எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

புதன், 31 டிசம்பர், 2025

சிவபெருமானை வம்புக்கு இழுக்கும் சங்கி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான்!!!

மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்தார். அப்போது அவருக்குக் கோயில் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர்.....

//இந்துக்கள் புனிதமாகக் கருதக்கூடிய திருப்பரங்குன்றம் மலை மீது விளக்கு ஏற்றுவதைத் தடுக்கக்கூடியவர்கள் முட்டாள்கள். சிவபெருமான் அவர்களுக்குப் பாடம் புகட்டுவார்] என்று தெரிவித்துள்ளார்]//*

ஓ..... தர்மேந்திரப் பிரதான் என்னும் தர்மவானே,

இந்நாள்வரை சிவபெருமான்[+அல்லாவோ கர்த்தரோ பிற கடவுள்களோ] என்றொரு கடவுள் இருப்பதை அறிவியல்பூர்வமாகக் கண்டறிந்து சொன்னவர் எவருமில்லை.

சிவபெருமானோ, அவருக்கும் மேலான கீழான கடவுளர்களோ இருந்தாலும், துன்புறுத்தும் கொடூரங்களுக்கும் கொலைபாதகங்களுக்கும் உள்ளாகும் உயிரினங்களின்[மனிதர்கள் உட்பட] வாழ்க்கையில் அவரோ அவர்களோ தலையிடுவதாக அறியப்படவில்லை.

கடவுள் அல்லது கடவுள்களின் பெயரைச் சொல்லிக்கொண்டு, மனிதர்களைச் சிந்திக்கவிடாமல் தடுத்து, மதங்களின் பெயரால் அவர்களிடையே கலவரங்களை உண்டுபண்ணும் கயமைத்தனங்களில் ஈடுபடுபவர்கள் உங்களின் சங்கிக் கூட்டத்தார்தான்.

நீங்கள் போற்றும் சிவபெருமான் என்றொரு கடவுள் இருந்தால், அவர் முதலில் உங்களுக்குத்தான் பாடம் புகட்டுவார்.

இனியேனும் எதார்த்தமாகவும் அறிவுப்பூர்வமாகவும் பேசக் கற்றுக்கொள்ளுங்கள் பிரதானே!

* * * * *

*https://news7tamil.live/no-one-can-stop-the-lighting-of-lamps-on-the-thiruparankundram-hill-says-dharmendra-pradhan-in-an-interview.html?utm_source=newsshowcase&utm_medium=gnews&utm_campaign=CDAqEAgAKgcICjCwq6ALML21uAMwntLuBA&utm_content=rundown


“தமிழ் மீது உலகமே அன்பு செலுத்துகிறது”... மோடியின் வஞ்சகப் புகழ்ச்சி!!!

தமிழ் மொழி மீது உலகம் முழுவதும் உள்ளவர்கள் அன்பு செலுத்துகிறார்கள் என்று ‘புகழ் மாரி’ பொழிவது இந்தப் பொய்மை விளம்பி[மோடி]க்கு வழக்கமாகிப்போனது.

உலகம் விரும்பும் தமிழை இவர் மட்டும் விரும்பவில்லை என்னும் உண்மை கீழ்க்காணும் ஐ.நா.வின் அறிக்கை[புத்தாண்டு வாழ்த்து> நகல் பதிவு] அம்பலப்படுத்தியிருக்கிறது.

இந்தப் போலித் தமிழ்ப் பற்றாளன் விரும்பியிருந்தால்.....

இந்திய மொழியான இந்தியுடன், ஐ.நா.மன்றம் தமிழிலும் வாழ்த்துத் தெரிவித்திருக்கும்[இந்தியாவில் வழக்கில் உள்ள மொழிகளில் தமிழும் ஒன்று என்பதை இந்த மோசடியாளனின் அரசு ஐ.நா.சபைக்குத் தெரியப்படுத்தவே இல்லை].

வாயளவில் தமிழைப் புகழ்ந்து புகழ்ந்து பேசி, வரும் தேர்தலில் தமிழர்களின் வாக்குகளை அள்ளி, அவர்களை அடிமைகளாக்கத் திட்டமிடும் ஓர் இந்திய அரசியல்வாதி இந்த நாட்டில் பிறந்ததில்லை.

இமாலயப் பொய்யன்!

செவ்வாய், 30 டிசம்பர், 2025

‘சொர்க்க வாசல்’ தரிசனம்... சொர்க்கலோகத்தில் இடம் பிடித்த ‘பசி’பரமசிவம்!!!

 

//மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறியிருக்கிறார். அந்த அளவுக்குப் புனிதத்தன்மை வாய்ந்த மாதம் இந்த மார்கழி மாதம். மார்கழி மாதம் வளர்பிறை நாளில் வரும் ஏகாதசியை நாம் வைகுண்ட ஏகாதசியாகக் கொண்டாடுகிறோம்.

மகா விஷ்ணுவை வேண்டி வழிபடும் விரதங்களில் முதன்மையானதாக இருப்பது 'ஏகாதசி விரதம்'. இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பது அஸ்வமேத யாகம் செய்த பலனைக் கொடுக்கும் என்கின்றன புராணங்கள். இப்போது, அல்லது எப்போது இறந்தாலும் நாம் சொர்க்கத்திற்குச் செல்வோம் என்பது 100% உறுதி என்றார்கள் நம் முன்னோர்கள்//*


இரண்டு நாட்கள் முன்பு என் மனைவி, “நீங்கள் நாத்திகவாதி என்பதால், இறந்த பிறகு நரகத்திற்குத்தான் போவீர்கள். நான் என் ஆயுள் முடிந்து சொர்க்கம் சேர்வது[சொர்க்கவாசல் தரிசனம் செய்திருப்பதால்] உறுதி. அங்கே நீங்கள் இல்லாமல் நான் தனித்திருப்பது சிரமமானது என்பதால், நாளைய வைகுண்ட ஏகாதசி நாளில் பெருமாள் கோயிலுக்குப் போய், சொர்க்கவாசல் தரிசனம் செய்துவிடுங்கள்" என்று கண்டிப்பாகக் கூறியதால்.....


நள்ளிரவிலேயே உறக்கம் கலைந்து, அப்போதே பெருமாள் கோயிலுக்குப் போனேன்.


கிலோமீட்டர் கணக்கில் காத்திருந்த பக்தக்கோடிகளில் ஒருவனாக நின்று, கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கோயிலை அடைந்து, சொர்க்கவாசலில் எழுந்தருளிய பெருமாளின் திருவடிகளை[வைகுண்ட வாசனின் ஒரிஜினல் பாதக் கமலங்கள்] கண் குளிரவும் மேனி சிலிர்க்கவும் பார்த்துப் பார்த்தும் பரவசப்பட்டேன்.


வீடு திரும்பியபோது, ஆரத்தி எடுத்து வரவேற்ற இல்லக்கிழத்தி, “உங்களுக்குச் சொர்க்கத்தில் ஓர் இடம் உறுதி செய்யப்பட்டுவிட்டது” என்றார் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிய.


“சாகும்வரை ஆண்டு தவறாமல், சொர்க்கவாசலில் பெருமாள் பாதம் தரிசிக்கணுமா? தவறினால், ஆண்டாண்டுதோறும் கோடி கோடி கோடிக் கணக்கில் சொர்க்கம் செல்வோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், எனக்கு ஒதுக்கப்பட்ட இடம் கூட்ட நெரிசலில் பறிபோகுமா?” என்றேன் நான்.


முறைத்த என் துணைவியார், “நீங்க இன்னும் திருந்தவில்லை”  என்றார் கோபம் தொனிக்கும் குரலில்!


                                             *   *   *   *   *

*https://tamil.nativeplanet.com/travel-guide/the-reason-why-we-are-celebrating-vaikunta-ekadesi-sorga-vassal-history-003745.html

திங்கள், 29 டிசம்பர், 2025

வாயால் வடை சுட்டுச் சுட்டுச் சுட்டுத் தமிழ் வளர்க்கிறாரா தந்திரசாலி மோடி?!

 

அகிலம் புகழ் மோடி அவர்களே,

“உலகிலேயே பழமையான மொழி தமிழ்” என்று இதுவரை எத்தனை முறை சொல்லியிருப்பீர்?

