பக்கங்கள்https://kadavulinkadavul.blogspot.com/p/blog-page_1.html
சனி, 17 மே, 2025
அப்பா விடு தூது[‘கல கல’ காதல் கதை]!
வெள்ளி, 16 மே, 2025
மோடி இனி.....!?!?!
அடாவடித்தனத்தில் ஈடுபட்ட நம் எதிரியை இரும்புக் கரம் கொண்டு அடக்கிய நம் பிரதமர் மோடி[நெருப்பு]யின் அதிரடி நடவடிக்கை கண்டு ஒட்டுமொத்த உலகமும் வியப்பில் ஆழ்ந்துகிடக்கிறது.
சுட்டுவிரல் அசைவில் பகைவன் பாகிஸ்தானியனின் கொட்டத்தை அடக்கிய பிரதமரின் சாதனை நம் குடிமக்களையும் பெரு மகிழ்ச்சியில் திளைக்கச் செய்துள்ளது.
ஆனால்.....
மாநிலங்களின்[குறிப்பாகத் தமிழ்நாடு] அதிகாரங்களை முற்றிலுமாய்ப் பறித்து அவற்றை முடக்கிவிடும் தீவிர நடவடிக்கையைப் பிரதமர் மேற்கொண்டிருப்பது மக்களைக் கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.
அந்த நடவடிக்கை.....
மாநில அரசுகள் நிறைவேற்றும் மசோதாக்களைக் கிடப்பில் போட்டு, அவை தம் மக்களுக்கு நற்பணிகள் செய்யவிடாமல் தடுக்கும் ஆளுநர்களின் அடாவடித்தனங்களைத் தடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதல்லவா, அந்தத் தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்திட, குடியரசுத் தலைவரைத் தூண்டி உச்ச நீதிமன்றத்திடம் விளக்கங்கள் கேட்டிருப்பதுதான்.
இந்நிலையில், நாடாளுமன்றக் கூட்டங்களைத் தவிர்ப்பதை[பெரும்பாலும்] வழக்கமாக்கிகொண்டிருந்த மோடி, பாகிஸ்தானுடனான மோதலின்போது அனைத்துக் கட்சிக் கூட்டங்களைப் புறக்கணித்ததும், மாநில உரிமைகளை முற்றிலுமாய்ப் பறிக்க முயல்வதும் அவர் இந்த நாட்டின் சர்வாதிகாரியாக ஆகிக்கொண்டிருக்கிறாரோ என்னும் ஐயத்தைத் தோற்றுவிக்கிறது.
மோடி நம் பிரதமராகவே நீடிக்க வேண்டும் என்பது மக்களின் ஆசை.
இப்படி ஆசைப்படுவது அசட்டுத்தனமானதா அறிவுப்பூர்வமானதா என்பதை இந்த மண்ணில் இனி அடுத்தடுத்து இடம்பெறும் நிகழ்வுகளால் அறியலாம்.
வியாழன், 15 மே, 2025
போர் வெற்றி[‘இந்.-பாக்.’]... வேண்டாமே வெற்று ஆரவாரம்!!!
புதன், 14 மே, 2025
மராட்டியரின் ‘மொழி வெறி’ வளர்க! வெல்க!!!
//‘பீட்ஸா’ என்னும் உணவுப் பொருளை வினியோகித்த ஊழியரிடம் ‘மராத்தி’ மொழியில் பேசுமாறு வற்புறுத்தியதோடு, பேசாத[இயலாத?] அவருக்குத் தரவேண்டிய தொகையைத் தர மறுத்தார்கள் ஒரு மராத்தியத் தம்பதியர்// என்பது இன்று[14.05.2025] காலை 06.30 மணியளவில் ‘சன்’ தொலைக்காட்சியில் வெளியான செய்தி.
இது கண்டிக்கத்தக்கதல்ல, கை குலுக்கிப் பாராட்டி மகிழ்வதற்குரிய செயல் ஆகும்.
இது அரிதான ஒரு நிகழ்வாக இருத்தல் கூடாது.
