சனி, 26 ஜூலை, 2025

தூ.குடி வி.நிலைய முனையத்தைக் காணொலி மூலம் திறப்பாரா தர்மச் சக்கரவர்த்தி?

//தூத்துக்குடி விமான நிலையத்தில் 451 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய முனையத்தை[terminal]ப் பிரதமர் மோடி திறந்துவைக்கிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு விமான நிலையம் & சுற்றுப்பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது// என்பது ஊடகச் செய்தி.

இதன் பொருட்டு இன்று இரவே மாலத்தீவிலிருந்து[5 நாள் சுற்றுலா முடிந்து] விமானம் மூலம் தமிழ்நாடு வருகிறார் ‘தர்மச் சக்கரவர்த்தி’ மோடி.

மோடியின் பயணங்கள், அயல்நாடுகளுடனான உறவை மேம்படுத்துவதற்கானவை[அண்மையில் பாகிஸ்தானுடனான போரில் மிகப் பல நாடுகள் இந்தியாவை ஆதரித்தமை கவனத்தில் கொள்ளத்தக்கது! ஹி... ஹி...ஹி!!!].

அவரின் தூ.குடி வருகை, அவர் தொடர்ந்து மேற்கொள்ளும் உலகச் சுற்றுப் பயணத்தைத் தாமதப்படுத்தும் என்பது உறுதி[2025 நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிவதற்குள்ளாகவே அவர் தன் 5 நாள் சுற்றுலாவை மேற்கொண்டது நினைவுகூரத்தக்கது].

எனவே, அடுத்த சுற்றுலாவுக்கான ஏற்பாட்டைச் செய்வதற்கும், அதைத் தொடங்குவதற்கும் வசதியாக, தூத்துக்குடிக்கான பயணத்தை ரத்து செய்து, முனையத் திறப்பு நிகழ்வைக் காணொலி[நேரலை] வாயிலாக[குறைந்த அவகாசத்தில்] நம் தர்மச் சக்கரவர்த்தி மோடி அவர்கள் செய்துமுடிக்கலாம் என்பது நம் எண்ணம்; பரிந்துரையும்கூட.

* * * * *

https://www.puthiyathalaimurai.com/tamilnadu/police-security-increased-due-to-pm-modi-to-visit-thoothukudi//

வெள்ளி, 25 ஜூலை, 2025

யார்..... யார்..... யார்..... ‘அவர்’ யாருங்க?!

“எனக்குச் சாவு நேராமல் காத்தருள்” என்று எந்தவொரு பக்தனும்[இஸ்லாமியனோ கிறித்தவனோ இந்துவோ] இந்நாள்வரை தன் கடவுளிடம் கோரிக்கை வைத்ததாக அறியப்படவில்லை.

காரணம், மரணம் என்பது கடவுள் வகுத்த வாழ்க்கை நெறி. அவர் வகுத்த அந்த நெறியை மாற்றியமைக்க அவர் ஒருபோதும் சம்மதிக்கமாட்டார்[மரணம் நிகழாமல்போனால், எக்குத்தப்பாக உயிர்களின் எண்ணிக்கை பெருகுதல் போன்ற விபரீத விளைவுகள் உண்டாகும்] என்பார்கள் பக்தி நெறி பரப்புவோர்.

மரணத் துன்பத்தை அனுபவிப்பது கடவுள் வகுத்த வாழ்க்கை நெறி என்றால், வறுமை, நோய், பகைமை, ஆதிக்க வெறி போன்றவற்றால் விளையும் துன்பங்களை அனுபவிக்கும் வாழ்க்கை நெறியை வகுத்தவர் யார்? 

அவர் யாருங்க?

அந்த அவரும் கடவுள்தான் என்பதால் அவரிடம் கோரிக்கைகள் வைத்து வழிபடுவதால் பயன் ஏதும் இல்லை.

ஏனென்றால், தான் வகுத்த நெறியை மாற்றியமைத்திட அவர் ஒருபோதும் சம்மதிக்கமாட்டார்!

வியாழன், 24 ஜூலை, 2025

பிள்ளைப் பாசத்தைச் சிதைக்கும் கள்ளக் காம உறவுகள்! தேவை உடனடி ஆய்வுகள்.


ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தன் கள்ள உடலுறவுக்கு இடையூறாக இருந்ததாகக் கருதி, தான் பெற்ற இரு மழலைகளையே கொலை செய்த ஒரு மிகு காமுகிக்கு[+கள்ளக் காமுகன்] இன்று தண்டனை வழங்கியிருக்கிறார் நீதியரசர்[முழு விவரம் காணொலிகளில்].

தீர்ப்பு குறித்து இணையத்தில்[+காணொலிப் பின்னூட்டங்கள்] மிகப் பல கருத்துரைகள் வெளியாகியுள்ளன.

கருத்துரைப்பது நம் நோக்கமல்ல.

அவ்வப்போதோ, அரிதாகவோ இது போன்ற[காமக் களியாட்டத்திற்கு இடையூறாக இருப்பதாக எண்ணிப் பெற்ற மகவைச் சுவற்றில் அடித்துக் கொன்றாள் ஒரு தாய் என்பதும் ஒன்று] அவலங்கள் இந்த மண்ணில் நிகழாமல் தடுப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிவது மிக அவசியம் என்பதை வலியுறுத்துவது இப்பதிவின் நோக்கம் ஆகும்.

வழிமுறைகள்:

இம்மாதிரிக் குற்றவாளிகளுக்கென்று[பந்தப் பாசங்களை முற்றிலுமாய்த் துறந்து, பாலுறவே பிரதானம் என்ற முடிவுக்கு வருதல், பெற்ற மகளைத் தந்தையே வன்புணர்வு செய்தல், தாயே தன் மகள்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துதல் போன்றவை> முற்றிய மனநோய்கள்] தனிச் சிறைகளை உருவாக்கி, குழந்தைப் பருவம் தொட்டு, இவர்கள் வளர்க்கப்பட்ட... தன்னிச்சையாய் வளர்ந்த சூழ்நிலைகளை உளவியல் மருத்துவர் குழுக்களைக்கொண்டு நுணுகி ஆராய்வது போன்றவை.

இதன் மூலம், குழந்தைப் பருவத்திலிருந்து இவர்கள் எதிர்கொண்ட இழி நிகழ்வுகளையும், அவற்றின் பாதிப்புகளையும் கண்டறிவதன் மூலம், ஆணோ பெண்ணோ இனி எவரும் இம்மாதிரிச் சூழல்களை எதிர்கொள்ளாதிருப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து அவற்றைச் செயல்படுத்தலாம்[பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் போன்ற ஊடகங்களின் உதவியுடன்].

இதுவொரு ஆரம்ப நடவடிக்கையாயினும், காலப்போக்கில் இதை விரிவுபடுத்துவதன் மூலம் இம்மாதிரிக் குற்றங்கள் நிகழாமல் தடுக்கலாம், அல்லது வெகுவாகக் குறைக்கலாம்.

இதுவொரு சாமானியனின் பரிந்துரை. பாலியல் மருத்துவ நிபுணர்களால் மட்டுமே இதற்கான செயல் திட்டத்தைச் சிறப்பாக வகுத்தளிக்க இயலும்.
                                 *   *   *   *   *
தொடர்புடையதொரு செய்தி[பயப்படாம படியுங்க]:

புதன், 23 ஜூலை, 2025

கோயில்களின் வாயில்களில் காத்துக்கிடக்கும் கருணைக் கடவுள்கள்!!!

ந்துவோ இஸ்லாமோ கிறித்தவமோ நீங்கள் எம்மதம் சார்ந்தவராயினும், உங்களுடைய வழிபடு கடவுளின் அருளைப் பெற்றிட[உடனடியாக] ஓர் எளிய வழி.

முதலில் கைப்பை ஒன்றில் சில்லரையாக ரூபாய்த் தாள்களையோ சில்லரை நாணயங்களையோ நிரப்பிக்கொள்ளுங்கள்.

அனைத்து மதக் கோயில் வாசல்களிலும் உங்களிடம் தர்மம் பெறுவதற்காகப்  பிச்சைக்காரகள் அணிவகுத்துக் காத்திருப்பார்கள்.

