செவ்வாய், 11 மார்ச், 2025

ஒன்றிய அரசின் ஓரவஞ்சனை! ஆதாரங்களை அடுக்கிய அறிவுஜீவித் தமிழன் சு. வெங்கடேசன்!!

அந்த ‘மூன்று நாட்கள்’... அம்மனும் விதிவிலக்கல்ல!!!

கேரள மாநிலம் ‘செங்கனூரில் பகவதி’ என்று ஒர் அம்மன் கோயில் உள்ளது.

உள்ளே இருப்பது கற்சிலைதான். அதற்குப் புடவை கட்டி, நகைகள் பூட்டி, அலங்காரம் பண்ணி, அபிசேகம், ஆராதனை எல்லாம் செய்வது ஒரு நம்பூதிரிப் பிராமணன்.

ஒரு நாள் அந்த ஆள் ஓர் அதிசயத்தைக் கண்டாராம். அது.....

அம்மன் கட்டியிருந்த வெள்ளைச் சேலையில் 'அந்த' இடத்தில் இளஞ்சிவப்பு நிறத்தில் கறை படிந்திருந்தது. அது எதனால் என்று பல மேதைகள் ஆய்வு செய்ததில், அம்மன் 'தூரம்'[மாத விலக்கு] ஆகியிருந்தது தெரிந்ததாம்.

அம்மனைக் கோயிலுக்கு வெளியே தங்க வைத்து, மூன்று நாட்கள் கழித்து ஆற்றில் குளிப்பாட்டிய பின்னர், ஐயன் சிவபெருமான் வரவேற்க, கோயிலுக்குள் குடியமர்த்தினார்கள். அப்புறம் ஆண்டாண்டுதோறும் நடைபெறும் நிகழ்ச்சியாக்கப்பட்டது இது. இதற்கு 'ஆறாட்டு' என்று பெயர்.

'அந்த' மூன்று நாட்களும் கோயிலில் கன்னியர்கள் காவல் காக்கிறார்கள்.

அம்மனின் கற்சிலை வீட்டுக்குத் 'தூரம்' ஆகிறதாம். மூன்று நாள் காவலாம். அப்புறம், ஆறாட்டாம்[இம்மாதிரி மூடநம்பிக்கைக் கதைகள் நாடெங்கும் பரவிக் கிடக்கின்றன]. அடச் சே.....

அம்மனுக்கு மாதவிலக்கு உண்டாகிறது என்று சொல்லப்படும் இது போன்ற கதைகளுக்கும், ஐயப்பன் என்றொரு சாமி பிரமச்சாரியாக[ஏன்? 'பொண்ணு’ கிடைக்கவில்லையா?!] இருக்கிறார் என்று சொல்லப்படும் கதைகளுக்கும் இந்த நாட்டில் பஞ்சமே இல்லை.

இம்மாதிரிக் கதைகளைக் கட்டுகிற அயோக்கியர்களும் சரி, நம்புகிற முழு மூடர்களும் சரி இனி ஒருபோதும் திருந்தப்போவதில்லை.

உலகம் அழியும் அழியும் என்கிறார்கள். சீக்கிரம் அழிந்து தொலைத்தால் நல்லது!

'இந்தி’யன் எதிர்ப்புப் போராட்டம் எப்போது தொடங்கும்?

//தமிழக எம்.பி-க்கள் ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளுக்கு ஜோதிராதித்ய சிந்தியா இந்தியில் பதிலளித்தார். இது மக்களை அவமதிக்கும் செயல் என்று சசி தரூர் கூறினார். உங்கள் கருத்து என்ன?//

மேற்கண்ட 'Quora'இன் கேள்விக்கான என் பதில்:


'பசி'பரமசிவம் இன் தற்குறிப்பு போட்டோ

'பசி'பரமசிவம் · 

பின்தொடர்

3 வருடம்

இது, இந்தி பேசாத மக்களை அவமதிக்கும் செயல் மட்டுமல்ல, இந்திய ஒருமைப்பாட்டுக்கு உலை வைக்கும் அடாவடித்தனமும்கூட.

தொடர்புக்கு ஆங்கிலம் மட்டுமே போதும். இதனாலெல்லாம் இனியொரு முறை நாம் ஆங்கிலேயனுக்கு அடிமை ஆகிவிட மாட்டோம்.

வங்கிகள், ரயில்வே, தபால் நிலையங்கள் என்று எங்கெங்கு முடியுமோ அங்கெல்லாம் இந்தியைத் திணித்துவிட்டார்கள்.

இந்தியை மட்டுமே இந்தியாவின் மொழியாக்கி ஏனைய மொழிகளை அழிக்கும் வேலையை வெறித்தனமாகச் செய்கிறார்கள்.

தமிழ்நாட்டைப் போலப் பிற மாநிலங்களும் இந்தியை மிகக் கடுமையாக எதிர்க்காவிட்டால், இந்த வெறியர்களின் கனவு வெகு விரைவில் நிறைவேறும்.

இந்தி பேசாத மாநிலத்தவரின் ஒருங்கிணைந்த போராட்டம் உடனடித் தேவை.

அதன் முதல் கட்டமாக, பொதுத் துறை நிறுவனங்களிலிருந்து இந்தியை அறவே நீக்க வேண்டும்[அவர்கள் மாநிலத்தில் அது கோலோச்சுவதைத் தடுப்பாரில்லை].

இம்மாதிரியான கருத்துகள் மிக விரைவாகப் பரப்பப்பட்டு, அதை இந்தி பேசாத மாநில மக்களும் அரசியல் தலைவர்களும் உணர்வது மிக மிக மிக முக்கியம்.

சில நூற்றாண்டுகள் ஆங்கிலேயனுக்கு அடிமைகளாக இருந்த நாம் இனி காலமெல்லாம் இந்திக்காரனுக்கு அடிமைகளாக வாழப்போகிறோமா?


                                                 *   *   *   *   *

https://ta.quora.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

[இவன்கள் ஆட்சியைக் கைப்பற்றியது இப்படியெல்லாம் ஆசை காட்டித்தான்!]

திங்கள், 10 மார்ச், 2025

உலக மகா மூடன் ‘பாஜக’காரனின் ரூ99 லட்சம் பரிசு அறிவிப்பு!!!