இந்த ‘மொழிப் பற்று’... அல்ல, ‘மொழி வெறி’ மராட்டிய மாநிலத்திலுள்ள அத்தனைத் தம்பதியருக்கும் மட்டுமல்ல, அத்தனைக் குடிமக்களுக்குமான அவசியத் தேவை ஆகும்.
இந்தியைத் தாய்மொழியாகக்கொண்டவர்களில் மிகப் பெரும்பாலோர்[அத்தனைப்பேரும்?] இந்தி வெறியர்களாக இருக்கிறார்கள். இருப்பதால்தான் இந்தியாவெங்கும் அந்த அரைவேக்காட்டு மொழி ஆதிக்கம் செலுத்துகிறது.
மோடி, அமித்ஷா கூட்டத்தார் அதை வளர்த்து[+மதவெறி, மூடநம்பிக்கைகள்]த் தங்களையும் வளர்த்துக்கொள்கிறார்கள்; ஆட்சியில் நீடிக்கிறார்கள்.
எனவே, ‘இந்தி’யர் அல்லாத அனைவருக்குமான நம் வலியுறுத்தல்:
“உங்களின் தாய்மொழிப் பற்றைத் ‘தாய்மொழி வெறி’யாக மாற்றுவீர்! இந்தி ஆதிக்கம் தகர்க்கப்பட்டு, அனைத்து மாநில மொழிகளையும்[ஆட்சி மொழி & அலுவல் மொழி]அரியணையில் ஏற்றப் பாடுபடுவீர்!!
செவ்வாய், 13 மே, 2025
பதுங்கிப் பதுங்கிப் பாய்கிறானா நம் எதிரி பாகிஸ்தானி?!
'இரண்டு மூளைகள்'..... கொடுத்துவைத்த கரப்பான் பூச்சிகள்!![பகிர்வு]
கரப்பான் பூச்சிகளுக்கு இரண்டு மூளைகள் உள்ளன.
ஒன்று தலையிலும் மற்றொன்று வயிற்றுக்கு அருகிலும் உள்ளன[one inside their skulls, and a second, more primitive brain that is back near their abdomen].இந்த உள்ளமைவு, அவை தலையை இழந்தாலும்கூட, தொடர்ந்து நகர உதவுகிறது.
கரப்பான் பூச்சிகள் இந்த அமைப்பைப் பயன்படுத்தி வேகமாக நகர்கின்றன; பொருள்கள், முகங்கள், இடங்கள் போன்றவற்றை நினைவில் கொள்கின்றன.
அவற்றின் மூளை மனிதர்களின் மூளையை விட மிக மிக மிகச் சிறியது. ஆனால், அவற்றில் இரண்டு மடங்கு ‘சினாப்ஸ்கள்’ [நரம்பணுக்களின்(neurons) இடையே தகவல்களைக் கடத்துபவை] உள்ளன. இதனால் அவை தகவல்களைச் சிறப்பாகச் சேமித்துச் செயல்படுகின்றன.
2 மூளை உள்ள 10 உயிரினங்கள்:
திங்கள், 12 மே, 2025
இந்தக் கேள்வியைக் கேட்பது தேசத் துரோகமா?
‘ஆபரேஷன் சிந்தூர்: ஐசி-814, புல்வாமா குற்றவாளிகள் உட்பட 100 பயங்கரவாதிகள் பலி' என்னும் தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது நம் ராணுவம்[மோடி அரசின் அனுமதியுடன்][https://tamil.indianexpress.com/india/]
பலியான 100 தீவிரவாதிகளில், லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்த முடாஸர் காடியன்காஸ் & காலித் என்ற அபு அகாஷா; ஜெய்ஷ்-இ-முகமதுவைச் சேர்ந்த முகமது யூசுப் அசார், ஹபீஸ் முகமது ஜலீல் & முகமது ஹசன் கான் ஆகியோர் கொல்லப்பட்ட 5 பயங்கரவாதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தியில், ‘புல்வாமா குற்றவாளிகள் உட்பட’[இது பழைய[2019] நிகழ்வு. இது பற்றி இப்போது குறிப்பிடத் தேவையில்லை> 19 குற்றவாளிகளை அடையாளம் கானப்பட்டனர். ஆகஸ்ட் 2021 வாக்கில், முக்கிய குற்றவாளியும் ஆறு பேரும் கொல்லப்பட்டனர்> விக்கிப்பீடியா] என்று குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, பஹல்காமில் 26 பேரைப் படுகொலை செய்த நான்கு தீவிரவாதிகள் பற்றிய தகவல்கள் இடம்பெறாதது ஏன் என்பது நம் கேள்வி.