எத்தனை முறையாகவோ இருக்கட்டும், உம்முடைய இந்தப் போலித்தனமான புகழ் உரையால் தமிழ் பெற்ற பயன் என்ன? 

உள்மனதைத் தொட்டுச் சொல்லும், செத்த மொழி சமஸ்கிருதத்திற்கும், உமக்குப் பதவிப் பிச்சை அளிக்கும் இந்திக்கும் செலவழிக்கும் தொகையில் நூற்றில் ஒரு பங்கேனும் தமிழுக்கு ஒதுக்குகிறீரா?[இரண்டுக்கும் செலவிடும் தொகை கணக்குக் காட்டுவதைவிடவும் மிக அதிகம்].

மனசாட்சி என்று ஒன்று இருந்தால் ஒளிவுமறைவில்லாமல் சொல்லும், காசி தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சியில் சின்னஞ்சிறு குழந்தைகள் சரளமாகத் தமிழில் பாடுவதாக[நீர் பாடவைக்கிறீரோ என்னவோ]ச் சொல்கிறீர். ஒரு பத்துப் பிள்ளைகள் பாடுவதால்/பாட வைப்பதால் தமிழ் வளர்ந்துவிடுமா?

உம்முடைய இந்த நிகழ்ச்சிக்கு ‘மன்கீபாத்’ என்று நாமகரணம் சூட்டியிருக்கிறீர். மற்ற மொழிகளைவிடவும் கொஞ்சம் அதிகம் பேசப்படுகிற இந்தியில் பெயர் சூட்டுகிற நீர், பிறிதொரு மொழியில் பெயர் சூட்டியிருந்தால், உம்முடைய பேச்சு மக்களைச் சென்றடையாதா?

தேர்தல் வரும் நேரங்களில் தமிழைப் புகழ்வதாக எண்ணி எதையேனும் உளறிக்கொட்டினால் தமிழர்களின் வாக்குகளை அள்ளிவிடலாம் என்று கனவு காண்கிறீர்.

அந்தக் கனவு ஒருபோதும் நிறைவேறாது. உம்முடைய கட்சிக்கு[பாஜக]த் தமிழ் மக்கள் போடுகிற கொஞ்சம் வாக்குகளையும் உம்முடைய போலித்தனமான புகழ்ச்சி வெகுவாகக் குறைக்கும் என்பதை அறிவீராக!

ஞாயிறு, 28 டிசம்பர், 2025

‘மக்களவையில் மொழியாக்கம்[22 மொழிகள்]’... இது பிள்ளையார் சுழி மட்டுமே!

 ஒன்றிய அரசின் மேற்கண்ட இந்த நடவடிக்கை மெச்சத்தக்கது என்றாலும், வெறித்தனமான இந்தித் திணிப்பால் இந்த நாடு உடைந்து நொறுங்கிச் சிதறாமலிருக்க, இன்னும் மேம்பட்ட விரைவான நடவடிக்கைகள் தேவை.

அவற்றில் குறிப்பிடத்தக்கவை.....

அஞ்சலகம், ரயிவ்வே, நடுவணரசின் வங்கிகள், காப்பீடு போன்றவற்றில் ஆங்கிலத்தைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை ஆக்கிரமித்திருக்கிற அத்தனை இந்தி வாசகங்களும் அழிக்கப்பட்டு, அங்கெல்லாம் அந்தந்த மாநில மொழி வாசகங்கள் இடம்பெறுதல் வேண்டும்[இந்தி பேசப்படும் மாநிலங்களில் ஆங்கிலத்துடன் இந்தியும் இடம்பெறலாம்].

இது நிகழ்ந்தால்தான், இந்தியா இந்தி வெறியன்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல; வேறு வேறான பல மொழிகள் பேசுகிற மாநில மக்களுக்கும் உரிமையானது என்பது உறுதிப்படுத்தப்படும்.

இந்திய ஒன்றியம் என்பது பல்வேறு கலாச்சாரங்கள், மொழிகள் மற்றும் வட்டாரங்களின் ஒரு தனித்துவமான கலவையாகும். இவை அனைத்தும் ஒரே அரசியலமைப்புச் சட்டக் கட்டமைப்புக்குள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன[‘The Indian Union is a unique amalgamation of diverse cultures, languages, and regions, all unified under a single constitutional framework’] என்பதை  ஒட்டுமொத்த உலகமும் அறிந்துகொள்ளும்.

சனி, 27 டிசம்பர், 2025

மெகபூபா முஃப்தி வாழ்க! ஸ்டாலின் நீடூழி வாழ்க!!

மக்கள் ஜனநாயகக் கட்சியின்(பிடிபி) தலைவர் மெகபூபா முஃப்தி, வெள்ளிக்கிழமை கட்சியின் தலைமையகத்தில் காஷ்மீரி மொழியில் தனது செய்தியாளர் சந்திப்பைத் தொடங்கிய உடனேயே, ஒரு பத்திரிகையாளர் அவரை உருது மொழியில் பேசுமாறு கேட்டார்.

முன்னாள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான அவர், ஊடகங்கள் ஏன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை ஆங்கிலத்திலோ அல்லது உருதுவிலோ பேசுமாறு கேட்பதில்லை என்று கேள்வி எழுப்பி, அந்தப் பத்திரிகையாளரைக் கடுமையாகச் சாடினார்.

ஊடகக்காரனைச் சாடியது மட்டுமல்லாமல், தய்மொழிப் பற்றுக்கு முதல்வர் ஸ்டாலினை முன்னுதாரணமாக அவர் காட்டியிருப்பது தமிழர்களைப் பெருமிதப்படச் செய்திருக்கிறது.

இந்தியாவில் பாதிக்கும் மிகக் குறைவாகப் பேசப்படும் இந்தியைக் கொண்டாடும் இந்தி வெறியர்களுக்கு, மெகபூபா முஃப்தியின் செயல்பாடு புத்தி புகட்டுவதாக அமைந்துள்ளது.

இந்தி அல்லாத பிற மொழிக்காரர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதாகவும் இது அமைகிறது.

“இப்போது இது ஒன்றுதான் மிச்சம் இருக்கிறது[அத்தனை உரிமைகளையும் ‘பாஜக’ அரசு பறித்துவிட்டது என்கிறார்?], எனவே, காஷ்மீரி மொழிக்குச் சிறிது மரியாதை கொடுங்கள்” என்று ஊடகக்காரர்களிடம் கூறியதோடு,  காஷ்மீரி மொழியிலேயே தொடர்ந்து பேசினார் மெகபூபா முஃப்தி.*

                                           *   *   *   *   *

https://kashmirobserver.net/2025/12/26/mehbooba-speaks-kashmiri-cites-tamil-leaders-in-language-row/

வெள்ளி, 26 டிசம்பர், 2025

ராமாதாசா, அன்புமணியா? ‘பூவா தலையா?’ போட்டால் தெரியும்!

தந்தை ராமதாசுக்கும் மகன் அன்புமணிக்கும் இடையிலான பதவிப் பிரச்சினை, ஒரு தீர்வை எட்டுவதற்கான வாய்ப்பு இப்போதைக்கு இல்லை என்றே தோன்றுகிறது.*

பெற்றெடுத்த மகனுக்கு அன்புமணி என்று அழகான தமிழ்ப் பெயர் சூட்டி, வளர்த்து ஆளாக்கி, மருத்துவராக்கி, கட்சியில்[பாமக] உயர் பதவி கொடுத்து, டெல்லி அமைச்சராகவும் அமர்த்தி அழகு பார்த்துப் புளகாங்கிதப்பட்ட ராமதாஸ் என்னும் தமிழினப் பற்றுள்ள அப்பனுக்கு[நல்ல தலைவரும்கூட], வரலாறு கண்டிராத அளவுக்குக் குடைச்சல் கொடுத்துக்கொண்டிருக்கும் அன்புமணியைப் போன்ற ஒரு புதல்வன் இம்மண்ணில் இதுவரை தோன்றியதில்லை என்றே சொல்லலாம்[இவரைவிடவும், பெற்றவனை ஈவிரக்கமின்றிப் போட்டுத்தள்ளிவிட்டுப் பதவியைக் கைப்பற்றிய மொகலாய மன்னர்களின் சில வாரிசுகள் தேவலாம்].