நீங்கள் இவற்றில் எந்தவொரு கோயிலுக்கும் செல்லலாம். சென்று, கைவசம் இருக்கும் சில்லரைகளை[ஐம்பது நூறாகவும் இருக்கலாம்] அவர்களுக்குத் தர்மம் செய்யுங்கள்.

அடுத்த வினாடியே நீங்கள் எதிர்பார்க்கிற புண்ணியம் உங்களின் ‘பாவ புண்ணியம்’ கணக்கில் சேர்க்கப்பட்டுவிடும். கடவுளிடம் வைக்கவிருந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுவிடும்.

அடுத்த வினாடியே அது நிகழக் காரணம்.....

பிச்சைக்கார்களுக்கிடையே வழக்கமாகக் காத்திருக்கும்[அருவமாக], கடவுள்[எந்தவொரு மதத்தவர்க்கு உரியவராயினும்] நீங்கள் தர்மம் செய்வதைப் பார்த்ததும் உங்கள் மீது அருள்மழை பொழிவதுதான்.


நீங்கள் எதிர்பார்க்கும் பலன் கோயில் வாசலிலேயே கிடைத்துவிடுவதால்,  கோயிலுக்குள்[மசூதி, தேவாலயம்+ + +] செல்லாமலே வீடு திரும்பி வேறு முக்கிய வேலைகளில் நீங்கள் ஈடுபடலாம்.

மற்றபடி, பிச்சைக்கார்களுக்குத் தர்மம் செய்யாமல் கோயிலுக்குள் சென்று வழிபடுவதால், கடவுளின் அருளைப் பெற்றிட வாய்ப்பே இல்லை என்பதை அறிவீராக.

"எல்லாம் சரி, உலகத்தைப் படைத்து, உயிர்களுடன் மனிதர்களையும் படைத்து, அவர்களில் பிச்சைக்காரர்களையும் உருவாக்கி, மற்றவர்களில் கொஞ்சம் பேரைத் தர்மவான்கள் ஆக்கி..... கடவுள்[கள்?!] எதற்காக   இப்படியெல்லாம் செய்கிறார்?”னு யாரும் கேள்வி எழுப்ப வேண்டாம்.

சொன்னால் அற்ப ஆறறிவு மனிதர்களாகிய உங்களுக்குப் புரியாது!

அடியேனுக்கும் புரியும்படி சொல்லத் தெரியாது!! ஹி...ஹி...ஹி!!!

செவ்வாய், 22 ஜூலை, 2025

பாவப்பட்டவர்களா ‘பலான’ தொழில் செய்யும் அத்தனைப் பெண்களும்?!

விபச்சார விடுதியிலிருந்து அதிரடியாகக் கைது செய்யப்பட்டவர்களில் அவளும்[பெயர் தவிர்க்கப்படுகிறது] ஒருத்தி. விசாரித்த காவல்துறை அதிகாரியிடம் அவள் சொன்னாள்:

"அப்பாவும் அம்மாவும் கட்டடத் தொழிலாளிகள். என் எதிர்காலம் நல்லா இருக்கணும்னு படிக்க வைத்தார்கள். முகநூலில் அறிமுகமான ஒருத்தனைக் காதலிச்சேன். வீட்டில் கடுமையான எதிர்ப்பு. ஓடிப்போய்க் கல்யாணம் கட்டிகிட்டு வெளியூரில் குடும்பம் நடத்தினோம். ஆறு மாசம் போல ஆசை தீர என்னை அனுபவிச்சிட்டு, ஒரு விபச்சார விடுதியில் வித்துட்டு ஓடிட்டான் அந்தப் பொறுக்கி. அங்கிருந்து என்னால தப்பி வர முடியல. கெஞ்சிக் கேட்டுக்கிறேன், வழக்குப்போடாம என்னை என் பெற்றோரிடம் சேர்த்துடுங்க....."

சொல்லிக்கொண்டிருக்கும்போதே சரம் சரமாக அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

இது சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி[நண்பர்] பத்திரிகை நிருபரிடம் சொன்னது.

“அவனும் நானும் திருப்பூரில் ஒரு தையலாடை நிறுவனத்தில் ஒன்னா வேலை பார்த்தோம். மனப்பூர்வமா காதலிச்சோம். கல்யாணம் கட்டிக்காம சேர்ந்து வாழ்ந்தோம். கொஞ்ச நாள் சந்தோசமா வாழ்க்கை கழிஞ்சது. அவன் குடிக்கு அடிமை ஆனான். வேலை போச்சு. என் ஒருத்தி வருமானம் போதுமானதா இல்ல. அவனுக்குத் தெரிஞ்சவங்கள அழைச்சிட்டு வந்து என்னோடு ‘இருக்க’ அனுமதிச்சான். அதாவது, என்னோடு சேர்ந்து வாழ்ந்த அவனே எனக்குப் புரோக்கராகவும் ஆனான்.....

கொஞ்ச நாளுக்கு அப்புறம் போதையில் மாடிப்படியில் தடுக்கி விழுந்து செத்துப்போனான். வேறு வழியில்லாம முழு நேர விபச்சாரியா மாறினேன்.”

சம்பந்தப்பட்ட பெண்ணிடம் ஒரு பத்திரிகை நிருபர் நடத்தியப் பேட்டியில் வெளியான செய்தி இது.

“அப்பா மொடாக்குடியர். தினம் தினம் அம்மாவுக்கும் அவருக்கும் சண்டைதான். ஒரு நாள், சண்டை வலுத்ததில் அம்மாவை விறகுக் கட்டையால் அடிச்சிக் கொன்னுட்டு அப்பா ஜெயிலுக்குப் போய்ட்டார்.....

சித்தப்பா வீட்டில் கொஞ்ச நாள் வளர்ந்தேன். சித்தி என்னை வேலைக்காரியா நடத்திச்சே தவிர வயிறாரச் சோறு போடல.....

வீட்டிலிருந்து வெளியேறிப் பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்தேன். அங்கேயே படுத்துத் தூங்கினேன். ஒரு நாள் ஒரு நடுத்தர வயசுக்கார அம்மா, ‘உனக்கு என்ன வயசு?’ன்னு கேட்டாங்க. பத்து நடக்குதுன்னு சொன்னேன். ‘அடிப் பாவிப்புள்ள, இந்த வயசுல இப்படி அனாதையாப் படுத்துக் கிடந்தா காலிப் பசங்க தூக்கிட்டுப்போயிடுவாங்க. வா என்னோடு’ன்னு தன் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனாங்க. அங்கே போனப்புறம்தான் அந்த அம்மா விபச்சாரத் தொழில் நடத்துறவங்கன்னு தெரிஞ்சுது. தெரிஞ்சும் வயித்துப்பாட்டுக்காக அங்கேயே தங்கியிருந்தேன். நான் வயசுக்கு வந்ததும் வராததுமா என்னையும் அந்தத் தொழிலில் இறக்கிட்டாங்க அந்த அம்மா.” 

இது, குடியிருப்பில் விபச்சாரம் நடப்பதாகக் கேள்விப்பட்டு, வீட்டைச் சோதனையிட்ட காவல்துறையாரிடம் அந்தச் சின்னப் பெண் சொல்ல, அவர்கள் மூலம் ஊடகங்களில் வெளியான செய்தி.

புருசன்காரன் ரொம்பவே அப்பாவி. காலையில் புறப்பட்டுப்போனா, தள்ளுவண்டி வியாபாரத்தை முடிச்சுட்டு ஏழு எட்டு மணிக்கு மேல்தான் வீடு திரும்புவான். அதைப் பயன்படுத்தி, அண்டை அயல் வாலிபர்களோடு அவளுக்குக் கெட்ட சகவாசம் ஏற்பட்டுது....

இது தெரிஞ்சி அவளை அவன் கண்டிச்சான். அவள் திருந்தல. மானஸ்தனான அவன் ஒரு நாள் தூக்கில் தொங்கிட்டான்.....

கொஞ்ச நாள் கழிந்ததும் பிழைப்புக்கு வேறு வழியில்லாம, முழுநேரத் தொழில்காரியா அவள் மாறினாள்.