[நன்றி: https://suvanappiriyan.blogspot.com/2025/05/blog-post_11.html]
போர் முடிவடைந்துவிட்ட நிலையில் அரசின் இயலாமையை மறைத்து.....
100 பேர்களில் அவர்களும் அடக்கம் என்பது போல் செய்தி வெளியிட்டு, மோடி தான் மேற்கொண்ட சபதத்தை[“அவர்கள் பிடிக்கப்பட்டு நினைத்துப் பார்க்க இயலாத அளவுக்குத் தண்டனை வழங்கப்படும்”> மோடி] நிறைவேற்றப்பட்டுவிட்டதாக மக்களை நம்பச் செய்வதன் உள்நோக்கம் என்ன?
உள்நோக்கத்தை அனுமானித்துச் சொல்ல நாம் விரும்பவில்லை.
சொல்வது தேசத் துரோகமாகக் கருதப்படக்கூடும்!
* * * * *
அந்த நான்கு பேர்.....
* * * * *
இதுவும் ‘அவதாரி’ மோடியின் ஆட்சிக்காலச் சாதனைதான்!!!
கடவுள் அவதாரமான மோடி தன் ஆட்சிகாலத்தில் நிகழ்த்தியுள்ள சாதனைகள் அநேகம்[பட்டியலிட இடுகை ஒன்று போதாது].
அதன் விளைவாக.....
*ஊடகங்களின் மீதான நம்பிக்கை குறைந்துவருகிறது.
*சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய டிஜிட்டல் தளங்கள் மீது ஒடுக்குமுறைகள் கையாளப்படுகின்றன.
*போலித் தகவல்கள் அதிக அளவில் வெளியாகின்றன.
*ஊடக ஊழியர்கள் கடமையாற்றும் சூழல் மிக ஆபத்தானதாக உள்ளது.
*பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான் மாலத்தீவு போன்ற நாடுகளில் உள்ள ஊடக நிறுவனங்களைப் பலவீனப்படுத்தும் முயற்சியிலும் இந்திய அரசு ஈடுபடுகிறது.
* * * * *
https://www.maalaimalar.com/news/world/south-asia-press-freedom-report-on-india-772227 -மாலை மலர்11 மே 2025 5:54 AM [செய்திகள் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் திருத்தியமைக்கப்பட்டுளன].
ஞாயிறு, 11 மே, 2025
'இந்தியா-பாகிஸ்தான் போர்... வெற்றி சீனாவுக்கே!!!
நடைபெற்ற[இந்தியா-பாகிஸ்தான்] போரில் நம் நாடு நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட BrahMos ஏவுகணைகளைப் பயன்படுத்தியதும், அவை சிறப்பாகச் செயல்பட்டதும் மகிழ்ச்சிக்குரிய நிகழ்வுகள் என்றாலும், இவற்றை ஏவுவதற்குப் பிரான்ஸ்[பிரெஞ்சு] நாட்டிடமிருந்து வாங்கிய ‘ரஃபேல்’ விமானங்கள் பயன்படுத்தப்பட்டமை கவனத்தில் கொள்ளத்தக்கது.
‘ரஃபேல்’ஐ எதிர்கொண்டு அழிக்கும் ஆயுதம் தங்களிடம் இல்லை என்பது பாகிஸ்தானியர்களை மிகுந்த கவலைக்கு உள்ளாக்கியது.
போரில் ஈடுபட்டதால் பெரும் இழப்புகளுக்கு உள்ளான இந்தியாவும் பாகிஸ்தானும் ‘லாபநட்டக் கணக்கு’ப் போட்டுத் துயரத்தில் மூழ்கித் தவிக்கும் வேளையில்.....