அப்பனுக்கும் மகனுக்குமான போட்டி/போர், முடிவொன்றை எட்டாததால், பிற சாதிக்காரர்கள் ஒட்டுமொத்தப் பாட்டாளி மக்கள் கட்சியினரையும் பார்த்து நகைக்கிறார்கள்.

இதைத் தவிர்க்கும் வகையில், ‘சமரசத் தீர்வு' காண்பதற்கான திட்டமொன்றை இருவரிடமும் பரிந்துரைப்பது அடியேனின் விருப்பம்.

அது.....

‘பாமக’வின் உண்மை விசுவாசிகளைத் திரட்டி[அத்தனை எளிதல்ல], அவர்கள் முன்னிலையில் ‘பூவா தலையா’ போட்டுப் பார்ப்பது.

பூ விழுந்தால் பெரியவர் ராமதாஸே ‘பாமக’வின் ஆயுட்காலத் தலைவர். தலை விழுந்தால்[விழக்கூடாது என்பது அடியேனின் பிரார்த்தனை] அன்புமணி தலைவராவார்.

                                               *   *   *   *   *

*https://news7tamil.live/g-k-mani-expelled-from-pmk-anbumani-announces.html?utm_source=newsshowcase&utm_medium=gnews&utm_campaign=CDAqEAgAKgcICjCwq6ALML21uAMw-qruBA&utm_content=rundown#google_vignette

வியாழன், 25 டிசம்பர், 2025

வடக்கன்களின் கால் கழுவிப் பிழைப்பு நடத்தும் காலைக்கதிர்க் கசடன்!

 

கேள்வி கேட்டவனாகட்டும் பதில் சொன்னவனாகட்டும், தமிழர்களை இழிவுபடுத்தியும், ஆதிக்க வெறி கொண்ட வடக்கன்களின் கால் கழுவிய நீர் குடித்தும் பிழைப்பு நடத்தும் அடிமைகள் ஆவார்கள்.

ஆங்கிலமும் இந்தியும் தெரியாததால் ஸ்டாலின் தேசியத் தலைவர் ஆக இயலாது என்கிறான் கழிசடைக் காலைக்கதிர்க்காரன்[‘கேள்வி-பதில்’ பகுதி].

மறைந்த காமராசர் என்னும் தமிழ் மட்டுமே தெரிந்த பெருந்தலைவர், இந்த இந்தியாவின் பிரதமரைத் தேர்வு செய்வதில் முக்கியப் பங்கு வகித்தது இந்த அண்டிப் பிழைக்கும் அறிவீனனுக்குத் தெரியும்.

எப்போது எங்குச் சென்றாலும் மொழிபெயர்ப்பாளரை உடன் அழைத்துச் செல்லும் மோடிக்கு, அரைகுறை இந்தி மட்டுமே தெரியும் என்பதும் இந்த அரைவேக்காடனுக்குத் தெரியும்.

எந்தவொரு மொழியில் பேசினாலும், உடனுக்குடன் விரும்பும் மொழியில் ‘மொழியாக்கம்’ செய்வதற்கான கருவிகள் பயன்பாட்டில் இருப்பதும் இந்தக் குதர்க்கவாதிக்குத் தெரியும்.

தெரிந்திருந்தும், தன் சங்கி எஜமானன்களைத் திருப்திப்படுத்திட ஸ்டாலினை இழிவுபடுத்தியிருக்கிறான் இந்தக் காரியவாதி.

தமிழர்கள் விழிப்புணர்வு பெற்று, காசு கொடுத்துக் காலைக்கதிர் வாங்குவதை நிறுத்தினாலே இவன் பெட்டிப் பாம்பாய் அடங்கிவிடுவான்.

இது விசயத்தில் நம்மவர்கள் காலதாமதம் செய்தல் கூடாது என்பது நம் எச்சரிக்கை.

புதன், 24 டிசம்பர், 2025

அன்றாடங்காய்ச்சிகளின் கடவுள்!!![பதிவு பழசோ பழசு!]

“மேஸ்திரி, நாளைக்கு என் குடும்பத்தோட எங்க குல தெய்வம் கோயிலுக்குப் போறேன். வேலைக்கு வர முடியாது" என்றான் சித்தாள் பழனி.

“நாளைக்கு நிறைய ஆள் வேணும். ஞாயிற்றுக் கிழமை போப்பா” என்றார் மேஸ்திரி.

“இல்ல மேஸ்திரி. ஆறு மாசம் முந்தியே சாமியை நேர்ந்துட்டேன். அதுக்கான நேர்த்திக் கடனை உடனே நிறைவேத்தியாகணும். நாளைக்கு நல்ல நாள்.”

“அப்படியென்ன பெரிய நேர்த்திக் கடன்? உண்டியலில் கத்தை கத்தையா பணம் போடப் போறியா? இல்ல, ஆயிரம் ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுறயா?” -மேஸ்திரியின் குரலில் ஏகத்துக்குக் கிண்டல்.

“அதுக்கெல்லாம் எங்கமாதிரி அன்னாடுங்காய்ச்சிகளுக்கு ஏதுங்க வசதி?”

“அப்படீன்னா, உன் குடும்பத்தில் உள்ள அத்தனைப் பேரும் மொட்டை போடுங்களேன். இதுக்குச் செலவு கம்மிதான்”- மீண்டும் கிண்டல்.

“எங்க குல தெய்வம் சாமியும் எங்கள மாதிரியே பரம ஏழை மேஸ்திரி. வசதியுள்ள யாரும் இதைச் சீந்துறதில்ல. கோயிலுக்கு வருமானமும் இல்ல. கோயிலைச் சுத்தி எருக்கஞ் செடியும் முள்ளுச் செடியும் முளைச்சிப் புதர் மண்டிக் கிடக்குது. அதையெல்லாம் புடுங்கிப் போட்டுச் சுத்தம் பண்ணனும்” என்றான் பழனி.

                                        *   *   *   *   *

இது என் படைப்பாக, 28-05-2008 ‘குமுதம்’ வார இதழில் வெளியானது.

செவ்வாய், 23 டிசம்பர், 2025

நீதிபதிகள் நீதிதேவனால்[இருந்தால்] அனுப்பப்பட்டவர்கள் அல்ல!!!

தமிழ்நாட்டு உயர் நீதிமன்ற நீதிபதியொருவர் சட்டப் புத்தகங்களைப் படித்து, அவற்றில் இடம்பெற்றுள்ள சட்ட விதிகளைப் பின்பற்றி, வழக்குகளில் தீர்ப்பு வழங்குகிறாரோ அல்லவோ, பகவத்கீதை போன்ற புராணப் புளுகுகளை[கிருஷ்ணன் கடவுள் அவதாரமாம். பாரதப் போரில் பாண்டவர்களுக்கு உதவினாராம். அருச்சுனனுக்கு உபதேசம் பண்ணினாராம். அது கீதையாம். இவற்றிற்கெல்லாம் அறிவியல் ஆதாரம் தந்தவன் எவனும் இல்லை]ப் படித்துத் தேர்ச்சி பெற்று, அவற்றை ஆதாரமாகக்கொண்டு தீர்ப்பு வழங்கும் அதிசயம் இங்கு நிகழ்ந்திருக்கிறது. ஒரு வழக்கு குறித்த அவரின் தீர்ப்பு:*

*'பகவத்கீதையை ஒரு குறிப்பிட்ட மதத்திற்குள் அடக்கிவிட முடியாது. அது பாரத நாகரிகத்தின் ஒரு பகுதி[பாரத நகரிகம் என்று ஒன்று உள்ளதா? அதற்கான ஆதாரங்கள் உள்ளனவா?]. அது ஒரு நீதிநெறிப் புத்தகம்'[இது தீர்ப்பு].

மக்களாட்சி நடைபெறும் நாடு இது. இதை நிர்வகிப்பதற்கென்று, மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

இந்தச் சட்டங்களை ஆதாரமாகக் கொண்டுதான், தொடுக்கப்படும் வழக்குகளுக்கு நீதிபதிகள் தீர்ப்பு வழங்குதல் வேண்டும். சட்ட விதிகளைப் புறந்தள்ளி, வானளாவிய அதிகாரங்கள் தனக்கு இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு, நீதித் துறைக்குச் சம்பந்தமே இல்லாத புராணக் கதைத் தொகுப்பு நூலை மேற்கோள் காட்டித் தீர்ப்பு வழங்கியிருக்கிறார் ‘அந்த’ நீதிபதி.