அவள் மீது தீராத கோபத்திலிருந்த அண்டை அயல் தெரு மக்கள் ஒன்றுகூடிக் காவல்துறையிடம் புகார் செய்ய, அவர்கள் அவளைக் கைது பண்ணினார்கள். இதை ஊடங்கங்கள் செய்தியாக வெளியிட்டன.

முதல் தர முட்டாள் தமிழனா, தெலுங்கனா?

க்தி வாய்ந்த சாமிகள் எனப்படும் தில்லை நடராசர், மதுரை மீனாட்சித் தாய், இவர்கள் ஈன்று புறம் தந்த முருகப் பெருமான், இவரின் தாய்மாமன் திருவரங்கம்[ஸ்ரீரங்கம்] அரங்கநாத சுவாமி[விஷ்ணு] என்று விதம் விதமானவையும் வகை வகையானவையுமான சாமிகளுக்கான ஆயிரக்கணக்கான கோயில்கள் தமிழ்நாட்டில்  இருக்க, இவர்களினும் மேலான கடவுள் திருப்பதி வெங்கடேசுவர சாமியே[மும்மூர்த்திகளில் ஒருவரான ‘விஷ்ணு’வே வேறு வேறு பெயர்களில் தரிசனம் தருகிறார்] என்று எண்ணித் தினம் தினம் ஆயிரக்கணக்கில் அங்கே குவிகிறார்கள் தமிழர்கள்.

உலக அளவில் புகழ் பெற்ற இந்த வெ.சாமி கைக்கெட்டும் தூரத்தில் இருந்தும்[திருப்பதி], மாநிலம் கடந்து தமிழ்நாட்டின் திருவண்ணாமலையிலுள்ள அண்ணாமலையாரை நம்பர் 1 கடவுளாக்கி[வெங்கடேசுவரர் என்னும் ஏழுமலையானை நம்பர் 2 கடவுள் ஆக்கிவிட்டார்கள்] அவரை வழிபடுவதற்காகப் பல்லாயிரக்கணக்கில் கூட்டம் கூட்டமாக வந்து குவிகிறார்கள் தெலுங்கர்கள்.

திருப்பதி செல்லும் தமிழர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் இது மிக அதிகம். 

நிர்வாகம் விதித்துள்ள எந்தவொரு கட்டுப்பாட்டையும் மதிக்காமல் முட்டி மோதி, நெட்டித் தள்ளி, கோயிலுக்குள் நுழைந்து அண்ணாமலையாரையே மூச்சுத் திணற வைக்கிறார்கள் தெலுங்கர்கள் என்பது செய்தி.

ஆக, முன்னாள் நம்பர் 1 கடவுளை[திருப்பதி வெங்கடேஸ்வரர்] நம்பர் 2 ஆக்கி, அண்ணாமலையாரை நம்பர் 1 கடவுள் ஆக்கியதன் மூலம், நம்பர் 1 முட்டாள்களாக இருந்த தமிழர்களை முட்டாள்தனத்தில் நம்பர் 2 ஆக்கி, தெலுங்கர்கள் முதலிடத்தைப் பெற்றுவிட்டார்கள்.

இது மூடர் உலகில் நிகழ்த்தப்பட்ட மாபெரும் சாதனை ஆகும்

சாதனை நிகழ்த்திய தெலுங்கர்களால் இங்கே பெரும் பிரச்சினைகள் உருவாகியுள்ளன.

நல்ல தமிழ்ப் பெயரான திருவண்ணாமலையைத் திருவண்ணாமலை என்று சொல்லாமல், ‘அருணாச்சலம்’ என்கிறார்கள் இவர்கள்.

இவர்களுக்காக, ஆந்திரா[+கர்னாடகா] செல்லும் பேருந்துப் பெயர்ப் பலகைகள் அருணாச்சலம் என்று மாற்றப்பட்டனவாம்[மீண்டும் திருவண்ணாமலையாக மாற்றப்பட்டுள்ளது என்பது அண்மைச் செய்தி> தமிழார்வலர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததன் விளைவு].

தமிழர்களோ தெலுங்கர்களோ முட்டாள்களின் எண்ணிக்கை அதிகரித்தால் மொழிப் பிரச்சினை மட்டுமல்ல, சாதி மதம் இனம் போன்றவை தொடர்பான பிரச்சினைகளும் பெருமளவில் அதிகரிக்கும்.

ஆகவே, தெலுங்கராகட்டும் தமிழராகட்டும், இவர்கள் திருப்பதிக்கோ திருவண்ணாமலைக்கோ செல்லப் பேருந்து வசதி செய்துதருவது அரசுகள் செய்யும் மாபெரும் தவறு.

பழனிப் பக்தர்களைப் போல இவர்களும் பாதயாத்திரை செல்லட்டும்.

நடந்து நடந்து பாதங்களில் ரத்தம் கசிந்தால்தான் அதைக் கண்டு மனம் இளகி, திருப்பதி ஏழுமலையானும் திருவண்ணாமலை அண்ணாமலையானும் தாமதிக்காமல் அருள்பாலிப்பார்கள்!

                                           *   *   *   *   *

***//ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்குச் செல்லும் தமிழக அரசுப் பேருந்துகளில் "அருணாசலம்" என்று எழுதப்பட்டிருந்தது. திருவண்ணாமலைக்கு பதிலாக அருணாசலம் என்று பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது சில சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது//> https://tamil.oneindia.com/news/thiruvannamalai/arunachalam-name-boards-are-removed-from-the-tiruvannamalai-buses-after-outburst-720551.html

ஞாயிறு, 20 ஜூலை, 2025

மோடி கடவுளா, பித்தேறிய புத்தி கெட்ட பக்தரா?!

னைத்து உயிரினங்களுக்குள்ளும் மனிதன் மட்டுமே கடவுளைப் போற்றி வழிபடுகிறான். 

இந்த வழிபாட்டின் மூலம் பல நன்மைகளைப் பெற்றிட முடியும் என்று நம்புகிறான்; கடவுள் வழங்கிய ஆறறிவைப் பயன்படுத்திப் பல தகாத செயல்களிலும் இவன் ஈடுபடுகிறான்.

தன் விருப்பம்போல் பயன்படுத்துவதற்கான இந்த ஆறறிவை, பிற உயிரினங்களைத் தவிர்த்து மனிதனுக்கு மட்டுமே ஏன் அருள்பாலித்தார் கடவுள்?

இது அவரால் படைக்கப்பட்ட அந்தப் பிற உயிரினங்களுக்குச் செய்த துரோகம் அல்லவா?

துரோகம் செய்பவர் துரோகி.

கடவுள் துரோகியா, அல்லவா?

கோயில், குளம், புண்ணியத்தலம் என்று கோரிக்கைகளுடனும், காணிக்கை செலுத்த மூட்டை மூட்டையாய்ப் பணத்துடனும் அலையும் சுத்தப் பக்திமான்கள்> பக்திப் பித்தேறியவர்கள் சிந்திப்பார்களா?!

இந்திய மண்ணை ‘மயான பூமி’ ஆக்கும் மதவெறிச் சங்கிகள்!!!

//தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சிலின் (NCERT) 8ஆம் வகுப்புச் சமூக அறிவியலுக்கான புதிய புத்தகத்தில், பாபர் ஒரு காட்டுமிராண்டித்தனமானவராகவும் வன்முறையான வெற்றியாளராகவும், மக்களைக் கொன்று குவிப்பவராகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

அக்பரின் ஆட்சிக்காலத்தைக் கொடுங்கோல் மற்றும் சகிப்புத்தன்மையின் கலவையாக இந்தப் புத்தகம் காட்டுகிறது. இவற்றைத் தவிர, ஔரங்கசீப் ஆலயங்களையும் குருத்வாராக்களையும் அழித்தவராக விவரிக்கப்பட்டுள்ளார்//https://www.bbc.com/tamil/articles/cwyrl54lgjyo

மத வெறியர்கள் சொல்கிறபடி, பாபரும்  அக்பரும் இரக்கமற்ற கொடூரர்களாகவே இருப்பினும், அவர்களைப் பற்றியப் பாடங்களை மாணவர்களுக்குப் போதிப்பதன் உள்நோக்கம் என்ன? 
எப்போதோ செத்தொழிந்த அவர்கள் மீது வெறுப்புணர்வையும் பழிவாங்கும் வெறியையும் வளர்ப்பது ஏன்?
இவற்றைச் செய்வது  எப்போதோ மரணித்து மண்ணோடு மண்ணாகிவிட்டவர்களைப் பழிவாங்கியதாக ஆகுமா?
ஆகாது. அது சாத்தியமே இல்லை என்பது இப்பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துபவர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் தெரியும்.
தெரிந்தும் இந்த வேண்டாத செயலை அவர்கள் ஏன் செய்கிறார்கள்?
கொஞ்சம் சிந்தித்தாலே புரியும், அந்த இஸ்லாமிய அரசர்களைப் பழிவாங்க முடியாத நிலையில் அவர்களுடைய வாரிசுகளை வஞ்சம் தீர்ப்பதுதான்.
வாரிசுகளைத் தண்டிப்பது கொடூரக் குற்றங்களில் ஈடுபட்ட அந்த மன்னர்களையே தண்டித்ததாக ஆகுமா?
“ஆம்” என்றாலும்.....
இந்த நாட்டில் அவர்கள் சிறுபான்மையினராக இருந்தாலும் அவர்களின் மதத்தைச் சார்ந்தவர்கள் உலகெங்கும் நிறைந்திருக்கிறார்கள். தங்கள் மதத்தவர் பழிவாங்கப்படுவதை அவர்கள் வேடிக்கை பார்ப்பார்களா?
மாட்டார்கள்.
இந்த மண்ணில் ஊடுருவிப் பழி வாங்கியவர்களைப் பழிக்குப் பழி வாங்குவார்கள்.
இந்தப் புண்ணியப் பூமி கலவரப் பூமியாக மாறும்.
இரு தரப்பிலும் காலனுக்குப் பலியிடப்படும் உயிர்களின் எண்ணிக்கை அபிரிதமாகப் பெருகும்.
மனிதத்தைப் போற்றி வளர்க்காமல், மத வெறியையும் மட்டுப்படுத்தப்படாத பக்தியையும் ஆயுதங்களாக்கி, ஆட்சியில் நீடிக்கத் திட்டமிடும் இந்த நாசகாரக் கும்பலை அடித்து விரட்டாமல் மக்கள் வேடிக்கை பார்ப்பது நாட்டு நலனுக்குப் பெரும் கேடு விளைவிப்பதாகும்!
தொடர்புடைய செய்தி:

சனி, 19 ஜூலை, 2025

படுத்தும் பாலுறவு இச்சையும் தூண்டும் ஆண்பாலின இயக்குநீரும்!!!

தினம் தினம் காதல் தோல்வித் தற்கொலைகளும், கள்ளக் காமம், கடத்தல், வன்புணர்வு, கொலை போன்ற பாலியல் குற்றங்களும் இம்மண்ணில் பெருகிவருகின்றன.

இந்நிலையில்.....

இக்குற்றங்களால் பாதிப்பப்படாமலிருக்கக் கடைசி மூச்சுவரை, திருமணம் செய்யாமலே கிடைக்கும் வருமானத்தில் கவுரவமாக உடையுடுத்து, நாட்டு நடப்பை வேடிக்கை பார்த்து, உண்டு, உறங்கி வாழ்ந்துமுடிப்பதே நல்லது என்றெண்ணும் ஆடவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.

ஆனாலும், அவர்களால் உடலுறவு ஆசையைத் துறப்பது என்பது முற்றுப்பெறாத போராட்டமாகவே உள்ளது.

துறக்கவிடாமல் தடுப்பது ஆண்களின் விந்தகங்களில் உற்பத்தியாகும் பாலின இயக்குநீர்[வேதிப்பொருள்]. 

ஆண்களின் உடலுறவு இச்சையைத் தூண்டிப் பெண்களைத் தேடி அலையவிட்டு வேடிக்கை பார்க்கும் அந்தப் பாலின இயக்குநீரை Testosterone’[ஆண்களின் விந்தகங்களில் உற்பத்தி செய்யப்படுவது] என்கிறார்கள் உடற்கூற்று விஞ்ஞானிகள்.

மூளையிலிருந்து மூளையின் அடிப்பகுதியில் உள்ள பிட்யூட்டரிச் சுரப்பிக்கு அனுப்பப்படும் குறிப்பலைகள்[சிக்னல்கள்] இந்த  வேதிப்பொருளைக்[டெஸ்டோஸ்டிரோன்] கட்டுப்படுத்துகின்றனவாம்.

சிக்னல்கள் அனுப்பப்படுவதை முற்றிலுமாய்த் தடை செய்துவிட்டால், காம உணர்ச்சியைத் தூண்டும் வேதிப் பொருள்[Testosterone] உற்பத்தியாகாது; ஆண்களுக்குக் காம உணர்ச்சியும் தோன்றாது.

உலகின் ஆகச் சிறந்த உடற்கூற்று விஞ்ஞானிகள் மனம் வைத்தால் சிக்னலைத் தடை செய்வது சாத்தியப்படக்கூடும். 

பட்டால்.....

ஆண்களில் பலரும் நிம்மதி பெறுவார்கள்; விஞ்ஞானிகளுக்கு மனப்பூர்வமாய் நன்றி சொல்வார்கள்.

ஹி... ஹி... ஹி!!!

வெள்ளி, 18 ஜூலை, 2025

திணவெடுத்துத் திரியறதுகள்! அடிவயிறு கலங்குதுங்க!!

+++நாலு சின்னஞ்சிறுசுகளுக்குத் தாயான தன் பெண்டாட்டியைக் கைவிட்டுக் கள்ளக் காதலியோடு ஓடிப்போனான் ஒரு காமுகன்.

+++கள்ளக் காதலனோடு சேர்ந்து கட்டின புருசனைக் கட்டையால் அடித்துக் கொன்றாள் ஒரு காமுகி.

+++எத்தனைப் புத்திமதி சொல்லியும் கள்ள உறவைக் கைவிடாத பொண்டாட்டியைக் கழுத்தை நெறித்துக் கொன்றான் புருஷன்காரன்.

+++கள்ள உறவைக் கண்டித்ததால், காபியில் விஷம் கலந்து கொடுத்துக் கணவன்காரனைச் சாகடித்தாள் பெண்டாட்டி.

+++கல்யாண வயசில் ரெண்டு பொண்ணுக இருந்தும் தம்பி முறைக்காரனோடு கம்பி நீட்டினாள் ஒரு அம்மாக்காரி.

+++கம்பி எண்ணினாலும் பரவாயில்லேன்னு, முகநூல் காதலனோடு வீடியோ காலில், விடிய விடிய செக்ஸ் பேசிய பெண்டாட்டியைக் கண்டதுண்டமா வெட்டி மூட்டை கட்டிகிட்டுக் காவல் நிலையத்தில் சரணடைந்தான் ஒரு ரோஷக்காரக் கணவன்.

+++‘அது’ விசயத்தில் தன்னைத் திருப்திப்படுத்தலேன்னு கல்யாணம் ஆன அடுத்த வாரமே அவனை விவாகரத்துப் பண்ணக் கோர்ட்டுக்குப் போனாள் அவனின் புதுப் பெண்டாட்டி.

+++கள்ள உடலுறவுக்கு இடைஞ்சல் பண்ணுதுன்னு பெற்ற குழந்தையைச் சுவற்றில் அடித்துக் கொன்றாள் பெற்ற அன்னை.

+++இரண்டு குழந்தைகளின் தாயாக இருந்தும், தனக்குக் கல்யாணமே ஆகலேன்னு பொய் சொல்லி ஓடி ஓடி ஒன்பது கல்யாணம் பண்ணி, லட்சக்கணக்கில் பணம் கரந்துட்டு, பத்தாவதா ஒருத்தனை ஏமாத்தப் போய் மாட்டிகிட்ட கல்யாண ராணியைக் கைது செய்தது காவல்துறை.

இப்படியாகப் பத்திரிகைகளிலும் செய்தி ஊடகங்களிலும் தினம் தினம் வெளியாகிற செய்திகளால் அடி வயிறு கலங்குகிறது.