“தங்களின் தயாரிப்பான ‘J-10' விமானம் பிரெஞ்சுக்காரனின் ஆகச் சிறந்த தயாரிப்பான ‘ரஃபேல்’ விமானத்தைச் சுட்டு வீழ்த்திய சாதனையை எண்ணி ஆனந்தப் பரவசத்தில் சீனர்கள் மூழ்கிக் கிடக்கிறார்கள்” என்பது ஊடகச் செய்தி[பாகிஸ்தான் J-10 விமானம் மூலம் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியதாக அமெரிக்க வட்டாரம் உறுதியாகக் கூறுகிறது. பாகிஸ்தான் சீனாவில் தயாரிக்கப்பட்ட J-10 போர்விமானங்களைப் பயன்படுத்தி இந்தியாவின் ரஃபேல் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக இரண்டு முக்கிய அமெரிக்க அதிகாரிகள் ராய்ட்டர்ஸுக்கு தெரிவித்துள்ளனர்> https://www.google.com/search?q=J+10+%E0%AE%B0%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D&oq=J+10+%E0%AE%B0%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIHCAEQIRigATIHCAIQIRiPAjIHCAMQIRiPAtIBCTM2ODAwajBqN6gCALACAA&sourceid=chrome&ie=UTF-8].
இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு:
https://www.yahoo.com/news/china-helped-pakistan-shoot-down-142036091.html?guccounter=1
* * * * *
https://news.lankasri.com/article/rafale-jet-downed-by-pakistan-confirms-1746676817
சனி, 10 மே, 2025
போர்க்காலக் கவிதை... “பிணங்களை அகற்றுங்கள்”!
வெற்றி! வெற்றி!!
நடந்துமுடிந்த போரில் நாமே வென்றோம்.
நம் படை வீரர்களுக்கு ஒரு வேண்டுகோள்:
“வெற்றி விழா கொண்டாடுவதற்கு முன்
ஆங்காங்கே
சிதறிக் கிடக்கும் சடலங்களைப் புதையுங்கள்.
தவறினால்
அழுகிய பிண நாற்றம் மூக்கைத் துளைக்கும்.”
வெள்ளி, 9 மே, 2025
இந்தி மட்டுமே அறிந்த ‘ஆதிக்க வெறி’ச் சங்கிகளுக்கு உச்ச நீதிமன்றம் சவுக்கடி!!!
வியாழன், 8 மே, 2025
‘இந். - பாக்.’ போர்> அனைத்துக் கட்சிக் கூட்டம்... அத்தனைப் பேர் மூளையும் சொத்தையா!?
'பாக்.’கைது செய்த ‘பி.கே.சிங்’கைக் காப்பாற்றுபவர் கடவுளா, மோடியா?!
பாகிஸ்தான் ஆதரவு பெற்றவர்களும், பஹல்காம் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகளைப் படுகொலை செய்தவர்களுமான தீவிரவாதிகள் அதிரடித் தாக்குதல்[Operation Sindoor] மூலம் துவம்சம் செய்யப்பட்டார்கள்[பதிலடி கொடுத்திருப்பதாகப் பாகிஸ்தான் சொல்லிக்கொள்கிறது] என்பது யாவரும் அறிந்ததே.
இந்த வெற்றிக்கு மூலகாரணமான நம் பிரதமர் மோடியைப் போற்றிப் புகழ்ந்து கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.
இந்தக் கொண்டாட்டச் சுகத்தைச் சீர்குலைக்கும் விதமாக.....
இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரராக 17 ஆண்டுகள் பணியாற்றிய பி.கே.சிங் அவர்கள் பாகிஸ்தானியரால் கைது செய்யப்பட்ட அவல நிகழ்வு நினைவுக்கு வந்துதொலைக்கிறது.
நம் பிரதமர் இரவு பகலாய்ப் பாகிஸ்தானுடனான போர் குறித்த சிந்தனையிலேயே மூழ்கியிருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
இனியேனும் நேரம் ஒதுக்கி, பாகிஸ்தான் மீது இன்னொரு அதிரடித் தாக்குதல் நடத்தி, ‘பி.கே.சிங்’ அவர்களை அவர்களிடமிருந்து பாதுகாப்பாகப் பிரதமர் மீட்பார் என்பது உறுதி.