‘இங்குள்ள நீதிபதிகளும் மனிதர்கள்தான்; நீதிதேவனால்[இருந்தால்] இங்கு அனுப்பப்பட்டவர்கள் அல்ல’ என்பது சம்பந்தப்பட்ட நீதிபதி[களு]க்குத் தெரியும்; மக்களுக்குத் தெரிந்திருப்பது மிக அவசியம்.

https://www.dinamalar.com/news/tamil-nadu-news/teaching-bhagavad-gita-does-not-make-a-trust-religious-not-ground-to-deny-fcra-registration-madras-high-court/4110749

சீகைக்காய்... தலைக்கு! தாடிக்கும் அதுவே!! ஹி... ஹி... ஹி!!!

ளங்கோ பக்கா ஆத்திகன். சுந்தரம் சுத்த நாத்திகன். இருப்பினும் இருவரும்  மிக நெருக்கமான நண்பர்கள்.

ஊரின்[சிறு நகரம்] வேறு வேறு பகுதிகளில் வசிப்பவர்கள் என்றாலும், விடுமுறை நாட்களில் இருவரும் சந்தித்து அளவளாவுவது வழக்கம், அந்தரங்க ரகசியங்களைப் பகிர்வது உட்பட.

அன்று ஞாயிற்றுக் கிழமை. இளங்கோவைப் பார்க்க அவனின் வீடு தேடிப் போனான் சுந்தரம். அவன் கோயிலுக்குப் போயிருப்பதாகச் சொன்னாள் அவனின் புதுப் பெண்டாட்டி.

“நான் வந்துட்டுப்போனதாச் சொல்லுங்க” என்று சொல்லி நகர்ந்தான் சுந்தரம்.

வழியில் எதிர்பாராத விதமாக இளங்கோ எதிர்ப்பட்டான்.

”நீ கோயிலுக்குப் போயிருக்கிறதா உன் பெண்டாட்டி சொன்னாள். உன் நெத்தியில் திருநீறு இல்ல. பொய் சொல்லிட்டு எங்கடா போனே?”

மெலிதான அதிர்ச்சிக்கு உள்ளான இளங்கோ, “வயாகரா வாங்கப் போனேன். இது விசயம் பெண்டாட்டிக்குத் தெரியக்கூடாது. அதனாலதான் பொய் சொன்னேன்” என்றான்.

சற்றே யோசித்த சுந்தரம், “சாமிகிட்டே வேண்டுதல் வைக்கத்தான் நீங்கெல்லாம் கோயிலுக்குப் போறீங்க. இது விசயத்தில் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கக் கருணை காட்டு பகவானேன்னு  அதுகிட்டே வேண்டுதல் வையுங்கடா. எதுக்கு வயாகரா நயாகரான்னு வீண் செலவெல்லாம்” என்று சொல்லிவிட்டு நண்பனின் முகபாவனையைக் கவனித்தான்.

கடும் வாக்குவாதத்திற்கு அவன் தயாராவதை அறிந்து, “பொழுது போகலேன்னுதான் உன்னைத் தேடி வந்தேன். அப்புறமா சந்திப்போம்” என்று நகர்ந்தான்.

கொஞ்சம் தூரம் நடந்து திரும்பிப் பார்த்தபோது, இளங்கோ இவனை முறைத்தவாறே நின்றுகொண்டிருப்பது தெரிந்தது. 

ஞாயிறு, 21 டிசம்பர், 2025

ஓ அல்லா, ஓம் முருகா, கொஞ்சம் நாள் ‘தி.கு.’ மலையிலிருந்து வெளியேறுவீர் கடவுள்களே!

//திருப்பரங்குன்றம் பிரச்சினை தொடர்பாக நீதிமன்றங்களில் விசாரணைகள் நடந்துவருகின்றன.

இந்நிலையில், மலையில் உள்ள பள்ளிவாசலில்[தர்கா] சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம் நாளை(டிச. 21) நடைபெற உள்ளது. இதையொட்டி, கடந்த காலங்களில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளைப் பின்பற்றி, இஸ்லாமியர்கள் சந்தனக்கூடு விழாவை நடத்திக் கொள்ளலாம் என்று அரசு சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று சிக்கந்தர் தர்காவுக்குச் சென்று சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றுவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்வதற்குத் தர்காவைச் சேர்ந்த நிர்வாகிகள் 4 பேர் சென்றனர். அவர்களுக்காக மலைக்குச் செல்லும் பாதையில் இருந்த இரும்புத் தடுப்புகளைப் போலீஸார் அகற்றினர்.

இதற்குப் பழனியாண்டவர் கோயில் அடிவாரத்திலுள்ள கோட்டைத்தெருவைச் சேர்ந்த திருப்பரங்குன்றம் கிராமப் பெண்கள்[ஆண்கள்?], மக்களை மலை மீது செல்ல அனுமதிக்காதபோது, தர்கா நிர்வாகிகளை மட்டும் எப்படி அனுமதிக்கலாம் என்று கேள்வி எழுப்பினர். போலீஸார் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகச் குற்றம் சாட்டினர்//[ஊடகச் செய்தி]

இதன் மூலம் தெரியவருவது என்னவென்றால், கடவுள்களின் பெயரால் நம்ம ஊர் மக்களிடையேயான மோதல் தொடர்கிறது என்பதுதான்.

நம்முடைய ஊர்கள் என்றில்லை, உலகம் முழுதும், வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கடவுள்களால் மோதல்களும் கலவரங்களும் நிகழ, கோடிக்கணக்கில் மனிதர்கள் உயிரிழந்திருக்கிறார்கள் என்பது வரலாறு.

இனியேனும் இந்த அவலங்கள் நிகழாதிருக்க, பக்திமான்கள் தத்தம் வீடுகளுக்குள்ளேயே வழிபாடு நிகழ்த்தலாமே தவிர, பொதுவிடங்களில் வழிபடக்கூடாது. உலக நாடுகள் ஒருங்கிணைந்து சிந்தித்துச் செயல்பட்டால் இது சாத்தியம் ஆகும்.

இது எப்போதேனும் சாத்தியம் ஆகுமா அல்லவா என்பது முற்றிலும் கணிக்க இயலாத நிலையில்.....

‘மலைகள், இயற்கை அழகை ரசிப்பதற்கும், உடல் நலம் பேணுவதற்குமான சுற்றுலா மையங்களாகவே இருக்கட்டும்; எந்தவொரு மதத்தவரும் வழிபாட்டுக்காக அங்கே செல்வது கூடாது’ என்று நம் ஒன்றிய அரசு தயங்காமல் சட்டம் இயற்றுதல் வேண்டும்[மோடி பிரதமராக இருக்கும்வரை இதற்கு 100% வாய்ப்பு இல்லை].

எந்தவொரு கட்சியும் தேர்தலைக் கருத்தில் கொள்ளாமலும், பக்திமான்களின் எதிர்ப்பை ஊக்குவிக்காமலும் அரசுக்கு முழு ஆதரவு தருதல் வேண்டும்.

இம்மாதிரியான சட்டம் இயற்றப்பட்டு அமலாக்கப்பட்டால் மட்டுமே, குறைந்தபட்சம் இது மாதிரியான பிரச்சினைகள் ஆரம்பநிலையிலேயே கிள்ளியெறியப்பட்டு, சமுதாயத்தில் அமைதி நிலவும்; பிரச்சினைகளால், மக்கள் நிம்மதி இழப்பதும், பயனுள்ள வழிகளில் செலவழிக்கப்படுதற்குரிய நேரம் வீணடிக்கப்படுவதும் தவிர்க்கப்படும்.

சனி, 20 டிசம்பர், 2025

‘புடின்’இன் அதிரடி அறிவுரை மோடியின் மண்டையில் உறைத்திருக்குமா?