நினைத்தாலே நெஞ்சு பதை பதைக்கிறது.

இனியும் பத்திரிகை படிப்பதில்லை; தொ.கா.வில் செய்தி பார்ப்பது இல்லேன்னு எங்கள் குல தெய்வம் சாமி மேல நான்[‘பசி’பரமசிவம்] சத்தியம் பண்ணிட்டேங்க!

நீங்க?

வியாழன், 17 ஜூலை, 2025

வரலாறு காணாத விமானமும் இந்திய வரலாறு கண்டிராத பிரதமரும்[மோடி]!!!


தென்ன வரலாற்றில் 'முதல்முறை'யாக?

இந்த ‘முதல்முறை’ ஏராளமான வேள்விகளைக் கேட்கத் தூண்டுகிறது.

அவற்றில் கொஞ்சம்.....

*இத்தனை நீள விமானத்தைத் திருச்சி நிலையம் கண்டதில்லையா?

*வேறெந்த முன்னாள் பிரதமருக்கும் இல்லாத வகையில், மோடி வருகைக்கு மட்டும்தான் ஒத்திகை நடத்தப்படுகிறதா?[வேறெந்த நாட்டுக்குச் சென்றாலும் இந்த ஒத்திகை தவறாமல் இடம்பெறுமா?

*குட்டையான[நீளம் குறைவாக] விமானம் என்றால் ஒத்திகை நடைபெற்றிருக்காதா?

*மோடிக்குப் பதிலாக, ஒரு ‘டூப்ளிகேட்’ பிரதமர் வந்து இறங்குவதாக இன்னொரு ஒத்திகை நடத்தப்படுமா?

*இந்த ‘ஒத்திகை’ என்பதே திருச்சி விமான நிலைய வரலாற்றில் முதன் முறையாக நடத்தப்படும் ஒன்றா?

ஒத்திகையாம் ஒத்திகை, ஒற்றை நபரின் வருகைக்கு இத்தனை அலப்பறையா?

ஆம், தேவைதான். நம் பிரதமர்[தனி நபரல்ல] கடவுளால் அனுப்பப்பட்டவர்! ‘தர்மச் சக்கரவர்த்தி’ என்னும் அதி உன்னதப் பட்டம் பெற்றவர்!!

புதன், 16 ஜூலை, 2025

அழியப்போவது இஸ்லாமியரா, ஒட்டுமொத்த மனித இனமா?!

//ஈராக், துருக்கி, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட முஸ்லிம் அறிஞர்கள் மற்றும் அறிவுஜீவிகள் கொண்ட கூட்டணி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் & இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை. "கடவுளுக்கு எதிராகப் போர் தொடுக்கும் எதிரிகள்"{“கடவுளை ஏம்ப்பா இழுத்துட்டுவந்து களத்தில்[போர்க்களம்] நிறுத்துறீங்க?”> நாம்} என்று முத்திரை குத்திக் கண்டித்தது. 

ஈரானிய மதகுரு ஒருவரால் டிரம்பிற்கு எதிராக ஓர் உயர்மட்டப் படுகொலை அழைப்பு[மதகுருவைக் கொல்லப்போவதாக நெதன்யாகு சொன்னதும் கவனத்தில் கொள்ளத்தக்கது] விடுக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, இரு தலைவர்களும் ஊழலுக்கும், இரத்தக்களரிக்கும் காரணமாக இருந்ததாகவும், மற்றும் இஸ்லாமிய நிலங்களை ஆக்கிரமித்ததாகவும் குற்றம் சாட்டுகிறது[செய்தி]// 

இதன் உள்நோக்கம் என்ன?

டிரம்புக்கும் நெதன்யாகுக்கும் எதிரான படுகொலை அழைப்பை நியாயப்படுத்துவதுதான்.

மூடி மறைக்காமல் சொன்னால் ‘டிரம்ப்’ஐயும் நெதன்யாகுவையும் படுகொலை செய்வதற்கான மறு அழைப்பு இது எனலாம்.

படுகொலை சாத்தியமா?

சாத்தியப்படுத்துவதற்கு உலகில் உள்ள அத்தனை இஸ்லாமிய நாடுகளும் ஒருங்கிணைதல் வேண்டும்.

இணைந்தால், இஸ்லாம் ஆதிக்கம் இல்லாத பிற நாடுகளும்[ஒரு கட்டத்தில்> வேறு வழியில்லாமல்] ஓரணியில் திரளுதல் நேரலாம்.

இவை நிகழ்ந்து இஸ்லாம் நாடுகளுக்கும், பிற நாடுகளுக்கும் போர்[உலகப் போர்] மூண்டால், அழியப்போவது இஸ்லாமியர் மட்டுமா, ஒட்டுமொத்த மனித இனமுமா?

நாளும் மத வெறியும் ஆதிக்க வெறியும் அதிகரித்துவரும்[சகிக்க இயலவில்லை> மதங்கள் அழிந்து மனிதாபிமானம் மட்டுமே உலகை ஆள மத வெறியர்கள் அனுமதிக்கமாட்டார்கள்] நிலையில் ஒட்டுமொத்த உலகமும் சாம்பல் மேடாகி, பேய்களும் பிசாசுகளும் ஆவிகளும் அங்கே கூத்தாடிக் கொட்டமடிக்கும் அலங்கோலம்/அவலம் உருவாக வேண்டும் என்பது நம் விருப்பம்.

எல்லாம் வல்ல கருணைக் கடவுளின் விருப்பமும் இதுவாகத்தான் இருக்கக்கூடும்!

                                             *   *   *   *   *

***Global Islam Against Trump, Netanyahu? Huge Declaration After Khamenei Aide's Call: 'Enemies Of God'

New Delhi, July 10 -- A coalition of over 100 Muslim scholars and intellectuals from countries including Iraq, Turkey, and Russia condemned U.S. President Donald Trump and Israeli Prime Minister Benjamin Netanyahu, labeling them "enemies waging war against God." The statement, released days after a high-profile assassination call against Trump by an Iranian cleric, accuses the two leaders of spreading corruption, bloodshed, and occupation of Islamic lands, particularly referencing the war in Iran and the plight of Palestinians> ஜூலை 10, 2025

செவ்வாய், 15 ஜூலை, 2025

ஓடிமுடித்ததும் பரிசு உண்டு! ஒருங்கிணைந்து ஓடலாம் வாரீர்!!

சில நிமிடங்களில் முடியும் பந்தயம் அல்ல இது; மணிக்கணக்கில் ஓடும் மாரத்தானும் அல்ல.

தொடங்குவது தெரியும்; எப்போது முடியும் என்று ஓடுகிற எவருக்கும் தெரியாது.

ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க அவர் அவதாரமாயினும் மகானாயினும் வேறு யாராயினும் அனுமதி இல்லை.

ஓடிக்கொண்டே வேடிக்கை பார்க்கலாம்; வேடிக்கை பார்த்துக்கொண்டே ஓடலாம்.

ஓடிமுடித்த ஒவ்வொருவருக்கும் பரிசு உண்டு.

பரிசின் பெயர்.....

‘மரணம்’!

‘காலதேவன்’[யமன்] மேற்பார்வையில் காலங்காலமாய் நடைபெறும் போட்டி இது.

நடத்துபவர்.....

நம் கருணை வடிவான கடவுள்!

திங்கள், 14 ஜூலை, 2025

ஆணுக்கு நிகர் பெண்! அப்புறம் எதற்கு அவளுக்கு மட்டும் ஒப்பனை? மிகை அலங்காரம்?!

ண்கள் ஆதிக்கம் செலுத்தும் அத்தனைத் துறைகளிலும்[ராணுவம், வானூர்தி, வானியல் ஆய்வு, அறிவியல் ஆராய்ச்சி முதலியன] இன்று தங்களின் பங்களிப்பைச் செலுத்துகிறார்கள் பெண்கள்.

ஆண்களுக்கு நிகரான மன வலிமையைப் பெண்களும் பெற்றிருக்கிறார்கள் என்று சொல்லலாம்.