திருப்பூர்: 'பிரதமர் மோடி அரசின் மும்மொழிக் கல்விக் கொள்கையில் ஹிந்தித் திணிப்பைக் கண்டுபிடித்தால், 99 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்' என்று, பா.ஜ., சார்பில், திருப்பூரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன[https://www.dinamalar.com/

மொழியை, அல்லது மொழிகளைக் கற்பது என்பது அறிவை வளர்ப்பதற்கும் வேலை வாய்ப்பைப் பெறுவதற்கும்தான். எனவே, ஒரே ஒரு மொழியைப் படிப்பதோ, இரண்டோ மூன்றோ அதற்கும் மேலேயோ மொழிகளைப் படிப்பதோ அவரவர் தேவையைப் பொருத்தது.

’பாஜக’ அரசு மூன்று மொழிகள் படி என்று கட்டாயப்படுத்துவதே மொழித் திணிப்புத்தான்.

திணிக்கப்படும் மொழிகளில் இந்தியும் ஒன்று.

மும்மொழிச் சட்டம் அமலாக்கப்பட்டதும், இந்தி படித்தால் இன்னின்ன சலுகைகள் கிடைக்கும் என்று ஆசை காட்டி அனைவரையும் படிக்கத் தூண்டுவது ஒன்றிய ‘இந்தி’ய அரசின் உள்நோக்கம்[ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள அஞ்சலகம், காப்பீட்டு நிறுவனம், ரயில் நிலையம் போன்றவற்றில் இந்தி முழுமையாகத் திணிக்கப்பட்டுவிட்டது. இந்த அவல நிலையை மாற்றவே மிக மிக மிகப் பெரிய போராட்டம் நடத்தவேண்டியுள்ளது].

இதைப் புரிந்துகொள்ளும் குறைந்தபட்ச அறிவுகூடத் தமிழர்களுக்கு இல்லை என்று நினைத்து 99 லட்சம் ரூபாய் பரிசு அறிவித்த திருப்பூர் ‘பாஜக’காரனைப் போன்ற முட்டாள் உலகெங்கும் தேடினாலும் கிடைக்கமாட்டான்!

பரிசு அறிவித்த மூடனுக்கு நாம் சொல்லிக்கொள்ள விரும்புவது.....

உன்னுடைய இந்தப் பரிசுத் திட்டம் பற்றிய அறிவிப்பை உன் கட்சியின்[பாஜக] மேலிடத்துக்கு நீ தெரியப்படுத்தினால், இங்குள்ள பாஜக அடிமைகளின் தலைவனாக உன்னை நியமிப்பார்கள்[ஆட்டுக்காரனுக்குப் பதிலாக].

செய்வாயா?!


* * * * *

https://www.dinamalar.com/news/tamil-nadu-news/-rs-99-lakh-if-hindi -imposition-is-proven-bjp-announcement--/3873631

ஞாயிறு, 9 மார்ச், 2025

‘எயிட்ஸ்’[AIDS]... தொற்றலும் தொற்றாமையும் அறிகுறிகளும்[நினைவூட்டல் பதிவு]!

உலகளவில், 2023இன் இறுதியில் எச்.ஐ.வி.'யால் பாதிக்கப்பட்டவர்கள் 39.9 மில்லியன்36.1–44.6 மில்லியன்] ஆவர். தொற்றுநோயாளரின் எண்ணிக்கை நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது.

பரவுதல்:

ஹெச்.ஐ.வி தொற்றியுள்ள நபர்களின் ரத்தம், விந்து, பெண் குறித் திரவம், தாய்ப் பால் போன்ற உடலிலுள்ள நீர்மங்களைப் பரிமாறிக்கொள்வதன் மூலமும், மருந்துகளைச் செலுத்துவதற்கு அல்லது பச்சை குத்துவதற்கு ஊசிகளைப் பகிர்ந்து கொள்வதன் மூலமும் பரவுகிறது.

ஆரம்பத்தில் அறிகுறிகள் லேசானதாக இருப்பதால், எச்.ஐ.வி உள்ளவர்கள் தங்களுக்கு அது இருப்பது தெரியாமல் இருக்கலாம். அந்நிலையில் அது மற்றவர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளது.

கீழ்க்காணும் காரணங்களால் பரவுவது இல்லை.

  • ஒரே காற்றை சுவாசித்தல்,

  • கட்டியணைத்தல், முத்தமிடுதல், கைகுலுக்குதல்,

  • நீர்நிலைகளில் ஒன்றாகக் குளித்தல்,

  • பிறர் கையாண்ட ஜிம் உடற்பயிற்சி கருவிகள், கழிவறை இருக்கை போன்றவற்றைப் பயன்படுத்தல்.

  • மற்றவர்கள் தொட்ட கதவின் குமிழ், கைப்பிடி முதலானவற்றைத் தொடுதல்.

  • சிறுநீர், மலம், எச்சில், இருமல், தும்மல், வாந்தி, வியர்வை(ரத்தம் இல்லாதவரை) போன்றவை; குடிக்கும் கோப்பைகள் அல்லது சாப்பிடும் பாத்திரங்களைப் பகிர்ந்துகொள்ளுதல்.


  • நோயின் அறிகுறிகள்:
  • காய்ச்சல், இருமல், மூச்சு விடுவதில் சிரமம், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வாந்தி, விழுங்குவதில் சிரமம், தொண்டைப் புண், தடிப்புகள், வீங்கிய நிணநீர் கணுக்கள்.


* * * * *

வெள்ளி, 7 மார்ச், 2025

எல்லாம் வல்ல கடவுள் குறித்துக் கொஞ்சம் ‘ஏடாகூட’க் கேள்விகள்!!!

டைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில் புரிபவர் கடவுள்  என்பார்கள்.

[எப்பங்க வருவார்?}

எல்லா உலகங்களையும்[மொத்த எண்ணிக்கை யாருக்கும் தெரியாது] முதல் தடவையாக எப்போது படைத்தார்?

பதில்: “தெரியாது.”[அவதாரங்கள், மகான்கள் உட்பட எவருக்கும்]

ஒரே தடவையில் ஒட்டு மொத்தமாகப் படைத்தாரா, அல்லது தொகுதி தொகுதியாகவா?

“தெரியாது.”

தான் படைத்த உலகங்களை, அழியாமல் தானே காப்பாற்றுகிறாராம். சரி. படைப்பதற்கு முன்னால் தனிப் பெரும் சக்தியாக இவர் மட்டுமே இருந்தார்; படைத்தார். இவர் படைத்த உலகங்களை யாரால் அழிக்க முடியும்? அப்புறம் எதற்கு ‘காத்தல்’ தொழில்?

“தெரியாது.”

உலகங்களைப் படைத்த கடவுள் ஒரு கட்டத்தில் அவைகளை அழித்து விடுகிறாராம். ஏனாம்?