இந்தியாவின் மொழி, கலாச்சாரம் குறித்துப் பேசியுள்ள அதிபர் புடின், "நான் சில தினங்களுக்கு முன் இந்தியா சென்றேன், சுமார் 150 கோடி மக்கள் வசிக்கும் நாட்டில் அனைவரும் இந்தி பேசுவதில்லை; 50-60 கோடி மக்களைத் தவிர பிறர் வெவ்வேறு மொழிகள் பேசுகின்றனர். இந்த ஒற்றுமையையும் பன்முகத்தன்மையையும் பாதுகாப்பது அவசியம்[https://www.dinakaran.com/news/hindi-putin-india-russia/amp/?utm=relatedarticles].

பரந்து விரிந்து பெரியதொரு நாடாக இருந்த ‘சோவியத் யூனியன்’, பல நாடுகளாக உடைந்து சிதறியதற்குக் காரணம், ரஷ்யருக்கு மட்டும் உரியதான ‘ரஷ்ய மொழி’யைப் பிற இனத்தவர்[உள்ளடங்கியிருந்த சிறு சிறு நாட்டினர்] மீது திணித்ததுதான் என்று, புடின் தன் பேச்சில் மறைமுகமாகச் சொல்லியிருப்பது நம் மோடியின் மண்டையில் உறைத்திருக்குமா?

‘காந்தியின் பெயர் இருட்டடிப்பு’... செய்தவர்கள் அவரின் கால் தூசுக்கு ஒப்பாகாத கயவர்கள்!!!

சத்திய நெறி பிறழாமல் வாழ முயன்று, அதில் பெருமளவில் வெற்றியும் பெற்ற உலகின் ஒரே அதிசய மனிதர் காந்தியடிகள்; தமக்குள்ள பலவீனங்களை ஒளிவுமறைவில்லாமல் உலகுக்கு அறிவித்த பெருந்தகை அவர்.

எதிரியை வெல்ல ஆயுதம் ஏந்திப் போராடும் வன்முறைக்கு மாற்றாகத் தம்மைத் தாமே துன்புறுத்திக்கொள்வதன் மூலம், அந்த எதிரியைச் சரணடையச் செய்யும் அகிம்சை நெறியை உலகுக்கு அறிமுகப்படுத்தியவரும் அவரே.

அதனால்தான், இன்றளவும் ஒட்டுமொத்த உலகமும் அவரைப் போற்றுகிறது.

அந்த அதிசய மனிதரின் பெருமைகளையும் சாதனைகளையும் வருங்காலச் சந்ததியினரும் அறிந்து, அவரைப் பின்பற்றத் தூண்டும் வகையில் செயல்பட வேண்டியவர்கள், அதற்கு முரணாக, அவரை நினைவுட்டும் வகையிலான திட்டங்கள், மசோதாக்கள், அமைப்புகள் போன்றவற்றிற்குச் சூட்டப்பட்ட அவரின் பெயரை நீக்கி, புரியாத சமஸ்கிருத & இந்திப் பெயர்களைத் திணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். சில கணங்களேனும் தாமதிக்காமல், இந்த நாட்டைவிட்டே விரட்டியடிப்பதற்கு உரியவர்கள் அந்த அயோக்கியர்கள்.

அகிம்சையின் நாயகனை மறவாமலிருக்கும் மக்கள் அதைச் செய்யாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது வினோதமானது.

இவர்கள் மக்களா, மானம் ரோஷம் எல்லாம் இல்லாத உயிரற்ற வெறும் பிண்டங்களா என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது!

‘தீய சக்தி’ பற்றிப் பேசும் எடப்பாடி ஒரு படு பயங்கரத் தீய சக்தி!!!

//தீய சக்திகளிடம் நாம் ஏமாந்துவிட்டால் தமிழகம் இருளில் சிக்கிவிடும்//*[எடப்பாடி பேச்சு]

இவர் தமிழ்நாட்டு முதல்வராக இருந்த ஐந்து ஆண்டுகளும் தமிழ்நாடு இருளில்தான் மூழ்கிக் கிடந்தது. தீய சக்திகளான ஆதிக்க வெறியன்களிடம் தமிழினத்தை அடமானம் வைத்த இவருக்கு இணையான தீய சக்தி உலகில் வேறு எதுவும் இல்லை.

‘திமுக’ தீய சக்தியாகவே இருந்தாலும் அக்கட்சி குறித்து விமர்சிக்கும் யோக்கியதை, சங்கிகளுடன் தேர்தல் கூட்டணி அமைத்திருக்கும் இந்தக் கொத்தடிமைக்கு இல்லவே இல்லை.

இந்த ஆள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினால் மட்டுமே தமிழ்நாடு நிரந்தரமாக இருளில் மூழ்கும் என்பது 100% உறுதி.

தீய சக்தி என்று ஒன்று இருந்தால், தீய சக்திகளின் பிடியில் சிக்குண்டு கிடக்கும் இந்தத் தீய சக்தி, தீய சக்தி பற்றிப் பேசுவதறிந்து அது வாய்விட்டுச் சிரிக்கும்!
                                      
                                            *   *   *   *   *

வியாழன், 18 டிசம்பர், 2025

'தவெக' ‘விஜய்’க்கே நம் வாக்கு[ஓட்டு]!!!

நடிகர் விஜய்... மன்னித்திடுக, தலைவர் விஜய் தன் ஈரோடு பரப்புரையில், ‘திமுக’வைத் ‘தீய சக்தி’ என்று மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். தன்னுடைய ‘தவெக’ கட்சியை ‘நல்ல[தூய] சக்தி’  என்றும் பெருமிதப்பட்டிருக்கிறார்[ஊடகச் செய்தி].

நல்ல கட்சி என்றால், மக்களுக்கு நன்மை செய்யும் கட்சி என்பது அறியத்தக்கது.

இந்தக் கட்சியால் இந்நாள்வரை மக்களுக்கு நன்மை ஏதும் விளைந்ததில்லை என்பதால், இது[தவெக] நல்ல கட்சியே என்பது உறுதி செய்யப்படவில்லை.

அது 2026ஆம் ஆண்டுத் தேர்தலில் வென்று ஆட்சியைக் கைப்பற்றி ஆளத் தொடங்கிய பிறகே அது தெரியவரும்.

ஆனாலும், தேர்தலுக்கு மூன்று மாதங்கள் போல இருக்கும் நிலையில் அவரால் சில நன்மைகளையேனும் செய்து, தமிழ்நாட்டு மக்களின் பேராதரவைப் பெற்றிட இயலும்.

அந்தச் சில நன்மைகளில் குறிப்பிடத்தக்கவை.....

‘நீட்’ தேர்வைத் திணித்தது, மும்மொழிக் கொள்கை மூலம் இந்தியைத் திணித்தது/திணிப்பது, புதிய மசோதா மூலம் அண்ணல் காந்தியடிகளின் பெயரை இருட்டடிப்புச் செய்வது என்று ஒன்றிய அரசு செய்யும் அடாவடித்தனங்களைத் தடுத்து நிறுத்துவது போன்றவை ஆகும்.

தலைவர் ‘விஜய்’யைக் காணக் கோடிக்கணக்கில் மக்கள் திரள்கிறார்கள். இந்த மாபெரும் சக்தியை ஒன்று திரட்டி, தானே தலைமை வகித்து, மாபெரும் போராட்டத்தை நடத்தி, ஒன்றிய அரசைப் பணியச் செய்து மேற்கண்டவை தொடர்பான ஆணைகளை[+மசோதா] அவர் திரும்பப் பெறச் செய்யலாம்.

இதன் மூலம் ‘தவெக’ கட்சியை மிக மிக நல்ல கட்சி[சக்தி] என்று நிரூபித்துவிடலாம். 2026இல் தமிழ்நாட்டில் ஆட்சியையும் கைப்பற்றிவிடலாம்.

நல்லது செய்து தமிழர்களுக்கு நல்லாட்சி வழங்கவிருக்கும், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவர் ‘விஜய்’ அவர்களை நெஞ்சார வாழ்த்துகிறோம்!

வாழ்க விஜய்! வெல்க ‘தவெக’ கட்சி!!

மோடியின் வயது எழுபத்தைந்தா[17 செப்டம்பர், 1950] பதினைந்தா?!

//பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின், தி கிரேட் ஹானர் நிஷான் ஆப் எத்தியோப்பியா என்ற உயரிய விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது. எத்தியோப்பிய பிரதமர் இந்த விருதை மோடிக்கு அளித்தார். இந்த விருது பெறும் முதல் உலகத் தலைவர் மோடியே ஆவார்//[மாலைமலர்].
ஓட்டப் பந்தயத்திலோ பேச்சுப் போட்டியிலோ பதக்கம்[பரிசு] பெறும் ஒரு பதினைந்து வயதுப் பாலகனாக மாறியிருக்கிறார் நம் பிரதமர் மோடி. பரிசாகப் பெற்ற விருதைத் தூக்கிக் காட்டி, அதை ஆசை ஆசையாய்ப் படமெடுத்துக் காட்டியிருப்பதே அந்த மாற்றத்திற்கான அடையாளம்.

நம் மதிப்பிற்குரிய பிரதமரைப் போலவே, அவர் பெற்றதை இந்தியக் குடிமக்களாகிய நாம் அனைவரும் பெற்றப் பேறாகக் கருதிப் பெருமிதப்படுவோம்[விருது எதற்காக வழங்கப்பட்டது என்பது ஒரு பொருட்டல்ல].

தினம் தினம் ஒரு மில்லியன் ‘பார்வை’களைப் பெறும் முதல் தர[ஹி... ஹி... ஹி!!!] வலைப்பதிவாளனாகிய நான் நம்மவரின் இந்தப் படத்தைப் பகிர்ந்துகொண்டதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

நீங்களும் பகிருங்கள்.

                               *   *   *   *   *

https://www.maalaimalar.com/news/world/prime-minister-modi-receives-ethiopias-highest-award-801690

புதன், 17 டிசம்பர், 2025

‘ஹிஜாப்'ஐ இழுத்த நிதிஷ்குமார்! இஸ்லாமியர்கள்[+எதிர்க்கட்சிகள்] கோழைகளா?!

//ஆயுஷ் மருத்துவர்களுக்குப் பணி ஆணை வழங்கும் நிகழ்வில், இஸ்லாமியப் பெண் ஒருவர் ஹிஜாப் அணிந்துகொண்டு, தனது பணி ஆணையைப் பெறுவதற்கு வந்தார். அப்போது அந்த பெண்ணின் ஹிஜாபை நிதிஷ் குமார் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து ஹிஜாபை அவர் விலக்க முயன்றார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது[2 நாட்களுக்கு முன்பு]//.

இந்தச் சம்பவத்தின்போது நிதிஷ்குமாருடன் இருந்த பிஹார் துணை முதல்வர் சம்ரத் சவுத்ரி, நிதிஷைத் தடுக்க முயன்றார். இருந்தபோதும், அதற்குள் ஹிஜாபைப் பிடித்த நிதிஷ், அதை விலக்க முயன்றார். அப்போது மேடையில் சுகாதாரத் துறை அமைச்சர் மங்கள் பாண்டே, முதல்வரின் முதன்மைச் செயலர் தீபக் குமார் ஆகியோர் சிரித்தபடி நின்றனர்.

“நிதிஷ் குமாருக்கு என்ன ஆனது? அவரது மனநிலை மோசமடைந்துள்ளதா, அல்லது இப்போது அவர் நூறு சதவீதச் சங்கி ஆகிவிட்டாரா?” என ராஷ்ட்டிரிய ஜனதா தளம் எக்ஸ் தளத்தில் வீடியோவைப் பகிர்ந்து விமர்சித்துள்ளது.

காங்கிரஸ் கட்சி அவரின் இழி செயலுக்குக் கண்டனம் தெரிவித்து, அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று சொன்னதோடு நிறுத்திக்கொண்டது.

தமிழ்நாட்டின் இஸ்லாமிய அமைப்பு ஒன்றும் கண்டனம் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.

“பெண்ணின் ஹிஜாபை விலக்கியதன் மூலம் இஸ்லாமிய சமூகத்தின் மீது ‘என்டிஏ’ கூட்டணி கொண்டுள்ள மனப்பான்மை வெளிப்படுகிறது. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை வெளிப்படுத்தும் வகையில் நிதிஷின் அரசியல் அமைந்துள்ளது...” என ஆர்ஜேடி செய்தித் தொடர்பாளர் இஜாஸ் அகமது தெரிவித்துள்ளார்.

ஆக,

அரைலூசன் ‘நிதிஷ்’இன் அசிங்கமான இந்தச் செயல் சமூக ஊடகங்களில் ஓரளவிற்கே பகிரப்பட்ட நிலையில், அடங்கியும்விட்டது. இது நமக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது. கொஞ்சமே கொஞ்சம் நேரமேனும் இந்தக் கிறுக்கனின் ஆடைகளை உருவியெடுத்து நிர்வாணப்படுத்தியிருந்தால், இது மாதக்கணக்கில் பகிரப்படும் பெரும் பரபரப்பூட்டும் சுவாரசியமான நிகழ்வாக அமைந்திருந்திருக்கும்; மீண்டும் மீண்டும் வாசித்து மகிழலாம்.

ஹூம்... இனி வருந்துவதால் பயனேதும் இல்லை.

https://www.hindutamil.in/news/india/bihar-cm-nitish-kumar-removed-muslim-woman-s-hijab-rjd-criticized-as-sanghi

திங்கள், 15 டிசம்பர், 2025

“குன்றில் தீபம் ஏற்றுவோம்”... சங்கிகளின் ‘டி-ஷர்ட்’க்கு ஒரு மாற்று!!!

//திருக்கார்த்திகைத் தீபத் திருவிழாவை ஒட்டி, மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில்[தர்கா அருகே> நில அளவைக் கல்] கார்த்திகைத் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்பினர் நடத்திவரும் போராட்டம் தற்போது தீவிரமடைந்துள்ளது. அவர்கள் 'குன்றில் தீபம் ஏற்றுவோம்' என்ற வாசகத்துடன் டி-ஷர்ட் அணிந்தும், சமூக வலைதளங்களில் தீவிரப் பிரச்சாரம் செய்தும் வருவது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது//[https://tamil.indianexpress.com/tamilnadu/kunril-deepam-yetruvom-campaign-intensifies-protest-demands-deepam-lighting-on-thiruparankundram-hill-10909377].

குன்றில் தீபம் ஏற்றுவதற்கு, ’டி-ஷர்ட்’ களில் வாசகம்[“குன்றில் தீபம் ஏற்றுவோம்”] எழுதி மக்களிடையே வலம் வருவது மிக மிக மிக அற்புதமான வரவேற்கத்தக்க நடவடிக்கை ஆகும்.

இதன் விளைவாக, மதுரை மக்கள் அனைவருமே மேற்கண்ட வாசகம் பொறித்த டி-ஷர்ட்டுகளை அணிந்து, மலையில் தீபம் ஏற்ற வருவார்கள் என்பதில் சந்தேகத்துக்கு இடமே இல்லை.

மதுரை மக்கள் மட்டுமல்ல, உலக மக்களில் பலரையும் தீபம் ஏற்ற வரவழைப்பதற்கான ஆகச் சிறந்த வழி ஒன்றும் உள்ளது. அது.....

‘டி-ஷர்ட்’ என்றில்லை, ஆடையே இல்லாமல் உடம்பு முழுக்க, “குன்றில் தீபம் ஏற்றுவோம்” என்ற வாசகத்தை அழுத்தம் திருத்தமாக எழுதி, காணொலியில் பிறந்தமேனியாய்க் காட்சியளித்துப் பரப்புரை செய்வது!

ஹி... ஹி... ஹி!!! 

ஞாயிறு, 14 டிசம்பர், 2025

அமித்ஷா... அமைச்சனா அடாவடிச் சங்கிக் கும்பலின் தலைவனா?!

"நீதிபதி தீர்ப்புக் கொடுத்தார் என்பதற்காகப் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவந்தனர். இதுபோன்ற சம்பவம் இதற்கு முன்பு நடந்தது இல்லை”[https://x.com/ThanthiTV/status/1998758732935893216].

மேற்கண்டவாறு கொந்தளிந்திருப்பவன் ஒரு தனி மனிதன் அல்ல; பொறுப்புணர்வும், அனைத்துத் தரப்பு மக்களையும் சமமாக மதிக்கும் மனப்பக்குவமும், நிதானப் புத்தியும் இல்லாத, இந்த பரந்த பெரிய நாட்டின் உள்துறை அமைச்சர் அமித்ஷா.

