளர்கள், அடுத்தடுத்து அதிர்ச்சிக்கு உள்ளாகிப் பைத்தியங்கள் ஆவதிலிருந்து தப்பிப் பிழைக்கலாம்!

ஞாயிறு, 8 ஜூன், 2025

கோவை[தெற்கு] ‘பாஜக’காரர்கள் அத்தனைப் பேரும் கன்னடர்களா?!

'தமிழ் எங்கள் உயிர், கன்னடம் எங்கள் தாய்மொழி, கன்னட மொழி விரோதி கமலஹாசன் என்றெல்லாம் குறிப்பிட்டு, அவரை மட்டுமல்லாமல் ‘தி.மு.க’ வையும் கண்டித்துப் ‘பா.ஜ.க’ வினர் கோவையில் ஒட்டியுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது' என்பது செய்தி[https://tamil.indianexpress.com]

சுவரொட்டி[போஸ்டர்]:


‘கவுடா’என்னும் பெயரே இந்தப் போஸ்டர் அடித்த நபர் கன்னடன் என்பதை உறுதிப்படுத்துகிறது; ‘கன்னடம் எங்கள் தாய்மொழி’[தமிழ் உயிர் மொழியாம். யாரை முட்டாளாக்க?] என்கிறார்.

இவருக்கு[கவுடா]க் ‘கன்னடம்’தான் தாய்மொழி என்பது சொல்லித் தெரிவதில்லை. 

கமல்காசனை மட்டுமல்ல, ‘தி.மு.க.’வையும் கண்டிப்பது இவர் நோக்கம். கண்டிக்கட்டும். அது அவர் ஆசை.

போஸ்டரில் இடம்பெற்றுள்ள, ‘கன்னடம் எங்கள் தாய்மொழி’ என்னும் சொற்றொடரில் உள்ள ‘எங்கள்’ என்னும் ஒரு சொல்தான் நம் நெஞ்சில்  நெருடலை உண்டுபண்ணுகிறது.

அந்த ‘எங்கள்’ கோவை[தெற்கு] ‘பாஜக’ கட்சியினரைத்தான் குறிக்கிறது. ‘கவுடா’விடம் நாம் கேட்க விரும்புவது.....

“கன்னட கவுடரே,

கோவை, தெற்கிலுள்ள அத்தனைப் ‘பாஜக’ காரர்களுமே கன்னடர்கள் என்கிறீரா?”

“ஆம்” என்பதுதான் கன்னடனான உம்முடைய பதிலாக இருக்கமுடியும். 

கவுடாவிடம் மட்டுமல்ல, கோவையிலுள்ள ’பாஜக’ கட்சித் தமிழர்களிடமும் நாம் கேட்க விரும்புவது.....

“தமிழர்களே, கன்னடன் சந்திரசேகர் கவுடா சொல்வதை நீங்கள் ஏற்கிறீர்களா?”

                                      *   *   *   *   *

சனி, 7 ஜூன், 2025

கடும் எச்சரிக்கை... வடக்கன்களுடன் ‘கூட்டு’ தமிழினத்திற்கு ‘வேட்டு’!!!

2026இல் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்து, தமிழ்நாட்டிலுள்ள ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் கூட்டணி அமைப்பதில் முனைப்புடன் களத்தில் இறங்கியுள்ளன.

மற்றக் கட்சிகளுடன் ஒப்பிடும்போது, அதிகாரப் பலத்துடன் அதீதப் பண பலமும்[கோடி கோடி கோடி கோடியோ கோடி] பெற்றுள்ள ‘பாஜக’, ஆளும் ‘தி.மு.க.’வுக்கு எதிரான அனைத்துக் கட்சிகளையும் தன்வசப்படுத்துவதில் தீவிரம் காட்டுகிறது[இன்று அமித்ஷா தமிழ்நாடு வருவது கட்சித் தலைவர்களுடன் பேரம் பேசுவதற்காகவே].

எதிர்க்கட்சிகளில், பணபலமும் பெருமளவில் தொண்டர் எண்ணிக்கையும் கொண்டது ‘அதிமுக’ என்பது யாவரும் அறிந்ததே.

இக்கட்சி தவிர, ‘பாமக’[அன்புமணி அணி], ‘தேமுதிக’, ‘அமமுக’, ‘தவெக’, 'ஓபிஎஸ்'[ஒற்றை நபர் கட்சி] ஆகியவையும் ‘பாஜக’ அணியில் இணைந்துவிட்டதற்கான அறிவிப்பு.....

தனித்தனியாக இதன் தலைவர்களுடன் அமித்ஷா நடத்தும் ‘பேரம்’ முடிந்தவுடன், சில தினங்களில் வெளியாகக்கூடும்.

இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு, தமிழர் நலனில் பெரிதும் அக்கறைகொண்ட இணைய எழுத்தாளனான நான், மேற்குறிப்பிட்ட கட்சிக்காரர்களை[பாஜக நீங்கலாக] மிகக்  கடுமையாக எச்சரிக்க விரும்புகிறேன்.

‘பாஜக’வினர்[குறிப்பாக, மோடி. அமித்ஷா போன்ற அதன் தலைவர்கள்] இந்தி வெறியும் ஆதிக்க வெறியும் கொண்டவர்கள் என்பது 100% உண்மை[ஏராளமான ஆதாரங்கள் உள்ளன> தளத்தில் இடம்பெற்றுள்ள இந்தித் திணிப்பு குறித்த புள்ளிவிவரப் படம் காண்க].

தன்மானத்திடனும் முழுச் சுதந்திரத்துடனும் வாழ்ந்திட விரும்பும் தமிழர்களை, தமிழ்நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றுவதன் மூலம் அடிமைகளாக்கி, மொழியையும் இனவுணர்வையும் அழித்தொழிப்பதே இவர்களின் திட்டம்[இது வழக்கமாக என் பதிவுகளில் இடம்பெறும் எச்சரிக்கைதான்].

இந்தவொரு திட்டத்துடன்தான் எடப்பாடியார் முதலானவர்களை விலைபேசி நிரந்தர அடிமைகளாக்க இருக்கிறார்கள் மேற்கண்ட ‘பாஜக’ தலைவர்கள்.

இந்த அவலமானதும் ஆபத்தானதுமான சூழ்நிலையில் மேற்கண்ட கட்சியினருக்கு[‘பாஜக’ தவிர] அடியேன் செய்யும் எச்சரிக்கை.....

“பாஜக’வுடன் இணைந்து 2026 தேர்தலில் வென்று, ஆட்சியைக் கைப்பற்றி, அதில் ‘பாஜக’வினருக்கும் பங்களிப்பீர்களேயானால், அது தமிழர்களுக்கு நீங்கள் செய்த மாபெரும் துரோகமாக அமையும். வெற்றியோ தோல்வியோ தமிழின உணர்வுள்ள கட்சிகளோடு மட்டும் இணைந்து போட்டியிடுங்கள்; ‘பாஜக’வின் சூழ்ச்சிக்குப் பலியாகாதீர்கள்!”

வெள்ளி, 6 ஜூன், 2025

'அந்த 3 பேர்[4?]' பிடிபடவே இல்லை! அப்புறம் எதற்குப் பிரதமரின் வெற்று வாய்ச்சவடால்?!

‘நடுவணரசின் வேலை பஹல்காமில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதிகளைக் கண்டுபிடிப்பது. மகராஷ்ட்ராவின் விழாக் கொண்டாட்டங்களில் தலையிடுவது அல்ல’ என்று தெரிவித்துள்ளார் ஆதித்யா தாக்கரே> https://www.maalaimalar.com/

இந்தச் செய்தியை வாசித்தபோது.....

பஹல்காமில் அதிரடித் தாக்குதல் நடத்தி 26 அப்பாவிகளைக் கொன்ற தீவிரவாதிகளைக் கண்டுபிடித்து[உலகின் எந்தவொரு மூலையில் பதுங்கினாலும் விடமாட்டேன் என்று சபதம் செய்தார் மோடி], கடும் தண்டனை வழங்குவதற்காகத்தானே அண்டைநாட்டு எதிரி பாக்கிஸ்தான் மீது போர் தொடுத்தார் நம் அகிலம் புகழ்[பாக்கிஸ்தானை புறமுதுகிடச் செய்ததில் பெற்றது] நம் பிரதமர்?

‘எதிரியின் படைகளையும் ஆயுதங்களையும் சிதறடித்தேன்; சிதைத்து உருக்குலைத்தேன்: கொலைகாரர்களைக் கொன்றுகுவித்தேன்’என்பது போல் அவர் தினமும் ஆர்ப்பரிப்பது கண்டு, தாக்குதல் நடத்திய குரூர்களைக் சிறை செய்து கடும் தண்டனை வழங்கிவிட்டார் என்று நம்பினோம்.

ஆதித்தியா தாக்கரேவின் மேற்கண்ட ஆவேசப் பேச்சு அந்த நம்பிக்கை தவறானது என்பதை உறுதிப்படுத்திவிட்டது.