பதில்: அதர்மம் தலை விரித்தாடும்போது அழிப்பு வேலையைச் செய்கிறார் என்பார்கள் ஆன்மிகர்கள்.

அன்பே உருவான, அறிவுக் கடலான, சாந்த சொரூபியான இந்தக் கடவுளின் படைப்பில் அதர்மம் நுழைந்தது எப்படி? அது உருவானது எப்படி?

எப்படியோ தோன்றித் தொலைத்துவிட்டது. அதன் அட்டூழியம் அதிகரித்தபோதுதான் கடவுள் விழித்துக் கொண்டார் என்றால் அதுவரை என்ன செய்து கொண்டிருந்தார்?

விழிப்புப் பெற்றவர், அதர்மத்தை மட்டும் அழித்துவிட்டு, ஆனந்தத் தாண்டவம் ஆட வேண்டியதுதானே? ஒட்டு மொத்த உலகங்களையும் ஏன் அழிக்கிறார்?

ஒரு முறை அழித்தால் போதும்தானே? உலகங்களோடு சேர்ந்து அதர்மமும் அழிந்துவிடும்தானே? மீண்டும் மீண்டும் படைத்தவற்றை அழிக்கும் அவசியம் ஏன் ஏற்பட்டது?

ஒரு முறை கடவுளால் அழிக்கப்பட்ட அதர்மம் எப்படியோ தப்பித்து, எங்கேயோ பதுங்கியிருந்திருக்கலாம். எங்கே?

கடவுளின் காலடியிலா?!

இப்படிக் கேள்விகளை நாம் அடுக்கிக் கொண்டே போகும் அவசியம் ஏன் நிகழ்ந்தது?

இன்றைக்கும் கடவுள், தர்மம், அதர்மம் என்று, ஊடகங்களில் ‘ஆன்மிகர்கள்’ எழுதும் கட்டுக் கதைகள் ஏராளம்; மேடைகளில் செய்யும் பிரச்சாரங்கள் அளவிறந்தவை. இம்மாதிரிக் கதைகளையும் பரப்புரைகளையும் நம் மக்கள் நம்பித் தம் சிந்திக்கும் அறிவைச் சீரழியவிடுதல் கூடாது என்பதற்காகத்தான்.

வாழ்க ‘பசி’பரமசிவம்![ஹி...ஹி...ஹி!!!]

வியாழன், 6 மார்ச், 2025

புனித மதங்களும் பொல்லாத பேய்களும் பிசாசுகளும்!!!

முன்னறிவிப்பு:

இது மீள்பதிவு எனினும், ஏற்கனவே இதை நீங்கள் வாசித்திருக்க வாய்ப்பே இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு இது வெளியானபோது வருகை புரிந்து இதை வாசித்து வயிறு எரிந்தவர்கள்[மதப் பற்றாளர்கள்] 21 பேர் மட்டுமே. ஹி... ஹி... ஹி!!!

இந்து மதத்தில் பேய்களின் எண்ணிக்கை அதிகம். அவற்றில் ஜாதிமதப் பாகுபாடும் உண்டு. பூசாரிகளைக் கேட்டால் கதை கதையாகச் சொல்லுவார்கள்.

கிறித்துவ மதத்தின் ‘புனித’ நூலாகக் கருதப்படும் பைபிளிலும், இசுலாம் மதத்தின் ‘புனித’ நூலாகக் கருதப்படும் குர்-ஆனிலும் பேய் பிசாசுகள் பற்றிய கதைகள் உள்ளன. 

இன்றும் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில், கிறித்துவ மதப் போதகர்களால், ‘சரீரச் சுகமளிக்கும்’ கூட்டங்களில் பேய் விரட்டும் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. கத்தோலிக்க மதத் தலைவர் ‘போப்’, பேய் விரட்டலுக்கான நெறிமுறைகளை அறிவித்திருக்கிறார். ஏர்வாடி என்னும் ஊரிலுள்ள முஸ்லீம் தர்கா பேய் விரட்டலுக்குப் புகழ் பெற்ற இடமாகும்.

தற்கொலை செய்துகொண்டவர்கள், கொல்லப்பட்டவர்கள், விபத்தில் இறந்தவர்கள் ஆகியோரே பேயாகவும் ஆவியாகவும் உலவுவதாக நம்பப்படுகிறது. ஆனால், செத்துப்போன ஆடு, மாடு கோழி போன்றவை ஆவியாய்ப் பேயாய் அலைவதில்லையா? ஆவி&பேய் நம்பிக்கையாளர்கள் ஏனோ இவற்றைக் கண்டுகொள்வதில்லை.

இந்தப் பேய், பிசாசு ஆவிகளெல்லாம் இருப்பது உண்மையா?

இயற்பியல், வேதியியல், உயிரியல் முதலான காரணங்களாலும் உளவியல் காரணங்களாலும் பேய் பிடித்தது போன்ற மயக்க உணர்ச்சிகளுக்கு மக்கள், குறிப்பாகப் பெண்கள் ஆளாகிறார்கள் என்கிறது அறிவியல்.

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த வால்டர்ஹெஸ், மிச்சிகன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜே. டெல்காடோ ஆகியோர், மின் துடிப்புகள்[Electric Impulses] மூலம், மூளையின் பல்வேறு கட்டுப்பாட்டுப் பகுதிகளைத் தூண்டிவிட்டு, சினம், அச்சம், பசி, வருத்தம், காதல், காமம், ஆர்வம், விருப்பு, வெறுப்பு போன்றவற்றை நடைமுறை வாழ்வில் உணர்வதுபோல் செயற்கையாகத் தூண்டும் முயற்சியில் வெற்றி பெற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளார்கள்.

மனித மனமானது கருத்தேற்றங்களினால்[suggetions] பாதிக்கப்படக்கூடும் என்பது உளவியல் உண்மையாகும்.

மதக் கருத்துகளை ஊட்டுதலும், மூளைச் சலவை[Brain Washing] செய்தலும் மெதுவானதும் தொடர்ச்சியானதுமான மன வசிய முறைகளாகும். பேய், பிசாசு, ஆவி தொடர்பான கருத்துகள் / எண்ணங்கள் இம்முறையில் சிறு வயதிலிருந்தே மனதிற்குள் திணிக்கப்படுகின்றன.

பேய் பிடித்தவரைப் போல் பிதற்றுதல், அயல் மொழியில் பேசுதல், சாமி ஆடுதல் போன்றவை எல்லாம் மேற்சொன்ன கருத்தேற்றங்களின் விளைவே ஆகும்.