போகிறபோக்கில், “இது போன்ற சம்பவம் இதற்கு முன்பு நடந்ததில்லை” என்று பேசியிருக்கிற இவருக்குக் கொஞ்சமே கொஞ்சம் சிந்திக்கும் அறிவு இருந்திருந்தால்.....

திருப்பரங்குன்றத்தில் காலங்காலமாகப் பின்பற்றப்பட்ட அனைத்து மரபுகளையும் அலட்சியப்படுத்தி, அரசுத் தரப்பையும், கோயில் நிர்வாகத்தையும் விசாரிக்காமல், சங்கிகளுக்குச் சாதகமானதும் மனசாட்சிக்குப் புறம்பானதுமான ஒரு தீர்ப்பை இதற்கு முன்பு எந்தவொரு நீதிபதியும்[அநீதிபதி?]  வழங்கியதில்லை என்பதை இந்த நபர் அமைச்சர் புரிந்துகொண்டிருப்பார்; மேற்கண்டவாறு பேசியிருக்கமாட்டார்.

நீதிபதி சாமிநாதன் மட்டுமல்ல, அமித்ஷாவைப் போல் தான்தோன்றித்தனமாய், ஒரு நடுவணரசின் அமைச்சர் இதற்கு முன்பு இப்படி நடந்துகொண்டதில்லை என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.

பல்வேறு இனங்களை உள்ளடக்கிய இந்த இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டுக்குக்குக் கேடு விளைவிக்கும் அடாத செயலை, இந்தச் சங்கிகளின் தலைவன் அமித்ஷா தொடங்கி வைத்திருக்கிறார் என்று தயங்காமல் சொல்லலாம்.

இனியொரு சுதந்திரத்தைப் பெற்றிட, சங்கிகள் அல்லாத தன்மானத் தலைவர்கள், உடனடியாக ஒருங்கிணைந்து போராட வேண்டிய நேரம் இதுவோ என்றும் சந்தேகிக்கத் தோன்றுகிறது.

சனி, 13 டிசம்பர், 2025

திருப்பரங்குன்றம்... இன்று ‘ஒரு நாள்’ உண்ணாவிரதம்! அடுத்து? அடுத்து? அடுத்து?

//திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி உள்ளூர் மக்களில் ஒரு தரப்பினர்[50 பேர்] சார்பாக உண்ணாவிரதம்//*[செய்தி] 

உண்ணாவிரதத்திற்கு நீதிமன்றமே அனுமதி அளித்திருக்கிறது; ஆதரவாகவும் இருக்கிறது.

த.நா.அரசு அனுமதிக்காவிட்டால், அடுத்தடுத்தடுத்து, ஐயாயிரம் பேர், ஐம்பதாயிரம் பேர், ஐந்து லட்சம் பேர் என்று பெரும் எண்ணிக்கையிலான பக்தக்கோடிகள் உண்ணாவிரதம் இருப்பார்கள். பயந்தும் பணிந்தும் தர்க்காவுக்கு அருகே உள்ள தூணில்[தீபத் தூணோ அல்லவோ] தீபம் ஏற்ற அரசு அனுமதிக்கும்.

அடுத்து.....

தீபத் தூணுக்கு அருகே உயரமான இடத்தில் இஸ்லாமியர்களின் தர்கா இருக்கக் கூடாது. அதை அகற்ற வேண்டும் என்று, இந்தியா எங்கும் உள்ள பக்திமான்கள் திரண்டுவந்து, நீதிமன்ற அனுமதியுடன் ‘சாகும்வரை’ உண்ணாவிரதம் இருப்பார்கள்.

தர்கா அகற்றப்பட்டு அங்கு ராமச்சந்திர மூர்த்திக்கு மாளிகை எழுப்பப்படும்; திருப்பரங்குன்றத்திற்குப் பாலராமர் குன்றம் என்று புதிய நாமகரணம் சூட்டப்படும்[இதற்கும் உண்ணாவிரதம் இருப்பார்கள்].

அடுத்து.....

அவ்வப்போது இந்த நாட்டில் ஏற்படும் மதக் கலவரங்களுக்குக் காரணமாக இருக்கும் இஸ்லாமியரின் தர்காக்களோ மசூதிகளோ[+கிறித்தவர்களின் தேவாலயங்கள்?] இருத்தல் கூடாது என்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கும். விளைவு.....

அனைத்துப் பிற மதத்தவர் வழிபாட்டுத் தலங்களும் அகற்றப்பட்டு, முழுக்க முழுக்க ஒரு ‘இந்து’ நாடாக இந்தியா காட்சியளிக்கும்; ஜொலிக்கும்.

அடுத்து.....

வேறென்ன, இந்தப் புண்ணிய ராமஜென்மப் பூமி மதக் கலவரங்களே இல்லாத அமைதிப் பூங்காவாகத் திகழும். கலவரங்களுக்கே இடம் தராமல் இந்து மக்கள்[அனைத்து இனத்தவரும் இந்துக்களாக மாறியிருப்பார்கள், அல்லது மாற்றப்பட்டிருப்பார்கள்] ஒற்றுமையுடன் சுபிட்சமாக வாழ்வார்கள்.
போற்றி போற்றி ராமச்சந்திர மூர்த்தி போற்றி!

வாழ்க... வளர்க... ராமஜென்மப் பூமி[‘இந்தியா’]! வெல்க ராமப்பிரானின் பக்தர்கள்!!
                                           
                                       *   *   *   *   *

வெள்ளி, 12 டிசம்பர், 2025

வீழ்கிறதா தமிழினம்? ஆளவிருக்கிறார்களா ஆதிக்க வெறியர்கள், அடிமைகளின் ஆதரவுடன்?!

//டிச13இல் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருப்பரங்குன்றம் மயில் மண்டபம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும். இவ்வாறு சங்கிகள் அளித்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், மனுதாரர் கோரும் இடத்திற்குப் பதிலாக மாற்று இடத்தில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார்; உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளார்.//

திருப்பரங்குன்றம் பிரச்சினை குறித்து உயர் நீதிமன்றத்தில்[மதுரைக் கிளை] விசாரணை நடப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன[விசாரணை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது].

விசாரணை முற்றுப்பெற்றுத் தீர்ப்பு வெளியாகாத நிலையில், மேற்கண்ட செய்தி[டிசம்பர் 13இல் உண்ணாவிரதம்> மனு> அனுமதி] வெளியாகியிருப்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

சட்டம், ஒழுங்கு, கட்டுப்பாடு எல்லாம் பொதுமக்களுக்கு[சங்கிகள் & நீதிபதிகள் விதிவிலக்கு] மட்டும்தானா என்னும் கேள்வி எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

அதற்கான பதில் என்னவாக இருந்தபோதிலும், சங்கித் தலைவர்களின் சூழ்ச்சி இதில் சம்பந்தப்பட்டுள்ளது என்பது தெளிவாகப் புரிகிறது.

அது.....

கார்த்திகைத் தீபத்தின் பெயரால், தொடர்ந்து பிரச்சினைகளை உருவாக்கி, தமிழ்நாட்டில் ‘திமுக.’ ஆட்சியைக் கலைத்து, மீண்டும் ஆட்சிக்குவராமல் தடுத்து, தமிழினத்தை அடிமைப்படுத்துவதுதான், இங்குள்ள அடிமைகளின் ஆதரவோடு.

அத்தனை அதிகாரங்களும் ‘அவர்கள்’ கையில் இருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

* * * * *

https://www.hindutamil.in/news/tamilnadu/fast-unto-death-on-december-13th-demanding-the-lighting-of-the-lamp-at-the-lamp-post-in-thiruparankundram-high-court-grants-permission

வியாழன், 11 டிசம்பர், 2025

பாரதியின் ‘பகற்கனவு’ பலிக்குமா? எப்போது?

“தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்றார் பாரதி.

கோடிக்கணக்கில் மனிதர்கள் வாழும் உலகில் ஒரே ஒருவனுக்கு உணவில்லை என்பதற்காக, ஒட்டுமொத்த உலகையும் அழிப்பதென்பது அறிவுடைமை ஆகுமா?

அறிவுடைமை ஆகாது என்பது பாரதிக்கும் தெரிந்திருக்கும்.

பட்டினிச் சாவின் கொடூரத்தை முழுமையாக அனுமானித்ததன் விளைவாகவே இப்படிப் பொங்கியிருக்கிறார்.