நம் பிரதமர் அவர்களை இங்கு அனுப்பிவைத்த[இதைச் சொன்ன நம் தலைவர் இது குறித்துப் பின்னர் மறுப்புத் தெரிவித்ததற்குத் தன்னடக்கம் காரணமாகும்] முழுமுதல் கடவுளையும் பிரார்த்திப்போம்.
***** இது ஒரு ‘நினைவூட்டல்’ பதிவு
புதன், 7 மே, 2025
‘பாக்.-இந்தியா போர்’... ஊஹூம், நம்பவே முடியல!!!
'இந்தியா-பாகிஸ்தான் மோதல் & போர் பற்றிய பரபரப்பான செய்திகளைத் தேடித் தேடி வாசித்துக்கொண்டிருந்த நிலையில், தற்செயலாக, ‘தமிழ்ச்சரம்’ திரட்டியில் இடம்பெற்றிருந்த https://thiruttusavi.blogspot.com/ பதிவைச் சொடுக்கியதில் கீழ்க்காணும் தகவல்கள்[தலைப்பு:
ஆபரேஷன் சிந்தூர் - ஈவிரக்கமற்ற போர்வெறி]
இடம்பெற்றிருந்ததை அறிய நேர்ந்தது.
சற்றும் எதிர்பாராத தகவல்கள் உள்ளதால், திருத்தம் ஏதும் செய்யாமல் பகிர்கிறேன்.
#இந்தியச் சேனல்கள்[ஊடகங்கள்> 07.05.2025]இந்தியா பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்களில் குண்டு போட்டதாகச் சொல்கின்றன.
ஸ்கை நியூஸில், பாகிஸ்தானின் தகவல் தொடர்பு அமைச்சர் "தாக்குதல் நடத்தப்பட்டது பொதுமக்கள் வசிக்கும் பகுதியில். பெண்கள், குழந்தைகள் என்று பலரும் கொல்லப்பட்டனர். நாளையே சர்வதேச ஊடகவியலாளர்களை அழைத்துப்போய்க் காட்டவுள்ளேன். பாகிஸ்தான் மறுதாக்குதல் தொடுக்கும்" என்கிறார்.
செய்தியில், ‘பாகிஸ்தான் தரப்பில் இருந்து பெண்கள், குழந்தைகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 41 பேர் காயம்பட்டுச் சிகிச்சையில் உள்ளனர் என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஊடகம் சொல்கிறது.
இதுவரை நமக்குக் கிடைத்துள்ள படங்களில் இந்திய அரசு குண்டுபோட்ட இடங்களில் குடியிருப்புகளும் உள்ளன. அங்குதான் பொதுமக்கள் உயிரிழந்ததாகத் தெரிகிறது#
“பாஜக புடுங்குறதெல்லாம் தேவையில்லாத ஆணி”... Quora பதிவர்!!!
பா.ஜ.கவின் தற்போதைய ஆட்சி பற்றிய உங்கள் கருத்து என்ன?[Quora கேள்வியும் பதிலும்> புதுப்பிக்கப்பட்ட பதிவு]
ஆட்சியா நடத்துறாய்ங்க?
- எந்த மாநிலத்துல எவன் ஆட்சியக் கலைக்கலாம்னுல பாத்துட்டு இருக்கானுங்க.
கரோனா தொற்று பரவிக்கிட்டு இருந்த சமயத்துலகூட மத்தியப்பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியைக் கலைச்சானுங்க. அதுக்கு முன்னாடி கர்நாடகாவுல கலைச்சானுக. கோவாவுலகூட, தில்லுமுல்லுப் பண்ணி ஆட்சியைப் பிடிச்சானுங்க. எப்ப எவன் ஆட்சியைக் கலைக்கலாம்னு நெனைக்கிறதே இவனுங்க வேலை. இதுல எங்க மக்களுக்காக ஆட்சி பண்ணப் போறானுங்க.
- இப்போ பொதுத்துறை நிறுவனங்களை விக்கிறாங்க. இன்னும் கொஞ்ச நாள்போனா, உங்களுக்கே தெரியாமல், உங்களை வித்துட்டு இருப்பாய்ங்க.