எதற்காகப் பாக்கிஸ்தான் மீது ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ என்னும் பெயரில் பிரதமர்போர் தொடுத்தாரோ அந்த நோக்கம் நிறைவேறாத நிலையில், “எதிரி நம்மைப் பார்த்து அஞ்சி நடுங்குகிறான்; இனி தாக்குதல் நடத்தாதே என்று கெஞ்சுகிறான்” என்றெல்லாம் நம்மவர் ஓயாமல் முழங்கிக்கொண்டிருக்கிறாரே, எதற்கு?

வேறெதற்கு, அடுத்தடுத்து வரவுள்ள தேர்தல்களைக் குறிவைத்துத்தான்!

தொடர்புடைய காணொலி:

வியாழன், 5 ஜூன், 2025

‘இளிச்சவாயன்’ தமிழனும் ‘இனவெறியன்’ கன்னடனும்!!!

“தமிழே உலகின் மூத்த மொழி”, “உலகாண்டவன் தமிழன்” என்றெல்லாம் வாய் கிழியப் பேசியும் மேடை ஏறி முழங்கியும் தற்பெருமை பேசும் தமிழனுக்கு, ஓர் இனத்தவனுக்குத் தேவையான மொழிப் பற்றோ இனப் பற்றோ இல்லை.

மொழிப்பற்று இருந்திருந்தால்.....

இந்தியை எதிர்ப்பதாகச் சொல்லிக்கொண்டே, தமிழ் நாட்டில் உள்ள ஒன்றிய அரசின் கல்வி நிலையங்களிலும், அஞ்சலகம், ரயில் நிலையம், வங்கி போன்றவற்றிலும் இந்தியை ஆதிக்கம் செலுத்த அனுமதித்திருக்கமாட்டான்.

மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம் போன்றவை[குறிப்பிடத்தக்கவை] குறித்த அறிவை ஆங்கிலத்துக்கு நிகராகத் தமிழிலும் வளர்க்கத் தவறியிருக்கமாட்டான்.

இவனுக்குப் போதிய இனப்பற்றும் இல்லை.

இருந்திருந்தால்.....

பிற இனத்தவரை[குறிப்பாகக் கன்னடரை> பிற இனத்தவரைக் கொண்டாடியது தவிர்க்கப்படுகிறது] தமிழ்நாட்டில் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கும் தவற்றைச் செய்திருக்கமாட்டான்.

எடுத்துக்காட்டாகச் சில நிகழ்வுகள்:

கர்னாடகத்தி ஜெயலலிதா{இவருடைய தாய் சந்தியா[வேதவல்லி] கர்னாடகத்தவர்; கர்னாடக ஜெயசாம்ராஜ உடையாரின்[ஜமீன்].....  குறிப்பிடத்தக்க முக்கியத் தகவல்கள் தவிர்க்கப்பட்டுள்ளன] மைசூருவில் மாண்டியா எனும் ஊரில் 1948ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி பிறந்தார் ஜெயலலிதா. இவருக்கு இரண்டு வயது இருக்கும்போதே தந்தையை இழந்தார். அதன் பிறகு பெங்களூரு சென்று பிஷப் காட்டன் மகளிர் உயர்நிலைப்பள்ளியில் சிறிது காலம் படித்தார். பின்னர் அவரது தாய் வேதவல்லி அவரை சென்னைக்கு அழைத்து வந்தார்; நடிகை ஆனார்[https://yourstory.com/tamil/ammu-to-amma-jayalalithaa-life-journey-tamilnadu]இவரைத் தெய்வத்தாய் என்று போற்றிக் கடவுள் ஆக்கினான் தமிழன்; இன்றும் போற்றி வழிபடுகிறது ஒரு பெரிய மூடர் கூட்டம். 

நடிகர் ரஜினிகாந்த்[இவர் டிசம்பர் 12, 1950இல் பெங்களூருவில் பிறந்தார்[மராத்தி குடும்பம்]. ரஜினிகாந்தின் இயற்பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட். தந்தையின் பெயர் ராணோஜி ராவ்; தாயின் பெயர் ராம்பாய். இவருக்கு, ‘சூப்பர் ஸ்டார்’ என்று பட்டம் சூட்டி இறும்பூது எய்தினான் தமிழன். இவர் நினைத்திருந்தால் தமிழ்நாட்டின் முதல்வர் ஆகியிருப்பார். 

நடிகை சரோஜாதேவி[கன்னடத்துப் பைங்கிளி, கைபடாத ரோஜா என்றெல்லாம் இவருக்குச் செல்லப் பெயர்கள் சூட்டிக் கொஞ்சி மகிழ்ந்து புளகாங்கிதப்பட்டான் தமிழன் என்பது குறிப்பிடத்தக்கது]: இவர் ஆசைப்பட்டிருந்தாலும் தமிழர் தலைவியாகித் தமிழ்நாட்டை ஆண்டிருக்கலாம்.