பேய் பிடித்து அயல்மொழியில் பேசுபவர் குளோசோலேலியா[Clossolalia] என்னும் மன நோயால் பாதிக்கப்பட்டவர் ஆவார். இவர் பேசுவது உண்மையில் அயல்மொழி அல்ல என்பதை அந்தக் குறிப்பிட்ட மொழி தெரிந்தவரை அருகில் வைத்து நிரூபிக்கலாம்.

படிப்பறிவில்லாத கிராம மக்களே பெரும்பாலும் பேய், பிசாசு, ஆவி ஆகியவற்றின் தொந்தரவுகளுக்கு ஆளாகிறார்கள்.

படிப்பறிவற்ற கிராமப்புறப் பெண்களைப் ‘பேய் பிடிப்பதற்கு’க் குறிப்பிடத்தக்க சில காரணங்கள் உள்ளன. பருவம் அடையும் பெண்ணுக்குத் தன் உடலிலும் உணர்விலும் ஏற்படும் மாற்றங்கள் பற்றிச் சரியான புரிதல் இருப்பதில்லை. பாலியல் உறவு, குழந்தைப் பிறப்பு ஆகியவை பற்றியெல்லாம் போதுமான அறிவும் வழங்கப்படுவதில்லை. இந்நிலையில், கணவனால் அதீதமான காம இச்சையுடன் புணரப்படுவதாலோ, உடலுறவில் போதிய திருப்தியைப் பெற இயலாததாலோ பேய் பிடித்தல் போன்ற மன நோய்க்கு அவள் ஆளாகிறாள்.

மனநோய் மருத்துவரை அணுகிக் குணப்படுத்தக்கூடிய இம்மாதிரிக் கோளாறுகளை, பேய் பிடித்ததாக நம்பி ஏமாறுவதும், ஏமாற்றப்படுவதும் இம்மண்ணில் இடம்பெறாமல் தடுப்பது நம் அனைவருடைய கடமையும் ஆகும்.
                                           
                                      *   *   *   *   *

***பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடுகளிலிருந்து திரட்டிய கருத்துகளின் தொகுப்பே இப்பதிவு.

புதன், 5 மார்ச், 2025

அவர்கள் பாவப்பட்டவர்கள்! நாம் வெறும் பார்வையாளர்கள்!!

*பார்வையற்றவர்களில் சுமார் 10-15 சதவீதம் பேர்கள் எதையும் பார்க்க இயலாதவர்கள்.

*அவர்களில் சிலரால் வண்ணங்களையும், பொருள்களின் வடிவங்களையும், மாறுபட்ட அளவிலான ஒளியையும் பார்க்க முடியும்.

*பார்வையற்றவர்கள் பார்வை உள்ளவர்களைவிடவும் அதிகம் கனவு காண்பார்கள்.

*பார்வையற்றவர்கள் தூங்கும்போது தெளிவான கனவுகளை அனுபவிக்கும் வாய்ப்பு வேறு எவரையும் போலவே உள்ளது. வித்தியாசம் என்னவென்றால், அவர்களின் கனவுகள் ஒலிகளாலும் வாசனைகளாலும் ஆனவை.

*பார்வைக் குறைபாடுள்ளவர்களில் 2 சதவீதத்திற்கும் குறைவானவர்களே பிரம்புகளைப் பயன்படுத்துகிறார்கள். அயல்நாடுகளில் வழிகாட்டி நாய்களைப் பயன்படுத்துவது வழக்கத்தில் உள்ளது.

*வழிகாட்டி நாய்களால் போக்குவரத்து விளக்கு பச்சையா அல்லது சிவப்பா, வேறு நிறத்துக்கு மாறுமா என்பதையெல்லாம் அறிய முடியாது. ஆனால், ஒரு கார் வந்தால் உடனே நின்றுவிடும்.

*பார்வையற்றவர் அல்லது பார்வைக் குறைபாடுள்ள ஒருவர், போக்குவரத்து சத்தம் போன்ற கேட்கக்கூடிய குறிப்புகளைப் பயன்படுத்தி, எப்போது கடப்பது பாதுகாப்பானது என்று தீர்மானித்துச் செயல்படுவதுண்டு.

*உலகளவில் 80 சதவீத பார்வைப் பிரச்சினைகளை உடனடி மருத்துவப் பராமரிப்புகளின் மூலமும், வழக்கமான கண் பரிசோதனைகள் மூலமும் தவிர்க்கலாம்; குணப்படுத்தவும் செய்யலாம்.

*50 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களிடையே குருட்டுத்தன்மைக்கு முக்கிய காரணம் கண்புரை ஆகும், இதை அறுவைச் சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்.

*அமெரிக்காவில் பார்வையற்றவர்களில் 70 சதவீதம் பேர் போதுமான உறக்கமின்றித் தவிப்பவர்கள்.

*பார்வையிழப்பு மற்ற புலன்களைக் கூர்மைப்படுத்துகிறது என்பதை ஆய்வாளர்கள் மறுத்துள்ளார்கள்.

பார்வைக் குறைபாடுகளை நீக்குவதற்காக உலகச் சுகாதார அமைப்புகள் பாடுபடுகின்றனவாம். இது போதாது.

ஒட்டுமொத்த விஞ்ஞானிகளும் கருந்துளை வெண்துளை, பெரு வெடிப்பு, பிரபஞ்ச எல்லை, கடவுள் அணு போன்றவை பற்றிய ஆராய்ச்சிகளையெல்லாம் கிடப்பில் போட்டுவிட்டு, மனிதாபிமானத்துடன் பார்வை இழப்பை முற்றிலுமாய்த் தடுப்பதற்கான வழிகளைக் கண்டறிதல் வேண்டும்

உலக நாடுகள் ஒருங்கிணைந்து செய்ல்பட்டால் மட்டுமே இது சாத்தியம்!

                        *   *   *   *   *

https://www.perkins.org/10-little-known-facts-about-blindness/

செவ்வாய், 4 மார்ச், 2025

திருமணமும் உடலுறவும் நிலை தடுமாறும் குடும்ப உறவும்!!!

ம்பதியர் விவாகரத்துச் செய்துகொள்வதற்கான காரணங்கள் பல உள்ளன{குறட்டைவிடுவது, ஒழுங்காகக் குளிக்காதது, அடிக்கடி மூக்கை நோண்டுவது, பல்லிடுக்கில் சிக்கிய உணவுத் துணுக்கை நோண்டி எடுத்து முகர்ந்து பார்ப்பது[ஹி... ஹி... ஹி!!!] என்றிவை உட்பட}.