- ஆ ஊன்னா எப்பப் பாத்தாலும் நாடு, நாட்டுப்பற்றுனு கூவிகிட்டு இருக்குறானுக. அப்ப நாங்கல்லாம் என்ன காட்டுலயா வாழுறோம். நாட்டுப்பற்றுனா நாட்டோட சட்டத்திட்டத்தை மதிச்சு வாழுறதே தவிர, எப்பப் பாத்தாலும் அங்க எல்லையில அவன் தாக்குறான், இங்க இவன் அடிக்கிறான்னு சொல்லிட்டுத் திரியறது இல்ல.
- கச்சா எண்ணெய் விலை எவ்ளோதான் கொறைஞ்சாலும் பெட்ரோல் டீசல் விலையைக் கொறைக்கமாட்டானுங்க. சுமுருதி ராணின்னு ஒரு அம்மணி போன காங்கிரஸ் ஆட்சியில் பிரதமர் மன்மோகன்சிங்குக்குப் புடவையும் வளையலும் அனுப்பி அசிங்கப்படுத்தினாங்க. இப்ப கரோனா வந்ததுல அவனவன் பிச்சையெடுக்கும் நிலைமைக்குப் போய்ட்டான். இந்தச் சமயத்துலகூட, பெட்ரோல் டீசல் சிலிண்டர் விலையைக் கொறைக்க மாட்டார் இப்போ உள்ள பிரதமர். இவருக்கு என்ன அனுப்பலாம்னு இருக்கார் இந்த அம்மணி?
- 2004இலிருந்து 2014வரை இருந்த பிரதமர்களை எவ்ளோ வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். ஆனா, இப்போ இருக்குற பிரதமரை விமர்சிச்சிட்டா அதெப்படி தேசத்தோட பிரதமரையே விமர்சிக்கலாம்னு கொடிபுடிச்சிட்டு வந்துருவானுங்க.
- ஆமா, அப்புடி என்ன இவங்க ஆட்சியில் பெருசா சாதிச்சிக் கிழிச்சாங்க? புடுங்குனது எல்லாம் தேவையில்லாத ஆணி.
- இவிங்க ஆட்சியில பணக்காரன் பணக்காரனாயிட்டே போறான். ஏழை பரம ஏழை ஆயிட்டே போறான். அதைப் பத்தியெல்லாம் துளியும் கவலைப்படமாட்டாங்க. ஓட்டுப் போட்ட மக்களுக்காக ஆட்சியை நடத்துங்கடான்னா, அம்பானி அங்கிள், அதானி அங்கிள் செழிப்பா இருக்காங்களா இல்லையான்னு ஆராயுறான். அவுனுங்கதான் இவனுங்களுக்கு முக்கியம்.
- மாநில அரசுகளிடம், மக்களிடம் கருத்து ஏதும் கேட்காம யூனியன் பிரதேசமாக, மாநிலமாக இவங்க இஷ்டத்துக்குப் பிரிப்பாங்க. நாளைக்குத் தமிழ்நாட்டுக்கும் இதே நிலைமைதான். மூனா, நாளா பிரிக்கப் போறாய்ங்க அப்பவும் மோடி வாழ்கன்னு இங்க கூவிட்டு இருப்பானுக.
இங்க எல்லாமே நடிப்பு, வாய் ஜாலம் மட்டும்தான். சிவாஜி இன்னும் சாகலைங்கோ, அவரையும் மிஞ்சிய நடிகர் இங்க இருக்காப்ல. ஆஸ்கருக்கும் மிஞ்சிய விருது இருந்தா சொல்லுங்க.
போயி இந்த நடிகனுங்களுக்குச் சில்லறைக் காசை வீசிச் சிதறவிடுங்கோ. அப்புறம் நீங்களும் கோட்ஸே மாதிரி தேசப்பக்தாள் ஆகிவிடலாம்.
நன்றி:
செவ்வாய், 6 மே, 2025
‘இந்தியா-பாகிஸ்தான் போர்’... தேவை வீடுதோறும் பதுங்கு குழி!!!