மேற்கண்டவர்களோடு, கன்னடர்களான நடிகர் பிரகாஷ்ராஜ், முரளி, பிரபுதேவா, சைந்தர்யா, சுமன் ரங்கநாதன், வித்யா பாலா போன்றவர்களையும் திரைப்படத் துறையில் பிரபலமாக்கியவன் தமிழன்.

இவர்கள் அனைவருக்கும் மேலாக.....

‘ஈவெரா’[ஈரோடு வெங்கடப்ப நாயக்கர் மகன் ராமசாமி நாயக்கர்] கன்னடர் ஆயினும், ஆகச் சிறந்த பகுத்தறிவாளரான[குறிப்பாக மூடநம்பிக்கைகளைக் களைய அரும்பாடுபட்டவர்] இவரைப் பகுத்தறிவுப் பகலவன் என்று போற்றுவதோடு, 'தந்தை’ என்று சொல்லிப் பெருமைப்படுகிறவன் தமிழன்.

தமிழனின் இம்மாதிரியான உயர் குணங்களைப் பாராட்டி நன்றி செலுத்தும் நல்ல பண்பு கன்னடனுக்கு இல்லை.

இல்லாதது மட்டுமல்ல, வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் தமிழன் மீது வெறுப்பைக் கக்குகிறான்[தமிழ்நாட்டில் கன்னடர்கள் வாழ்கிறார்கள் என்பதை மறந்து]. 

தமிழனை மிரட்டியும்  ஓட ஓட விரட்டியும் கர்னாடகாவிலிருந்து வெளியேற்ற முயற்சி செய்கிறான்[‘1971இல் தமிழருக்கு எதிரான போராட்டம்’ போல் பல உதாரணங்கள் தரலாம்). தமிழன் பதிலடி தராததை எண்ணிப்பார்க்கும் மனப் பக்குவம் அவனுக்கு இல்லை.

அண்மை நிகழ்வுக்கு வருவோம்.

மொழி என்பது எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான ஒரு கருவி மட்டுமே[தாய் என்றும் தெய்வம் என்றும் உருவகித்து வணங்குவது அடி முட்டாள்தனம். ஆனாலும், மொழியின் கட்டமைப்பு குறித்தும், அதன் பழைமை குறித்தும் பயன்பாடு குறித்தும் பெருமைகொள்வதில் தவறில்லை.

பிற மொழி மீது ஆதிக்கம் செலுத்தவோ அதைச் சீர்குலைக்கவோ நம் மொழியை அனுமதிப்பதும் கண்டிக்கத்தக்கது; எதிர்த்துப் போராடுவதற்குரியது[இந்தியை நாம் எதிர்ப்பது இக்காரணத்தால்தான்].

இதை நினைவில்கொண்டு, கமல்ஹாசன் அவர்கள் “தமிழிலிருந்து பிறந்தது கன்னடம்” என்று சொன்னது குறித்துச் சற்றே சிந்திக்கலாம்.

தமிழ் தமிழருக்கான ஒரு கருவி. கன்னடம் கன்னடர்களுக்கான கருவி.

தமிழ் என்னும் கருவியிலிருந்து கன்னடம் என்னும் கருவி பிறந்தது[உருவானது] என்று சொல்வது[தவறான கருத்தாக இருப்பினும்] எவ்வகையிலேனும் கன்னடத்துக்கோ கன்னடர்களுக்கோ பாதிப்பை ஏற்படுத்துகிறதா?

இதன் மூலம் கன்னடத்தின் மீது தமிழ் ஆதிக்கம் செலுத்த முடியுமா? அதன் வளர்ச்சியைத் தடுப்பது சாத்தியமா?

இப்படிச் சொன்னது கன்னடர்களை எவ்வகையிலேனும் இழிவுபடுத்துகிறதா? 

கன்னடத்திலிருந்துதான் தமிழ் பிறந்தது என்று கன்னடன் உலகறிய முழங்கலாமே, தமிழனால் தடுக்க இயலுமா?

மேற்கண்டவற்றிற்கான “இல்லை” என்னும் பதில்கள் கர்னாடகத்தை ஆளும் தலைவர்களுக்கு மட்டுமல்ல, அங்குள்ள சிந்திக்கத் தெரிந்தவர்களுக்கும், கமலை மன்னிப்புக் கேட்கச் சொன்ன நீதிபதிக்கும் தெரியும்.

தெரிந்திருந்தும்.....

இவர்களெல்லாம் கமல்காசனை எதிர்ப்பது என்னும் பெயரில் கன்னடன் நடத்தும் போராட்டத்தை உக்குவிப்பதன் உள்நோக்கம் அவர்களுக்குத் தமிழன் மீதான காழ்ப்புணர்ச்சிதான்.