இவற்றுள் உடலுறவு கொள்வதில் போதிய அக்கறை காட்டாததும் ஒன்று.

'இல்லற வாழ்க்கையில் ஒருவர் தனது இணையருடன் உடலுறவு கொள்ளாமல் நீண்ட நாட்கள் விலகி இருந்தால், அது இந்து[மற்ற மதங்களும்தான்] திருமணச் சட்டத்தின் கீழ் கொடுமையான விஷயமாகக் கருதப்படும். அத்துடன் இதையே காரணமாகக் கூறி ஒருவர் விவாகரத்து கோரலாம்' என்று இது தொடர்பான பல வழக்குகளின் தீர்ப்புகளில் நீதிமன்றங்கள் தீர்ப்பளித்திருக்கின்றன’ என்பது நான் எப்போதோ வாசித்த ஒரு செய்தியின் சாரம்.

உடலுறவைத் தொடர்புபடுத்தி ஒருவர் விவாகரத்துக் கோரிய ஒரு வேடிக்கையான வழக்கு பற்றிச் சற்று முன்னர் அறிய நேர்ந்தது.


//தனது மனைவி 5 மாதங்களில் தன்னுடன் 10-15 முறைதான் உடலுறவு கொண்டிருந்தார். அத்துடன் உடலுறவின்போது அவர் எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் ஒரு ‘ஜடம்’ போல் இருப்பார் என்பது மணவிலக்குக்கான காரணமாக விவாகரத்து கோரிய வழக்கில் ஒரு நபர் குறிப்பிட்டிருந்தார். அவருக்கு அதற்கான அனுமதியை வழங்கினார் நீதிபதி// என்பது செய்தி[https://www.bbc.com/tamil/articles/cek19mz00vvo


இதே நீதிபதி[டெல்லி உயர் நீதிமன்றம்], 2012ஆம் ஆண்டில், முதலிரவில் மனைவி உடலுறவுக்கு மறுத்ததற்காக அவளின் கணவருக்கு விவாகரத்துச் செய்துகொள்ள அனுமதி வழங்கினார்.


“உடலுறவு சார்ந்த பிரச்னைகளின் காரணமாக அதன் புனிதத்தன்மை கெட்டுவருவதுடன், திருமணப் பந்தத்தின் உத்வேகமும் குறைந்துவருகிறது என்றும், இதன் விளைவாகப் பாலினப் பாகுபாடற்ற திருமணங்கள் தொற்றுநோய் போலப் பரவி வருவதை யாராலும் தடுக்க முடியாது” என்றும் நீதிபதி தம் வேதனையை வெளிப்படுத்தியிருந்தார்.

* * * * *

நாடு போகிற போக்கைப் பார்த்தால், ஒரு மாதத்தில் தம்பதியர் கொள்ளும் உடலுறவுக்குக் குறைந்தபட்ச வரம்பு விதிக்கும் காலமும் வரும் என்று தோன்றுகிறது.


‘திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன’ என்று சொல்லிப்போன அந்தக் கூமுட்டை யார்?!

திங்கள், 3 மார்ச், 2025

ஜெய் ஜோதிர்லிங்கம்! அடுத்த நம் பிரதமரும் மோடிஜியே!!

கீழே, நம் பிரதமர் மோடிஜி அவர்கள் சோம்நாத்[குஜராத்] கோயிலில் உள்ள ஜோதிர்லிங்கத்திற்குப் பூஜை, சிறப்பு அபிஷேகம்[வேறு எவரையும் அண்டவிடாமல் தானே தனியராய்ச் செய்வது?] எல்லாம் செய்து வழிபட்ட காட்சி[காணொலி] இடம்பெற்றுள்ளது.

பல்வேறு மதத்தவரும், மதச் சார்பு இல்லாதவர்களும், நாத்திகர்களும், கடவுள் சிந்தனையே இல்லாத அனாதைகளும் இரண்டறக் கலந்து வாழும் இந்த மதச்சார்பற்ற[என்று சொல்கிறார்கள்] நாட்டில், வழிபாட்டைப் பிறர் அறியாமலும், யூடியூப் காணொலியாகப் பதிவு செய்து வெளியிடாமலும் இவர் நிகழ்த்தியிருக்கலாமே என்று கேட்கத் தோன்றியதே தவிர கேட்பது சாத்தியப்படவில்லை.

காரணம்.....

100% மனம் ஒன்றிய நிலையில்[அருகில் அணுகுண்டு வெடித்திருந்தாலும் அவர் கவனம் சிதறியிருக்காது] ஜோதிர்லிங்கத்திற்கு மலர்கள் தூவி,  வாசனைத் திரவியங்கள் சொரிந்து, நெய்யும் பாலும் பெய்து மோடிஜி அதை வழிபட்டார் என்பதே.

முன்பு எப்போதும் இல்லாத வகையில் பக்திச் சிரத்தையுடன், வேதமந்திரங்கள் ஒலிக்க  இவர் செய்த பூஜை ஏறத்தாழ ஒரு நாத்திகனான அடியேனின் முழு நெஞ்சையும் நெகிழ்வித்தது.

இந்த நாட்டில் மிகப் பெரும்பான்மையாக உள்ள அத்தனை இந்துக் குடிமக்களும் மோடிஜியின் வழிபாட்டை, விழிகளில் ஆனந்தக் கண்ணீர் வழியக் கண்டு கண்டு மெய் சிலிர்த்திருப்பார்கள் என்பதில் சந்தேகத்திற்கு இடமே இல்லை.

இதன் பயனாக, இந்தப் புண்ணியப் பூமியில் அடுத்து நடைபெறும் தேர்தலிலும் நம் மோடிஜியே வெற்றி பெற்றுப் பிரதமராகி நல்லாட்சி நடத்துவார் என்பது உறுதி.

ஜெய் பாரதம்! ஜெய் ஜெய் மோடிஜி!!

                                       *   *   *   *   *
உள்மன உறுத்தல்!
அனைத்து உலகங்களையும் அதில் வாழ்கிற அனைத்து உயிர்களையும் அரவணைத்துப் பாதுகாக்கிற ஜோதிர்லிங்கத்தை வழிபடும் கடவுளின் வாரிசான[கடவுளின் குழந்தை] மோடிக்கு, கோட்டும் சூட்டும் அணிந்தவர்களின் பாதுகாப்புத் தேவையா?

ஞாயிறு, 2 மார்ச், 2025

சிந்திப்பாரா ‘பிறவி இந்து’ சிவக்குமார்[கர்னாடகா து.முதல்வர்]?!?!?