ஒரு தனி மனிதன் முதுமை காரணமாகவோ, தீராத நோய்களின் தாக்குதல் காரணமாகவோ மரணிப்பதை எவராலும் தடுக்க இயலாது. ஆனால், பட்டினியால் சாவதைத் தடுப்பது சாத்தியம்.

மனித இனம் அதைத் தன் தலையாய கடமையாகக் கருதிச் செயல்படுதல் வேண்டும்.  செயல்படத் தவறினால், அது இருந்துகொண்டிருப்பதைக் காட்டிலும் அழிவதே மேல் என்பது பாரதியின் எண்ணம். எனவேதான்.....

“ஜகத்தினை அழித்திடுவோம்” என்று கொந்தளித்துக் குமுறியிருக்கிறார்.

அந்தப் பாரதி இன்று இல்லை.

ஆனாலும், அவர் விட்டுச்சென்ற அக்கினி வார்த்தைகள் உயிர்ப்புடன் இருப்பதால், காலப்போக்கில் புரட்சி மனம் படைத்தப் புதியப் புதியப் பாரதிகள் தோன்றுவார்கள்; “பட்டினிச் சாவு இல்லாத புதியதோர் உலகம் செய்வோம்” என்று விண்ணதிர முழக்கமிடுவார்கள்.

இது மக்கள் அனைவரின் மனங்களிலும் எதிரொலிக்கும்.

ஆதிக்க வெறி, மத வெறி, பக்தி வெறி, இன வெறி என்று மனித இனத்தைச் சீரழிக்கும் வெறித்தனங்கள் அழிந்தொழிய, மனித நேயமும், உயர் பண்புகளும், நற்குணங்களும் செழித்து வளரும்.

இதன் விளைவாக, உண்ண உணவில்லை என்று எவரும் வருந்தும் அவலம் இல்லாமல்போகும். ‘பட்டினிச் சாவு’ என்பது மனித இனம் அறிந்திராத  ஒன்றாக ஆகும்.

மனிதாபிமானக் கவிஞன் பாரதியின் நினைவு மக்கள் மனங்களில் என்றென்றும் நிலைத்திருப்பதாக!
                                   *   *   *   *   *
***சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882[பிறந்த நாள்] – 11 செப்டம்பர் 1921[விக்கிப்பீடியா].

புதன், 10 டிசம்பர், 2025

வாக்குத் திருடர்களை விரட்டியடிக்க ஒருங்கிணைந்து முழங்குவீர் “வந்தேமாதரம்”!

‘வந்தேமாதரம்’{தாயே[இந்தியா] வணங்குகிறோம்} தொடர்பான விவாதம் ஆளும் கட்சிக்கும் எதிர்க் கட்சிகளுக்கும் இடையே தொடர்ந்து நடைபெறுகிறது.*

விவாதத்தின் முடிவு எதுவாயினும், நம்மை அடக்கி ஆண்ட ஆங்கிலேயரை விரட்டியடிக்க வந்தேமாதரமும் பயன்பட்டது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

ஆனால்,

ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றுச் சுதந்திர நாடாக ஆன இந்தியாவை, பத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக வாக்குத் திருடர்கள்[நிரூபணம்: ராகுல்காந்தி] கைப்பற்றி ஆண்டுகொண்டிருக்கிறார்கள்.

தங்களின் ஆதிக்கம் தொடர்வதற்காக, தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்றவற்றைத் தம் வசப்படுத்தி, தங்களின் அடாவடித்தனங்களைக் கண்டிக்கும் எதிர்க்கட்சியினரைப் பலவீனப்படுத்துதல் மட்டுமல்லாமல், மாநிலங்களின் உரிமைகளைப் பறித்தல், இந்தியைத் திணித்து மாநில மொழிகளை அழித்தல் போன்ற அட்டூழியங்களைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்கள் அவர்கள்.

அவர்களை இந்த மண்ணைவிட்டே விரட்டியடிக்க, ஆங்கிலேயரை விரட்டியடிக்கப் பயன்பட்ட அதே ‘வந்தேமாதரம்’ முழக்கம் இனியும் தேவைப்படுகிறது.

எனவே முழங்குவீர், “வந்தேமாதரம்... வந்தேமாதரம்... வந்தேமாதரம்”! 

*https://www.msn.com/en-in/news/india/amit-shah-hits-back-at-priyanka-gandhi-for-tying-vande-mataram-debate-to-bengal-polls-nobody-is-scared-of/ar-AA1RZJEu?ocid=msedgdhp&pc=NMTS&cvid=a32bfe8cf6f04524b8bb99410889bd3e&ei=14

செவ்வாய், 9 டிசம்பர், 2025

பொல்லாத வெறிநாய்க் கடி நோய்(Rabies) இல்லாத நாள் வருமா?

இன்றளவும் 'வெறிநாய்'க் கடிக்கு ஆளாகி இறப்போர் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. ஆயினும், இது குறித்த விழிப்புணர்வு நம் மக்களிடம் போதுமான அளவு இல்லை என்றே சொல்லலாம்.

எனவே, வெறிநாயிடம் தென்படும் அற்குறிகளை அனைவரும் அறிந்துகொண்டிருப்பது மிக மிக அவசியம்.

அறிகுறிகள்:

*ரேபிஸ்(Rabies) கிருமிகளால் தாக்கப்பட்ட நாய் காரணம் இல்லாமலே குரைக்கும். அது ஊளையிடுவதுபோல் இருக்கும்.

*ஓரிடத்தில் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கும்.

*காண்போரையெல்லாம் துரத்திக் கடிக்கவரும்.

*அதன் நாக்கு வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் தொங்கிக்கொண்டிருக்கும்.

*அதன் வாயிலிருந்து எந்நேரமும் எச்சில் ஒழுகியவாறிருக்கும்.

*சில வெறிநாய்கள் தெருமுனைகளில் தனியாகவும் அமைதியாகவும் இருப்பதுண்டு.

*உணவு உண்ணாது; இந்நாய் பெரும்பாலும் 10 நாட்களில் இறந்துவிடும்.

இந்த அறிகுறிகளைக் கண்டிப்பாகச் சிறுவர் சிறுமியரிடம் சொல்லி எச்சரிக்கை செய்வது பெற்றோரின் தலையாய கடமை ஆகும்.

'வெறிநாய்'க் கடி குறித்த சில செய்திகள்:

*வெறிநாய் கடித்தால், ரேபிஸ்(Rabies) நோயின் அறிகுறிகள் 5 நாட்களுக்குப் பின்னர் தெரியவரும்; 90 நாட்களுக்குப் பிறகும்கூடத் தென்படலாம்.

*இதன் முதல் அறிகுறி நாய் கடித்த இடத்தில் வலி உண்டாகும்; காய்ச்சல் அடிக்கும்; வந்தி வரும்; உணவு உண்ண இயலாது.

*நோய் தாக்கியவர்களுக்கு ‘விழுங்கு தசை’கள்[தொண்டையில்] இறுக்கமடைவதால், சுவாசம் நிற்கிற உணர்வு ஏற்படும். உயிர்போகுமோ என்னும் அச்சத்தில் நோய் பாதித்தவர்கள் தண்ணீர் குடிக்கமாட்டார்கள்[இதற்கு ‘ஹைட்ரோபோபியா’ என்று பெயர்].

நோய் வரும் வழி:

வெறிநாயின் உமிழ்நீரில் ரேபிஸ்(Rabies) வைரஸ்கள் இருக்கும். அது மனிதரைக் கடிக்கும்போது, காயத்தின் வழியாக இந்தக் கிருமிகள் உடலுக்குள் புகுந்துவிடும். 

சிகிச்சை:

முன்பெல்லாம் தொப்புளைச் சுற்றி 14 ஊசிகள் போடுவார்கள். இப்போதெல்லாம் நவீனத் தடுப்பூசிகள் வந்துவிட்டன. ஐந்தே ஊசிகளில்[தவணைகளில்] ரேபிஸ்(Rabies) நோய் தாக்காமல் தடுத்துவிடுகிறார்கள்.

                             *   *   *   *   *

***மேற்கண்ட குறிப்புகள் மருத்துவ இதழொன்றில் இடம்பெற்றவை.