26 சுற்றுலாப் பயணிகளைப் படுகொலை செய்த தீவிரவாதிகளைக் கைது செய்ய முடியுமோ முடியாதோ, அவர்களைத் தூண்டிவிட்ட பாகிஸ்தானை மண்ணோடு மண்ணாக்குவதாகச் சபதம் செய்திருக்கிறார் நம் பிரதமர் மோடி.
எப்பாடுபட்டேனும் தாம் மேற்கொண்ட சபதத்தை நிறைவேற்றிக் காட்டுவார் நம் பிரதமர்.
அதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்துமுடித்து, நம் பரம்பரை எதிரி பாகிஸ்தான் மீது போர் தொடுப்பதற்கு முன்னரான ‘போர் ஒத்திகை’யை நாடெங்கும் நடத்திமுடிக்க ஆணை பிறப்பித்திருக்கிறார் அவர்.
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள நகரங்களிலும் ஊர்களிலும், நம் பகைவனின் வான்வழித் தாக்குதல்களிலிருந்து தப்புவதற்கான ஒத்திகைகள் நடத்தப்படும் என்று மோடி அரசு அறிவித்துள்ளது.
எல்லைப்புற ஊர்களில் மட்டுமே ஒத்திகை நடத்துவது போதாது என்பது நம் எண்ணம்.
ஆனாலும்,
அவன் அணுகுண்டுகள் வீசுவதற்கு முன்னால், நம் பிரதமர் அவர்கள் அடுத்தடுத்து அணுகுண்டுகளை[அவனிடம் 130 குண்டுகள் மட்டுமே இருப்பு வைத்துள்ளான். நம்மிடம் அதனினும் பல மடங்கு குண்டுகள் உள்ளன] வீசிப் பாகிஸ்தானை மண்ணோடு மண்ணாக்குவார் என்பது உறுதி.
வாழ்க நம் பிரதமர்! வெல்க இந்தியா!! ஒழிக பாகிஸ்தான்!!!
‘உடனடி ஒத்திகைகள்’... 1.‘பாக்.-இந்தியா’ போர்! 2.மோடிக்குப் பாராட்டு விழா!!
//மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: மாநிலங்களில் மே 7ஆம் தேதி போர்ப் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட வேண்டும். விமானத் தாக்குதல் தொடர்பான சைரன் ஒலி எழுப்புதல் சரியாக வேலை செய்கிறதா என்று சரிபார்க்க வேண்டும். போர் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிப் பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்//-https://www.dinamalar.com/news/india-tamil-news/central-government-orders-states-to-start-war-preparedness-drills/3923061//
போரில் வெற்றி நமதே[இந்தியாவுக்கே] என்பதும் நூற்றுக்கு நூறு உறுதி.
வெற்றிக்கனியைச் சுவைத்த சூட்டோடு, நம் பிரதமர் மோடியின் அறிவாற்றலையும் ஆளுமைத் திறனையும் போற்றும் வகையில் அவருக்குப் பாராட்டு விழா நடத்த நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.
அந்த விழா இதுவரை உலக அளவில் எந்தவொரு தலைவருக்கும் நடத்தப்பட்டதையும்விடவும் மிக மிக மிகச் சிறப்பாக அமைதல் அவசியம்.
எடுத்த எடுப்பில் அவ்வாறானதொரு விழாவை நடத்துவது சாத்தியம் இல்லை என்பதால் முன்கூட்டியே ஒத்திகை பார்ப்பது நல்லது.
ஆகவே, ‘பாக்.-இந்தியா’ போருக்கு ஒத்திகை நடத்தும் அத்தனை மாநில அரசுகளும், மோடிக்கான பாராட்டு விழாவுக்கும் ஒத்திகை நடத்திட வேண்டும் என்பது நம் வேண்டுகோள்.
வாழ்க மோடி! வெல்க ‘பாரத்’!!
ஞாயிறு, 4 மே, 2025
‘பஹல்காம் படுகொலைகள்’... வேண்டாம் வெற்று ஆரவாரம்; வெறிக் கூச்சல்!!!