#புதன்கிழமை செய்தியாளர் சந்திப்பின்போது சிவகுமாரிடம்[கர்னாடகா துணை முதல்வர்], அவரது கோவை வருகை[ஈஷா நவராத்திரிக் கூத்து]  குறித்துச் செய்தியாளர்கள் கேட்டபோது, ​​ "..... நான் ஒரு இந்து. நான் பிறந்தது இந்துவாக. நான் ஒரு இந்துவாகவே இறப்பேன் என்று அவர் கூறினார்# [https://english.varthabharati.in/karnataka/i-am-born-hindu-and-will-die-hindu-karnataka-dcm-shivakumar].

அன்புக்குரிய கன்னடச் சகோதரர் சிவக்குமார் அவர்களே,

உங்களுடைய இந்துமதப் பற்றைப் பாராட்டுகிறோம்.

ஆனால், நீங்கள் பிறந்தபோதோ, வளர்ந்து சிந்திக்கும் பருவத்தை எட்டும்வரையோ நீங்கள் ஒரு மனிதப் பிறவி என்பதேகூட உங்களுக்குத் தெரியாது என்று நாம் சொன்னால் அதை மறுக்கமாட்டீர்கள் என்று நம்புகிறோம்.

அறிவு வளரும் வயதில் நீங்கள் ஒரு இந்துக் குடும்பத்தில் பிறந்தவர் என்பதையே உங்களின் பெற்றோர் சொல்லித்தான் அறிந்துகொண்டிருப்பீர்கள். அவர்கள் சொன்னதை வைத்துத்தான் “நான் பிறந்தது இந்துவாக” என்று சொல்லியிருக்கிறீர்கள். இது ஒரு பொருட்டல்ல.

“நான் இந்துவாகவே இறப்பேன்” என்று உறுதி மொழிந்திருக்கிறீர்களே, இங்கேதான் தவறிழைத்திருக்கிறீர்கள்.

இறப்பு என்பது மூளை உட்பட உடல் உறுப்புகள் முற்றிலுமாய்ச் செயலிழக்கும்போது நிகழ்வது. அதாவது, அந்த நேரத்தில் முழுமையாகச் சுயநினைவை இழக்கிறோம்.

இறப்பது மனிதனாகவாக, மிருகமாகவா வேறு எதுவாகவும் ஆகவா என்பது பற்றியெல்லாம் சாகும்போது அறிந்திருக்க வாய்ப்பே இல்லை. இருந்துகொண்டிருந்தவர் ‘இல்லாமல்’ ஆகிறார் என்பதே உண்மை.

அறிவு, உணர்ச்சி, குணம் என்று பெற்றிருந்த அனைத்தையும் இழந்து நாம் ‘வெறுமை’யில் கலக்கும் நிலையில் மதம் இல்லை; ஒரு மண்ணும் இல்லை.

இவ்வாறெல்லாம் சிந்தித்திருந்தால்.....

“அவர்[சத்துக்குரு] எனக்குத் தெரிந்தவர்; நேரில் வந்து அழைத்தார். போனேன். சொல்வதற்கு வேறு எதுவுமில்லை” என்று சொல்லிப் பேட்டியை முடித்துக்கொண்டிருப்பீர்கள்.

மாறாக, அந்த வேடதாரியை வெகுவாகப் புகழ்ந்திருப்பது உங்கள் மீதான மதிப்பை மிகவும் குறைத்திருக்கிறது.

கடவுளுக்குக் குரு[சத்குரு: சத்> பரம்பொருள்> கடவுள்; சத்குரு> கடவுளுக்குக் குரு] என்று புளுகி[உலகின் நம்பர் 1 புளுகன்] உலகின் ஒட்டுமொத்த மக்களையும் முட்டாள்களாக்கி, கோடி கோடியாய்ப் பணம் கொள்ளையடித்துச்[+ஏராள குற்றச்சாட்டுகள்] சொகுசாக வாழும் ஓர் அயோக்கியனுடனான உங்களின் தொடர்பு நீடித்தால், விளைவு என்னவாக இருக்கும் என்பதைச் சிந்தித்து அறியும் அறிவு உங்களுக்கு உண்டு என்று நம்புகிறோம்.

கர்னாடகச் சகோதரர்களுக்கான உங்களின் தொண்டு தொடர்வதாக.

சனி, 1 மார்ச், 2025

பெண்ணைத் ‘திருப்தி’படுத்தலும் அடிமை ஆக்குதலும்!!![வாழ்வியல் கதை]

பிறந்த கிராமத்திலேயே பள்ளிப் படிப்புப் படித்து, வெவ்வேறு நகரங்களில் மேற்படிப்பை முடித்து, அவன் சென்னையிலும் நான்[‘நான்’ அடியேன் அல்ல; தன்னை முன்னிலைப்படுத்திக் கதை சொல்வது ஒருவகை உத்தி] கோவையிலும் வேலை பார்க்கிறோம்.

அவன்? ஆறுமுகம்.

இப்போதெல்லாம் நாங்கள் சந்திப்பது எப்போதாவதுதான்.

கிராமத்தில் ஒரு வாரம்போல நடைபெறும் மாரியம்மன் பண்டிகை அன்று எங்களைச் சந்திக்க வைத்தது.

சிறிது நேரப் பொத்தாம்பொதுவான கலந்துரையாடலுக்குப் பிறகு, “ரெண்டுபேருக்கும் ஒரே வயசு. நான் ரெண்டு குழந்தைகளுக்குத் தகப்பன். நீ இன்னும் கட்டைப் பிரமச்சாரி. ஏண்டா கல்யாணம் பண்ணிக்கலேன்னு கேட்டா ஏதாவது சாக்குப்போக்குச் சொல்லுவே. இன்னிக்கி உண்மையைச் சொல்லுடா” என்றேன் ஆறுமுகத்திடம்.

“இதுவரைக்கும் தரகர் மூலமா நிறையப் பொண்ணுகளைப் பார்த்துட்டேன். ஒடுக்கு விழுந்த கன்னமும், துறுத்திய பல்லும், பருத்த உதடுமா கரிக்கட்டை நிறத்தில் இருக்கிற என்னைப் அதுகளுக்குப் பிடிக்கல. போன வாரம் பார்த்த ஒரு பொண்ணு மட்டும் என்னைக் கட்டிக்கச் சம்மதிக்கிறதா தரகர் சொன்னார்” என்றான் உணர்ச்சியற்ற குரலில்.