ஆனாலும், ஒப்பனை செய்துகொள்வதில் மட்டும் ஆண்களுக்கு இணையான மனப் பக்குவத்தை அவர்கள் பெற்றிடவில்லை.

மிகப் பெரும்பாலான ஆண்களுக்கு, மதிக்கத்தக்க வகையில் அல்லது ஆடம்பரமாக ஆடை உடுத்துதல், கடிகாரம் கட்டுதல்[கைப்பேசிப் பயன்பாடு அதிகரித்ததில் பலர் கைகளில் கடிகாரம் இடம்பெறுவதில்லை] ஆகியவை தவிர வேறு வகையில் தங்களை அவர்கள் அலங்கரித்துக்கொள்வதில்லை[இன்றைய இளைஞர்களில் கணிசமானவர்கள் தலைமுடி அலங்காரத்தில் கவனம் செலுத்துகிறார்கள்].

ஆனால், பெண்களைப் பொருத்துவரை[நடுத்தர வயதைக் கடக்கும்வரை> பெரும்பாலோர்] ஒப்பனை செய்துகொள்வதைத் தவிர்ப்பதே இல்லை.

காது, கழுத்து, மூக்கு, கை ஆகியவற்றில் நகைகள், கண் மை, நெற்றிப் பொட்டு,  முகப் பூச்சு, கிரீம்கள், உதட்டுச் சாயம்[இளசுகளில் கணிசமானவர்கள்],  ஹேர் ஸ்பிரே, ஜெல், நகப் பாலீஸ், விதம் விதமான ஆடைகள் முதலியன குறிப்பிடத்தக்க ஒப்பனைக்கான சாதனங்கள்.

வீடுகளில் தங்களாகவே அபிரித[விபரீத?] ஒப்பனைகள் செய்வதோடு, அழகு நிலைங்களுக்குச் செல்கிறார்கள். நேரத்தை வீணாக்குவது மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கில் ரூபாய் செலவழித்துச் செய்துகொள்ளும் அலங்காரங்கள் யாரைத் திருப்திப்படுத்த என்பது புரியவில்லை.

மணப்பெண் என்றால் வானுலகிலிருந்து வந்த தேவதையோ என்று பிரமிக்க வைக்கிறார்கள் அழகு நிலையத்தார். குளித்து முடித்து ஒப்பனை இல்லாமல் தலைவிரி கோலமாய்க் காட்சிதரும் பெண்டாட்டியைப் பார்த்து மிரண்டுபோய், விவாகரத்துக் கோரும் கணவன்மார்கள் உண்டு என்பதை ஏனோ நம் பெண்கள் மறந்துபோகிறார்கள்[ஹி... ஹி... ஹி!!!].

அவ்வப்போது நடைபெறும் அழகிப் போட்டிகளால், நடத்துகிறவர்களும், ‘அழகி’ என்று கிரீடம் சூட்டப்படுபவளும் பணம் பண்ணுவதைத் தவிர, வேறு நன்மை ஏதுமில்லை. 

அழகிகளோடு தங்களை ஒப்பிட்டு அரைப் பைத்தியங்களாக அலைகிறார்கள் நம் பெண்கள் என்பதே இதன் பின்விளைவு.

காதணிகளோ, கழுத்து நகைகளோ, மூக்குத்தியோ, கை நிறைய வளையல்களோ இல்லாத பெண்களெல்லாம் பெண்கள் அல்லவா? 

பென்ணின் மதிப்பை மேம்படுத்துவது அவளின் நல்ல குணங்களும், நடத்தையும், உலக அறிவும், சிந்திக்கும் திறனும்தானே தவிர செய்துகொண்டிருக்கும் ஒப்பனையோ அலங்காரங்களோ அல்ல; அல்லவே அல்ல.

அதனால்தான் சொல்கிறோம்.

ஆண்களைப் போலவே, மிகை ஒப்பனையோ அசத்தல் அலங்காரமோ இல்லாமல் இயல்பாக இருத்தலே நல்லது என்று. இதனால், பெண்கள் மீதான வன்முறைக் குற்றங்கள் மட்டுமல்ல, கயவர்களால் கடத்தப்படுதலும் குறையும்[ஆறேழு வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கு மட்டும் ஒப்பனை செய்து அழகுபடுத்தி ரசித்து மகிழலாம்].

தீர்க்கப்படாத நம் நீண்ட காலச் சந்தேகம்.....

காலங்காலமாக, பெண்ணென்றாலே வெகுவாக அலங்கரித்துக்கொள்வதைப் பழக்கப்படுத்தி வழக்கப்படுத்தியவர்கள் யார்? யாரெல்லாம்?

அவர்கள் ஆண்களோ பெண்களோ இரு சாராருமோ எவராயினும் அவர்கள் நம் கண்டனத்திற்கு உரியவர்கள்.

ஞாயிறு, 13 ஜூலை, 2025

அழுக்கு நீர் புனித நீர் ஆகுமா? தேவை ஆய்வகப் பரிசோதனை!

டகங்களில் ‘கும்பாபிஷேகம்’ பற்றிய செய்தி இடம்பெறாத நாளே இல்லை எனலாம்.

எங்கெங்கு காணினும் கும்பாபிஷேகம்[குடமுழுக்கு> சமஸ்கிருதச் சொல்லைத் தமிழாக்குவதால் இந்த மூடப்பழக்கம் பயனுள்ள நல்ல பழக்கம் ஆகிவிடாது].

பக்தி வெள்ளம் இந்தப் புண்ணியப் பூமியில் பெருக்கெடுத்து ஓடுகிறது. பாவிகளின் எண்ணிக்கை மட்டும் குறையவே இல்லை; அதிகரிக்கிறது.

வேத மந்திரங்கள் ஓதினாலும் தேவாரத் திருவாசகப் பாடல்கள் பாடினாலும், கும்பாபிஷேகிகள் ஆறுகளிலிருந்து குடங்குடமாய் மொண்டு கொண்டுவருகிற அழுக்கு நீர் புனித நீராகிவிடாது.

ஒரு சிறிய சோதனை மூலம் இதை நிரூபிக்கலாம்.

சேகரித்ததில்,  ஒரு குடத்து நீரை இருப்பில் வைத்து, இன்னொரு குடத்து நீரைச் சமஸ்கிருதத்திலோ தமிழிலோ மந்திரங்கள் சொல்லி அபிஷேகம் செய்து, கலசங்களில் அல்லது சிலைகளின் மீது வழிகிற நீரை ஒரு பாத்திரத்தில் சேமிக்க வேண்டும்.

அபிஷேகம் செய்யப்பட்ட நீரையும், செய்யாமல் இருப்பில் வைத்திருந்த நீரையும் ஆய்வகத்தில் பரிசோதித்தால் இரண்டுக்கும் இடையே வேறுபாடு தென்படுமா?

சிலைகளிலும் கலசங்களிலும் படிந்திருக்கும் அழுக்கும், பூக்களின் மணமும் கலந்திருக்குமே தவிர, குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் வேறுபாட்டைக் காண இயலாது.

உண்மை இதுவாக இருக்க, இல்லாத புனிதத்தை இருப்பதாகச் சொல்வதும், இது நம்பிக்கையின்பாற்பட்டது என்று சப்பைக்கட்டுக் கட்டுவதும் அயோக்கியத்தனம் அல்லவா?

சனி, 12 ஜூலை, 2025

வடக்கன்களின் ‘நம்பர் 1’ அடிமைக்கான போட்டியில் வாகை சூடிய எல். முருகன்!!!

கோடி கோடி கோடிகளுக்கு அதிபதிகளாகவும், மிகு அதிகாரம் படைத்தவர்களாகவும் விளங்கும் வடக்கன்களுக்கான தமிழ்நாட்டு அடிமைகளில்,  முதலிடம் பெறுபவர் யார் என்பதில் நீண்ட காலமாக அதிமுக[எடப்பாடி தலைமை], பாஜக[நயினார் நாகேந்திரன் தலைமை> ஆட்டுக்காரன் ஓர் அடிமட்டத் தொண்டன் மட்டுமே] ஆகிய கட்சியினரிடையே மிக மிக மிகக் கடுமையான போட்டி நிலவியமை யாவரும் அறிந்ததே.அந்தப் போட்டி முடிவடைந்த நிலையில், நடுவணமைச்சர் எல்.முருகன் முதலிடம் பெற்று, ‘நம்பர் 1 ஆயுட்கால அடிமை’ விருதை வென்றார் என்பது அறியத்தக்கது. போட்டியில், அவர் வெளியிட்டதொரு அறிக்கையே அவர் அந்த விருதைப் பெற்றிடக் காரணமாக அமைந்தது.