‘22.04.2025ஆம் நாள் பஹல்காமில்[காஷ்மீர்] தீவிரவாதிகள் தாக்கி 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டது நிகழ்ந்து 12 நாட்கள் கடந்துவிட்டன.
தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் எத்தனைப்பேர்[மூவர் அல்லது நால்வர் என்பது வெறும் யூகமே] என்பதுகூட அறியப்படவில்லை.
தாக்குதலின் ‘உள்நோக்கம்’ பற்றியும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
இவையெல்லாம் நம் ஒன்றிய அரசின் இயலாமையை வெளிப்படுத்துகின்றன என்று இகழ்ந்துரைப்பது நம் நோக்கமல்ல.
காரணங்கள்.....
கொலைகாரர்களின் திட்டமிடல் அதி புத்திசாலித்தனமானதாக இருக்கலாம்.
அவ்வப்போதோ எப்போதாவதோ தாக்குதல் நடத்துகிறவர்கள் அத்தனைப் பேரையும் கண்டுபிடித்துத் தண்டிப்பது அரசுக்குச் சாத்தியமும் அல்ல.
ஆக, இன்றளவும் 26 பேர் சாவுக்குக் காரணமான கொலைகாரர்கள் கைது செய்யப்படாத நிலையில்.....
தினம் தினம் பாகிஸ்தானைக் கலங்கடிக்கும் வகையில் நம் அரசு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக ஊடகங்கள் செய்தி[முழுவதும் உண்மையானவை அல்ல] பரப்புவதும், ‘கொலைகாரர்களைக் கூண்டோடு எமனுலகுக்கு அனுப்புவோம்; பாகிஸ்தானை மண்ணோடு மண்ணாக்குவோம்’ என்பன போல் தலைவர்கள் வெற்றுக் கூச்சல் எழுப்புவதும் உண்மையான நாட்டுப் பற்று உள்ளவர்களைக் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்குகின்றன.
“குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க இயன்றவரை முயலுங்கள். வெறும் வெறிப் பேச்சு வேண்டாம்” -இதுவே நம்மை ஆளுவோருக்கு நாம் வழங்கும் பரிந்துரை ஆகும்.
தொடர்புடைய இடுகை:
https://kadavulinkadavul.blogspot.com/2025/05/blog-post.html
சனி, 3 மே, 2025
ஊடக அதர்மங்கள்!!!
ஊடகங்களின் உயிர்நாடிக் கொள்கை ‘நடுநிலை’ பிறழாமல் செய்தி வெளியிடுவது.
பகைவர்களோ நண்பர்களோ அவர்கள் குறித்த செய்திகளை வெளியிடுவதில் ‘தன்னலம்’[தற்சார்பு]தவிர்க்கப்படுதல் மிக முக்கியம்.
தவறினால்.....
வாசகர்கள் உண்மைச் செய்தியை அறிவது சாத்தியப்படாது.
தற்சார்பு, அல்லது தன்னலப் போக்குடன்[‘பாஜக’ ஆதரவு] தமிழில் செய்தி வெளியிடும் ஊடகங்களில்[தினமலர் உட்பட] தினத்தந்தியும் ஒன்று.
//நாட்டின் இறையாண்மை & பாதுகாப்பிற்காக நாங்கள் எந்த எல்லைக்கும் செல்வோம்” என்று பாகிஸ்தான் ராணுவச் செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி கூறியுள்ளார்// என்பது அண்மைச் செய்தி
இதிலுள்ள ‘கூறியுள்ளார்’ என்பதற்குப் பதிலாக, ‘கொக்கரித்துள்ளார்’[எதிரி தவறு செய்தால் திருத்தலாம்.; தீங்கு செய்தால் தண்டிக்கலாம். வீணே வெறுப்பை வளர்ப்பது தேவையற்றது] என்னும் சொல் சேர்த்துச் செய்தி வெளியிட்டுள்ளது தினத்தந்தி.
தன்னைத் திருத்திக்கொள்வது தந்திக்கு மட்டுமல்ல, ஊடகத் துறைக்கும் இந்த நாட்டுக்கும் நன்மை பயப்பதாக அமையும்.
* * * * *