“அப்புறம் என்ன, அவளையே கட்டிக்கலாமே?”
“அவர் சொன்னதில் எனக்கு நம்பிக்கை இல்ல. அவளைத் தனியே சந்திச்சி என்னைப் பிடிச்சிருக்கான்னு கேட்க நினைச்சேன். அவளைப் பெத்தவங்க சம்மதிக்கல. தரகர் என்னைத் தனியே அழைச்சிட்டுப் போய், ‘ஆணுக்குப் பெருசா அழகெல்லாம் தேவையில்லை. பலான விசயத்தில் பெண்டாட்டியைத் திருப்திப்படுத்திட்டா அவள் புருசனுக்கு அடிமை ஆயிடுவா’ என்று கண் சிமிட்டினார்…..”
பேச்சை நிறுத்தினான் ஆறுமுகம். அவன் சொன்ன பதிலை அறிய ஆவலுடன் காத்திருந்தேன்.

எதுவும் சொல்லாமல், “நீ என்ன நினைக்கிறே?” என்றான்.

“அவர் சொல்வதிலும் உண்மை இருக்குதானே?” என்றேன் நான் பட்டும் படாமலும்.
"மற்ற ஆண்கள் விசயத்தில் உண்மையாக இருக்கலாம். முன் அனுபவம் இல்லாததால், ‘அது’ விசயத்தில் நான் மேம்பட்டவனா, சராசரியா, அதுக்கும் கீழேயான்னு எனக்குத் தெரியாது. என்னைக் கட்டிக்கப்போறவ அது விசயத்தில் எப்படிப்பட்டவளா இருப்பாள்னும் எனக்குத் தெரியாது. இப்படி எதுவும் தெரியாம, ஒருத்தியைக் கல்யாணம் பண்ணிட்டு எதிர்பார்ப்பது எதுவும் நடக்கனேன்னா வாழ்க்கை நரகம் ஆயிடும். அதனால, ‘நான் பிரமச்சாரியாவே இருந்துடப்போறேன்னு அவர்கிட்டே திட்டவட்டமாச் சொல்லிட்டேன்" என்றான்.

“கல்யாணம் செய்துக்காம வாழுறது அத்தனைச் சுலபம் இல்லையே?” என்றேன்.

“மனுசனுக்கு ஆறிவு வளர்ச்சி இல்லாம இருந்தபோது, உடலுறவுச் சுகம் மட்டுமே அவனுக்குப் பிரதானமா இருந்தது. அறிவு வளர வளர, இயற்கை அழகை ரசிக்கிறது, நாட்டு நடப்பைப் பற்றிச் சிந்திக்கிறது, எழுதுறது, நல்ல எழுத்துகளைத் தேடித் தேடிப் படிக்கிறது, ஓவியம் வரையறது, கவிதைகள் எழுதுறது, மேடையில் பேசுவது, ஆடுவது பாடுவதுன்னு இயன்றவரை மகிழ்ச்சியோடு பொழுதைக் கழிக்கப் பல வழிகளைக் கண்டுபிடிச்சிட்டான் மனுசன். வாழ்ந்து முடிக்கிறதுக்குக் குடும்ப வாழ்க்கை அவசியத் தேவைங்கிற காலம் மாறிப்போச்சு. அதனால, நான் ஒருத்தன் பிரமச்சாரியாகவே காலம் கழிச்சுடுறது பெரிய விசயம் அல்ல” என்றான் ஆறுமுகம்.

அவனுக்கு ஆறுதல் சொல்லும் வகையறியாமல், “உன் நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும்” என்று சொல்லி அழுத்தமாக அவன் தோள் வருடினேன்.
‘திருமணம் செய்யாமல் தனிமையில் காலம் கழிக்கும் இளைஞர்கள் எண்ணிக்கை நாளும் அதிகரிக்கிறது” என்ற, அண்மையில் படித்த இந்த ஊடகச் செய்தி நினைவுக்கு வந்தது.

செய்தி:

//According to recent data, a significant portion of the Indian population remains unmarried, with estimates suggesting that over 23% of young people are not interested in marriage, which translates to a large number of unmarried bachelors in India in 2024; however, the exact number is difficult to pinpoint due to variations in data sources and age brackets considered// -https://www.google.com/search?q=number+of+unmarried+bachelors+in+india+2024

வெள்ளி, 28 பிப்ரவரி, 2025

2இல் 1 நடந்தால்தான் இவன்[ஜக்கி] அடங்குவான்!!!

ஜக்கி வாசுதேவனுக்கு மெய்யான ஆன்மிகம் தெரியாது, குறைந்தபட்சச் சிந்திக்கும் அறிவுகூட இல்லாதவன். சரளமாகப் பேசத் தெரிந்த ஆங்கிலத்தை வைத்துக்கொண்டு போலி ஆன்மிகம் பேசி ஊர் உலகை ஏமாற்றித் திரிகிறான்; மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி ‘லட்சம் கோடி’க்கும் மேலாகச் சொத்துச் சேர்த்திருக்கிறான்.

தஞ்சைப் பெரிய கோயில் சிலைக்குள் ஒன்றுமில்லை என்று சொல்லித் தனக்குள்தான் கடவுள்[விவாதங்களுக்கு உட்பட்டவர் கடவுள்] இருக்கிறார் என்று சொல்லும் அளவுக்கு இவனுக்குத் தைரியம் இருக்கிறது.

இப்போதைக்கு இவனின் ஒரு தாடி மயிரைக்கூட எவராலும் பிடுங்க முடியாது என்பது நம்மை அளப்பரிய துயரங்களுக்கு உள்ளாக்குகிறது. 

இவன் அடங்க வேண்டுமானால்.....

இவன் மூளையில் மீண்டும் ரத்தக் கசிவு ஏற்பட வேண்டும்.

அல்லது,

மோடி ஆட்சி ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

காலம் பதில் சொல்லும்!
                                       
                                       *   *   *   *   *
குமரிகளைக் கூட்டம் சேர்த்துக்கொண்டு இவன் அடிக்கும் கொட்டம்; கும்மாளம் காண்பீர்.




வியாழன், 27 பிப்ரவரி, 2025

பிரதமர் மோடியின் ஆட்சி... '-’!!! ‘+’???

*இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு முட்டாள்களின் எண்ணிக்கை மேதகு மோடியின் ஆட்சிக் காலத்தில் அதிகரித்திருக்கிறது. ‘கும்பமேளா’ கூத்தடிப்புக்கு இதில் முக்கியப் பங்குண்டு. 