அறிக்கை.....

“அமித்ஷா சொல்வதே எங்களுக்கு[பாஜக அடிமைகள்] வேத வாக்கு”[https://www.instagram.com/p/DL_9JAzSn_P/ ]என்பதாகும்.

இவரைவிடவும் வேறு எந்தவொரு அடிமையும் இந்த அளவுக்கு வடபுலத்துச் சங்கித் தலைவனைத் துதி பாடியது இல்லை..... இல்லை..... இல்லை!

பொதுமக்களாம் பொதுமக்கள், புத்தி கெட்ட மக்குகள்!!!

‘பொதுமக்கள்’ என்றாலே அத்தனைப்பேரும் உத்தமர்கள் என்னும் தவறானதொரு நம்பிக்கையை உருவாக்கி வைத்திருப்பவர்களே இந்தப் பொதுமக்கள்தான்.

தத்தம் வீட்டுக் கழிவுகளைச் சேகரித்து வைத்து, நகராட்சிக்காரன்[மாநகராட்சி&ஊராட்சி] அனுப்பும் குப்பை வண்டியில் சேர்க்காமல், பக்கத்து அல்லது எதிர்வீட்டுக்காரன் வாசலில் வீசுபவர்கள் இந்தப் பொதுமக்கள்தான்[வாய்த்தகராறு, மோதல், அடிதடியெல்லாம் நிகழ்ந்து காவல்துறையிடம் புகார் அளிப்பது என்று நீளும்]. 

பொதுப் பாதையைச் சீர் செய்வது, ஊர்ப் பொதுவிலுள்ள சிறு சிறு நீர்த்தேக்கங்களில் தூர் வாருவது, மழை நீர் தேங்காமல் தெருக்களைச் சமப்படுத்துவது போன்ற பொதுப்பணிகளை ஒருங்கிணைந்து செய்து முடிக்காமல் கூட்டம் சேர்த்து, அரசைக் கண்டித்துப் போக்குவரத்து மிகுந்த சாலைகளில் மறியல் செய்பவர்கள்தான் இந்த மாண்புமிகு பொதுமக்கள்.

தொலைபேசியில் தொடர்பு கொள்ளல், மாதம் ஒரு முறையேனும் ஒன்றுகூடி[அந்தந்தப் பகுதி மக்கள்]க் கலந்தாலோசித்தல் போன்ற முறையான நடவடிக்கைகள் மூலம், வீடு புகுந்து திருடுதல், சிறுவர் சிறுமிகளைக் கடத்துதல் போன்ற குற்றங்கள் நிகழாமல் தடுக்கலாம். மாறாக, அரசின் மீது குற்றம் சுமத்துவதையே வழக்கமாக்கியுள்ளவர்கள் மதிப்பிற்குரிய பொதுமக்கள். 

“நமக்கேன் வம்பு?” என்று ஒதுங்கியிராமல், சிறு சிறு குற்றங்கள் செய்வோரைக் கண்டித்துத் திருத்தாததால்தான் ரவுடிகள், விபச்சாரத் தரகர்கள், கடத்தல்காரர்கள், கொள்ளைக்காரர்கள் என்று பெரும் பெரும் குற்றங்களைச் செய்பவர்கள் உருவாகிறார்கள். பொதுமக்களின் அலட்சியப் போக்கே இதற்கான முக்கியக் காரணமாக உள்ளது.

உரிய தகுதியை வளர்த்துக்கொண்டு தமக்கான வாய்ப்பு வரும்வரை காத்திருக்காமல், ஊழல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பவர்கள் சனநாயகத்தின் முதுகெலும்பான பொதுமக்கள்தான்.

தேர்தல்களில், அற்பத் தொகையான ஐநூறுக்கும் ஆயிரத்திற்கும் வாக்குகளை விற்று, அயோக்கியர்கள் ஆட்சிபீடம் ஏற வழிவகுப்பவர்களும் பொதுமக்களே.

கோயில் வாசல்களில் வரிசைகட்டி அமர்ந்து கையேந்தும் பிச்சைக்கார்களுக்கு ரூபாய் ஐந்தோ பத்தோ போட மனமில்லாமல், கோரிக்கை நிறைவேறக் கோயில் உண்டியலிலும் அர்ச்சகனின் தட்டிலும் காணிக்கை செலுத்தும் கபோதிகள் இந்தப் பொதுமக்கள்[இன்னும் இவர்கள் செய்யும் அழும்புகள் ஏராளம்].

பொதுமக்களாம் பொதுமக்கள். சமூக ஒழுங்கைச் சீர்குலைக்கும் பொல்லாத பொதுமக்கள்!

வெள்ளி, 11 ஜூலை, 2025

‘பிரதமர் நிவாரண நிதி’ மோடியின் அப்பன் வீட்டுச் சொத்தா?!

குஜராத் & பாஜக ஆளும் மாநிலங்களில் ஏற்படும் விபத்துகளுக்கும் இறப்புகளுக்கும் மோடி பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக இழப்பீடுகள்[லட்சக்கணக்கில்] அறிவிக்கிறார், பாஜக ஆளும் மாநிலங்களில் சமீபத்தில் நடந்த ரயில் விபத்து உட்பட. 

தமிழ்நாட்டில் இடம்பெற்ற விபத்துகளால் ஏற்பட்ட இறப்புகள்[கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது சிதம்பரம் நோக்கிச் சென்ற ரயில் மோதிய விபத்து உட்பட]  பல. ஆனால், பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து இழப்பீடுகள் வழங்கப்படுவதில்லையே, ஏன்?

பிரதமர் நிவாரண நிதி என்பது பிரதமரின் பரம்பரைச் சொத்தா? 

இந்த பாகுபாட்டிற்கு எதிராக வழக்குத் தொடர வேண்டும். நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கைத் தானாக முன்வந்து எடுக்க வேண்டும். விசாரிப்பாரா?
[@SoundarrajSudalaimani-o4f
9 மணிநேரம் முன்பு
Any accident deaths at Gujarat and BJP ruling states Modi is announcing 2 lakhs compensation from PM’s relief fund. Whareas any accident deaths at non BJP ruling states including thevrecently railway crossing deaths at Tamil Nadu but no compensation from PM’s relief fund. Is PM relief fund PM’s father’s property? Someone should file a case against this discrimination .Justce Anand Venkatesh should take this case as suo motu].


அவர்கள் பொங்கி எழுகிறார்கள்! நாம்?!

வியாழன், 10 ஜூலை, 2025

இவர்கள் பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல, பகுத்தறிவைச் சிதைக்கும் மாபாதகர்கள்!!!

மிழில் வெளியாகும் பத்திரிகைகளில்[நாளிதழ்கள்] தினத்தந்தி, தினமணி, தினகரன், இந்து தமிழ் திசை, தினமலர், காலைக்கதிர் ஆகியன முன்னணிச் செய்தி ஊடகங்கள் ஆகும்.

செய்திகளை வெளியிடுவதால் இவை செய்திப் பத்திரிகைகள்.

இவை செய்திகளை வெளியிடுவதோடு விற்பனையை அதிகரிப்பதற்காக, கல்வி, அறிவியல், மருத்துவம் ஆகியவற்றுடன் மகளிர்&சிறுவர் தொடர்பான  கட்டுரைகளையும் ‘இணைப்பு’ இதழ்கள் மூலம் வெளியிடுகின்றன.

பாராட்டுக்குரிய செயல்தான் இது.

ஆயினும், சிந்திக்கும் திறனைச் சிதைக்கும் ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றிற்கும்கூட இணைப்புகள் வெளியிடுவதுதான் நம்மை கடும் வருத்தத்திற்கு உள்ளாக்குகிறது; கண்டிக்கவும் தூண்டுகிறது.

பழையப் புராணக் குப்பைகளைக் கிளறி, நம்பவே இயலாத கதைகளையெல்லாம்[ஆபாசக் கதைகள் உட்பட] இணைப்புகளில் வெளியிடுகிறார்கள்.

இவை குறித்து நிறையவே எழுதலாம். உதாரணத்திற்கு ‘இந்து தமிழ் திசை’யின் ‘ஆனந்த ஜோதி’ இணைப்பில்[10.07.2025] வெளியானதொரு கட்டுரையின் நகல் பதிவு:

கற்பனைக் கதைகளைப் பகிர்வதில் வரன்முறை ஏதும் இல்லையா?

யானை, குதிரை, பசு, எருது, பன்றி, குரங்கு, பாம்பு, நண்டு, வண்டு, எறும்பு, முயல், தவளை என்று இவையெல்லாம் ஈசனைப் பூஜித்துப் பேறு பெற்றன என்று பகுத்தறிவுக்குப் புறம்பான புராணக் கதைகளை மக்களிடையே பரப்புகிறார்களே, இவர்களுக்கு மனசாட்சியே இல்லையா?

பேய், பிசாசு, ஆவி, பூதம் எல்லாமும்கூட வழிபாட்டின் மூலம் வீடு பேறு பெற்றதாகவும் கதைகள் வெளியிடுவார்களோ?

இவர்கள் பத்திரிகையாளர்கள் என்பதோடு, பகுத்தறிவைச் சிதைக்கும் மாபாதகர்களும் ஆவார்கள்!

மோடிக்கு விருதுகள்... ‘விருது சூழ் வித்தகன்’! ‘சுற்றுலா நாயகன்’!!

பிற நாட்டவர்கள் போட்டி போட்டுக்கொண்டு நம் பிரதமர் மோடிக்கு விருதுகள்[பெற்றுள்ள விருதுகள் 27] வழங்கி அவரைப் பெருமைப்படுத்துகிறார்கள்; பெருமிதம் கொள்கிறார்கள்.

நம் நாட்டில் ஒரு விருது மட்டுமே{‘தர்மச் சக்ரவர்த்தி’[?!] வழங்கப்பட்டுள்ளது> https://www.dinamalar.com/news/india-tamil-news/prime-minister-modi-honored-with-the-title-of-dharma-chakravarthy/3967761< இது போதாது. ஒரு நூறு விருதுகளேனும் வழங்குதல் அவசியம்}.

இப்போதைக்கு, அனைத்திந்தியர்களிடமும் கீழ்க்காணும் விருதுகளை[ஒன்றுக்கு இரண்டாக] அவருக்கு வழங்குமாறு பரிந்துரைக்கிறோம்.

விருதுகள்:

1.‘விருது சூழ் வித்தகன்’

2.‘சுற்றுலா நாயகன்’

நம்மவர் இப்போது நமிபியாவில் இருக்கிறார்.

[குஜராத்தில் பிரமாண்டமான பாலம் ஒன்று உடைந்து விழுந்து உயிர்ச் சேதங்களும் நிகழ்ந்துள்ள நிலையில் மோடி நாடு திரும்பியிருக்க வேண்டாமா என்று எவரும் கேள்வி எழுப்புதல் வேண்டாம். பயணத்தைப் பாதியில் முடிப்பது அந்த நாட்டவரை[நமிபியா] அவமானப்படுத்துவதாக அமையும். இடிந்தது ஒரு பாலம்தான். இது போல ஓராயிரம் பாலங்களை நம்மால் கட்ட முடியும்].

அவர் நாடு திரும்பும் நாளைப் பாதுகாப்புத் துறை மூலம் அறிந்து, ஒரு வாரம் போல் விருது வழங்கும் விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடலாம்[இதற்காகவேனும் இந்தியாவில் அவர் ஒரு வாரம்  தங்கியிருப்பார் என்று நம்பலாம்].

வாழ்க சுற்றுலா நாயகன்! வெல்க விருது சூழ் வித்தகன்!!

புதன், 9 ஜூலை, 2025

இன்பம் பயக்கும் இயக்குநீர்[கள்] சுரக்க... குதிக்கலாம்! கூத்தாடலாம்!! கட்டியணைக்கலாம்!!!

யக்குநீர்கள்[ஹார்மோன்கள்] நாளமில்லாச் ‘சுரப்பி’களால் உற்பத்தி செய்யப்படுகின்றன. 

இவை உடலின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தவும், சீராக வைத்திருக்கவும் உதவுகின்றன. 

இவை பல வகையின. இவற்றால் நாம் மிகப் பல நன்மைகளைப் பெறுகிறோம் என்கிறார்கள் மருத்துவ அறிவியலாளர்கள்.

இவற்றில் சிலவற்றை அறிந்திடக் கீழ்க்காணும் நகல் பதிவை வாசியுங்கள்.

செவ்வாய், 8 ஜூலை, 2025

இடம் மாறும் தற்கொலைகள்!!!

ண்களைவிடவும், பெற்றோர் மீதான பாசம் பெண்களுக்கு அதிகம்[முதுமைப் பருவத்தில் மகன்களால் புறக்கணிக்கப்படும் நிலையில் பெற்றோர்களில் பலரும் மகள்களால் ஆதரிக்கப்படுவது கருத்தில் கொள்ளத்தக்கது]. 

பெண்களுக்கு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் மன வலிமையும் மிகுதி.  

ஆனால் இன்றோ.....

பள்ளிப் படிப்பு முடிந்து மேற்படிப்பிற்காக வெளியூர்க் கல்வி நிலைய விடுதிகளில் தங்குவதும், வேலை கிடைத்து வெளியூர்களிலேயே பணியாற்றுவதும் ஆன சூழலில், பெற்றோரின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு முழுச் சுதந்திரத்துடன் செயல்படும் நிலை உருவாகிறது.

இந்நிலையில்தான், விரும்பத்தகாத நடவடிக்கைகளில் ஈடுபடும் பெண்களுடன் பழகுதல்[நிறுவனங்களிலும் தங்கும் விடுதிகளிலும்], மனக் கட்டுப்பாட்டைச் சிதைக்கும் இணையவழிப் பதிவுகளை வாசித்தல், கெட்டக் கனவுகளில் மிதக்கத் தூண்டும் காணொலிகளுக்கு அடிமையாதல் போன்றவற்றால் எளிதில் உணர்ச்சிவசப்படாத மன வலிமையைக் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கிறார்கள்[விதிவிலக்கானவர்களும் உள்ளனர்] பெண்கள்.

காதல் என்னும் பெயரில் காம[ம்] வசப்படுதல், அதைத் தூண்டும் கலையறிந்த இளைஞர்களால் காதலிக்கப்படுதல், காதலித்தல் எல்லாம் நிகழ்கின்றன.

புனிதம் ஆக்கப்பட்டுவிட்ட இந்தப் பொல்லாத காதல் பெற்றோரின் கட்டுப்பாட்டை மீறத் தூண்டுகிறது.

காதலனையே மணந்து வாழும் ஆசையை வெறியாக மாற்றுகிறது.

அந்தக் காதல் வெறிதான் முன்பெல்லாம் இம்மாதிரிப் பெண்களை[பெற்றோர் சம்மதிக்காதபோது]த் தற்கொலை புரியத் தூண்டியது; இப்போதெல்லாம் பெற்றோரை எதிர்த்துப் போராடச் செய்கிறது.

இதைத் தாங்கிக்கொள்ளும் மன வலிமை இல்லாத பெற்றோர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

உலகம் பொல்லாதது என்பார்கள். பொல்லாங்கு புரியத் தூண்டும் கெட்ட உணர்வுகளில் முதலிடம் பிடிப்பது காதல்[காமம்] எனலாம்!

                                    *   *   *   *   *

***இந்தப் பதிவிற்கும் கீழ்க்காணும் நகல் படங்களுடன் தொடர்புடைய அண்மை நிகழ்வுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.

***இதனுடன் தொடர்பில்லாத வாசிக்கத்தக்க ஒரு பதிவு:

https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-gang-raped-after-fighting-with-husband-at-railway-station-1167272