*நாட்டின் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படும் அளவுக்கு, கற்பனையான புராணக் கதை மாந்தர்களுக்குக் கோடிகளில் செலவழித்துக் கோயில் கட்டுகிறார். பக்திப் பயணம் என்னும் பெயரில் வெட்டியாய் ஊர் சுற்றும் மூடர்களுக்கு வசதிகள் செய்துதரப் பெரும் தொகை செலவிடப்படுகிறது.

*பக்தி தொடர்பான தன்னுடைய நடவடிக்கைகளை இவரளவுக்கு எந்தவொரு பிரதமரும் விளம்பரம் செய்ததில்லை. சிந்திக்கும் அறிவை வளர்ப்பதற்கு எதிரான நடவடிக்கை இது.

*கடும் தண்டனைக்குரிய குற்றச் செயல்களில் ஈடுபடும் சாமியார்களுக்கு அதிக அளவில் மரியாதை தருகிறார்; நிரந்தரப் பாதுகாப்பும் உண்டு.

*அயல்நாட்டு உறவுகளை மேம்படுத்தப் பயணம் தேவைதான் என்றாலும், அதையே காரணம் காட்டி உலகம் சுற்றுவதில் அதீத ஆர்வம் காட்டுகிறார் நம் பிரதமர்.

*போதுமான ஆதாரங்கள் இல்லாமல் “அதைச் செய்தேன்; இதைச் சாதித்தேன்” என்று வெறும் வாயால் அடிக்கடி வடை சுடுகிறார்.

*குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் எதிர்க் கட்சிக்காரர்களுடன் விவாதித்து, அவை குறித்த உண்மைகளை மக்களுக்குத் தெரியப்படுத்துவதில் போதுமான அக்கறை காட்டுவதில்லை.

*அடிக்கடி, சட்டங்களைத் திருத்தி மசோதாக்களை நிறைவேற்றும் நடவடிக்கைகள், கிட்டத்தட்ட ஒரு சர்வாதிகாரியாகத் தன்னை ஆக்கிக்கொள்ளும் முயற்சியில் இவர் தொடர்ந்து ஈடுபடுகிறாரோ என்று எண்ணத் தூண்டுகிறது.

*பிரச்சினைகளைக் கையாளுவதற்கும், வளர்ச்சித் திட்டங்களை வகுத்து அவற்றை நிறைவேற்றுவதற்கும் தேவையான அறிவாற்றலும் அனுபவமும் பெற்றவர்கள் இவரின் அமைச்சரவையில் இல்லை என்றே சொல்லலாம்.

*பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியைக் கருத்தில் கொண்டுதான் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன; மாநிலங்களுக்கென்று அதிகாரங்களும் வழங்கப்பட்டன. அதை அலட்சியப்படுத்தி, மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுகிறார் மோடி. மாநில அரசுகளால் இந்த அடாத செயல் சுட்டிக்காட்டப்படினும் தன்னைத் திருத்திக்கொள்ள அவர் தயாராக இல்லை.  

மேற்கண்டவை மோடி ஆட்சி குறித்த மதிப்பீட்டு[-]ப் பட்டியல்!

‘+’?..... தேடித் தேடித் தேடிக் கண்டறிக!!

புதன், 26 பிப்ரவரி, 2025

கும்பமேளா நீராடல்... புனிதம் சேர்த்த மோடியும் தவிர்த்த காஞ்சி மட விஜயேந்திரனும்!

த்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் நடந்துவரும் கும்பமேளாவில் கலந்துகொண்டு காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு வந்தாராம்[செய்தி].

வந்து என்ன செய்தார்?

‘ஓர் அனாதை இல்லத்திற்கு நன்கொடை வழங்கினார்; சங்கர மடம் சார்பில் ஒரு முதியோர் இல்லம் தொடங்கி வைத்தார். ஏழை மக்களின் புகலிடமான அரசு மருத்துவமனைக்குச் சென்று தீராத நோய்களால் அவதிப்படுவோருக்கு ஆறுதல் சொன்னார்…’ என்றிப்படியான நல்ல காரியங்கள் ஏதும் செய்தாரா என்றால், இல்லை.

பின்னே என்ன செய்தார்?

ஊடகக்காரர்களுக்குப் பேட்டியளித்து அருள்பாலித்தார்.

பேட்டியில் என்ன சொன்னார்?

என்னென்னவோ சொன்னார். அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று: #அகில இந்திய அளவில் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த புண்ணிய தீர்த்த அடையாளமாக உள்ள அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் கும்பமேளாவில் கலந்துகொள்ளும் மக்கள் அனைவருக்கும் நற்பலன்கள் கிடைக்க வேண்டும் என பிரார்த்தித்தோம்# என்பதும் ஒன்று[இவர் பிரார்த்திக்கலேன்னா பக்தர்களுக்கு நற்பலன்கள் கிடைக்காவோ?].

#காஞ்சி மடத்தின் மூலம் அங்கு மண்டபம் அமைத்து, கடந்த 40 நாட்களாக வேதபாடசாலைகள் மூலம் உலக நன்மைக்காக யாகங்கள், பூர்ணாஹூதி[!?] ஹோமங்கள், புனித பூஜைகள் மற்றும் அன்னதானங்கள் நடக்கிறது# இதுவும் அவர் சொன்னதே.

இப்படிச் சொன்ன அவரிடம்.....

“ஆண்டவனால் அனுப்பப்பட்ட மோடியும், இக உலகப் ‘போகம்’ துறந்த ‘யோகி’[ஆதித்யானந்த்]யும் குளியல் போட்டதால் கூடுதல் புனிதத்துவம் பெற்ற திரிவேணி சங்கமத்தில், ஈஸ்வரனின் அனுக்கிரஹம் பெற்ற தாங்களும் நீராடி அதில் அபிரிதமாகப் புனிதம் சேர்த்தீர்களா?” என்று ஊடகத்தார் கேட்டிருக்கலாம்.

கேட்டிருந்தால்…..

அவர் திருவாய் மலர்ந்தருளுவாரோ அல்லவோ, அவரின் சிஷ்யர்களில் எவரேனும் ஒருவர், “நீச மனிதர்கள் நீராடுகிறதும் பாவங்களின் கழிப்பிடமும் ஆன திரிவேணி சங்கமத்தில் அவர் நீராடமாட்டார்” என்று பதில் சொல்லியிருப்பார்.

ஏனோ எவரொருவரும் கேட்கவில்லை!

* * * * *

https://tamil.indianexpress.com/tamilnadu/kanchi-kamakoti-peetadhipathi-vijayendra-says-even-in-the-computer-age-devotion-is-deeply-rooted-among-people-8753022